• +91 97102 30097
  • reach@yogakudil.org


திருக்குறள் யோக விளக்கவுரை

குருநாதர் - சிவயோகி

மு.ஆ.சிவக்குமார்

 

வணக்கம் அன்புள்ளங்களே...

          உலகப் பொதுமறை திருக்குறளுக்கு விளக்கம் தந்தவர்கள் அனேகம் பேர் உண்டு. தமிழ் கூறும் நல்லுலகில் இந்த எளியோனும் எனக்குப் புரிந்ததை என்னால் உணரப்பட்டதை எனக்கு புரிந்த படியே நான் எழுதுகிறேன். இது உங்களுக்கு பொருத்தமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனக்கு அது அவசியமும் இல்லை.

          ஆனால் மூலத்தை எந்த விதத்திலும் சிதைத்து விடாமல் பொருளை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். என்னதான் இருந்தாலும் வள்ளுவரைப் போல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் வள்ளுவத்தை முழுவதுமாக நான் புரிந்து கொண்டதாக நினைக்கிறேன். வாருங்கள் என்  உரை உங்களுக்கு  அப்படி உதவியாக இருக்கலாம்.

        

          முதலில் அதன் நோக்கம் அறம், பொருள், இன்பமென்று  மூன்றாக பிரித்திருக்கிறார். அறத்துடன் பொருளைச் சேர்த்து இன்பமாக இருப்பவன் வீடுபேறு அடைகிறான் என்ற விதத்திலேதான் அது எழுதப்பட்டிருக்கிறது. வீடுபேறு என்பது வெளியே  எங்கேயோ இருப்பது அல்ல. அது இங்கேயே இப்பொழுதே  இந்த கணமே ஏற்படுவது.

          இக்கணத்தில் வாழும் ஒரு மனிதன் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பான். அவன் அறமுள்ளவனாக இருப்பான்.  பொருள் நிறைந்தவனாக இருப்பான். அறம் இல்லையென்றால் அவனுக்கு பொருள் இருக்காது. பொருளில்லையென்றால் அவனுக்கு இன்பமும் இருக்காது.

           அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் தமிழ்ச் சான்றோனாகிய வள்ளுவனின் வாக்கு. வள்ளுவனை பின்தொடர்தல் அல்லது வள்ளுவனை புரிந்து கொள்ளுதல் அல்லது வள்ளுவனை  வழிமுறையாகவோ வழிகாட்டியாகவோ ஏற்றுக்கொள்வது என்பது ஒரு தனி மனிதனுக்குச் சிறப்பானது. காரணம் அவன் மதம் கடந்த சிந்தனையாளன், மனிதநேயம் மிக்கவன்.

          இங்கிருந்து எங்கோவொரு  காலத்தில் மனித சமூகம் எப்படியோ இருந்த ஒரு இருட்டான காலத்தில் ஒரு வெளிச்சமாக இருந்திருக்கிறான். அவன் வெளிச்சம் இன்றுவரை பரவிக் கொண்டிருக்கிறது.  திருக்குறளை படிப்பதனால் அகஇருட்டு அழிந்து வெளிச்சம் ஏற்பட்டு புறஇருட்டை நீங்களாகவே அழிக்குமளவிற்கு உங்கள் சுயவெளிச்சம் மேலோங்கி விடுகிறது.

            திருக்குறளை படிக்கும் பொழுது எனக்குள் எண்ணிலா ஆனந்தம் பொங்கி வழிவதை நான் கண்டிருக்கிறேன். எனக்குள் இருந்த என் குழப்பமெல்லாம் தீர்ந்து போயின. நானொரு தெளிந்த மனிதனாக  மாறுவதற்கு திருக்குறள் ஒரு மூலக்காரணமாக இருந்தது. எனவேதான் இதை எழுதினேன்.

          மற்றவர்களும் இப்படி தெளிந்துவிட வேண்டும் ஆனந்தமடைந்துவிட வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே என் உயர்ந்த நோக்கம்.

          அருள் கூர்ந்து தமிழ் நெஞ்சங்களே அல்லது தமிழ் தெரிந்து கொண்ட நெஞ்சங்களே இந்த நூலை படிக்கும் பொழுது கொஞ்சம் உணர்வோடு படியுங்கள். ஏதோ எழுத்துக்களும் வார்த்தைகளும் மட்டுமல்ல அவைகள். அதைத்தாண்டிய உணர்வுகள் அதனுள்ளே இருக்கின்றன. நீங்கள் படித்து இன்புறுங்கள்.

          இந்த வையகம் உய்யவும் மனித வளம் மேலும் ஓங்கவும் எப்போதும் ஆனந்தத்தில் நிலைத்திருக்கவும் திருக்குறள் ஓர் உன்னத நூல்.

          அதன் தன்மை அதன் அறிவு அதனுடைய வெளிச்சம் அதனுடைய முழுமை அதனுடைய ஆழம் இவையெல்லாமே மனித நாகரிகத்தின் உச்சமாகவே இருக்கிறது. 

         காலம் பழையதாக இருப்பதினால் அது  அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளோடு பின்னப்பட்டு இருந்தாலும் சமகாலத்திற்கும் பொருந்தும் விதத்தில் அதில் அநேக கருத்துக்கள் இருக்கின்றன. வருங்காலத்திற்கும் பொருந்தும் விதமாகவும் அது எழுதப்பட்டிருக்கிறது.

          மனிதன் முழுமையடைவதற்கு ஒரு முழுமையான நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகாது. 

          தமிழில் எனை பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விதத்தில் இந்த நூலை எழுதி மகிழ்கிறேன்.

வாழ்க தமிழ்!.. வாழ்க வள்ளுவம்!.

 

அறத்துப்பால் > பாயிரவியல் | கடவுள் வாழ்த்து (1)

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. (1)

௧, à®… என்ற எழுத்துக்கு முதலாவதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானம் (பகவான்) à®®à¯à®¤à®²à®¾à®• கொண்டது இந்த உலகம்.

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். (2)

௨, பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?

 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். (3)

௩, மலராகிய  உபதேசத்தை அடைந்தவரை அடைந்தவர், நிலத்தில் நீண்ட காலம் வாழ்வார்.

 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)

௪, தேவை தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்கு துன்பம் என்றும் இல்லை.

 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)

௫, இருளாகும்  இருவினைகளை சாராது  இறைவனை புரிந்து கொண்டவர் புகழப்படுவது உறுதி.

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார். (6)

௬, உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக 

இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.

 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. (7)

௭, நிகரற்றவனின் நிழல் அடைந்தால் இன்றி மனக்கவலைகள் மாறுவது  இயலாது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. (8)

௮, முடிவை புரிந்துகொண்ட இயல்பானவன் நிழல் அடையாவிட்டால் பிறவி அறுப்பது கடினம்.

 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. (9)

௯, கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை, என் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். (10)

௧௦, இறைவன் அடி சார்ந்தால் பிறவி கடலை நீந்தலாம். இல்லையேல் நீந்த முடியது. 

 

அதிகார விளக்கம்!

 

     கடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்து கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளைக் கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு à®µà®¿à®©à¯ˆà®•à®³à¯ˆ கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.           

 

காணொளி:-

http://youtu.be/JUyYeLfr798?list=PLXzX9wD_JRiF_ecim4GEfX_ofAFyPsuG5

 

அறத்துப்பால் > பாயிரவியல் | வான் சிறப்பு (2)

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (11)

௧, வெட்டவெலிளிருந்து பூமி தோன்றியதால் அதுவும் அழிவில்லாதது என்று உணரப்படும்.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை. (12)

௨, துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்போவது போல் துவுவதே மழை.

 

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி. (13)

௩, நீரால் நிறைந்த இந்த உலகத்தில் விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால் உள்ளிருந்து வாட்டும் பசி.

 

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால். (14)

௪, புயல் என்று அழிக்கும் வெள்ளபெருக்கு தனது தன்மையை இழந்தால்  உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.

 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)

௫, அழிப்பதுவும் அழிந்தவர்களை வளம் செய்வதுவும் என எல்லாம் செய்வதே மழை.

 

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது. (16)

௬, சிறு துளியாக மழை இல்லாமல் போனால் புல்லும் à®®à¯à®³à¯ˆà®•à¯à®•à®¾à®®à®²à¯ போகும்.

 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின். (17)

௭, பெரிய கடலும் தனது நீர்மையை இழக்கும் மேகமாக தனது நீரை 

தரவில்லை என்றால்.

 

 

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (18)

௮, சிறப்பான பூசனைகள் செல்லாது வரியார்க்கும் வானோர்க்கும் வானம் வழங்கவில்லை என்றால்.

 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின். (19)

௯, அற்புத உலகத்தில் தானம் தவம் இரண்டும் இருக்காது வானம் வழங்கவில்லை எனில்.

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு. (20)

௧௦, நீர் இல்லை என்றால் உலகம் இல்லை யாருக்கும் வான் இல்லையேல் ஒழுக்கம் இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     வெட்டவெளியில் இருந்தே உலகம் தோன்றியது, அங்கிருந்தே மழை வருவதால் அதை அமிழ்தம் என்கிறோம். அது பூமியை மதித்து துப்பாதவர்களுக்கு துப்புகிறது. உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது. தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்திற்கும் ஆதாரம் மழை. நீர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை, வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை.  

 

காணொளி:-

https://youtu.be/DuuD9-e7Wd8

அறத்துப்பால் > பாயிரவியல் | நீத்தார் பெருமை (3)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. (21)

௧, ஒழுக்கத்தால் (இயல்பாக) நீர்த்து போனவர்களின் பெருமையை பகிர்ந்து கொள்ள துணிவு வேண்டும். 

 

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)

௨, துறந்தாரின் பெருமையை துணையாக கூறினால் உலகமோ

இறந்தவர்களை எண்ணிக்கொண்டது.

 

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. (23)

௩, இரண்டின் வகை அறிந்து இங்கே இயல்பனார் பெருமையை பேசுவதே உலகம்.

 

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. (24)

௪, உயிர் என்ற தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் வாழ்வென்ற ஆதாரத்திற்கு விதை.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. (25)

௫, ஐந்தாக பிரிபவனின் ஆற்றலை அகல் விளக்கின் தீபம் போல் காக்கும் தலைவன் யானை அடக்கிய இந்திரன்.

 

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். (26)

௬, அரிய செயல்களை செய்பவர் பெரியவர்கள், சிறியவர்கள்

அரிய செயல்களை செய்ய முடியாதவர்.

 

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. (27)

௭, சுவை, பார்வை, தொடுதல், கேட்டல், முகர்தல் என ஐந்தின் வகையாக அறிவதே உலகம்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். (28)

௮, நிறைவான மொழி மனிதர்களின் பெருமையை, மண்ணில்

மறைவான மொழி காட்டிவிடும்.

 

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது. (29)

௯, குணம் என்ற குன்றின் மேல் நிற்பவர்கள் கோபத்துடன் கண நேரம்கூட இருப்பது கடினம். 

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (30)

௧௦, அந்தணர் (அந்தம் அறிந்ததால் அதாவது முடிவு அறிந்ததால்) என்பவர்கள் அறமுடையவர் மற்ற à®Žà®²à¯à®²à®¾ உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால்.

                                          

அதிகார விளக்கம்!

 

     போதும் என்ற நிறைவை தரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை விரும்பி அறிய துணிவு அவசியம். இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது. இரண்டால் ஆன உலகை புரிந்து கொள்ளவேண்டும். புலன்களை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே சிறந்தது. அப்பொழுது, மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு இந்திரனைப்போல் வாழலாம். இத்தகைய பண்புள்ளவர்களே அரிய செயல்களை செய்வார்கள். புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம். நிறைவானவர்கள் பெருமையை போற்றுவதே மறைநூல்கள். நற்குணம் அடைந்தவர் கோபத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்வது இல்லை. அந்தணர் என்பவர் யாவரும் எல்லா உயிரும் இன்புற்று மகிழவே எண்ணுவார்.

 

காணொளி:-

https://youtu.be/WbyEbrfYLIw

அறத்துப்பால் > பாயிரவியல் | அறன்வலியுறுத்தல் (4)

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31)

௧, சிறப்பு வரும் செல்வமும் வரும் அறமுடன் ஆர்வமாய் செயல்படுபவன் உயிர்க்கு.

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)

௨, அறமுடன் உயர்வு போல் செயல் இல்லை, இதனை மறுத்தால் உயர்வு இல்லை à®•à¯‡à®Ÿà¯à®¤à®¾à®©à¯.

 

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)

௩, ஏற்கும் வகையில் இருப்பதே அறச் செயல், ஏற்க முடியாதது எப்படியாவது எல்லாவற்றையும் செய்வது.

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. (34)

௪, மனதளவிலேயே மாசு இல்லாமல் இருத்தலே அனைத்திற்கும் அறம்

மற்றவை நீர்த்துவிடும்.

 

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம். (35)

௫, அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடுங் கோபம், வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். 

 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. (36)

௬, பிறகு பார்ப்போம் என்று இல்லாமல் அறம் செய்யவேண்டும், இல்லையேல் வாழ்த்தும் பொழுது வாழ்த்தாத துணைபோல் ஆகிவிடும்.

 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)

௭, அறம் இதுவென எண்ணாதே பல்லக்கில் அமர்ந்தவனுடன் சுமப்பவனை சேர்த்து.

 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)

௮, வாய்த்த நாள் வீணாகாமல் நல்லது செய்தால் அது ஒருவருக்கு வாழ்நாள் வழியை மூடும் கல்.

 

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல. (39)

௯, அறச் செயல்களால் வருவதுவே இன்பம் மற்றவை வெளியே கூட மதிக்கப்படுவது இல்லை.

 

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி. (40)

௧௦, பலசெயல்களை அறத்துடன் செய்யும் ஒருவருக்கு பழியும் பல உயர்வை தரும்.

 

அதிகார விளக்கம்!

 

     மனதால் நேர்மையுடன் இருப்பதே அறம், அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும், மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. à®…ழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடுங் கோபம், வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல் தனக்காக செய்யவேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தை தரும்.

 

காணொளி:-

https://youtu.be/YXIlgcNFHwc

அறத்துப்பால் > இல்லறவியல் | இல்வாழ்க்கை (5)

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை. (41)

௧, குடும்பம் நடத்தும் ஒருவன் இயல்பாக மாறிய மூவருக்கும்

நல்லது செய்யும் துணை.

 

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. (42)

௨, போதும் என்று நிறைவை அடைந்தவருக்கும், நிறைவு அடையாதவருக்கும், இறந்தவருக்கும், குடும்பத்தானே  துணையாவான். 

 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43)

௩, தெரியும் புலன் அறிந்தவர் சிறந்த மனிதர்களை உபசரிப்பது, ஐந்து à®ªà¯à®²à®©à¯à®•à®³à¯ தலையில் ஒத்திசைவு கொள்வது போல் இருக்கும்.

 

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)

௪, பழித்துவிடாதவாறு பக்குவமாக உண்ணுவது புரிந்து விட்டால்

வாழ்க்கையின் à®ªà®¾à®¤à¯ˆà®¯à®¿à®²à¯ இடையுறு இல்லை. 

 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. (45)

௫, அடுத்தவர்களும் வாழவேண்டும் என்ற மனமும், தனக்குத் தானே à®‰à®£à¯à®®à¯ˆà®¯à®¾à®• இருக்கும் குணமும், உண்டாக குடும்ப வாழ்க்கையே  பண்போடு பயன் தருவதாக இருக்கிறது .

 

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ எவன். (46)

௬, அறத்துடன் இருக்க குடும்பத்தானாக இருக்க வேண்டும்

புறத்தே சென்று பேறு அடைந்தவன் யார்?

 

 

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை. (47)

௭, இயல்பாக குடும்ப வாழ்க்கை வாழ்பவனே உண்மையறிய முயலும் அனைவரிலும் தலையானவன்.

 

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)

௮, வாழ்வின் முறை அறிந்து வாழ்ந்து அறத்திற்கு கேடு செய்யாத

குடும்ப வாழ்க்கை, உண்மையறிய முறை செய்வதைவிட முறையானது.

 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)

௯, அறம் எனப்படுவதே குடும்ப வாழ்க்கை அதுவும் பிறர் பழிக்கும்படி இல்லாமல் இருப்பது நன்று.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். (50)

௧௦, உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன் à®µà®¾à®©à¯à®ªà¯‹à®©à¯à®±

தெய்வமாக மதிக்கப்படுவான். 

 

அதிகார விளக்கம்!

 

     உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு மேற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்பு கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். குடுப்பத்திலிருந்து கற்க முடியாதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது. இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.

 

காணொளி:-

https://youtu.be/GzLWW8g-AyE

அறத்துப்பால் > இல்லறவியல் | ௬, வாழ்க்கைத் துணைநலம் (6)

 à®®à®©à¯ˆà®•à¯à®¤à®•à¯à®• மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)

௧, வீட்டிற்கு தேவையானதை சிறப்புற செய்பவளை தனதாக கொண்டவன் வளம் பல காணும் வாழ்க்கைத் துணை அடைந்தவன்.

 

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல். (52)

௨, வீட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் à®‡à®²à¯à®²à®¤à¯à®¤à®°à®šà®¿à®¯à®¾à®©à®¾à®²à¯ (மனைவி) வாழ்வில் எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை.

 

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை. (53)

௩, இல்லை என்பதே இல்லத்தாளின்  குணமாக இருந்தால், உள்ளது எது

இல்லத்தாளை விட துன்பம் தரும் ஒன்று.

 

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின். (54)

௪, பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை, கற்பென்னும்

திடத்தன்மை உண்டாக்க பெற்றால்.

 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. (55)

௫, சிறப்பு பெற்றவர்களை தொழ மறுத்து தனது கணவனை மட்டுமே தொழுபவள் எதிர்பார்க்கும் பொழுது பெய்யும் மழை போன்றவள்.

 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)

௬, தன்னை காத்து, தான் கொண்டவர்களை பாதுகாத்து, தகுதிக்கு உதாரணமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.

  

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை. (57)

௭, காவலில் வைத்து காப்பது என்ன செய்யும், பெண்களின் தன்னை தான் காக்கும் தன்மையே முதன்மையானது.

 

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. (58)

௮, அடைந்தவர் à®…டைந்தது அடையவேண்டிய பெண்ணை

அறிய சிறப்பும் புதிய ஒளியும் இருக்கும் உலகில்.

 

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை. (59)

௯, புகழ் அடைந்த குடும்ப வாழ்க்கை வாழாதவருக்கு இல்லை à®‡à®•à®´à¯à®¨à¯à®¤à¯ பேசுவார் முன் காளை போன்ற கம்பீர நடை.

 

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு. (60)

௧௦, முழுமை என்பது குடும்ப வாழ்க்கை அதன் சிறப்பே à®¨à®²à¯à®² குழந்தைகளை பெறுவது.

 

அதிகார விளக்கம்!

 

     வாழ்தல் என்பது உள்ளது சிறத்தல் ஆகும். அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும். ஆனால் நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள் மனைவி மேலும், தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள் எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்கலம். 

 

காணொளி:-

https://youtu.be/qkq8GOEAiAo

அறத்துப்பால் | இல்லறவியல் | ௫, இல்வாழ்க்கை (5)

 à®‡à®²à¯à®µà®¾à®´à¯à®µà®¾à®©à¯ என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை. (41)
௧, குடும்பம் நடத்தும் ஒருவன் இயல்பாக மாறிய மூவருக்கும்
நல்லது செய்யும் துணை.
 
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. (42)
௨, போதும் என்று நிறைவை அடைந்தவருக்கும், நிறைவு அடையாதவருக்கும், இறந்தவருக்கும், குடும்பத்தானே  துணையாவான். 
 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43)
௩, தெரியும் புலன் அறிந்தவர் சிறந்த மனிதர்களை உபசரிப்பது, ஐந்து புலன்கள் தலையில் ஒத்திசைவு கொள்வது போல் இருக்கும்.
 
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். (44)
௪, பழித்துவிடாதவாறு பக்குவமாக உண்ணுவது புரிந்து விட்டால்
வாழ்க்கையின் பாதையில் இடையுறு இல்லை. 
 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது. (45)
௫, அடுத்தவர்களும் வாழவேண்டும் என்ற மனமும், தனக்குத் தானே உண்மையாக இருக்கும் குணமும், உண்டாக குடும்ப வாழ்க்கையே  பண்போடு பயன் தருவதாக இருக்கிறது .
 
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
போஒய்ப் பெறுவ எவன். (46)
௬, அறத்துடன் இருக்க குடும்பத்தானாக இருக்க வேண்டும்
புறத்தே சென்று பேறு அடைந்தவன் யார்?
 
 
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. (47)
௭, இயல்பாக குடும்ப வாழ்க்கை வாழ்பவனே உண்மையறிய முயலும் அனைவரிலும் தலையானவன்.
 
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து. (48)
௮, வாழ்வின் முறை அறிந்து வாழ்ந்து அறத்திற்கு கேடு செய்யாத
குடும்ப வாழ்க்கை, உண்மையறிய முறை செய்வதைவிட முறையானது.
 
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. (49)
௯, அறம் எனப்படுவதே குடும்ப வாழ்க்கை அதுவும் பிறர் பழிக்கும்படி இல்லாமல் இருப்பது நன்று.
 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும். (50)
௧௦, உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன் வான்போன்ற
தெய்வமாக மதிக்கப்படுவான். 
 
அதிகார விளக்கம்!
 
     à®‰à®³à¯à®³à®ªà®Ÿà®¿ இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு மேற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்பு கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். குடுப்பத்திலிருந்து கற்க முடியாதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது. இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.
 
காணொளி:-
https://youtu.be/GzLWW8g-AyE

அறத்துப்பால் | இல்லறவியல் | ௬, வாழ்க்கைத் துணைநலம் (6)

 à®®à®©à¯ˆà®•à¯à®¤à®•à¯à®• மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (51)
௧, வீட்டிற்கு தேவையானதை சிறப்புற செய்பவளை தனதாக கொண்டவன் வளம் பல காணும் வாழ்க்கைத் துணை அடைந்தவன்.
 
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (52)
௨, வீட்டை சிறப்பாக ஆளும் தகுதி இல்லாதவள் இல்லத்தரசியானால் (மனைவி) வாழ்வில் எவ்வளவு சிறப்புகள் இருந்தும் பயன் இல்லை. 
 
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை. (53)
௩, இல்லை என்பதே இல்லத்தாளின்  குணமாக இருந்தால், உள்ளது எது
இல்லத்தாளை விட துன்பம் தரும் ஒன்று.
 
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். (54)
௪, பெண்ணை விட பெறவேண்டிய ஒன்று எதுவும் இல்லை, கற்பென்னும்
திடத்தன்மை உண்டாக்க பெற்றால்.
 
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (55)
௫, சிறப்பு பெற்றவர்களை தொழ மறுத்து தனது கணவனை மட்டுமே தொழுபவள் எதிர்பார்க்கும் பொழுது பெய்யும் மழை போன்றவள். 
 
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)
௬, தன்னை காத்து, தான் கொண்டவர்களை பாதுகாத்து, தகுதிக்கு உதாரணமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.
 
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (57)
௭, காவலில் வைத்து காப்பது என்ன செய்யும், பெண்களின் தன்னை தான் காக்கும் தன்மையே முதன்மையானது. 
 
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)
௮, அடைந்தவர் அடைந்தது அடையவேண்டிய பெண்ணை
அறிய சிறப்பும் புதிய ஒளியும் இருக்கும் உலகில்.
 
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. (59)
௯, புகழ் அடைந்த குடும்ப வாழ்க்கை வாழாதவருக்கு இல்லை இகழ்ந்து பேசுவார் முன் காளை போன்ற கம்பீர நடை.
 
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. (60)
௧௦, முழுமை என்பது குடும்ப வாழ்க்கை அதன் சிறப்பே நல்ல குழந்தைகளை பெறுவது.
 
அதிகார விளக்கம்!
 
     à®µà®¾à®´à¯à®¤à®²à¯ என்பது உள்ளது சிறத்தல் ஆகும். அதற்கு துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம்பல கிடைத்துவிடும். ஆனால் நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டிய பொழுது வரும் மழைப் போன்றவள் மனைவி மேலும், தன்னைக் காத்து தன்னை சார்ந்தவரையும் காப்பவள் எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்கலம். 
 
காணொளி:-
https://youtu.be/qkq8GOEAiAo

அறத்துப்பால் | இல்லறவியல் | ௮, அன்புடைமை (8)

 à®…ன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும். (71)
௧, அன்பினை தடுக்கும் தாழ்பாள் உண்டா? அன்பு மிகுதி
அடைந்தால் கண்ணில் ஈரம் பெருகி வெளிப்படும்.
 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72)
௨, அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தனக்கு உரியது என்பார், 
அன்புள்ளவர்களோ எனதுயிரும் உரியது பிறருக்கு என்பார். 
 
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு 
என்போடு இயைந்த தொடர்பு. (73)
௩, அன்புடன் இணைந்த செயல் என்பது, சிறந்த உயிர்களின் உடம்புடன் உயிர் கொள்ளும் தொடர்பை போன்றது.
 
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (74)
௪, அன்பு தருகின்ற ஆர்வம் உண்டானால் அதுதரும் நல்ல பண்புகள் நாட முடியாத சிறப்புகளாகும். 
 
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. (75)
௫, அன்பினால் அமையும் செயல் என்பது உலகத்தில் இன்பம் பெற்றவர்களின் சிறப்பு.
 
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76)
௬, தர்ம செயல்களுக்கு மட்டுமே அன்பு காரணம் என்பார்கள் அறியாதவர்கள், வீரத்திற்கும் அன்பே துணையாகும்.
 
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். (77)
௭, எலும்பு இல்லாதவற்றை வெயில் தாக்குவதை போல தாக்கும் அன்பில்லாதவர்களை அறம்.
 
 
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. (78)
௮, அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை கடினமான பாறையில் வெப்பத்தில் மரம் துளிர்வதை போன்றது.
 
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. (79)
௯, வெளியே இருக்கும் உறுப்புகள் தீங்கு செய்யும் உடம்பின் உள் உறுப்பு அன்பில்லாதவருக்கு.
 
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. (80)
௧௦, அன்பின் பாதையே உயிரின் தன்மை, அன்பில்லாதவர்களுக்கு
எலும்பு மேல் போர்த்திய தோல் போன்றதே உடம்பு.
 
அதிகார விளக்கம்!
 
     à®’ருவர் அன்பானவராக இருந்தால் அவரால் இரக்கத்தை மறைக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வழியும். தனக்கு என்று மறைக்காமல் தன் உயிரையும் அடுத்தவற்கு தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள்.
 
காணொளி:-
https://youtu.be/1Cq-Of1a8Z4

அறத்துப்பால் | இல்லறவியல் | ௯, விருந்தோம்பல் (9)

 à®‡à®°à¯à®¨à¯à®¤à¯‹à®®à¯à®ªà®¿ இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு. (81)
௧, இருக்கசெய்து இல்வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவைகள் விவசாயம் செய்பவர்களின் பொருட்டே வந்தது.
 
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82)
௨ , விருந்தாளி வெளியே இருக்க சாகா மருந்தாக இருப்பினும் தான் மட்டும் உண்ணுவது இல்லை.
 
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)
௩, ஒவ்வொரு காலையும் விருந்தை எதிர்பார்ப்பவர் வாழ்க்கை பருவகால மாற்றத்தால் பாதிப்பது இல்லை.
 
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல். (84)
௪, உள்ளே இருந்து எதையும் செய்யவிடாமல் தடுக்கும் சோம்பல்
முகமலர்ச்சியுடன் விருந்தை கவனிப்பவர்களை அணுகாது.  
 
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். (85)
௫, விதை இட வேண்டுமோ விருந்து படைத்து இன்பமுடன் மிச்சத்தை விரும்பும் மனிதர் நிலத்தில்.
 
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. (86)
௬, செல்லும் விருந்தினரை வழி அனுப்பி வரும் விருந்துக்கு
எதிர்பார்ப்பவரை தெய்வீகமானவர்கள் ஆசீர்வதிப்பார்கள்.
 
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். (87)
௭, தன்னை விட தனக்கு துணை ஒன்று இல்லை. விருந்தின் பயன் வேள்வி பயன் போல் துணையாக இருக்கும்.  
 
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். (88)
௮, போதனையால் பற்றை விட்டோம் என்பார்கள் விருந்து படைக்கும் வேள்வி செய்ய முற்படாதர்வர்கள்.
 
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. (89)
௯, அடைந்தவைகளில் விருந்து உபசரிப்பதைபோல் இல்லை. சிறுபுத்தி உள்ளவர்களிடம் உபசரிக்காத மடத்தனம் உண்டு.
 
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
௧௦, முகர்ந்தாலே வாடும் அனிச்ச மலர்போல் முகத்தை திரித்து
உபசரித்தால் வீணாகி விடும் விருந்து.
 
அதிகார விளக்கம்!
 
     à®µà®¿à®µà®šà®¾à®¯à®¤à¯à®¤à¯ˆ தொழிலாக கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருத்தாக இருப்பினும் விருந்துடன் பகிர்ந்து கொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஆட்படமாட்டார். வேள்வியை விட சிறந்த விருந்தோம்பல் மென்மையானது. 
 
காணொளி:-
https://youtu.be/AZzC2ogGloc

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௦, இனியவை கூறல் (10)

 à®‡à®©à¯à®šà¯Šà®²à®¾à®²à¯ ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)
௧, மகிழ்வான வார்த்தையால் ஈரம் பெருகும், பொய்மை இன்றி உண்மையை அறிந்தவர்களின் வாய் சொல்.
 
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். (92)
௨, உள்முகமாக இருந்து செய்யும் செயல்களில் நல்லது, முக மலர்ச்சியுடன் இனிய வார்த்தைகள் சொல்லுவது.
 
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)
௩, முகத்திற்கு நேராக அமர்ந்து இனிமையாக பார்த்து
உள்ளத்திலிருந்து இனிய வார்த்தைகளை தருவதே அறம்.
 
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. (94)
௪, துன்புறுவதும் துவண்டு விடுவதும் இல்லாமல் போகும் யாரும்
இன்பமடையும் இனிய சொல் பேசுபவருக்கு.
 
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. (95)
௫, பணிவானவனாகவும் இனிமையான சொல்லை பேசுபவனாகவும் மாறுவதே ஒருவருக்கு சிறந்த அணிகலன். மற்றவைகள் இதுபோன்றவை அல்ல. 
 
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (96)
௬, தீமைகள் அழிந்து நன்மை பெருகும் நல்லது எது என்று
தேடி இனிமையான வார்த்தைகள் பேசினால்.
 
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)
௭, நன்மை தரும் நன்றிவுணர்வும் கொடுக்கும், பயன்கருதி பக்குவமாய் பேசப்படும் வார்த்தை.
 
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். (98)
௮, குழந்தைத் தனமற்ற இனிய வார்த்தை நாளையும் இன்றும் இன்பம் தரும். 
 
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. (99)
௯, இனிய வார்த்தைகளால் இன்பம் காண்பவன் எதற்காக வன்மையான
வார்த்தைகளை வழங்குவது.
 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. (100)
௧௦, இனிமையானது இருக்கும் பொழுது இனிமையின்றி கூறுவது கனி இருக்க காய் பறிப்பது போன்றது.
 
அதிகார விளக்கம்!
 
     à®šà¯†à®®à¯à®ªà¯Šà®°à¯à®³à¯ கண்டவர் வார்த்தைகள் கண்கள்ஈரம் வழிய செய்யும், உள்ளத்தை பொருத்தே கொடுக்கும் அளவு இருக்கும் முக மலர்ச்சி பொருத்தே வார்த்தை பொருள்படும்.
 
காணொளி:-
https://youtu.be/--BbUSjKA0k

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௧, செய்நன்றி அறிதல் (11)

 à®šà¯†à®¯à¯à®¯à®¾à®®à®²à¯ செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது. (101)
௧, செய்கிறோம் என்று அறியாமலேயே செய்த உதவியானது பூமியும் வானமும் வழங்குவதை விட மேலானது.
 
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)
௨, சரியான நேரத்தில் செய்த உதவி சிறியதாக இருப்பினும் அதுவே உலகத்தின் மிகப் பெரியது. 
 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (103)
௩, பயன் கருதி செய்யாமல் செய்த உதவியை எண்ணிப் பார்ப்பதின் நன்மை கடலை விட பெரியது.
 
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். (104)
௪, தினையளவு துணையாக நன்றி செய்தலும் பனையளவு துணையாக 
ஏற்பார்கள் நன்றியின் பயன் தெரிந்தவர்கள்.
 
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)
௫, உதவுவது வரையறை செய்யாமல் உதவுவது, உதவியின் தன்மை 
செய்பவரின் நிலையைப் பொறுத்து அமைகிறது.
 
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (106)
௬, மறக்கவேண்டாம் மாசற்றவர்களின் உறவை, துறக்க வேண்டாம் 
துன்பத்துடன் இருக்கையில் விலக நினைக்காதவர் நட்பை.
 
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. (107)
௭, தோன்றும் அடுத்த பிறப்புக்கும் எண்ணுவர் தனக்கு வந்த 
துன்பத்தை அழித்தவரின் நட்பை.
 
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (108)
௮, பெற்ற உதவியை மறப்பது பெருமையல்ல. நமக்கு
செய்த தீங்கை உடனே மறப்பது நல்லது.
 
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். (108)
௯, கொல்வதை போன்ற துன்பம் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க துன்பம் மறையும்.
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110)
௧௦, எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு. முக்தி இல்லை தான்பெற்ற உதவியை மறந்தவருக்கு. 
 
அதிகார விளக்கம்!
 
     à®‰à®¤à®µà¯à®•à®¿à®±à¯‹à®®à¯ என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும் விட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தை விட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே நமக்கு நல்லது. பெற்ற உதவியை மறப்பவர் உய்வு அடைய முடியாது.
 
காணொளி:-
https://youtu.be/81jm5el7Nfw

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௨, நடுவு நிலைமை (12)

 à®¤à®•à¯à®¤à®¿ எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின். (111)
௧, தகுதி என்ற ஒன்று நல்லது அது பிரித்துப் பார்க்காமல் எல்லாரிடமும் ஒன்றாக பழுக்கும் தன்மை பெற்றதால்.
 
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (112)
௨, சிறப்பு பொருந்தியவன் செயல்கள் வீணாகாமல், வளரும் சந்ததிக்கும் தனிச்சிறப்பு உடையதாய் இருக்கும்.
 
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். (113)
௩, நன்மை தருவதாக இருப்பினும் நடுநிலை தவறிய செயல்களை உடனே ஒழித்து விட வேண்டும்.
 
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (114)
௪, தகுதி உடையவர் தகுதி அற்றவர் என்பது அவர் விட்டுச் செல்லும் உடல் மற்றும் படைப்புகளில் காணப்படும்.
 
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (115)
௫, கெடுவதும் பெருகுவதும் இல்லாமல் இருக்காது மனசாட்சிக்கு மாறுபாடு அற்று இருப்பதே உதாரணமாக வாழ்பவருக்கு அழகு.
 
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். (116)
௬, கெடப்போகிறேன் நான் என்பதை அறியட்டும் நெஞ்சம் நடுநிலை தவறியதை செய்தால்.
 
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (117)
௭, கெடுதலாக குறைத்து பேசாது உலகம், நடுநிலையோடு நன்றியுணர்வு கொண்டவனின் வறுமையை.
 
 
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (118)
௮, சமமாக செய்து சரியாக தூக்கும் கோல் போல இருந்து யாதொரு பக்கமும் துக்கம் தராமல் இருப்பது உதாரணமாக வாழும் மனிதர்களுக்கு அழகு.
 
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். (119)
௯, வார்த்தை எல்லை இல்லாத சிறப்பு ஒரு பக்கமாக உள் எல்லை இல்லாமல் இருந்தால் வரும்.
 
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். (120)
௧௦, வியாபாரம் செய்பவருக்கு (வாங்குபவர்களுக்கு) வியாபாரம் செய்து (விற்று) பிற யாவற்றையும் தமக்கு உண்டானதை போல் செய்ய வேண்டும்.
 
அதிகார விளக்கம்!
 
     à®…வர் இவர் என்று பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே தக்கார் அதை அவரது எச்சமாகிப் போன உடல் காட்டிவிடும். கேடும் பெருக்கமும் நிலைத்தவை இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப் போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும்.
 
காணொளி:-
https://youtu.be/Ty0VDaNRjpA

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௩, அடக்கம் உடமை (13)

 à®…டக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். (121)
௧, பணிவு தெயவீகமானவர்களுடன் சேர்க்கும், பணிவற்ற தன்மை மீளமுடியாத இருட்டில் சேர்த்து விடும்.
 
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. (122)
௨, பொருளாக இல்லாத அடக்கத்தை பாதுகாக்க வேண்டும். அதன் பயனை விட சிறந்தது இல்லை உயிருக்கு.
 
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (123)
௩, திறன் அறியப்பட்டு நன்மைகள் விளையும், அறிய வேண்டியதை அறிந்து செயல்பட்டு அடக்கமாக இருந்தால்.
 
நிலையின் திரியாது அடங்கி யான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (124)
௪, இருப்புத் தன்மையை மாற்றிக் கொள்ளாமல் அடக்கம் அடைந்தவரின் வெளிப்பாடுகள் மலையை விட பெரியது. 
 
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. (125)
௫, எல்லாருக்கும் நல்லது பணிதல், அப்படியானவர்களின் மனம் செல்வந்தருக்கும் செல்வம் தர வல்லது.
 
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. (126)
௬, ஒன்றில் மட்டும் ஆமைப் போல் ஐந்து புலன்களையும் அடக்க செய்தால் எழுந்து செயல்படும் பொழுதெல்லாம் காவலாக இருக்கும்.
 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (127)
௭, எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும், இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும் சொல் குற்றம் ஏற்பட்டு. 
 
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (128)
௮, ஒரே ஒரு தீமையான சொல் அதன் அர்த்தம் விளங்கும் பொழுது நன்மைகள் தாராது போகும். 
 
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)
௯, தீ பட்ட காயம் ஆறிப்போகும், நாவில் திட்டிய காயம் வடுவாக மாறும்.
 
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130)
௧௦, முடிவை முன்னிறுத்தி கற்று அடங்கி நடப்பவன் இடத்தில் அறமும் வழி பார்த்து நுழையும். 
 
அதிகார விளக்கம்!
 
     à®¤à¯†à®¯à¯à®µà¯€à®•à®®à®¾à®©à®µà®°à¯à®•à®³à¯à®Ÿà®©à¯ சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையை விட பெரியவராய் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம் காரணம் தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை உண்டாக்கிவிடும். முழுமையாக கற்று அறிந்தவர் பணிதலுடன் வாழ்வார். 
 
காணொளி:-
https://youtu.be/Mh3eEX15C_I

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௪, ஒழுக்கமுடைமை (14)

 à®’ழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும். (131)
௧, சுயமுன்னேற்றத்திற்கான வரைமுறையால் சுயத்தை அறியலாம் சுயமுன்னேற்றத்திற்கான  வரைமுறை உயிரை விட சிறந்ததாக காக்க வேண்டும். 
  
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (132)
௨, விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் சுயமுன்னேற்றதிற்கான வரைமுறையை புரிந்து கொண்டு நடப்பவருக்கும் அதுவே துணையாக இருக்கிறது.
 
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் (133)
௩, ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம், இழுக்கம் பிறப்பையே அசிங்கப் படுத்தி விடும்.  
 
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134)
௪, பார்ப்பவனுக்கு நினைவிழந்து போனாலும் ஏற்றுக் கொள்ளலாம், பிறப்பொழுக்கம் அற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளமுடியாது. 
 
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. (135)
௫, அழுக்கு மனம் உள்ளவனின் வளர்ச்சி இல்லா தன்மைப்போல் ஒழுக்கம் இல்லாதவனுக்கு வளர்ச்சி இல்லை.  
 
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (136)
௬, ஒழுக்கத்தில் தவறாதவர்கள் உயர்ந்தவர்கள், அவர்கள் இழுக்கத்தின் அவல நிலை அறிந்து உள்ளார்கள்.   
 
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. (137)
௭, ஒழுக்கத்தால் உன்னதமான நிலையை அடைவார்கள், இழுக்கத்தால் இதுவரை இல்லாத பழி வரும். 
 
 
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும். (138)
௮, நன்றியுணர்வுக்கு விதையாக நல்லொழுக்கம் அமையும், தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தை தரும்.
 
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். (139)
௯, ஒழுக்கமானவர்கள் தீமையானவற்றை தவறியும் வாயில்கூட சொல்லுவது இல்லை.
 
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். (140)
௧௦, உலக மனிதர்களுடன் ஒத்திசைவு கொள்ள கற்காதவர் பல துறை அறிவு பெற்றும் அறிவில்லாதவரே. 
 
அதிகார விளக்கம்!
 
     à®µà®¾à®´à¯à®¤à®²à¯à®•à¯à®•à®¾à®© வரைமுறையே ஒழுக்கம் அது வீடுபெறு அடைய உதவும் என்பதால் உயிரைவிட போற்றவேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும் உலகத்துடன் ஒத்திசையும் படி நடப்பவர் கற்று அறிந்தவர். 
 
காணொளி:-
https://youtu.be/ZtQHsj9p9tc

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௫, பிறன்இல் விழையாமை (15)

 à®ªà®¿à®±à®©à¯à®ªà¯Šà®°à¯à®³à®¾à®³à¯ பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல். (141)
௧, அடுத்தவர் பொருளையே பயன்படுத்திக் கொள்ளும் அறியாமை அறிவினால் நேர்மையின் பொருள் அறிந்தவரிடத்தில் இல்லை. 
 
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். (142)
௨, அறம் கடந்து இருப்பவர்களைக் காட்டிலும் பிறரை சார்ந்து நிற்கும் அறிவிலிகள் இல்லை. 
 
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார். (143)
௩, ஏசப்படவேண்டியவர் வேறு ஒருவர் இல்லை நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.
 
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். (144)
௪, எத்தனை துணைகளை பெற்றிருந்தால் என்ன, தினையளவு தேர முடியாது அடுத்தவர் பொருள் மேல் பற்றுகொண்டால்.
 
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. (145)
௫, எளிதாக இருக்கிறது என்று இல்லத்தை துறப்பவன் எய்தும் ஒன்று அழியாது இருக்கும் பழி மட்டுமே. 
 
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். (146)
௬, பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் பிரியாமல் இருக்கும் இல்லறத்தை துறந்தவன் இடத்தில். 
 
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். (147)
௭, உண்மையான குடும்பத்தான் என்பவன் பிறருக்கு உரிமையான பெண்ணை நாடதவனாக இருப்பான்.
 
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. (148)
௮, அடுத்த வீட்டை ஆராயாத ஆண்மையே முன்மாதிரியாக வாழும் மனிதர்க்கு அறமும் நல்ல ஒழுக்கமும் ஆகும். 
 
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். (149)
௯, நலமுடன் இருக்க உரியவர் யாரென்றால் தங்கும் உடல் நீரை அடுத்தவருக்கு உரிமையானவளின் தோல் தொட்டு தராதவர்.
 
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. (150)
௧௦, அறமாக வரையறுத்தவைக்கு எதிராக செய்தாலும் பிறருக்காக வரையறுக்கப் பட்டவளின் பெண்மையை நாடாததே நன்று.
 
அதிகார விளக்கம்!
 
     à®…டுத்தவரின் பொருள்களை பயன்படுத்திக் கொள்வது அறம் என்றால் என்ன என்று அறிந்தவர்கள் செய்வதில்லை. பகை, பாவம், பழி, பயமும் அற்றவர் இல்லறத்தார் ஆவர். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வை சிதைக்க காரணமாக இருக்க மாட்டார்.
 
காணொளி:-
https://youtu.be/1IeE0XBKFJQ

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௬, பொறை உடைமை (16)

 à®…கழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)
௧, தோண்டுபவரையும் தாங்கும் பூமியைப் போல் தன்னை தரக்குறைவாய் பேசுபவரையும் பொருத்துக் கொள்வதே தலை சிறந்தது. 
 
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (152)
௨, மரணம் வரை பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் அதனை மறந்து விடுவதே நன்று.
 
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. (153)
௩, இன்னலில் இன்னல் விருந்தை கவனிக்க முடியாமை, வலிமையில் வலிமை மடையர்களை பொறுத்தல்.
 
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 
போற்றி ஒழுகப் படும். (154)
௪, நிறைவுத் தன்மை நீங்காமல் இருக்க பொறுமையை போற்றி ஏற்று நடக்க வேண்டும்.
 
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. (155)
௫, பொறுக்காதவரை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை, பொறுத்துக் கொள்பவரை பொன் போல் போற்றுவார்கள்.
 
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். (156)
௬, பொறுக்காதவருக்கு ஒரு நாள் கிடைக்கும் இன்பம் பொறுத்தவருக்கு துணையாகவும் போற்றும் புகழாகவும் இருக்கும்.
 
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (157)
௭, திறன் இல்லாதவற்றை பிறர் செய்தாலும் துன்பப்பட்டு அறம் அற்றவைகளை செய்யாததே நன்று.
 
 
 
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல். (158)
௮, மிகைப் படுத்தி துன்பம் செய்தவரை நாம் நமது தகுதியால் வென்று விடலாம்.
 
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். (159)
௯, துறவியை விட தூய்மையானவர் தீய சொற்களை பேசுபவரை இறந்தவர் வாய் பேச்சு என்று பார்ப்பவர். 
 
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (160)
௧௦, உண்ணா நோன்பு இருக்கும் பெரியவர்களும், பிறர் சொல்லும் இழிவான சொல்லை அலட்சியம் செய்பவருக்கு பின்தான்.
 
அதிகார விளக்கம்!
     à®ªà¯Šà®±à¯à®¤à¯à®¤à¯à®•à¯ கொள்ளும் பண்பு அவசியம் தன்னை வெட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய் போல் வாழ் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நமது தகுதியால் அடுத்தவர் தவிர்க்கப்படுவார் மேலும், அடுத்தவரின் அசட்டுத்துத் தனமான வார்த்தைக்கு மதிப்பளிக்காதவரே நோன்பில் சிறந்தவர். 
 
காணொளி:-
https://youtu.be/HZntrq1YO8c

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௭, அழுக்காறாமை (17)

 à®’ழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு. (161)
௧, ஒழுக்கம் மாறாது இருக்க ஒருவர் தன் மனதில் பொறாமை அற்ற இயல்பை பெறவேண்டும்.
 
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)
௨, விரும்ப வேண்டியதில் நிகரானது இல்லை யாரிடத்திலும் பொறாமைபெறா நிலையை பெற்றால். 
 
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். (163)
௩, அறச் செயல்கள் தேவையற்றது என்பவர்கள் பிறச் செயல்களையும் செய்யாமல் அழுக்கற்றுப் போவார்கள்.
 
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. (164)
௪, அழுக்கு மனதுடன் (பொறாமை) தேவையற்றதை செய்யமாட்டார்கள் இழிவான குணத்தால் ஏற்படும் துன்பத்தை அறிந்து.
 
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. (165)
௫, அழுக்கு மனம் (பொறாமை) உடையவர்கள் அதை சார்ந்து இருக்கமாட்டார்கள் வழக்காக மாறும் துன்பம் அது என்பதால்.
 
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். (166)
௬, கொடுப்பதை பொறாமையால் தடுப்பவன் உறவுகளும், உடுப்பதும், உண்ணுவதும் இல்லாமல் கெட்டு போகும். 
 
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். (167)
௭, ஆர்வமுடன் அழுக்கு மனம் (பொறாமை) உடையவனை செயல்களின் நாயாகி தன் ஆற்றலை காட்டி விடும்.
 
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
௮, அழுக்கு மனம் (பொறாமை) என்ற பாவச்செயல் திருவை  தீய வழியில் தள்ளி விடும்.
 
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)
௯, அழுக்கான நெஞ்சம் கொண்டவரின் செயல்களும், செம்மையானவரின் அழிவும் நினைக்கப் படும்.
 
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (170)
௧௦, அழுக்கு மனம் அற்றவரை உலகம் அகற்றிவிடுவது இல்லை, அழுக்கு மனம் உள்ளவர் எவ்வளவு அடைந்தாலும் நிறைவடைவது இல்லை.
 
அதிகார விளக்கம்!
 
     à®ªà¯Šà®±à®¾à®®à¯ˆ இல்லாதவரே ஒழுக்கமானவர், பகைவர் தரும் அழிவைவிட பொறாமை தந்துவிடும். பொறாமையுள்ளவர் பிறவி மூப்போ, பொருள்களினால் நிறைவோ அடையமாட்டார்கள்.
 
காணொளி:-
https://youtu.be/--xEyZdPtbY

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௮, வெஃகாமை (18)

 à®¨à®Ÿà¯à®µà®¿à®©à¯à®±à®¿ நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும். (171)
௧, நடுநிலை தவறி நல்ல பொருள் என்று வேட்கை கொண்டால் குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்து விடும்.
 
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். (172)
௨, பயன்பாடு கருதி வேட்கை கொண்டு பழிக்கப்படுவதை செய்யமாட்டார்கள் நடுநிலைக்கு அஞ்சும் நபர்கள்.  
 
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். (173)
௩, சிறிய இன்பத்திற்காக வேட்கை கொண்டு நீதியற்றதை செய்யமாட்டார்கள் மாறாத இன்பம் நாடுபவர்கள்.
 
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். (174)
௪, இல்லாமை அடைந்தோம் என்று வேட்கை கொள்ள மாட்டார்கள் புலன்களை வென்ற மனித இனத்தில் பார்க்க வேண்டியவர்கள்.
 
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். (175)
௫, புரிதல் அற்ற (மனச் சிதைவு) அறிவாகிவிடும் யாராக இருப்பினும் வேட்கை கொண்டு வெறியுடன் நடந்தால். 
 
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176)
௬, அருள் நாடி வேட்கை கொண்டு ஒழுக்க வழி நின்றவர் பொருள் மீது வேட்கை கொண்டால் பொல்லாப்பு வந்து அருள் வாழ்வு அழியும்.
 
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். (177)
௭, விரும்ப வேண்டாம் வேட்கையால் வருவதை, அதன் விளைவோ மரணித்தவர் அடைந்த பயன் போன்றது.
 
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். (178)
௮, அழியாமை செல்வத்திற்கு எதுவென்றால், வேட்கை கொள்ளாமை வேண்டும் பிறர் பயன்படுத்தும் பொருளின் மீது. 
 
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. (179)
௯, நீதியை அறிந்து வேட்கையை விட்ட அறிவுடையவரின் திறமையை அறிந்து உயர்வு வந்து சேரும்.
 
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. (180)
௧௦, கேட்டை விளைவிக்கும் என்று எண்ணவேண்டாம் வேட்கையை, வெற்றியை விளைவிக்கும் வேண்டுதல் அற்ற மனமகிழ்ச்சி.
 
அதிகார விளக்கம்!
 
     à®¨à®Ÿà¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®±à¯à®± வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுற்கு அது தடையாக இருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும் அடுத்தவரின் பொருள் மேல் ஆர்வம் கொள்ளுதல் கூடாது. வேட்கையை விட வேண்டாம் என்ற செருக்கு இன்பம் தரும்.
 
காணொளி:-
https://youtu.be/yzpl7xBvUt8

அறத்துப்பால் | இல்லறவியல் | ௧௯, புறங்கூறாமை (19)

 à®…றம்கூறான் அல்ல செயினும் ஒருவன் 

புறம்கூறான் என்றல் இனிது. (181)
௧, நீதியை பேசாமல் தேவையற்றதை செய்யும் ஒருவன் அடுத்தவரை பற்றி அவதூறு பேசாமல் (புறம்கூறாமை) இருந்தால் இனிமையானது.
 
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. (182)
௨, அறம் அற்றதும் தேவையற்றதும் செய்வதை விட தீதானது புறம் பேசி பொய்யாக நகைப்பது.
 
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கத் தரும். (183)
௩, புறம் பேசி பொய்யாக உயிர் வாழ்வதை விட மரணிப்பதே அறம் கூறும் நன்மையை தரும்.
 
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல். (184)
௪, கண் எதிரே நின்று கண்ணை பார்த்து சொன்னாலும், சொல்லாக்கூடாது பின்விளைவுகளை முன்னே ஆராயாத சொல்லை.
 
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். (185)
௫, அறம் பேசும் மனித மனத்தின் தன்மையை புறம் பேசும் தன்மையால் கண்டு கொள்ளலாம்.
 
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். (186)
௬, பிறரை பழித்து பேசுபவர் தன்னை பழிப்பதற்க்கான காரணத்தையும் திறமையுடன் அறிந்து கூற வேண்டும்.
  
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். (187)
௭, குறை சொல்லி உறவை பிரிப்பார்கள் நிறை சொல்லி நட்பை வளர்க்க இயலாதவர்கள்.
 
 
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. (188)
௮, நெருக்கமானவர் குற்றத்தை பரப்பும் பழக்கமுடையவர்கள், அறியாதார் பற்றி என்னவெல்லாம் செய்வார்களோ.
 
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை. (189)
௯, நீதியின் பொருட்டு வழிமுறைப் படுத்துகிறதோ உலகம் இடம் பார்த்து புறம் பேசுபவரையும் பொறுமையால்.
 
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (190)
௧௦, யாரோ ஒருவர் குறையை போல் தனது குறைகளை கண்டப் பின்பு கெடுதல் வருமோ புரிந்துகொள்ளும் உயிர்க்கு.
 
அதிகார விளக்கம்!
 
     à®…றமற்று தேவையற்றதை செய்பவரும் புறங்கூறாது இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பது நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியா வார்த்தை சொன்னாலும் பரவயில்லை பின்னாக புறம் பேசாதே. தன் குற்றத்தை நீக்க முயல்பவர் பிறரை புறம் செய்யமாட்டார். யாரோ ஓருவர் குற்றம் போல் தன் குற்றத்தை ஆராய்ந்து திருத்தினால் துன்பம் என்பது இல்லாமல் போகும்.
 
காணொளி:-
https://youtu.be/7sVFeD5qqPM

அறத்துப்பால் | இல்லறவியல் | ௨௦, பயனில சொல்லாமை (20)

 à®ªà®²à¯à®²à®¾à®°à¯ முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். (191)
௧, பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை அனைத்து மனிதர்களும் ஏளனம் செய்வார்கள்.
 
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது. (192)
௨, பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை நண்பர்களுக்கு செய்வதை விட தீமையானது. 
 
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. (193)
௩, நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது பயனற்றதை விரிவாக பேசுவதே உரைத்துவிடும்.
 
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. (194)
௪, நேர்மையற்றவை நன்மை தருவதை நீக்கிவிடும். பயன் தராது பண்பற்ற சொல் பலர் இடத்தை அடைத்தும்.
 
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். (195)
௫, சீரும் சிறப்பும் விலகும் பயனற்ற நீர்த்து போனவர்கள் இடத்தில் சொன்னால்.
 
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். (196)
௬, பயன் அற்ற பேச்சை பாராட்டுபவனை குழந்தை என்பதா? குழந்தை போன்ற பதர் என்பதா?
 
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. (197)
௭, நளினமற்று சொன்னாலும் சொல்லலாம் உதாரணமாக இருப்போர் பயனற்றதை சொல்லாததே நன்று.
 
 
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். (198)
௮, அரிதான பயனை ஆராயும் அறிவுள்ளவர்கள் சொல்லமாட்டார்கள் பெரிய பயனை விளைவிக்காத சொல்லை. 
 
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். (199)
௯, பொருள் அழிந்ததை மறந்தும் சொல்லமாட்டார்கள் அறியாமை அழிந்த மாசற்ற காட்சி போன்றவர்.
 
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். (200)
௧௦, சொல்லவேண்டும் சொல்லுவதால் பயன் உண்டாகும்படி. சொல்லக்கூடாது சொல்லுவதால் பயன் உண்டாகாத சொல்லை.
 
அதிகார விளக்கம்!
 
     à®à®³à®©à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ உரிமை கொண்டாடும் பயனற்றதை பேசுபவன் மக்கள் என்பதில்லை பதர் என்றே கொள்ளலாம், பயன் தராதவற்றை பெரியவர்கள் எப்பொழுதும் உரைப்பதில்லை. ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதை சொல்லுவதில்லை.
 
காணொளி:-
https://youtu.be/UGZKSxYEA-4

அறத்துப்பால் | இல்லறவியல் | ௨௧, தீவினை அச்சம் (21)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. (201)
௧, கேடுசெய்பவர் அஞ்சுவது இல்லை வாழ்வை நேசிப்பவர் அஞ்சுவார்கள் தீய வினை என்ற அகங்காரத்திற்கு.
 
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். (202)
௨, கெடுதல் கெடுதலை உண்டாக்குவதால் கெடுதல் நெருப்பை விட அஞ்சப்படும். (குறிப்பு ;- நெருப்பு மேலும் நெருப்பை உண்டாக்க வல்லது)
 
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். (203)
௩, அறியவேண்டியதில் எல்லாம் முதன்மையானது தீயதை செய்தவர்க்கும் செய்யாது விடுவது.
 
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. (204)
௪, நினைவு அற்ற நிலையிலும் பிறருக்கு கெடுதல் ஏற்படுத்தாதே. ஏற்படுத்தினால் அறம் ஏற்படுத்தும் ஏற்படுத்தியவனுக்கு கெடுதலை.
 
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
௫, இல்லை என்று கெடுதலை செய்யவேண்டாம், செய்தால் இல்லாமல் போகும் மற்றவைகளும் வேறுபட்டு. 
 
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். (206)
௬, கெடுதல் பல பிறருக்கு செய்யக்கூடாது, நோய் பல தனக்கு வரக்கூடாது என்று நினைப்பவர். 
 
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். (207)
௭, எந்தவித எதிர்ப்பு பெற்றவரும் உயர்வடைவார். செயலால் வரும் எதிர்ப்போ ஓயாது சென்று வீழ்த்தும்.
 
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. (208)
௮, கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.
 
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)
௯, தன் மீது தனக்கே நேசம் உள்ளவனாக இருந்தால் எப்பொழுதும் அழிக்கவேண்டும் கெடுதல் சார்ந்தவைகளை.
 
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)
௧௦, அருளால் கேட்டை அடைய மாட்டன் என்று அறியவேண்டும், இயல்புக்கு மாறாக சென்று கெடுதல் செய்யவில்லை என்றால். 
 
அதிகார விளக்கம்!
 
      வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல் போல் தொடரும். தன்னைத் தானே நேசிப்பவர் வீடுபெறு பெற நினைப்பவர் தீமை செய்யாது விலக வேண்டும்.
 
காணொளி:-

https://youtu.be/L4e_MJlFFkc 

அறத்துப்பால் | இல்லறவியல் | ௨௨, ஒப்புரவு அறிதல் (22)

 à®•à¯ˆà®®à¯à®®à®¾à®±à¯ வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு. (211)
௧, மாற்றுப்பொருள் வேண்டாத கண்ணியம் மழைக்கு என்று நெறிப்படுத்திக் கொள்ளுமோ உலகம்.
 
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)
௨, ஊக்கமுடன் கொடுத்த பொருள்கள் யாவும் தகுதியுடையவருக்கு உபகாரம் செய்திட வேண்டியே. 
 
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. (213)
௩, புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே. 
 
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)
௪, பொதுவான அறம் போற்றுவான் உயிர் வாழ்பவன். மற்றவர்கள் மரித்தவர்கள் கணக்கில் வைக்கப்படும்.
 
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (215)
௫, ஊர் குளம் நீரால் நிறைந்து பயன் தருவதைப்போலவே உலகத்திற்கு உயர் ஞானம் பெற்றவர்களின் உயர்வு உள்ளது.
 
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (216)
௬, பயன் தரும் மரம் இருக்கும் ஊரில் பழுத்து பயன் தருவதைப் போன்றே செல்வம் நல்ல அறிவு உள்ளவருக்கு கிடைப்பது. 
 
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். (217)
௭, மருந்தாக இருந்து தவறு இழைக்காத மரத்தை போன்றது செல்வம் பெருமை பல உள்ளவரிடம் கிடைப்பது.
 
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். (218)
௮, இடர் ஏற்படும் காலத்திலும் உதவ தயங்காதவர் கட்டாயம்
பார்க்க வேண்டியவர்.
 
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. (219)
௯, நற்சிந்தை உள்ளவன் நீண்ட அமைதியடைவது செய்ய வேண்டியதை செய்யமுடியாத சூழல் அமையும் பொழுதே.
 
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (220)
௧௦, அடுத்தவர் வாழ வேண்டும் என்ற பண்பினால் வரும் கேடு என்னவென்றால், அது ஒருவர் விற்றுக்கோள் என்று தனக்கு அவசியமானதையும் கொடுப்பது.
 
அதிகார விளக்கம்!
 
     à®Žà®¤à®¿à®°à¯à®ªà®¾à®°à¯à®ªà¯à®ªà¯ இல்லாத மழைப் போல் உதவிட முனைதல் வேண்டும். தகுதியானவற்கு உதவுதல் போன்ற சிறந்த செயல் இல்லை. இடர்பட்ட காலத்திலும் உதவும் ஒருவர் காணக்கூடிய தெய்வம். யாவரும் வாழ நினைக்கும் நல்ல மனிதர்கள் மட்டுமே உயிர் வாழும் மனிதர்கள் மற்றவர்கள் இறந்தவர்கள் கணக்கில் வைக்க வேண்டும்.
 
காணொளி:-
https://youtu.be/obB2CETNvoc

அறத்துப்பால் | இல்லறவியல் | ௨௩, ஈகை (23)

 à®µà®±à®¿à®¯à®¾à®°à¯à®•à¯à®•à¯Šà®©à¯à®±à¯ ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221)
௧, வளமற்றவர்களுக்கு உதவுவதே உதவி மற்றவை எல்லாம் குறிப்பறிந்து மீண்டும் பெரும் தன்மை உடையது.  
 
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (222)
௨, நல்ல நதி என்றாலும் மூழ்கி விடுதல் கெடுதலாகும். மேல் ஒரு உலகம் (சுவர்க்கம்) இல்லை என்றாலும் கொடுப்பதே நன்மை தரும்.
 
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. (223)
௩, இல்லை என்ற துன்பத்தை சொல்லாத தன்மை கொடுக்கும் குணம் படைத்த குடும்பத்தாருக்கே உண்டு.  
 
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. (224)
௪, இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது, கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும்வரை இருப்பதே அளவு.
 
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். (225)
௫, வழிகாட்டுபவர் வழிகாட்டுவது பசிக்க வழிகாட்டுவது, அப்பசியை மாற்றிக்கொள்வார் வழிகாட்டுதலுக்குப் பின்.
 
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226)
௬, இல்லாதவர்களின் அழிபசி தீர்த்துவிடுதல் ஒருவர் தான் பெற்ற பொருளை வைப்பதற்கான இடமாகும்.
 
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (227)
௭, பார்த்து உன்ன மறுப்பவனை (பகிர்ந்து உன்ன நினைப்பவனை) பசி என்ற தீய நோய் தீண்டுவது கடினம்.  
 
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (228)
௮, கொடுத்து உதவும் இன்பத்தை அறியமுடியுமோ தனது உடமை என்று வைத்திருந்து இழந்துவிடும் வன்மையானவர்கள். 
 
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். (229)
௯, கேட்பதை விட கொடுமையானது தேவைக்கு அதிகமாக தன்னால் பெறப்பட்டதை தானே உண்ணுவது.
 
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. (230)
௧௦, மரணத்தை விட கொடியது இல்லை அதுவும் இன்பமாகும் கொடுக்க முடியாத நிலை அடைந்தால்.
 
அதிகார விளக்கம்!
 
     à®‡à®²à¯à®²à¯ˆ என்ற துன்பமான சொல்லை சொல்ல மன வறுத்தம் வேண்டும். நல்ல ஆறு என்றாலும் மூழ்கினால் மரணிப்போம், சொர்க்கம் இல்லை என்றாலும் உதவி செய்து வாழ்வதே மனிதனுக்கு அழகு. நல்ல மனிதர்கள் அடுத்தவர் பசி தீர்ப்பதற்கே தான் சாம்பதித்ததை சேர்த்து வைக்கிறார்கள். ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றல். பகிர்ந்து உண்பவற்கு பசிக் கொடுமை வராது. கொடுக்க முடியா சூழலைவிட மரணம் இனிமையானது.
 
காணொளி:-
https://youtu.be/z7umXlLlXh8

அறத்துப்பால் | இல்லறவியல் | ௨௪, புகழ் (24)

 à®ˆà®¤à®²à¯ இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)
௧, கொடுப்பது, ஒத்திசைவுடன் வாழ்வது அதை விட சிறந்த ஊதியம் இல்லை உயிருக்கு.
 
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (232)
௨, பேசுபவர் பேசுவது எல்லாம் கேட்கப் படுபவருக்கு கொடுப்பவரின் சிறப்பை பற்றியே இருக்கும். 
 
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். (233)
௩, ஒத்திசைவு இல்லாத உலகத்தில் பாராட்டப்படுவதைத் தவிர அழியாமல் இருப்பது வேறொன்றும் இல்லை.
 
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. (234)
௪, பூமியில் உள்ளவரை பெரும் பாராட்டுக்குறியதை செய்தால் எழுத்தாளரைப் பாராட்டாது புதிதாக தோன்றும் உலகம்.
 
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. (235)
௫, இரவைப்போல் கேட்டதையும் நிலைப்பதற்காக மரணமும் வித்தை அறிந்தவருக்கு அல்லாமல் மற்றவருக்கு அரிது.
 
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. (236)
௬, துவங்கினால் சிறப்பாக துவங்கவேண்டும் அப்படி முடியாதவர் துவங்குவதைவிட, துவங்காமல் இருப்பதே நல்லது.
 
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். (237)
௭, சிறப்பாக வாழாதவர்கள் தன்னை கடிந்துக் கொள்ளாமல் தன்னை இழிவாக பேசுபவரை கடிந்து கொள்வதால் என்ன பயன். 
 
 
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். (238)
௮, குற்றம் என்பேன் உலகில் உள்ளவர்க்கெல்லாம் ஒத்திசைவு கொண்டவன் (நல்லவன்) என்ற முடிவை பெறாவிடின்.
 
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். (239)
௯, குற்றமற்ற சிறந்த நன்மையையும் குறையும் ஒத்திசைவு இல்லா உடம்பை பொறுத்துக்கொண்ட நிலத்திற்கு.
 
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். (240)
௧௦, குற்றங்கள் ஒழிய வாழ்பவரே வாழ்பவர், ஒத்திசைவு ஒழிய வாழ்பவர் வாழாதவர்.
 
அதிகார விளக்கம்!
 
     à®•à¯Šà®Ÿà¯à®ªà¯à®ªà®¤à¯à®®à¯ ஒத்திசைவு கொள்ளவதுமே ஓர் உயிரின் ஊதியம். கொடுக்கும் ஒருவரை புகழ்வதே சிறந்த பேச்சாக அமையும். தன் குற்றத்தை திருத்திக் கொள்ளாமல் அடுத்தவரை கடிந்துக் கொள்வது குற்றம். புகழோடு தோன்றுவதே சரியானது. குற்றமற்றவரே வாழ்பவர்.
 
காணொளி:-
https://youtu.be/QZM5YGKxooI

அறத்துப்பால் | துறவறவியல் | ௨௫, அருள் உடைமை (25)

 à®…ருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள. (241)
௧, அருட்செல்வமே செல்வத்தில் சிறந்த செல்வம் பொருட்செல்வமோ புரிந்துகொள்ள முடியாதவரிடத்திலும் (முட்டாள்கள் இடத்திலும்) இருக்கிறது.
 
நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான் 
தேரினும் அஃதே துணை. (242)
௨, நல்லது செய்வது வேண்டும் என்றால் அருளால் ஆள்வதற்கு நாட வேண்டும், பல துறைகளில் தேர்ச்சிப் பெற்று இருப்பினும் அருளே துணையாகும்.
 
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். (243)
௩, அருள் அடைந்த மனம் படைத்தவருக்கு இல்லை இருளோடு இருக்கும் துன்பமான உலகத்தில் புகுவது.
 
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. (244)
௪, பூமியில் உள்ள உயிர்களை போற்றி வாழ செய்பவருக்கு இல்லை எனலாம் தனது உயிர் துன்புறும் செயல். 
 
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி. (245)
௫, துன்பம் அருளை வேண்டி வாழ்பவருக்கு இல்லை, இதற்கு காற்று பலத்தை கொடுப்பதே சான்று.
 
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். (246)
௬, பொருள் அற்று மறதி நிலை அடைவர் அருள் அற்று தீமைகளை செய்து வருபவர்.
 
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (247)
௭, அருள் அற்றவருக்கு அக உலகம் இல்லை, பொருள் அற்றவருக்கு புற உலகம் புறக்கணிப்பதைப் போல்.
 
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. (248)
௮, பொருள் இல்லாதவருக்கு ஒருநாள் வசந்தகாலம் வாழ்த்தும், அருள் இல்லாதவர் இல்லாமையை மாற்றுவது இயலாது.
 
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். (249)
௯, தெளிவு இல்லாதவன் உண்மை பொருள் கண்டு செயல்படுவதைப் போலவே அருள் இல்லாதவன் செய்யும் உதவியும் இருக்கும்.
 
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லும் இடத்து. (250)
௧௦, வலிமையானவர் முன் தன்னை நினைக்காதவனே தன்னை விட மெலிந்தவர் முன் சென்று மேலானவனாக நடந்துக் கொள்கிறான்.
 
அதிகார விளக்கம்!
 
     à®…ருள் என்ற செல்வமே செல்வம் பொருள் மூடர் இடத்திலும் இருக்கும். பிற உயிர்களை பேணி காக்கும் அருள் வேட்கை கொண்டவற்கு இருள் என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு மேல் உலகம் என்ற இன்பமான வாழ்வு மலரும். அருள் அற்றவர் செய்யும் உதவி வீணான முயற்சி. வலிமையானவர் முன் தன்நிலை எண்ணி உணர்ந்தவர் பிறரை ஏளனமாக பார்ப்பதில்லை.
 
காணொளி:-
https://youtu.be/4xxiJP0i2ho

அறத்துப்பால் | துறவறவியல் | ௨௬, புலால் மறுத்தல் (26)

 à®¤à®©à¯à®©à¯‚ன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். (251)
௧, தனது உடல் பெருக்கத்திற்காக மட்டும் அடுத்த உடலை உண்ணுபவன் எப்படி அருளால் ஆளப்படுவான்.
 
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (252)
௨, பொருள்களை ஆளும் தன்மை போற்றும் அறிவு இல்லாதார்க்கு இல்லை, அருளால் ஆளப்படுவது அப்பொழுது இல்லை உடல் உண்ணுபவருக்கு.
 
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். (253)
௩, படைகள் வைத்திருப்பவர் நெஞ்சம் போலவே நல்லதை நினைக்காது ஒன்றின் உடல் சுவையை விரும்புபவர் மனம்.
 
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். (254)
௪, அருள் அற்றது எது என்றால் உயிர்களை அழிக்காமல் இருப்பதை அழிப்பது பொருள் அற்றது அந்த உடல் உண்ணுவது.
 
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. (255)
௫, உண்ணாமல் இருக்கும் தன்மையுள்ளது உயிரின் நிலை, உடலை உண்ணுவதை செய்தால் வெளியேற்றுதல் செய்யாது நரகம். 
 
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (256)
௬, உண்ணுவதன் காரணமாக பறிக்காது உலகம் என்றால் எந்த மனிதரும் விலைக் கொடுத்து உண்ணுவது முடியாது.
 
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். (257)
௭, உண்ணாது இருக்க வேண்டும் உடலை, அடுத்த ஒன்றின் புண் அது என்ற உணர்வுப் பெற்றால்.
 
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். (258)
௮, செயல்களில் தலைமைப் படுவதை விலகிப் பார்ப்பவர் உண்ணமாட்டார் உயிரின் தலை பிரிந்த உடலை. 
 
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (259)
௯, நெய் ஊற்றி ஆயிரம் வேள்வி செய்வதிலும் ஒன்றின் உயிரை அழித்து உண்ணாமை நல்லது. 
 
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (260)
௧௦, உயிர்களை கொல்லாதவரையும் புலன்களை மறுத்தவர்களையும் எல்லா உயிரும் போற்றி வணங்கும்.
 
அதிகார விளக்கம்!
 
     à®‰à®Ÿà®²à¯ வளர்க்கவே உணவு என்ற எண்ணம் தவறு அருளை வளர்ப்பதே அவசியம். உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும், பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும். உணவின் சுவை படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது. உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை. உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள். புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.
 
காணொளி:-
https://youtu.be/haQm2mmCVLY

அறத்துப்பால் | துறவறவியல் | ௨௭, தவம் (27)

 à®‰à®±à¯à®±à®¨à¯‹à®¯à¯ நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு. (261)
௧, தான் அடைந்த குற்றங்களை விளக்கிக் கொள்வது உயிருக்கு துன்பம் செய்யாது இருப்பது இதுவே ஏற்படுத்திக் கொண்ட தவத்திற்கு அடையாளம்.
 
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது. (262)
 à¯¨, தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.
 
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். (263)
௩, துறந்தவர்களுக்கு உதவிட எண்ணி மறந்துவிட்டார்களோ மற்றவர்கள் தவம் செய்வதை.
 
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். (264)
௪, ஒத்சிசைவு அற்றவர்களை விலக்கலும் மகிழ்வானவர்களை உருவாக்குவதும் தவம் செய்பவர் நினைத்தால் வரும்.
 
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். (265)
௫, தேவையை தேவைக்கு ஏற்றப்படி பெறுவதால் தவம்செய்ய இங்கே முயற்சிக்கப் படுகிறது.
 
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. (266)
௬, தவம் செய்பவர் தனது சுயம் நிறைவடையும் (கருமம்) செயல் செய்வார் மற்றவர்கள் தவத்திற்கு எதிரானதை செய்கிறார்கள் ஆசைக்கு அடிமைப்பட்டு.
 
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (267)
௭, காய்ச்சுவதால் பளபளக்கும் தங்கத்தைப் போலவே ஒளி பரவும் துன்பம் வர வர தவப் பார்வை அகலாதவர்க்கு.
 
 
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும். (268)
௮, தனது உயிரே தனக்கு அறம் செய்ய வல்லதாய் பெற்றவரை மண்ணில் வாழும் மற்ற எல்லா உயிர்களும் வணங்கும். 
 
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269)
௯, மரணத்தை மாற்றும் தகுதியும் உண்டாகும் தவத்தின் பயனாக ஆற்றல் அடைந்தவருக்கு.
 
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். (270)
௧௦, இல்லாமையுடன் பலர் இருக்க காரணம் தன்னை அறிய முயற்சிப்பவர் (நோற்பவர்) சிலராகவும் தன்னை அறிய முயலாதவர்கள் (நோலர்) பலராகவும் இருப்பதே. 
 
அதிகார விளக்கம்!
 
     à®¤à®©à®¤à¯ துன்பத்தை நீக்கி அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம். இதை அனைவரும் சாதிப்பது இயலாது. தவம் செய்பவர்க்கு உதவ பலர் தவம் செய்வதை தவிர்கிறார்கள். தகுதியானவர்களை தக்க வைக்க தவத்தால் இயலும். தன் உயிரை தெளிவாக அறிந்தவரை மற்றய உயிர்கள் போற்றும். காலனும் தன் கடமை செய்ய அஞ்சுவான் சிலராக இருக்கும் தவம் செய்பவரை கண்டு.
 
காணொளி:-
https://youtu.be/ap9qmFv1GMQ

அறத்துப்பால் | துறவறவியல் | ௨௮, கூடா ஒழுக்கம் (28)

 à®µà®žà¯à®š மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும். (271)
௧, ஏமாற்றும் மனம் கொண்டவன் நடித்து நடக்கும் பழக்கத்தை கண்டு நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐந்து பூதங்களும் வெட்கப்படும்.
 
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின். (272)
௨, பெரிய உருவம் பெற்று என்ன பயன் தனது நெஞ்சம் தன்னை குற்றம் கொண்டவனாக அறிந்தால்.
 
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (273)
௩, வலியை தாங்க முடியாதவன் வன்மையான உருவம் பெற்றிருப்பது புலியின் தோலை போர்த்திக் கொண்டு புல்லை மேய்வது போன்றது.
 
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. (274)
௪, தவம் செய்பவர் போல் தன் உண்மை நிலையை மறைத்து தீமைகளை செய்வது, புதரில் மறைந்து வேடன் பறவையை பிடிப்பது போன்றது.
 
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். (275)
௫, பற்று இல்லாமல் போனது என்பவர்களின் படித்து நடக்கும் ஒழுக்கம் ஏன் இப்படி செய்தோம் என்கிற அளவிற்கு துன்பம் பலவும் தரும்.
 
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். (276)
௬, நெஞ்சத்தில் தேவைகளை அகற்றாமல் தேவை அற்றவர்போல் சூழ்ச்சி செய்து வாழ்பவரை விட வன்மையானவர்கள் இல்லை.  
 
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. (277)
௭, வெளியே குற்றம் அறியாதபடி இருப்பவரானாலும் மனதில் உள்ள குற்றம் மூக்கில் எமனை பெற்றுவிடும்.
 
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். (278)
௮, மனத்தால் அழுக்கை நீக்காமல் இறந்தார்கள், குளிப்பதும் வேதங்கள் ஓதுவதும் செய்த பல மாந்தர்கள்.
 
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். (279)
௯, நேரான அம்பு கொடுமை செய்ய வல்லது யாழ் என்னும் இசைக்கருவியோ நேரானது இல்லை என்றாலும் செம்மையான இசை தரவல்லது அதுபோல செயலின் பயன் கருதி ஏற்க வேண்டும். 
 
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். (280)
௧௦, மொட்டை அடித்துக்கொள்வதும் தாடி வைத்துக்கொள்வதும் தேவை இல்லை உலகம் பழிக்கின்ற செயல்களை விட்டொழித்தால்.
 
அதிகார விளக்கம்!
 
     à®µà®žà¯à®šà®•à®¤à¯à®¤à®¾à®°à¯ˆà®•à¯ கண்டு பூதங்கள் ஐந்தும் எள்ளி நகையாடும். வான் அளவு வளர்ந்தாலும் தன் நெஞ்சம் குற்ற உணர்வுடன் இருந்தால் என்ன பயன். ஆசை தீர்ந்தவர் போல் நடிப்பவரும், தேவைகள் அற்றவர் போல் வேடம் அணிந்தவரும் திருட்டுத் தனமாக வேடனைப் போல் மறைந்து தன் வேட்கையை தீர்த்துக் கொள்வார்கள். முரண்பட்ட யாழ் போல் ஒருவர் தோற்றம் அளித்தாலும் அதன் இசைப் போல் மனதால் இருக்கக்கூடும். உலகம் பழிக்காதபடி வாழ்பவர் அடுத்தவர் மதிக்க வேண்டும் என்று மொட்டையோ, தாடியோ வைத்துக் கொள்ளத் தேவையில்லை.
 
காணொளி:-
https://youtu.be/NCCDjDuFqMI

அறத்துப்பால் | துறவறவியல் | ௨௯, கள்ளாமை (29)

 à®Žà®³à¯à®³à®¾à®®à¯ˆ வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)
௧, எள்ளி நகைக்கக் கூடாது என்று விரும்புபவர் எப்போதும் திருட்டுத்தனம் தோன்றாமல் காக்க வேண்டும் தன் நெஞ்சை. 
 
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். (282)
௨, மனத்தால் எண்ணுவதும் குற்றமாகும் அடுத்தவர் பொருளை திருட்டுத் தனத்தால் திருடலாம் என்று. 
 
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். (283)
௩, திருட்டுத் தனத்தால் உருவாகிய செல்வம் அளவு குறைந்து வளர்வது போல் கெட்டுவிடும். 
 
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். (284)
௪, திருட்டுத் தனத்தால் தோன்றிய காதல் விளைவிப்பது அழியா துன்பமே ஆகும்.
 
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்  (285)
௫, இயற்கையின் பரிசை எண்ணி அன்பு மேலோங்கி வாழ்தல் என்பது பொருள்களைப் பார்த்து பொறாமை அடைபவருக்கு இல்லை. 
 
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். (286)
௬, அளவை தீர்மானித்து செயல்களை செய்யாதவர்கள் திருட்டுத்தனத்தில் மிகவும் ஆர்வம் அடைவார்கள்.
 
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (287)
௭, திருட்டுத்தனம் என்ற திடமான செயல், தேவைகளின் அளவை அறிந்துக் கொண்ட ஆற்றல் மிகுந்தவரிடத்தில் இல்லை.
 
 
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. (288)
௮, தேவைகளின் அளவை அறிந்தவர்களின் நெஞ்சம் அறத்துடன் இருப்பதைப்போலவே, திருட்டுத்தனம் அறிந்த நெஞ்சில் வஞ்சனை இருக்கும். 
 
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். ( 289)
௯, தேவைக்கு அதிகமாக செய்து வீழ்வார்கள் திருட்டுத்தனம் மட்டுமின்றி மற்றவற்றிலும் தேர்ச்சி அற்றவர்களே.
 
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. (290)
௧௦, திருடருக்கு உயிர் நிலைத்தல் சாத்தியம் இல்லை, திருடர்களுக்கும் தெய்வீக உலகம் சாத்தியம்.
 
அதிகார விளக்கம்!
 
     à®ªà®¿à®±à®°à¯ ஏளனம் செய்யாதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது. மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார். தேவையின் அளவு அறிந்தவர் திருடுவது இல்லை.
 
காணொளி:-
https://youtu.be/gSqonaxl72A
 

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௦, வாய்மை (30)

 à®µà®¾à®¯à¯à®®à¯ˆ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல். (291)
௧, வாய்மை என்பது எது என்றால் எந்த ஒரு வகையிலும் தவறு இல்லாமல் சொல்வது.
 
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
௨, பொய்மை வாய்மை போன்றதே குற்றம் தீர்த்து நன்மை செய்யும் என்றால். 
 
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293)
௩, தனது நெஞ்சம் அறிந்து பொய் சொல்லக்கூடது பொய்யாக இருப்பின் தனது நெஞ்சே தன்னை துன்புறுத்தும். 
 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். (294)
௪, உள்ளத்தால் நினைப்பதே பொய்மை இன்றி இருக்கும் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் இருக்கும்.
 
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (295)
௫, மனதுடன் வாய்மையாக பேசுபவர் தவம் மற்றும் தானம் செய்பவர்களை விட தலை சிறந்தவர். 
 
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். (296)
௬, பொய்யற்ற தன்மைப் போல் புகழுடையது இல்லை, ஏமாற்றாத தன்மை எல்லா நன்மையையும் தரும்.  
 
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று. (297)
௭, பொய்மையை பொய்யாக்கி வாழ்ந்தால் மற்ற அறச்செயல்கள் செய்யாமலேயே நன்மை தரும். 
 
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். (298) 
௮, வெளிச்சுத்தம் தண்ணீரால் ஏற்படும், உள்ளே உள்ள உள்ளத்தின் சுத்தம் வாய்மையால் அறியப்படும்.
 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. (299)
௯, இருள்நீக்க ஏற்றப்படும் விளக்குகளோ, அறியாமை நீக்க விளக்கப்படும் விளக்கங்களோ விளக்கு ஆகாது. உதாரணமாக இருப்பவருக்கு பொய்யற்ற விளக்கே விளக்கு.
 
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)
௧௦, நான் உண்மையாய் அறிந்தவற்றுள் இல்லை என தோன்றுவது வாய்மையை விட நல்ல ஒன்று.
 
அதிகார விளக்கம்!
 
     à®‰à®£à¯à®®à¯ˆ என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது. பொய்யும் உண்மை போன்றது நன்மை தரும் சமயத்தில். தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம். மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார் இதுவே தானம் தவம் கடந்த மேலானது. நீரில் குளிப்பது புற உடலை தூய்மை செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மை செய்யும். வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும். உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை. 
 
காணொளி:-
https://youtu.be/8_OUa-adb6o

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௧, வெகுளாமை (31)

 à®šà¯†à®²à¯à®²à®¿à®Ÿà®¤à¯à®¤à¯à®•à¯ காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கின்என் காவாக்கால் என். (301)
௧, செல்லத்தகுந்த இடத்தில் காப்பவரே சினத்தை காப்பவர், செல்லத்தகாத இடத்தில் அடக்கினாலும் அடக்காவிட்டாலும் என்ன?
 
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. (302)
௨, செல்லத்தகாத இடத்தில் சினம் தீமையானது, செல்லத் தகுந்த இடத்திலும் அதைவிட தீமையானது இல்லை.
 
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (303)
௩, மறுத்துவிட வேண்டும் கோபத்தை யாராக இருப்பினும் தீமை பிறப்பது அதனால் வரும்.
 
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. (304)
௪, இன்பத்தையும் கொண்டாட்டத்தையும் கொன்றுவிடும் சினத்தை விட வேறு பகையும் உண்டோ?
 
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (305)
௫, தன்னை தானே காத்துக் கொள்ள சினம் வராமல் காக்க வேண்டும், இல்லையென்றால் தன்னையே கொன்றுவிடும் சினம்.
 
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (306)
௬, சினம் என்ற தன்னை சேர்ந்தவரை அழிப்பது இனம் என்ற பெரிய கடலையே வற்ற செய்துவிடும்.
 
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (307)
௭, சினத்தை சிறந்ததாக எண்ணி போற்றுபவர் அடையும் கெடுதல் பூமியை கையால் அடித்து வலியால் துடிப்பதைப் போன்றது. 
 
 
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. (308)
௮, மலர் பறித்து வீசுவதைப் போல் துன்பம் செய்தாலும் இணக்கம் கொள்ள வந்தால் சினம் அன்றி சேர்த்துக்கொள்வது நன்று.
 
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். (309)
௯, நினைத்ததை எல்லாம் உடனே அடையும், உள்ளத்தில் சினம் இருந்தால் எப்படி சாத்தியமாகும்?
 
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (310)
௧௦, மரணித்தவர் (சினம் கொண்டவர்) மரணித்தவருக்கு ஒப்பானவர் சினத்தை விட்டோழித்தவர் துறவிக்கும் துணையாகிறார்.
 
அதிகார விளக்கம்!
 
     à®šà®¿à®©à®®à¯ செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது. சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும். மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது. தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம். உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம். சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர். 
 
காணொளி:-
https://youtu.be/qaZD7rXcDms

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௨, இன்னா செய்யாமை (32)

 à®šà®¿à®±à®ªà¯à®ªà¯à®ˆà®©à¯à®®à¯ செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள். (311)
௧, சிறப்பு தரும் செல்வங்கள் பல பெற்றாலும் அடுத்தவருக்கு துன்பம் செய்யாதது அழுக்கு அற்றவர்களின் பண்பு. 
 
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (312)
௨, வெறுப்புடன் துன்பம் தருபவருக்கும், எதிர்த்து துன்பம் செய்யாதது அழுக்கு அற்றவர்களின் பண்பு.
 
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும். (313)
௩, பகைகொண்டு ஏதும் செய்யாதவர்களுக்கு துன்பம் செய்தால் பின்பு மீளமுடியாத தொல்லை ஏற்படும்.
 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (314)
௪, துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.
 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (315)
௫, அறிவினால் சாதிப்பது உண்டா? அடுத்ததின் துன்பத்தை தனது துன்பம் போல் கருதுவதை விட.
 
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். (316)
௬, துன்பம் எதுவென்று நாம் உணர்ந்ததை அடுத்தவருக்கு செய்யாமல் இருக்க வேண்டும்.
 
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)
௭, எதன்பொருட்டும் எப்பொழுதும் யாருக்கும் மனதளவிலும் பகை உணர்வு கொள்ளாமையே தலை சிறந்தது.
 
 
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். (318)
௮, தனது உயிருக்கு குற்றம் வரக்கூடாது என்று அறிந்தவன் எதன் பொருட்டு மண்ணில் வாழும் உயிருக்கு துன்பம் செய்கின்றானோ?
 
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (319)
௯, அடுத்தவருக்கு துன்பத்தை காலையில் செய்தால் தனக்கு துன்பம் மாலையில் தானாகவே வரும்.
 
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)
௧௦, தீமை என்பது தீமை செய்பவருக்கே உரியது. தீமையைச் செய்யாதவரே தீமை இன்றி வாழத் தகுதியுடையவர்.
 
அதிகார விளக்கம்!
 
     à®šà®¿à®±à®ªà¯à®ªà¯ தரும் பொருள் இருப்பினும் அடுத்தவருக்கு துன்பம் தராதவரே குற்றமற்றவர். துன்பம் தந்தவரையும் தண்டிக்காதவர் தூய்மையானவர். துன்பம் தந்தவருக்கும் நன்மை செய்வதே நல்லது அதுவே தண்டிக்கும் வழி. பிறருக்கு நோய் என்ற தீங்கு செய்வதே தனக்குத் தானே செய்வது எனவே, நாம் முற்பகல் செய்யும் தீங்கு பிற்பகல் வந்து சேரும்.
 
காணொளி:-
https://youtu.be/Midq_VxW9SQ

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௩, கொல்லாமை (33)

 à®…றவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும். (321)
௧, அறமான செயல் என்னவென்றால் அழிக்காமை வேண்டுவது. மற்ற செயல் எல்லாவற்றையும் தரும். 
 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (322)
௨, பகிர்ந்து உண்ணுவதும் பல உயிர்களை காப்பதும் படித்தவர் சிறப்பித்து தந்த எல்லாவற்றிலும் முதன்மையானது.
 
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. (323)
௩, ஒரே நல்லது கொல்லாமை மற்றபடி அதற்கு பின்னே உள்ள பொய்யாமை நன்று. 
 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. (324)
௪, நல்வழி என்பது எது என்றால் எந்த ஒன்றையும் கொல்லாமை வேண்டும் என்ற ஒழுக்கம்.
 
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (325)
௫, தனது நிலைக்கு பயந்து துறவு கொள்பவர்களைக் காட்டிலும், கொலைக்கு பயந்து கொல்லாமை மேற்கொள்பவரே தலைச் சிறந்தவர்.
 
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. (326)
௬, கொல்லாமை கடைபிடித்து நடப்பவரின் வாழும் நாட்களை அழிக்க வராது உயிரை எடுக்கும் எமன்.
 
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327)
௭, தனது உயிர் போய்விடும் என்றாலும் செய்யக்கூடாது தன்னை போன்ற அடுத்தவரின் இன்பமான உயிரை போக்கும் காரியத்தை.
 
 
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. (328)
௮, நல்லதாக மாறும் காரியம் பெரியது ஆகும் என்றாலும் உதாரணமாக விளங்கும் மனிதர்களுக்குக் கொன்றுதான் ஆகவேண்டும் என்பது கடைசியே.
 
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. (329)
௯, கொலையை தொழிலாக செய்யும் மானிடப் பதர்கள் சிறுமையை அறிந்தவர் உள்ளத்தில் கீழான இடம் பெறுவர்.
 
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் 
செல்லாத்தீ வாழ்க்கையவர். (330)
௧௦, உயிரை உடம்பிலிருந்து நீக்கியவர் (கொலைசெய்தவர்கள்) எனப்படுவர்கள் செயல்படும் உடம்பில் செல்லாத தீய வாழ்க்கை வாழ்வார்கள்.
 
அதிகார விளக்கம்!
 
     à®…றமான செயல் என்பது அழிக்காமல் இருப்பதே இதனால் மற்ற அறச்செயல்கள் தானாக வரம்படும். எல்லா உயிர்களுடன் பகுத்து உண்பதே நூல் தரும் கருத்துக்களில் எல்லாம் தலைச் சிறந்தது. தேவையின்றி அழிப்பவன் தலை இல்லாத முண்டம் போன்றவன். 
 
காணொளி:-
https://youtu.be/YpAqtyVvHUA

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௪, நிலையாமை (34)

 à®¨à®¿à®²à¯à®²à®¾à®¤ வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை. (331)
௧, நிலையில்லாதவற்றை நிலையது என்று உணர்வது அறிவற்றவர்களின் ஆணவச் செயல்.
 
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. (332)
௨, கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம் அது களைவது போலவே கலைந்தும் போகும்.
 
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (333)
௩, நிலைக்காத இயல்புடைய செல்வத்தை அடைந்துவிட்டால் அதைக்கொண்டு நிலையானதை செய்யவேண்டும்.
 
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (334)
௪, ஒரு நாள் என்று காட்டப்படுவது உயிர் என்ற மரத்தை அறுக்கும் வாள் என்று உணர்வுள்ளவர்கள் அறிவார்கள்.
 
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (335)
௫, நாக்கு விக்குளால் அடைபடுவதற்கு முன் (மரணத்திற்கு முன்) நல்ல செயல்களை விரும்பி செய்திடல் வேண்டும்.  
 
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (336)
௬, நீண்ட நாட்கள் இருந்த ஒருவர் இன்று இல்லை என்ற பெருமை படைத்தது இந்த உலகம்.
 
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. (337)
௭, சிறிது நேரம் கூட வாழ்வதை தெரிந்துக் கொள்ளாதவர் நினைக்கும் கோடியும் தேவையற்ற பலவே.  
 
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. (338)
௮, ஓட்டை பிரிந்து தனியே பறந்துவிடும் பறவைப் போலவே உடம்புடன் உயிர் கொண்ட நட்பு.  
 
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)
௯, தூங்கிவிடுவது போன்றது மரணம், தூங்கிப் பின்பு விழிப்பதுப் போன்றது பிறப்பு.
 
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (340)
௧௦, புகலிடம் அமையாமல் அலைகிறதோ உடம்பில் சிலகாலம் இருக்கும் உயிர். 
 
அதிகார விளக்கம்!
 
     à®¨à®¿à®²à¯ˆà®¯à®±à¯à®±à®¤à¯ˆ நிலை என்று நினைக்கும் அறிவுள்ள யாரும் கீழானவர்களே. சிறுக சேர்ந்த கூட்டம் உடனே வெளியேறும் கூத்தாட்டு மைதானத்தின் நிகழ்வே செல்வத்தின் நிலை. உலகின் சிறப்பே நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதாகும். எனது என்ற பற்று அறுத்தவனே எல்லாம் உடையவன். மரணமும் நிலையின்றி தூக்கம் போல் நித்தம் நிகழ்கிறது. எதார்த்த சூழலை உணர்ந்தவரே பிறப்பை முடித்துக் கொள்கிறார். 
 
காணொளி:-
https://youtu.be/6WRdiK4a_Gc

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௫, துறவு (35)

 à®¯à®¾à®¤à®©à®¿à®©à¯ யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். (341)
௧, எதுவென்று எதுவென்று அறிந்து விலக்கியவன் வருத்தப்படுவது அதனால் அதனிடத்தில் இல்லை.
 
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. (342)
௨, வேண்டியது (தேவையானது) கிடைக்க துறக்க வேண்டும் துறந்தப் பின்பு இயல்பால் பலப்பல அடையலாம்.
 
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (343)
௩, வெற்றிக் கொள்ள வேண்டும் புலன்கள் ஐந்தையும், விட்டொழிக்க வேண்டும் தேவையானவை ஒன்றாக கிடைக்க. 
 
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. (344)
௪, இயல்பான நோன்பு என்பது ஒன்றும் இல்லாது இருத்தல், உடைமையாக கொண்டால் மயக்கமுற்று அடுத்ததை உடமையாக்க முற்படும்.
 
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (345)
௫, அடுத்து தொடர்வதை யார் விரும்புவது? பிறவிக் கடக்க முற்பட்டவருக்கு உடம்பும் மிகையானதே. 
 
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (346)
௬, நான் எனது என்ற ஆணவம் அழித்தவன் தேவர்களுக்கும் மேலான உலகத்தை அடைவான்.  
 
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (347)
௭, பற்றி விடாது தொல்லைகள் பற்றினை பற்றி விடாத மனிதர்களுக்கு.  
 
 
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (348)
௮, தீர்க்கமாக ஆராய்ந்து தலைப்பட்டவரே துறந்தவர், மற்றவர்கள் பயன் கருதி மயக்கத்தால் வலைப்பட்டவர்கள். 
 
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். (349)
(காட்சிகளை தன் விருப்பத்தில் காண்கிறோம் என்ற அனுபவம் பெரும் பொழுதே வள்ளுவரின் இக்குறள் எவ்வளவு ஆழமானது என்று புரியும்)
௯, பற்றுகளை துறந்த கண்ணே பிறப்பு அற்ற நிலையை உண்டாக்கும் மற்றபடி நிலையாமையே காணப்படும்.  
 
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (350)
௧௦, ஏற்றுக்கொள் எதிர்பார்ப்பு அற்றவன் எதிர்பார்ப்பை, அப்படி ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள் எதிர்பார்ப்புகளை விடுவதற்கு.  
 
அதிகார விளக்கம்!
 
     à®Žà®¤à¯ எது என்று அறிந்து விலகியவர் அதனிடமிருந்து துன்பம் அடைவதே இல்லை. தேவைகள் சரியாக நடக்க துறவு அவசியம், துறவால் நன்மைகள் பலபல உண்டு. பார்வையிலேயே பற்று இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர் பற்று உள்ளவரே. பற்று இல்லாதவரைப் பற்றினால் பற்றை விடலாம். 
 
காணொளி:-
https://youtu.be/UmmQeQTq1M0

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௬, மெய் உணர்தல் (36)

 à®ªà¯Šà®°à¯à®³à®²à¯à®² வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. (351)
௧, நிலைத்த பொருளாக இல்லாததையெல்லாம் நிலைக்கும் பொருள் என்று உணர்வது மாறுபாடுடைய சிறப்பற்ற பிறப்பு. 
 
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (352)
௨, இருள் நீக்கப்பட்டு இன்பம் பயனாக அமையும், மாறும் தன்மையுள்ள யாவற்றையும் நீக்கி மாசற்றதை காட்சியாக கண்டவருக்கு.
 
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. (353)
௩, சந்தேகம் அற்று தீர்க்கமாக அறிந்தவருக்கு பூமியிலும் வானம் நெருக்கம் கொண்டது.
 
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. (354)
௪, மெய்யுணர்வு இல்லாத மனிதர்களுக்கு சந்தேக உணர்வு கொண்ட கண்களால் பயன் இல்லை.
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)
௫, எந்த பொருள் எந்த தன்மையுடையதாக இருப்பினும் அந்த பொருளின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்வதே அறிவு.
 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356)
௬, கற்று இங்கே மெய்ப்பொருளைக் கண்டவர் முன்னேறுவர் மறந்தும் இங்கே வாராத வழியில்.
 
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (357)
௭, உள்ளாத்தால் ஆராய்ந்து உள்ளதை உணர்ந்தால் ஒரு பக்கமாய் பிளவுப் பட்டுள்ள பிறப்பு தேவைப்படாது.
 
 
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (358)
௮, பிறப்பு என்ற அறியாமை விலகிட சிறப்பு என்ற செழுமையான (உபதேசம்) பொருள் காண்பதே அறிவு.
 
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். (359)
௯, சார்ந்து இருப்பதை உணர்ந்து சார்ந்து இல்லாதவாறு வாழ்ந்தால் மற்றவை அழிந்து சார்ந்து இருப்பதை தராது சார்ந்து இருக்கச் செய்யும் நோய்.
 
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். (360)
௧௦, ஆசைப்படுதல், அளவுக்கு அதிக கோபப்படுதல், எதன்மீதும் மயக்கம் அடைதல் இந்த மூன்றின் பெயர்களையும் அழித்தால் அழியும் நோய்.
 
அதிகார விளக்கம்!
 
     à®‰à®£à¯à®®à¯ˆ பொருள் எது என அறியாமல் உலகில் உள்ளவற்றை எல்லாம் பொருள் என எண்ணவதே இழிவானப் பிறப்பு. மாசு இல்லா காட்சியே இருளை நீக்கும். காட்சி அறியும் கண்களும் பயன் அற்றது உண்மை அறியாவிடின். மெய்ப்பொருள் காணும் அறிவே அறிவு. பெயருக்கு கேடு உண்டாக்கும் காமம் வெகுளி மயக்கம் அழித்தால் நோய் இல்லை. 
 
காணொளி:-
https://youtu.be/GGo9fKw2HiM

அறத்துப்பால் | துறவறவியல் | ௩௭, அவா அறுத்தல் (37)

 à®…வாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. (361)

௧, ஆசைப்படுதல் என்பது எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் தவறாமல் பிறப்பைத் தரும் வித்து.

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். (362)

௨, தேவையான பொழுது தேவை எண்ணமற்ற நிலை மற்றபடி தேவையற்றதும் தேவை என்றால் வரும்.

 

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதொப்பது இல். (363)

௩, தேவையற்ற நிலைக்கு ஒப்ப சிறந்த செல்வம் இங்கு இல்லை, வேறு எங்கும் அதற்கு ஒப்பானது இல்லை.

 

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும். (364)

௪, à®¤à¯‚ய்மை என்பது ஆசை இல்லாது இருத்தல், மற்றவை வாய்மையை விரும்புவதால் வரும்.

 

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர். (365)

௫, பயம் இல்லாதவர் என்பவர் ஆசை இல்லாதவர், மற்றவர்கள் இல்லாமையை இல்லாது செய்யாதவர்கள்.

 

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா. (366)

௬, இறையச்சம் கொள்வதே அறம் ஒருவரை ஏமாற்ற நினைப்பதே ஆசை.

 

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும். (367)

௭, ஆசையின் செயல்களை ஆழமாக தொலைத்தால், தர்மத்திற்கு மாறாத செயல்கள் தன் தேவைக்கு ஏற்ப வரும்.

 

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். (368)

௮, ஆசை இல்லாதவருக்கு இல்லை என்றாகிவிடும் துன்பம் ஆசை இருப்பின் தவறாது மேன்மேலும் வரும்.

 

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். (369)

௯, இன்பம் தடைப் படாது நீளும், ஆசை என்ற துன்பத்திற்கு துன்பம் கொடுத்தால்.

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். (370)

௧௦, ஆராய முடியாத இயற்கை ஆசையை அகற்றினால் அதுபோன்றே நிலைத்த தன்மையை இயற்கை தரும்.

 

அதிகார விளக்கம்!

 

     பிறப்பை தருவது ஆசை. தேவை என்று வேண்டுதல் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலை மட்டுமே மற்றவை தானாகவே வரும். ஆசை அற்ற நிலையே தூய்மையானது. இதுவே இன்பத்தின் பிறப்பிடம்.  

 

காணொளி:-

https://youtu.be/HTFkD1zx5Eo

அறத்துப்பால் | ஊழியல் | ௩௮, ஊழ் (38)

 à®†à®•à¯‚ழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி. (371)

௧, கைப்பொருள் ஆகவேண்டும் என்றால் அசைவற்ற ஆர்வம் தோன்றும் அழிவதென்றால் சோர்வு தோன்றும்.

 

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை. (372)

௨, à®®à¯à®Ÿà¯à®Ÿà®¾à®³à®¾à®• மாற்றும் இழிவான ஊழ்வினை அறிவை அகற்றிவிடும், ஆக்கம் தரும் ஊழ்வினையோ அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும்.

 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை அறிவே மிகும். (373)

௩, நுட்பம் நிறைந்த நூல்கள் பல படித்தாலும் மாறாக பிறவியால் பெற்ற à®‰à®£à¯à®®à¯ˆà®¯à®¾à®© அறிவே மிகும்.

 

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு. (374)

௪, இரண்டு வேறுபாடுகள் உலகத்தில் இயற்கையாக அமைந்துள்ளது, மதிக்கப்படுபவராக இருத்தல் வேறு தெளிந்த ஞானம் உள்ளவராக இருத்தலும் வேறு.

 

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு. (375)

௫, à®¨à®²à¯à®²à®¤à¯ எல்லாம் தீமையாகவும் மாறும் தீமையும் நல்லதாகிவிடும் செல்வம் அடைய ஊழ் இருந்தால்.

 

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம. (376)

௬, பாதுகாப்பினும் முடியாது தம்பால் உரிமையற்றது, முயன்று விளக்கினும் விலகாது தமக்குரியது.

 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377)

௭, வரையறுத்துக் கொடுத்தவன் தந்த வாய்ப்பு அல்லாமல் கோடி தொகுத்தாலும் அனுபவித்தல் அரிது.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியும் எனின். (378)

௮, à®¤à¯à®±à®¨à¯à®¤à®µà®°à¯ போன்றே அறிவில்லாதார் உடன்படுவார் ஊழ் உடன்படுத்தும் எனின்.

 

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன். (379)

௯, à®¨à®¾à®±à¯à®±à¯ நடும் பொழுது நல்லது என்று அறிந்தவர் அறுவடைக்கு துன்பம் அடைந்தது யார்.  

 

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும். (380)

௧௦, à®µà®¿à®¤à®¿à®¯à¯ˆ விட (ஊழ்) வலிமையானது வேறொன்று நம்மை ஆட்படித்தினும் விதியே முந்தி இருக்கும்.  

  

அதிகார விளக்கம்!

 

     பிறவிப் பயன் பொருத்தே ஆர்வமும் சோர்வும் தோன்றுகிறது. அறிவு சார்ந்த நூல்கள் கற்றாலும் தன் பிறவி அறிவே மேலோங்கி இருக்கிறது. தவறு சரியாகவும் சரி தவறாகவும் பிறவிப்பயனால் மாறுகிறது. இரு வேறு உலகம் இருக்கிறது திருவுடையவன் தெளிந்தவன் என உயர்வை தருகிறது. விதி என்ற பிறவிப் பயன் மட்டுமே மாற்றவே முடியாத நிலையில் இருக்கும்.  

 

காணொளி:-

https://youtu.be/OVtUOYGr7rE

அறத்துப்பால் அதிகார விளக்கம்

          அறத்துப்பால் பொதுவாக பால் என்றால் பற்றியிருப்பது என்று அர்த்தம். அறத்தை பற்றியிருப்பதால் அறத்துப்பால்.  அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என வள்ளுவப் பெருந்தகையே அறத்திற்கு புதிய இலக்கணம் வகுக்கிறார்.

          இல்வாழ்க்கையே அதாவது வாழ்க்கையை வாழ்பவனுக்கு தேவையான பொருளை  அடைவதற்கு முன்பு  வாழ்க்கை என்பது என்னவென்றும் எது சரி எது தவறு என்றும் வாழ்க்கை என்பது எப்படியிருக்கிறது என்று வரையறுத்தும் பேசுகையில் வள்ளுவனார் மீண்டும் முதல் அதிகாரத்தையே சுட்டிக்காட்டுகிறார்.

          எது நமக்கு  ஆரம்பமோ அல்லது துவக்கமோ அந்த  கடவுளையே முன்மொழிந்து மேலும் கடவுளுக்கு அடுத்தபடியாக உள்ள சிறப்பு மிகுந்த  வான்மழையை சொல்லி அப்படியே நீர்த்தவர்கள் அதாவது நம்மிலிருந்து பிரிந்தவர்களின்  பெருமையையும் சொல்லி அறத்தை வலியுறுத்துகிறார்.

          அறத்தின் பயனான இல்வாழ்க்கையின் உண்மையுரைத்து அதில் வாழ்க்கைத்துணையின் பங்களிப்பான நலமுள்ள புதல்வர்களைப் பெறுதலின் மேன்மை சொல்லியும் அன்பை உடைமையாக கொண்ட விருந்தோம்பல் மூலம் தமிழினத்தின் பண்பாட்டை வழிமொழிந்து விருந்தோம்பல் வேள்விக்கு நிகரானது என்று பெருமை பேசுகிறார்.

          மேலும் இனியவை கூறும் தன்மையின் பண்பை வெளிப்படுத்தி செயந்நன்றி அறிதலின் முக்கியத்துவம் சொல்லி நடுவு நிலைமையோடு அடக்கத்தை உடமையாக கொண்டும் ஒழுக்கத்தை வாழ்வின் உடமையாக போற்றியும் அந்த ஒழுக்கத்தின் மேன்மை பிறனில் விழையாமை என்று பயன் சொல்லியும் வாழ்வின் எத்தருணத்திலும் பொறையுடைமையோடு நடந்து அழுக்காறாமை வழி நின்றே  வெஃகாமை நிலையறிவித்து புறம் பேசாமையை வழியுறுத்தி பயனில சொல்லாதே என்று பேச்சிற்கே புதிய அறம் வகுக்கிறார்.

           பயனற்ற பேச்சால் தீவினையின் அச்சம் ஏற்படும் என்று எச்சரித்தும் ஒப்புரவு அறிந்து ஈகை செய்து எல்லோர்க்கும் உதவியாய் இருந்து புகழ் பெற வேண்டுமாய் வள்ளுவர் அறத்தை வழியுறுத்துகிறார்.

          மேலும் புகழடைந்த மனிதன் புனிதத்தன்மை அடைய அருளை உடைமையாக கொண்டு முன்னேறிடவும் புலன்களின் இச்சையை அதாவது புலால் மறுத்து தவம் செய்திட கூடா ஒழுக்கம் நீங்கி கள்ளாமையென்ற நிலை மாறி வாய்மை வசப்பட்டு வெகுளாமை குணத்தால் இன்னாமை செய்யாதும் கொல்லாமையை வழியுறுத்தி உலகில் உள்ள எதுவும் நிலையாமையை காட்டுவதை சீர்தூக்கிக் காட்டி இயல்பாய் ஒவ்வொன்றிலும் வாழ்ந்து நிறைவையடைந்தால்  துறவு தானாகவே ஏற்பட்டு மெய்யுணர்தலின் பக்கம் வரவும் மேலும் கவனம் வைத்து அவா அறுத்து அதாவது பிறவியை அறுப்பதற்கு துணைக்கூறி இவற்றையெல்லாம் ஊழ் தன்மையை உணர்ந்தால் அடையலாம் என்று போற்றிப் பாடுகிறார்.

 

              அறத்தைப்பற்றி இப்படி பல காரணங்களை அல்லது வாழ்வியல் முறைகளையும் வாழ்வின் எதார்த்தங்களையும் அறத்தோடு அடைவது எப்படி என்பதையும் மேலும் அறத்தை முதலாவதாக கொள்பவனே பொருள் நிறைந்த வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்கிறான் என்று வள்ளுவர் வாயிலாக அறிகிறோம்...

 

பொருட்பால் | அரசியல் | ௩௯, இறைமாட்சி (39)

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. (381)

௧, à®ªà¯‹à®°à¯à®ªà¯à®ªà®Ÿà¯ˆ, குடிமக்கள், உணவு, ஆலோசனை தரும் அமைச்சர்கள், நட்பு, அரண்மனை ஆகிய ஆறும் பெற்றவரே அரசருள் சிறந்தவர்.

 

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. (382)

௨, à®…ச்சம் கொள்ளாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், ஆர்வமுடன் செயல்படுதல் ஆகிய நான்கும் குறைவின்றி இருப்பதே அரசருக்கு இயல்பு.

 

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலனாள் பவர்க்கு. (383)

௩, à®šà¯‹à®°à¯à®µà¯ இல்லாது இருத்தல், கல்வி, துணிவுடன் செயல்படுதல் ஆகிய மூன்றும் நீங்காமல் இருக்க வேண்டும் நிலத்தை ஆள்பவருக்கு.

 

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு. (384)

௪, அறத்திற்கு இழக்கு இல்லாமல் அல்லாதவற்றை விளக்கி, வீரத்திற்கு இழக்கு இல்லாமல் மானத்தோடு இருப்பதே அரசு.

 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு. (385)

௫, எது எப்படி அமையவேண்டும் என்று இயற்றுவதும் அதற்கான பொருளை ஈட்டுவதும் அதை காப்பதும் மேலும் அதன் செயல்களை ஒழுங்குபட வகுப்பதும் சிறப்பாக செய்வது அரசு.

 

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம். (386)

௬, à®ªà®¾à®°à¯à®•à¯à®• எளிமையாய் எரிச்சல் ஊட்டும் வார்த்தைகள் தவிர்த்தவராய் இருக்கும் மன்னனின் ஆட்சி எல்லை விரிவடையும்.

 

 

 

 

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண் டனைத்திவ் வுலகு. (387)

௭, இனிமையான வார்த்தைகளுடன் உதவ வல்லமை படைத்தவருக்கு தனது வார்த்தைகள் படியே அமையும் உலகு.

 

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும். (388)

௮, இது இப்படி இருக்க வேண்டும் என்று முறை செய்து அதை காப்பாற்றும் மன்னவன் மனிதர்களுக்கு இறையாக வைக்கப்படும்.

 

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (389)

௯, காதுகளும் கூசும் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளும் பண்புடைய மன்னனின் ஆளுமையின் கீழ் தங்கும் உலகு.

 

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி. (390)

௧௦, தானம் செய்தல், (இலவசமாக கொடுத்தல் - விலை இல்லாத பொருள்கள் கொடுத்தல்) அடுத்தவர் கருத்துக்கு வாய்ப்பு அளித்தல், சிறந்த அரசாட்சி, மக்களை காத்தல் இந்த நான்கும் உடையவரே ஆட்சியாளர்களில் வெளிச்சமானவர்கள்.

 

அதிகார விளக்கம்!

 

     ஆட்சி என்பது ஆற்றல் பொருந்தி இருக்க ஆறு அங்கங்கள் உடையதாக இருக்க வேண்டும். நன்கு திட்டம் செய்து யாவரும் நன்மை அடைய வழி அமைக்க செய்வதை இங்கே தெளிவு செய்கிறார் வள்ளுவர்.

 

காணொளி:-

https://youtu.be/X036sn6-af4

பொருட்பால் | அரசியல் | ௪௦, கல்வி (40)

 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. (391)

௧, à®ªà®Ÿà®¿à®•à¯à®• வேண்டும் பழுது இல்லாமல் படித்த பின் படித்ததற்கு ஏற்றபடி நடக்க வேண்டும்.

 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)

௨, எண் எனப்படுவதும் மற்றும் எழுத்து எனப்படுவதுமாகிய இந்த இரண்டும் கண்களைப் போன்றது அறிவுடன் வாழும் உயிர்களுக்கு.

 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். (393)

௩, கண் உள்ளவர்கள் என்றால் கற்றவர்கள், முகத்தில் புண் உள்ளவர்கள் கல்லாதவர்கள்.

 

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில். (394)

௪, à®µà®¿à®°à¯à®ªà¯à®ªà®®à¯à®Ÿà®©à¯ ஒன்றாக கூடி உள்ளத்தால் பிரிந்து இருத்தல் எல்லாம் புலவர்கள் தொழில்.

 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர். (395)

௫, உள்ளவர் முன் இல்லாதவர் நிலைப் போலவே எவ்வளவு கற்றிருந்தாலும் மேலும் கற்றுக்கொள்பவரே கற்றவர் அவ்வாறு செய்யாதவரே கல்லாதவர்.

 

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு. (396)

௬, தோண்டும் அளவிற்கு நீர் பெருகும் மணல் பாங்கான கிணற்றில் அதுபோலவே மனிதர்களுக்கு கற்கின்ற அளவிற்கு பெருகும் அறிவு.

 

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு. (397)

௭, எந்த ஒன்றையும் நாடி அணுகாமல் உணராமல் எவன் ஒருவன் சிறிதளவும் கற்காமல் இருப்பது.

 

 

 

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. (398)

௮, தனிமையிலும் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு உயர்ச்சியிலும் சிறந்ததாக மாறும்.

 

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார். (399)

௯, தான் இன்பம் அடைந்தது போலவே உலகில் கண்டு மேலும் கற்க ஆசைக் கொள்வார் கற்று அறிந்தவர்.

 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை. (400)

௧௦, கேட்டை விளைவிக்காத விரும்பும் செல்வம் கல்வி அது ஒருவருக்கு பணத்தைப் போன்றது அல்லாமல் வேறொன்று இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     கல்வி கசடு என்ற கருத்து பேதத்தை உருவாக்கும் என்பதால் கசடற கற்பது அவசியம். எண்ணும் எழுத்துமான கல்வியே உலகை உணர்த்தும் கண்கள். கற்காமல் யாரும் இருக்க முடியாது கல்வியின் பொருட்டு இன்பம் அடைந்தவர் அடுத்தவரும் இதை அடைய ஆசைப்படுவார். கேடு விளைவிக்காத கல்வியே சிறந்த செல்வமாகும்.

 

காணொளி:-

https://youtu.be/DFQLkpExCYM

பொருட்பால் | அரசியல் | ௪௧, கல்லாமை (41)

 

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல். (401)

௧, à®…ரங்கம் இல்லாமல் வட்டாட்டம் ஆடுவதைப் போன்றதே நிறைந்த நூல்கள் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டுவது.

 

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று. (402)

௨, கல்வி அறிவு இல்லாதவர் கருத்து சொல்ல ஆசைப்படுவது, மார்பழகு இல்லாதவள் பெண்மைக்கான ஆசைக்கொள்வதைப் போன்றது.

 

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின். (403)

௩, கல்வி அறிவு இல்லாதவர்களும் மிகவும் சிறந்தவர்கள், கல்வி அறிவு பெற்றவர் முன் பேசாது இருந்துவிட்டால்.

 

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளார் அறிவுடை யார். (404)

௪, à®•à®²à¯à®µà®¿ அறிவு இல்லாதவர்களின் வரையறை கழிக்க முடியாத நல்லதாக இருப்பினும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அறிவுடையவர்கள்.

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும். (405)

௫, கல்லாத ஒருவர் ஆர்வப்பட்டு முன்னின்று பேசினால் கேட்பவர்களுக்கு சோர்வு ஏற்படும்.

 

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லா தவர். (406)

௬, இருக்கிறார் என்ற அளவுடையார் அன்றி பயன்படாத களர் நிலத்தை போன்றவரே கல்லாதவர்.

 

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று. (407)

௭, நுட்பமுடன் ஆராயும் ஆற்றல் இல்லாதவர்களின் அழகு மண்ணால் செய்யப்படும் பொம்மை போன்றது.

 

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு. (408)

௮, நல்லவருக்கு ஏற்பட்ட வறுமையை விட கொடியது கல்லாதவருக்கு ஏற்பட்ட உயர்வு.

 

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு. (409)

௯, சமூக அமைப்பில் மேல் பிறந்த கல்லாதவர் கீழ் பிறந்த கற்றார் முன் ஏதும் அற்றவரே.

 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர். (410)

௧௦, விலங்குகளுடன் மக்கள் இருப்பதைப் போன்றது, இலக்கை விளக்கும் நூல்களை கற்றவருடன் மற்றவர்கள்.

 

அதிகார விளக்கம்!            

 

     பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது. படிக்காதவன் பேச முனைவது முலையில்லா பெண் காமுறுவதைப் போன்றது. எனவே கல்லாதவரின் சொல்லை கேட்க வேண்டாம் அது சோர்வை தரும், வறுமை தரும் துன்பத்தை விட அதிக துன்பம் தரும். à®šà®®à¯‚க ஏற்றத்தாழ்வு ஒழிக்கும் ஆற்றல் கல்விக்கு உண்டு. கல்லாதவர் உயர்குலப் பிறப்பு என்றாலும் அவர் தாழ்ந்தவரே. கல்லாதவர் விலங்குகளுக்கு ஒப்பானவர்களே. 

 

காணொளி:-

https://youtu.be/EAYV5THzhRU

பொருட்பால் | அரசியல் | ௪௨, கேள்வி (42)

 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை. (411)

௧, செல்வங்களில் சிறந்த செல்வம் செவிச் செல்வம் (நாதமான இறையை உணர்வதால்) அச் செல்வம் செல்வங்களில் முதன்மையானது.

 

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும். (412)

௨, கேட்பது குறையும் பொழுது வயிற்றுக்கு உணவு சிறிதாவது கொடுக்கப்பட வேண்டும்.

 (பசி எடுப்பதால் காதடைக்கும்)

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (413)

௩, கேட்கப்பட வேண்டியதை கேட்டு அறிந்தவர்கள், உலகில் சிறந்ததை சுவைப்பதில் மேலானவர்களுக்கு ஈடானவர்கள்.

 

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (414)

௪, கற்க இயலாவிட்டாலும் கேட்டு அறியவேண்டும் அது ஒருவருக்கு வறுமைக்கு உதவும் உற்ற துணைப் போன்றது.

 

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (415)

௫, வழுக்கும் இடத்திற்கு உதவும் ஊன்றுக்கோல் போலவே ஒழுக்கமானவர்களின் வார்த்தைகள் உதவும்.

 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும். (416)

௬, எவ்வகையிலும் நல்லவற்றை கேட்டு அறிதல் வேண்டும் அது எல்லா வகையிலும் சிறந்த உயர்வை தரும்.

 

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர். (417)

௭, தவறாக உணர்ந்திருந்தாலும் அறியாமையை சொல்லமாட்டார்கள் கேள்வி அறிவால் உணர்ந்தவர்கள்.

 

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி. (418)

௮, கேட்கும் ஆற்றல் பெற்றிருப்பினும் கேளாத தன்மையுடையதே, கேட்க வேண்டியதை கேட்காத செவி.

 

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது. (419)

௯, நுட்பமானதை கேட்டு அறியாதவர் பணிவானவராக இருத்தல் அரிது.

 

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என். (420)

௧௦, செவியில் சுவையை அறியாது வாய் உணர்வு விரும்பும் மானிட பதர்கள் அழிந்தால் என்ன? அல்லது வாழ்ந்தால் என்ன?

 

அதிகார விளக்கம்!

 

     உயர் ஞானம் எனப்படும் நாத அனுபவத்தை செவி தருவதால் அச் செல்வம் செல்வத்திற்கெல்லாம் முதன்மையானது. நாத ஒலி குறைந்தால் வயிற்றுக்கு உணவு தர வேண்டும். செவியின் சுவை உணர்ந்தவரே ஆன்றோர். அவர்கள் பிழைப்புக்காக முட்டாள்தனமான செயல்கள் செய்வதில்லை. நாத அனுபவம் அற்றவர் பணிவாக நடப்பதில்லை. செவியின் சுவையை உணராமல் வாய்ச் சுவைக்கே முன்னுரிமைத் தரும் மானிடப் பதர்கள் வாழ்வதும் சாவதும் ஒன்றே.

 

காணொளி:-

https://youtu.be/FgPZOgNPveQ

பொருட்பால் | அரசியல் | ௪௩, அறிவுடைமை (43)

 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண். (421)

௧, à®…றிவு அழிவிலிருந்து காக்கும் கருவி, பகை கொண்டவருக்கு உள்ளே வந்து அழிக்கமுடியாத அரண்.

 

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு. (422)

௨, சென்ற இடத்திற்கு ஏற்ப மாறாமல் தீமைகளைக் களைந்து நன்மைகளை ஏற்பது அறிவு.

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423)

௩, எதைப்பற்றியும் யார் யார் என்ன சொல்ல கேட்பினும், அதைப்பற்றிய உண்மையான பொருளை காண்பதே அறிவு.

 

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு. (424)

௪, à®Žà®£à¯à®£à¯à®®à¯ பொருளை உணர்தும்படிச் சொல்வதும், அடுத்தவர் வார்த்தையில் நுண்பொருள் காண்பதும் அறிவு.

 

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு. (425)

௫, உலகத்தை ஒட்டிய நட்பு பாராட்டினாலும் மலர்வதும் சுருங்குவதும் இல்லாததே அறிவு.

 

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு. (426)

௬, உலக இயக்கம் எப்படி என்று அறிந்து அதற்கு ஏற்றார்ப் போல் உலகத்துடன் இணக்குவது அறிவு.

 

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர். (427)

௭, அறிவு உள்ளவர்கள் அடுத்து நடப்பதை அறிவார்கள், அறிவு இல்லாதவர்கள் அதை அறிய கல்லாதவர்கள்.

 

 

 

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். (428)

௮, பயப்பட வேண்டியதற்கு பயம் இல்லாது இருப்பது அறியாமை, பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகளின் தொழில்.

 

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய். (429)

௯, எதிர்ப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அறிவுடையவருக்கு இல்லை நடுங்கச் செய்யும் நோய்.

 

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். (430)

௧௦, அறிவு உள்ளவர்கள் எல்லாம் உள்ளவர்கள், அறிவு இல்லாதவர்கள் என்ன பெற்றிருந்தாலும் இல்லாதவர்களே.

 

அதிகார விளக்கம்!

 

     பகைவரால் கொள்ளை கொள்ள முடியாத அழிவையும் காக்கும் கருவியான அறிவு நன்றியுணர்வைத் தரும். யார் எதைப் பேச கேட்பினும் உண்மைப் பொருளை உணர்வதே அறிவு. உலகத்தில் ஒட்டி வாழ்ந்தாலும் உண்மைத் தன்மையுடன் இருப்பதே அறிவு. நடுக்கமோ, பயமோ, அஞ்சுவதோ இல்லாமல் தேவையான எல்லாம் உடையவரே அறிவுடையவர்.

 

காணொளி:-

https://youtu.be/17lm56OwX0g

பொருட்பால் | அரசியல் | ௪௪, குற்றம் கடிதல் (44)

 à®šà¯†à®°à¯à®•à¯à®•à¯à®žà¯ சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து. (431)
௧, நான் என்ற ஆணவத்தால் வரும் செருக்கும், ஒத்திசைவு கொள்ளாத சினமும், தாழ்வு மனம் கொண்ட சிறுமையும் இல்லாதவர்களின் வளர்ச்சி அகங்காரம் என்ற பெருமிதம் நீர்த்ததாய் இருக்கும்.
 
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. (432)
௨, ஆசைப்படுதலும், மதிக்க மறக்கும் மானமும், அர்த்தமற்ற மகிழ்வும் குற்றமாகும் உயர்நிலை அடைபவருக்கு.
 
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். (433)
௩, தினையளவு தவறு நேர்ந்தாலும் பனையளவாகக் கருதுவார் பழிக்கு அஞ்சுபவர்.
 
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை. (434)
௪, குற்றம் செய்வதை விடாமல் காக்கும் பொருளாக்கும் குற்றமே அழிவைத் தரும் பகை. 
 
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (435)
௫, குற்றத்தால் துன்பம் வருமுன் தன்னை காத்துக் கொள்ள தவறியவரின் வாழ்க்கை, தீயின் முன்னே வைத்த வைக்கோல் போலக் கெடும்.
 
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. (436)
௬, தன்னிடம் உள்ள குறைகளை அழித்துப் பிறரது குறையை காணும் வழிகாட்டுபவருக்கு எந்த குறையும் இருக்காது.
 
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். (437)
௭, செய்யவேண்டுயதைச் செய்யத் தவறியவன் செல்வம், உயர்வு பல அடையாமல் கெடும்.
 
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. (438)
௮, எனக்கு மட்டும் என்ற ஆசைப்படும் பற்று கொள்ளும் உள்ளம், என்ன உள்ளம் என்று எண்ணப்படும் ஒன்று.
 
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. (439)
௯, தன்னைத் தானே எதன்பொருட்டும் வியப்பாக எண்ணாதே, நன்றிக் கெட்டச் செயல்களை எப்போதும் விரும்பாதே.
 
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் (440)
௧௦, காதலுடன் காதல் கொண்டு அறியாமையை உணர்ந்துக் கொண்டால் எதிர்க்கவேண்டியது இல்லை எதிரிகளின் நூலை.
(அன்புள்ளம் கொண்டவன் உண்மையை உணர்ந்து முட்டாள்தனமான நூல்களை மதிப்பிழக்கச் செய்கிறான்)
 
அதிகார விளக்கம்!
 
     à®¨à®¾à®©à¯ என்ற செருக்கும், சினமும், தாழ்வு மனப்பாண்மையும் இல்லாதவரின் வளர்ச்சி ஆணவம் இல்லாமல் இருக்கும். ஆசை, மதிக்காத மனங்கேட்ட செயல், உண்மையற்ற மகிழ்ச்சி உயர்வை தடுக்கும். சிறிய தவறையும் பெரிதாக பார்க்க வேண்டும். தன்னைத் தானே வியத்தல் குற்றமாகும். அறியாமையை அழிக்க காதல் கொண்டால் ஏதும் அற்ற நூலை தேவையற்றது என மாற்றிவிடலாம்.
 
காணொளி:-
https://youtu.be/3ifqFDtl-f0

பொருட்பால் | அரசியல் | பெரியாரைத் துணைக்கோடல்

 

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல். (441)

௧, அறம் எனப்படும் வாழும் முறை அறிந்து, முன் அனுபவம் பெற்ற சிறந்த அறிவுடையாரின் உறவை அவரின் திறன் அறிந்து விரும்பி ஏற்க வேண்டும்.

 

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)

௨, வந்த துன்பம் விலக்கி, அழிவை வருமுன் காக்கும் பெருமைப் பெற்றவரை விரும்பி ஏற்க வேண்டும்.

 

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல். (443)

௩, அரிதானவைகளில் அரிதானது பெரியவர்களை மதித்துக் காத்து உறவு கொண்டாடுவது. 

 

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்


வன்மையு ளெல்லாந் தலை. (444)

௪, à®¤à®©à¯à®©à¯ˆ விட பெரியவர்களின் உறவுப் பாராட்டி வாழ்வது வலிமையானவைகளில் எல்லாம் முதன்மையானது.

 

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்


சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (445)

௫, விரும்பத்தக்கவரின் கண்ணாக வாழ விரும்பும் மன்னவன் விரும்பத்தக்கவரை அருகில் வைத்துகொள்ள வேண்டும்.

 

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்


செற்றார் செயக்கிடந்த தில். (446)

௬, தகுதியுள்ளவர் கூட்டத்தோடு இணைந்து ஒழுக வல்லவர் இடத்தில், பகைவர் செயல் செயல்படுவது இல்லை.

 

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே


கெடுக்குந் தகைமை யவர். (447)

௭, அறியாமையை அழுத்தமாய் அழிப்பவரை துணையாக கொண்டவரை யாரும் கெடுக்கும் நோக்கில் அணுக முடியாது.

 

 

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். (448)

௮, அறியாமையை அழிப்பவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் ஆட்சி, அழிப்பார் இன்றியும் அழியும்.

 

 

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்


சார்பிலார்க் கில்லை நிலை. (449)

௯, முதலாகும் உழைப்பு இல்லாதவர்க்கு இல்லை ஊதியமாகும் கூலி. மதில் போல் காக்கும் சான்றோர் இல்லாதவர்க்கு இல்லை சிறந்த நிலை.

 

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். (450)

௧௦, பல நபர்கள் பகை கொள்ள பற்று கொள்வதை விட தீமையானது நல்லவர்கள் தொடர்பை விடுவது.

 

அதிகார விளக்கம்!

 

     அறம் அறிந்த அநுபவம் பெற்ற அறிவாளியை, தன் நோய் போக்கி அடுத்தவர் நோய் போக்க வல்லவரை நட்பு பாராட்டும் திறன் அறிந்து நட்பாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களை தவறை தண்டிக்கும் இடிப்பாரையாகவும், தகுந்தபடி பாதுகாக்கும் மதிலாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பகை வளர்க்கும் பலர் உறவை நாடுவதைவிட நல்லார் தொடர்பை கைவிடாமல் இருப்பதே நல்லது.

 

காணொளி:-

https://youtu.be/wArNFOXQsmQ

பொருட்பால் | அரசியல் | சிற்றினம் சேராமை

 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும். (451)

௧, à®…ற்பர்களுக்கு அஞ்சுவதே பெருமை சிறுமைதான் உறவுகளால் வளர்ந்து விடும்.

 

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு. (452)

௨, நிலத்தின் இயல்பால் நீரானது தனது தன்மையில் இருந்து திரிந்துவிடும், அதுபோல் மனிதர்களுக்கும் தனது இனத்தின் இயல்பே அறிவு என்று அமைகிறது.

 

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல். (453)

௩, மனதின் தன்மைக்கு ஏற்ப மனித உணர்ச்சி அமையும், கூடும் கூட்டம் பொறுத்தே அடையாளச் சொல் அமையும்.

(எனவே சேரும் சபை அறிந்து சேர்த்தல் நலம்)

 

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு. (454)

௪, மனதின் இயல்பு போல் காட்டினாலும் ஒருவர் சார்ந்த இனத்தின் வெளிப்பாடாக இருப்பதே அறிவு.

 

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும். (455)

௫, நல்ல எண்ணங்கள் கொண்ட மனத்தூய்மையும், சிறந்த செயல்கள் செய்யும் செய்வினைத் தூய்மையும் ஆகிய இரண்டும் தான்இருக்கும் இனத்தின் தூய்மையால் சிந்தாமல் வரும்.

 

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை. (456)

௬, மனதின் தூய்மையால் முடிவுகள் நன்றாக அமையும், இனத்தின் தூய்மையை காப்பவருக்கு இல்லை நன்மைகள் விளையும் வினை.

 

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும். (457)

௭, மனதின் சிறப்புத்தன்மை வாழும் உயிர்களுக்கும் நன்மை பயக்கும் இனத்தின் சிறப்புத்தன்மை எல்லா புகழையும் தரும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து. (458)

௮, மனதின் சிறப்பு நன்றாக இருப்பவராயினும் உதாரணமாய் இருப்பவருக்கு இனத்தின் சிறப்பே உயர்த்திக் காட்டியது.

 

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து. (459)

௯, மனநலத்தால் மறுமையும் சிறப்பாகும் மேலும் இனத்தின் நலமும் சிறந்து விளங்கும்.

 

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல். (460)

௧௦, நல்ல இனத்தை விட துணையாவது வேறு இல்லை, தீய இனத்தை விட துன்பம் தருவதும் இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     மானிட பதர்களான சிறிய இனத்துடன் அதே இனம் மட்டுமே உறவு பாராட்டும். இருப்பிடத்தின் குணங்கள் நம்மை பற்றிவிடும் என்பதால் அறிவற்றதை அறிவாக காட்டும் என்பதை உணர்ந்து மனதை தூய்மை செய்ய வேண்டும். மனத்தூய்மை உள்ள சான்றோர் இனப்பற்றுக் கொள்வதில்லை. மனத்தூய்மை உண்டானால் மறு பிறப்பும் நன்றாக அமையும் தீமையும் அண்டாது.

 

காணொளி:-

https://youtu.be/RXB4rfmv00M

பொருட்பால் | அரசியல் | தெரிந்து செயல்வகை(47)

 

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல். (461)

௧, எந்தமாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதனால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

 

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல். (462)

௨, பழக்கமான கூட்டத்தில் தேவையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் ஆலோசித்து கூட்டாக செயல்படுபவருக்கு அடையமுடியாத பொருள் என்று எதுவும் இல்லை.

 

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். (463)

௩, வரவை எண்ணி மூலப் பொருளை இழக்கும் செயலை செய்யத்தூண்ட மாட்டார் அறிவுடையவர். 

 

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர். (464)

௪, தீர்க்கமாக அறியமுடியா ஒன்றை செய்ய முற்படமாட்டார்கள் இகழ்ச்சி என்ற குற்றத்திற்கு அஞ்சுபவர்கள்.

 

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு. (465)

௫, இன்னது இப்படி இருக்கவேண்டும் என்று வகைப்படுத்தாமல் செயல்படுதல் எதிரிகள் நிரந்தரமாய் இருக்க வழி செய்துவிடும்.

 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும். (466)

௬, செய்யத்தகாதவற்றை செய்வதால் கெடுதல் உண்டாகும், செய்யவேண்டியதைச் செய்யாது இருப்பினும் கெடுதல் உண்டாகும்.  

 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு. (467)  

௭, என்னென்ன நேரிடும் என்பதை எண்ணி ஒரு செயலை துவங்க வேண்டும், துவங்கிய பின்பு எண்ணலாம் என்பது இழக்கு.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும். (468)

௮, à®¨à®Ÿà¯ˆà®®à¯à®±à¯ˆà®•à¯à®•à¯ ஒத்துவராது என்று அறிந்தும் துவங்கினால் பலரால் பாராட்டப் பட்டாலும் தடைப் பட்டுவிடும்.

 

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை. (469)

௯, நன்மை செய்தாலும் தவறு நடப்பதுண்டு ஒவ்வொரு தனிமனித பண்பை அறியாமல் செய்யப்படுவதால்.

 

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு. (470)

௧௦, பிறரால் இகழாதபடி சிந்தித்து செயல்பட வேண்டும் காரணம் தனக்கு பொருத்தமற்றதை ஏற்காது உலகு.

 

அதிகார விளக்கம்!

 

     வரவும் செலவும் வரும் ஆதாயமும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் பழகியவர்கள் இடத்திலேயே தேவையானவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் தோல்வி வராது. செயல்படும் முன் சிந்திக்க வேண்டும் செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு. நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருத்ததே. பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/EMPiPEjpWNM

பொருட்பால் | அரசியல் | ௪௮, வலியறிதல் (48)

 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். (471)

௧, à®šà¯†à®¯à®²à¯à®ªà®Ÿ தேவைப்படும் ஆற்றல், தனக்கு இருக்கும் ஆற்றல், அடுத்தவரின் ஆற்றல், துணையாக அமையும் ஆற்றல் இவைகளை அறிந்து செயல்பட வேண்டும். 

 

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல். (472)

௨, செய்ய முடிந்ததை அறிந்து அதன்படி செயல்படுபவருக்கு சாதிக்க முடியாதது இல்லை. 

 

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர். (473)

௩, உடைமையாக கொண்ட வலிமையை சரியாக அறியாமல் ஆர்வமுடன் ஆரம்பித்து இடையிலேயே முடித்துக் கொண்டவர்கள் பலர்.  

 

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும். (474)

௪, வாய்த்த சூழலை அறிந்து நடக்காமல் தனது வலிமையின் அளவை அறியாமல் ஆர்வப்பட்டவர்கள் விரைவில் அழிவார்கள்.

 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின். (475)

௫, மயில் இறகை போன்றதாலும் அச்சு முறியும், அதுவே அளவில் மிகுந்தால்.

 

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும். (476)

௬, நுனி மரத்திற்கு ஏறியவர் போல் தனது திறனை உயர்ந்ததாக மதிப்பிட்டவர் கிளை முறிந்து உயிர் முடிவை காண்பது போலவே முடிந்து விடுவார். 

 

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி. (477)

௭, வழிபடுத்தும் அளவை அறிந்து கொடுக்க வேண்டும் அதுவே பொருளைப் போற்றி வழங்கும் நெறி.

 

 

 

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை. (478)

௮, ஆக்கம் தரும் வரவு அளவில் குறைந்தாலும் கேடு ஏற்படாது, செலவு பெரியதாக இல்லாது இருந்தால்.    

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும். (479)

௯, எது எப்படி என்ற அளவறிந்து எல்லைகள் கொண்டு வாழாதவர் வாழ்க்கை, எல்லாம் இருப்பதுபோல் தோன்றி ஏதும் அற்றதாய் கெடும்.   

 

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும். (480)

௧௦, தன்னிடம் உள்ளதை ஆய்ந்து அறியாது முறைவைத்து கொடுப்பது வளத்தை வலமாக கெடுக்கும்.

 

அதிகார விளக்கம்!

 

     செயலின் வலிமை சுயம் மற்றும் துணையானவர்களின் வலிமை எதிரியின் வலிமை அறிந்து எது வேண்டாதது அதை விலக்கி செயல்பட சாதிக்க முடியாதது இல்லை. இளகுவானதாக இருப்பினும் அளவில் அதிகமானால் பாரம் கூடும். எனவே அளவறிந்து வாழ வேண்டும். வரவு குறைந்ததாக இருப்பினும் செலவு மிகாமல் இருக்க வேண்டும். தன்னிடம் உள்ளதை அறிந்து வாழ வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/3M3-xDiWqts

பொருட்பால் | அரசியல் | ௪௯, காலமறிதல் (49)

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)

௧, à®ªà®•à®²à®¿à®²à¯ வெற்றி பெரும் கூகையைக் காகம், இரவில் வெற்றி பெரும் காகத்தை கூகை, ஆகையால், வெற்றி வேண்டுவோர் காலத்தை கருத்தில் கொள்ளவேண்டும்.

 

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு. (482)

௨, பருவ காலத்தை அறிந்து ஏற்றபடி வாழ்தலே உயர்ந்த செயல்களைத் தடையற்று நடத்தும் கயிறைப் போன்றது. 

 

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின். (483)

௩, அரிய செயல் என்று எதுவும் இல்லை தேவையான கருவியும் காலமும் அறிந்து செயல்பட்டால். 

 

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின். (484)

௪, உலகமே தனக்குரியதாக நினைப்பினும் கைக்கூடும், காலத்தையும் இடத்தையும் கவனித்துச் செயல்பட்டால்.

 

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர். (485)

௫, கலக்கம் இல்லாமல் தகுந்த காலத்தை எதிர்ப்பாத்துக் காத்திருப்பார் உலகத்தின் உயர்வை வேண்டுபவர்

 

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)

௬, ஊக்கம் உள்ளவர்களின் அமைதி, பொருத்தமான தாக்கத்திற்கு பின்வாங்குதல் போன்றது.  

 

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (487)

௭, பொங்கி எழுந்தாலும் வெளியே காட்டாது இருப்பார்கள் காலம் கருதி கட்டுப் படுத்தும் அறிவுடையவர்கள்.

 

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை. (488)

௮, பகைவரைப் பார்க்க நேரிடும் பாரத்தை சுமக்கவேண்டும் அவர்களின் அழிவால் கிழக்கின் தன்மைப் போல் துன்ப இருள் அகலும்.

 

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல். (489)

௯, அடைய முடியாத ஒன்றை அடைவதற்கு ஏற்ற சூழல் அமைந்தால், அதுவே நம்மால் செய்ய முடியாததை செயல்படுத்தும் காலம். 

 

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து. (490)

௧௦, கொக்கைப் போலவே உரிய பருவத்திற்கு காத்திருந்து மேலும் அது குத்தி எடுப்பதைப் போலவே சரியாக இடத்தை பயன்படுத்த வேண்டும். 

 

அதிகார விளக்கம்!

 

     காலம் அறிய மற்ற உயிர்களின் நடத்தையை ஆய்ந்து அதைப்போல் நாமும் காலத்தை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். à®ªà®•à®²à¯ சாதகமான சூழலை ஆந்தைக்கு தருவதில்லை என்பதால் இரவில் வேட்டையாடும். காலம் கருதி காத்திருப்பதே அனைத்திற்கும் ஆதாரம். தகுந்த காலத்தில் சரியாக செயல்கள் முடித்துக் கொள்ளவதே வெற்றிக்கு அடிப்படை.

 

காணொளி:-

https://youtu.be/9zBNCh4X4Bs

பொருட்பால் | அரசியல் | ௫௦, இடனறிதல் (50)

 

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது. (491)

௧, à®®à¯à®´à¯à®®à¯ˆà®¯à®¾à®• இடத்தை அறிந்து கொள்ளாமல் துவங்கக் கூடாது, எந்தச் செயலையும் இகழவும் கூடாது. 

 

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும். (492)

௨, முரண்பாடு உடைய கூட்டத்தை அடைந்தவருக்கும் நல்ல இடம் அமைந்தால் நன்மைகள் பல கிடைக்கும்.

 

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின். (493)

௩, வழியற்றவரும் வழி கிடைத்து நல்ல இடம் அமர்ந்தால், வாழ்த்தாதவரும் வாழ்த்தும் வாய்ப்பை பெறுவார்.

 

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின். (494)

௪, எண்ணிய எண்ணத்தையே மாற்றிக் கொள்வார்கள் சேரும் இடம் அறிந்து சேர்ந்துக் கொண்டால். 

 

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற. (495)

௫, நிறைந்த நீரில் வெற்றிப் பெரும் முதலையை நீர் அற்ற இடத்தில் பிறவகைகளில் வெல்லப்படும். (இடம் பொறுத்தே நம் பலம் தீர்மானிக்கப் படுகிறது)

 

கடல்ஓடா கால்வால் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து. (496)

௬, நிலத்தில் ஓடும் தேர் கடலிலும், கடலில் ஓடும் நாவாய் நிலத்திலும் ஓடாது. இடம் பொறுத்தே செயல்பாடுகள் இருக்கும்.

 

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின். (497)

௭, அஞ்சாமைத் தவிர வேறு துணை வேண்டாம், அளவுக்கு அதிகமாய் எண்ணம் இல்லாமல் சரியான இடத்தை அறிந்துச் செயல்பட்டால். 

 

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும். (498)

௮, சிறிய படை என்றாலும் தனக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட, வலிமையான படையும் தனது ஆர்வத்தை இழக்கும்.

 

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. (499)

௯, சீரும் சிறந்த பாதுகாப்பும் இல்லையென்றாலும், மனிதனைத் தான் வாழும் இடத்திற்குச் சென்று தாக்குவதுக் கடினம். 

 

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு. (500)

௧௦, கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டால் நரியும் வீழ்த்திவிடும், வேல்கண்டும் அஞ்சாதுப் போரிட்ட யானையை. 

 

அதிகார விளக்கம்!

 

     தடைகளை ஆய்ந்து அறிந்தபின் தகுந்த இடம் கண்டு எதையும் துவங்கலாம்.  à®¤à¯‡à®°à¯à®¨à¯à®¤à¯†à®Ÿà¯à®¤à¯à®¤à¯ செயல்பட்டால் தோல்வி வராது. செயல்படும் முன் சிந்திக்க வேண்டும் செயல்பட துவங்கிய பின் சிந்திப்பது தவறு. நன்மையிலும் தீமை உண்டாகும் காரணம் அதை பெறுபவர் பண்பைப் பொருத்ததே. பிறர் இகழாதபடி நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். சேற்றில் மாட்டிக் கொண்ட யானையை சிறு நரியும் சாய்க்கும் எனவே இடம் அறிந்து செயல்பட வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/lBWyJnCEhqY

பொருட்பால் | அரசியல் | ௫௧, தெரிந்து தெளிதல் (51)

 à¯«à¯§, தெரிந்து தெளிதல் (51)

 

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும். (501)

௧, à®…றம் என்ற அகவாழ்வு, பொருள் என்ற புறவாழ்வு, இந்த இரண்டிலும் இன்பம் காணுதல், இவற்றின் ஆதாரமாகிய உயிரின் தன்மை ஆகிய நான்கினைத் திறம்படத் தெரிந்து கொண்டால் தேர்ச்சிப் பெறலாம். 

 

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் கட்டே தெளிவு. (502)

௨, தான் பிறந்த குடியின் குற்றத்தை நீக்கி அவமானத் தழும்புக்கு அஞ்சுபவரே தெளிவுக்கு அடையாளமானவர்.

 

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு. (503)

௩, சிறப்பானவற்றைக் கற்றுக் குற்றங்கள் இல்லாதவர் இடத்திலும் தேடினால் குறை வெளிப்படாமல் இருப்பது கடினம்.

 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல். (504)

௪, ஒருவரின் குணத்தை அறிந்துக் குற்றமும் அறிந்து அவைகளில் அதிகமானதை அறிந்து அதுவே அவரது பண்பாய்க் கொள்ளவேண்டும்.

 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். (505)

௫, மதிக்கப்படுவதற்கும் மற்றபடி சிறுமைப் படுவதற்கும் அவரவர் செயல்களே அவரவர்களை வழி நடத்தும் கட்டளைக் கல்.

(கட்டளைக் கல் என்பது மன்னர்கள் மக்களுக்கு வழங்கும் கட்டளைகள் பொறிக்கப்பட்டு இருப்பது)

 

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி. (506)

௬, இல்லாதவரை வளர்க்க விரும்பவேண்டும் மற்றவர்கள் பற்று இல்லாமல் பழிக்கு அஞ்சாதவர்கள்.

 

 

 

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும். (507)

௭, ஆசையால் உந்தப்பட்டு அறிவற்றவரை முன்னேற்ற நினைப்பது எல்லா சிறுமைத் தனத்தையும் தரும்.

 

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும். (508)

௮, தன்னளவில் தேர்ச்சிப் பெறாமல் அடுத்தவர் தேர்ச்சிப் பெற வழிகள் செய்தால் மாறாத துன்பம் ஏற்படும்.

 

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள். (509)

௯, ஆராயாமல் யாரையும் தேர்ச்சிப் பெற்றவராக ஏற்கக் கூடாது. தேர்ந்தெடுத்தப் பின்பு தேர்ச்சிப் பெரும் பொருள்களைக் கேட்டு தெளிய வேண்டும்.

 

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும். (510)

௧௦, தேர்ச்சிப் பெறாதவரின் விளக்கமும் தெளிந்தவரின் ஐயமும் மாறாத துன்பம் தரும்.

 

அதிகார விளக்கம்!

 

     அகம் சார்ந்த அறமும், புறம் சார்ந்த பொருளும், நிலையான இன்பமும். உயரின் தன்மையும் அச்சமும் என நான்கையும் தெரிந்து தேறுவதையே தெளிவு எனலாம். நல்ல சூழலில் பிறந்தாலும் குற்றம் அற்றவனாக வாழ்வதே தெளிவு. அரியன கற்பதைக் காட்டிலும் தன் குற்றத்தை நீக்குவதே தெளிவு. குணம் குற்றம் சீர்தூக்கிப் பார்த்து மிகையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேராதவரின் பின் சென்றால் தீராத துன்பம் விளையும். தேறியவரின் ஐயமும் தேராதவரின் தெளிவும் தீராத துன்பம் தரும்.

 

காணொளி:-

https://youtu.be/KRVJwC4c8V4

பொருட்பால் | அரசியல் | ௫௨, தெரிந்து வினையாடல் (52)

 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும். (511)

௧, à®¨à®²à¯à®²à®¤à¯à®®à¯ கேட்டதும் தேடி விரும்பிச் செய்யும் தன்மையால் நம்மை ஆளும்.

 

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை. (512)

௨, à®µà®´à®¿ அறிந்து பலவாக பெருக்கி வளப்படுத்த உகந்தவற்றை ஆராய்ந்து அறிந்தவனே வினை செய்ய வேண்டும்.

 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு. (513)

௩, எல்லாம் சிறக்க நினைக்கும் அன்பு, வாழ்தலின் எல்லைகளை புரிந்துக் கொள்ளும் அறிவு, எதை எப்படி செய்யவேண்டும் என்ற தேற்றம், நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற அவாவின்மை இவை நான்கையும் நன்றாக அடைந்தவரே தெளிவுக்கு அடையாளம். 

 

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர். (514)

௪, எத்தனை வகையில் தேர்ச்சிப் பெற்றவராக இருப்பினும், செயல்படும் வகையில் மாறுபடுகிறார்கள் மனிதர்கள் பலர்.

 

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. (515)

௫, எப்படி என்பதை அறிந்து ஆற்றலுடன் செயல்படுபவருக்கு அல்லாமல் செயல்படுவதில் மட்டுமே சிறந்தவனை தூண்டக்கூடாது.

 

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல். (516)

௬, செய்யத் தகுந்தவரை அணுகி, செய்ய வேண்டியதை அறிந்து, தகுந்த நேரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். (517)

௭, இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல். (518)

௮, செய்யத் தகுந்ததா என்று அறிந்த பின்பே அதற்கு உரியவரை செய்யத் தூண்ட வேண்டும்.

 

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு. (519)

௯, செயல்படும் பொழுது செயல்படுவதை சரியாக செய்பவர் உறவை தவறாக நினைப்பவர் தனது மதிப்பை இழப்பார். 

 

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு. (520)

௧௦, செயல்படுபவர் வருத்தம் அடையாதபடி இருக்க, எப்பொழுதும் விரும்ப வேண்டும் ஆட்சியாளர்கள், அதனால் உலகமே வளமாய் மாறும்.

 

அதிகார விளக்கம்!

 

     நாடும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை உண்டாகும். சேர்த்து வாரி அதிகரிக்க தெரிந்தவர் செய்வதே செயல். அன்பு, அறிவு, புரிதல், அவாயின்மை என நான்கும் உள்ளவரே தெளிவானவர். செயல்பட வாய்ப்பு இருந்தும் செயல்பட முடியாதவர்கள் பலர். செயல்பட தகுதியானவரை நாடி தகுந்த காலத்தில் செய்வதே சரி. தகுதியற்றவரை தேர்ந்தெடுப்பதால் மரியாதை குறையும். தகுதியானவரை மதிப்புடன் நடத்துவதே ஆட்சியாளர்களின் கடமை.

 

காணொளி:-

https://youtu.be/IxWchoY4QQk

பொருட்பால் | அரசியல் | ௫௩, சுற்றந்தழால் (53)

 à¯«à¯©, சுற்றந்தழால் (53)

 

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்றத்தார் கண்ணே உள. (521)

௧, à®‰à®°à®¿à®®à¯ˆà®•à¯ கொண்டாட ஒன்றும் இல்லாத பொழுதும் உறவுப் பாராட்டுவது சுற்றத்தாரிடத்தில் உண்டு.

 

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும். (522)

௨, விருப்பம் நீங்க சுற்றம் அமைந்தால் அழிவற்ற ஆக்கம் பல உண்டாகும்.

 

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று. (523)

௩, உறவாடி மகிழாதவன் வாழ்க்கை கரையற்ற குளத்தில் நீர் நிறையாதுப் போன்று கெடும். 

 

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன். (524)

௪, à®…க்கம் பக்கம் உள்ள உறவுகளுடன் இணைந்து வாழ்வது செல்வத்தால் வரும் பயன்.

 

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும். (525)

௫, கொடுப்பதும், இனிமையாய் பேசுவதும் நடைமுறைப் படுத்தினால் இருக்கும் உறவுகளுடன் மேலும் உறவுகள் வளரும்.

 

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார் மாநிலத்து இல். (526)

௬, நிறைய கொடுப்பதும் சினத்தை சேர்க்காமலும் இருப்பவர் பக்கம் இருக்கும் சுற்றம் போல் மாநிலத்தில் மற்றவருக்கு இல்லை.

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள. (527)

௭, காகம் மறைக்காமல் அழைத்து உண்ணும் செயல்போல சுற்றம் பாராட்டுபவரின் செயலும் உள்ளது.

 

 

 

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். (528)

௮, பொது நோக்கு அற்று அரசு பாகுபடுத்திப் பார்த்தால் மக்களில் பலர் பாகுபாடுக் கொண்டே வாழ்வார்கள். 

 

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும். (529)

௯, உறவினராய் இருந்து பிரிந்தவர் காரணம் பொருந்தாமல் மீண்டும் உறவு வரும். 

 

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்திருந்து எண்ணிக் கொளல். (530)

௧௦, தன்னிடம் இருந்து பிரிந்து மீண்டும் ஒரு காரணத்திற்காக வந்தவரை ஆட்சியாளர்கள் ஆராய்ந்து ஏற்கவேண்டும்.

 

அதிகார விளக்கம்!

 

     இல்லாமையிலும் உறவு பாராட்டுவது உற்றார்களின் பண்பு. விருப்பம் குறையாத உறவு ஒரு சிறப்பானது. உறவு இல்லாத வாழ்வு கரையற்ற குளம் போன்றது. காகம் போல் கூடி உண்ணுதல் உறவுக்கு பெருமை. உறவு பிரிந்தாலும் மீண்டும் கூடும் வாய்ப்பு வரும். பிரிந்த உறவை இணையும் தருணத்தில் அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/DKgnHOLAcAQ

பொருட்பால் | அரசியல் | ௫௪, பொச்சாவாமை (54)

 à¯«à¯ª, பொச்சாவாமை (54)

 

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (531)

௧, à®…ழிந்துவிடும் வெகுளியைவிடத் தீமையானது, சிறந்த உவகையால் கிடைக்கும் மகிழ்ச்சியின் பொருட்டு சோர்ந்து செயல்கள் சரிவர செய்யாதது.

 

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. (532)

௨, மறதி புகழை அழிக்கும், அறிவு சார்ந்த செயலை தொடரும் துன்பம் அழிப்பதைப் போன்று.

 

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு. (533)

௩, மறதி உள்ளவருக்கு புகழ் இல்லை, அது உலகத்தின் அனைத்து துறை எழுத்தாளர்களின் முடிவு.

 

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு. (534)

௪, à®…ச்சம் உள்ளவருக்கு பாதுகாப்பு அரண் இல்லை அதுபோலவே இல்லை மறதி உள்ளவருக்கு நன்மை.

(உலகமே பாதுக்காப்பு அரணாக நினைப்பவர் அச்சம் தவிர்க்கிறார், நினைவாற்றால் உள்ளவர் நன்மை அடைகிறார்)

  

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும். (535)

௫, முன்னமே ஆய்ந்து காக்க வேண்டியதைக் காக்காமல் செயல்பட்டவருக்கு தனது பிழையால் எதிர்க்காலம் ஏற்றம் அற்றதாய் அமையும்.

 

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல். (536)

௬, நினைவை இழக்காமை யார் இடத்தில் என்றும் வழுக்காமல் இருக்கிறதோ அதற்கு ஒப்பானது இல்லை.

 

 

 

 

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின். (537)

௭, முடியாத செயல் என்று எதுவும் இல்லை மறதியற்ற நிலை என்ற கருவியை போற்றி செயல்பட்டால்.

 

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (538)

௮, சிறப்பானவற்றை விரும்பிச் செய்திட வேண்டும், மறுத்து ஏளனம் செய்தவருக்கு அடுத்தது உயர்வு இல்லை.

 

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (539)

௯, அவமதித்து அழிந்தவரை எண்ணிக்கொள்ள வேண்டும், நாம் நமது மகிழ்வால் மறதி அடையும் பொழுது.

 

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின். (540)

௧௦, எண்ணியதை அடைவது எளிது அதற்கு நாம் எண்ணியதை எண்ணியபடியே இருக்கச் செய்யவேண்டும்.

 

அதிகார விளக்கம்!

 

     வெற்றியின் பெருமிதம் தரும் மறதி கோபத்தின் விளைவைவிட மோசமானதாக இருக்கும். மறதியற்ற தன்மையே அரண் போல் நம்மை காக்கும்.  à®‡à®•à®´à¯à®¨à¯à®¤à¯ பேசி கெட்டவர்கள் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நினைத்தபடி அடைவது எளிது நினைத்தபடியே நினைவு கூறும் ஆற்றல் இருந்தால்.

 

காணொளி:-

https://youtu.be/0tdZbTSlQhU

பொருட்பால் | அரசியல் | ௫௫, செங்கோன்மை (55)

 

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை. (541)

௧, à®‰à®Ÿà®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à®¾ என்று பார்க்காமல் அருளுடன் அணுகி யாவருக்கும் தேவையானது செய்வதே முறை.

 

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி. (542)

௨, வானத்தை எதிர்பார்த்தே உலகம் வாழும் அதுபோலவே ஆட்சியாளரின் ஆணையை எதிர்பார்த்தே குடிமக்கள் வாழ்வும் இருக்கும்.

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543)

௩, முடிவை அறிந்தவர் நூல்களுக்கும் இல்வாழ்விற்கும் மூலமாய் நிற்பது ஆட்சியாளரின் சட்டமே.

 

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு. (544)

௪, à®•à¯à®Ÿà®¿à®®à®•à¯à®•à®³à®¿à®©à¯ நல்வாழ்வுக்கு உறுதுணையாய் ஆணைகள் பிறப்பிக்கும் ஆட்சியாளரையே பின்பற்றிச் செயல்படும் உலகம்.

 

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு. (545)

௫, இயல்புகளை அறிந்து ஆணை பிறப்பிக்கும் ஆட்சியாளர் காலத்தில் மழையும் நல்ல செயல்களும் கூடி வரும்.

 

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉம் கோடா தெனின். (546)

௬, ராணுவ பலம் வெற்றியைத் தராது, ஆட்சியாளரின் ஆணைகள் கேடு இல்லாமல் இருப்பதே வெற்றி.

 

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின். (547)

௭, அருளுடன் காக்கப்படும் நாடுகளின் ஆட்சியாளர்களை ஆட்சி முறையே காக்கும் தவறுகள் செய்தாலும்.

 

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும். (548)

௮, மக்களின் எண்ண ஓட்டத்தை அறியாமலும், தேவையானவற்றை செய்யாமலும் இருக்கும் ஆட்சியாளர்கள் தனக்கு தானே கேடு செய்துகொள்வார்கள்.

 

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில். (549)

௯, குடிமக்களையும், ஆட்சி எல்லைகளை கடந்தும் பாதுகாப்பு அளித்து குற்றங்களை கலைப்பது ஆட்சியாளர்களின் அடையாளம் அல்ல, அவசியம் செய்யவேண்டிய தொழில்.

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர். (550)

௧௦, கொலை செய்வதில் கொடுமையானவரை வேண்டாம் என அழித்தல், பசுமையான பயன்பாட்டு நிலத்தில் தேவையற்றதை பிடுங்கி கட்டியதற்கு சமம்.

 

அதிகார விளக்கம்!

     உடன்படுகிறதா என்று பாராமல் இயற்கையை புரிந்துக் கொண்டு யாவரும் சிறக்க வழிமுறை செய்வதே நல்லாட்சிமுறை, இப்படி செய்பவர் வான்நோக்கிய வளத்தை தன் குடிமக்களுக்கு வழுங்குவார். ஆட்சியாளர்களின் சட்டமே இறுதியாக இருப்பதால் ராணுவ பலத்தை விட நற்குணமே பலமாக அமையும். கொடியவர்களை அழித்தல் களை எடுப்பதைப் போன்றது.

 

காணொளி:-

https://youtu.be/ZFWqNnX4EPU

பொருட்பால் | அரசியல் | ௫௬, கொடுங்கோன்மை (56)

 

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து. (551)

௧, கொலை செய்வதையே தொழிலாக கொண்டவரை விட கொடுமையானது, அலை போல் தொடர்ந்து அர்த்தமற்ற செயல்களைச் செய்யும் ஆட்சியாளர்களின் ஆட்சி.

  

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு. (552)

௨, கொலைக் கருவியைக் காட்டி கொடு என்பதைப் போன்றது ஆணைகள் கொண்டு மிரட்டும் ஆட்சியாளர்களின் கண்முடித்தனம்.

  

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறும் நாடு கெடும். (553)

௩, நாள்தோறும் ஆராய்ந்து செயலாற்றாத ஆட்சியாளர்களின் நாடு நாள்தோறும் கெடும்.

  

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு. (554)

௪, பொருளையும், குடிமக்களையும் சேர்ந்து இழக்கும் ஆணைகளை சிறப்புறச் செய்யாத அரசு.

 

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)

௫, துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.

 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி. (556)

௬, ஆட்சியாளருக்கு அவசியம் சிறந்த ஆணைகள், அப்படி இல்லையென்றால் ஆட்சியாளருக்கு நற்புகழ் வாய்க்காது.

 

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு. (557)

௭, மழைத்துளி இல்லாது போனால் இவ்வுலகிற்கு ஏற்றது இல்லை. அதைப் போலவே ஆட்சியர் கொடுக்கும் தன்மையற்று இருப்பது, வாழும் உயிர்க்கு ஏற்றது இல்லை.

 

 

 

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின். (558)

௮, துன்பத்திலும் துன்பமானது நல் ஆணைகள் கொண்டு ஆளாத ஆட்சியாரின் கீழ் உடைமைக் (குடியுரிமை)கொண்டு இருப்பது.

 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல். (559)   

௯, ஆணைகள் கோடி ஆட்சியாளர் செய்வது, வானம் பெய்தும் கோடி நீர்தங்கும் இடத்தில் நீர் தங்காமல் போவதைப் போன்றதே. 

(நீர் நிலைகள் மழையை தக்கவைத்துக் கொள்ளாததைப் போலவே ஆணைகள் அதிகம் செய்யும் அரசால் நன்மைகள் இருக்காது)

 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின். (600)

௧௦, ஆக்கப் பணிகள் குறையும், தொழில் நுட்ப நூல்கள் பெருகாது, ஆட்சியாளர் அரசை கவனிக்காமல் இருந்தால்.

 

அதிகார விளக்கம்!

 

     கொலை பாதகரை விட கொடுமையானவர் கொடிய ஆட்சியர். துன்பத்தை விட துன்பமும் அவரே தருவார். அர்த்தமற்ற ஆணைகள் குடி மக்களை இழுக்கச் செய்யும். ஆக்கப் பூர்வமான செயல்கள் குறையும்படி செய்பவர்கள் நல்லாட்சி தருபவர்கள் இல்லை.

 

காணொளி:-

https://youtu.be/cmGhzfK-qys

பொருட்பால் | அரசியல் | ௫௭, வெருவந்த செய்யாமை (57)

 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. (561)

௧, à®¤à®•à¯à®¨à¯à®¤ ஆதாரத்தை ஆராய்ந்து மீண்டும் அந்தச் செயலில் (குற்ற) தலைப்படாது இருக்க ஏற்றபடி தண்டிப்பது அரசின் செயல்.

 

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர். (562)

௨, ஆக்கபூர்வமான செயல்கள் தொடர வேண்டுபவர் கடுமையாய் விமர்சித்து மென்மையாய் தண்டிக்க வேண்டும்.

 

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (563)

௩, வெறுப்பு வந்து செயல்படும் கொடிய ஆட்சியாளன் இருந்தால் ஒற்றுமை பகைமையாய் மாறி உள்ளதும் கெடும்.

 

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் 

உறைகடுகி ஒல்லைக் கெடும். (564)

௪, இறை விரும்பாதவன் என்று சொல்லப்படும் கடுஞ் சொல்லுக்கு உட்பட்ட ஆட்சியாளர் எல்லை சுருங்கி சீக்கிரத்தில் அழிவார்.

  

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து. (565)

௫, அரிதாக கேட்டு இனிமை அற்று பார்ப்பவன் அடைந்த அதிகபட்ச செல்வம் ஏதும் செய்யமுடியாத பேய் கண்ட காட்சி போன்றது. 

 

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி ஆங்கே கெடும். (566)

௬, கடுமையான வார்த்தையும், கருணையற்ற பார்வையும் உடையவனின் அதிகபட்ச செல்வம் நீண்ட நாள் நிலைக்காமல் அழியும்.

 

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம். (567)

௭, à®µà®©à¯à®®à¯ˆà®¯à®¾à®© வார்த்தையும் தாங்கமுடியா தண்டணையும் ஆட்சியாளரின் எதிரியற்ற தன்மையை அறுக்கும் அரம் போன்றது.

 

 

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்

சீறின் சிறுகும் திரு. (568)

௮, மனிதாபிமானத்துடன் செயலாற்ற எண்ணாத ஆட்சியாளர் சினத்துடன் செயல்பட்டால் மங்கும் புகழ்.

 

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும். (569)

௯, போர் மூண்ட காலத்தில் அடக்கி ஆள ஆடசியாளர் வெருப்படைந்து சீர் கெடுவர்.

 

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை. (570)

௧௦, கற்று அறியாதவர்களை இணைக்கும் கடுமையான ஆட்சி. அதைவிட வலிமையானது இல்லை நிலத்திற்குச் சுமை.

 

அதிகார விளக்கம்!

 

     வெறுப்புடன் நோக்காமல் தகுந்த ஆதாரத்தை அறிந்து தீர்ப்பு கூறுவது ஆட்சியர் கடமை. மேலும் வெறுப்புடன் தீய சொற்களை பயன்படுத்துவதும் மனிதாபிமானமற்ற செயல் செய்வதும் தீரா துன்பத்தையும் நிலத்திற்கு ஆறாத பழியும் உண்டாக்கும்.

 

காணொளி:-

https://youtu.be/C7vJ65XvIoM

பொருட்பால் | அரசியல் | ௫௮, கண்ணோட்டம் (58)

 

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு. (571)

௧, à®ªà®¾à®°à¯à®¤à¯à®¤à®±à®¿à®¤à®²à¯ (பக்குவமடைதல்) என்னும் தனிச் சிறந்த அழகு அறிந்த உண்மையானவர்களால் உலகம் இருக்கிறது.

 

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை. (572)

௨, பார்த்தறிதல் (பக்குவமடைதல்) உள்ளதால் உலகம் இருக்கிறது. அப்படி இல்லாதவர்கள் உண்மை நிலைக்கு பாரமானவர்கள்.

 

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண். (573)

௩, பண் (ராகம்) எதற்கு பாட்டிற்கு இசையவில்லை என்றால், கண் எதற்கு பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாத கண் என்றால்.

 

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண். (574)

௪, à®‡à®°à¯à®ªà¯à®ªà®¤à¯ˆà®ªà¯ போல் முகத்தில் இருந்து என்ன செய்யும் அதன் தன்மையால் பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாத கண்.

 

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும். (575)

௫, கண்ணிற்கு அணியும் சாதனம் பார்த்தறிதல் (பக்குவமடைதல்). அது இல்லை என்றால் புண் என்றே உணரப்படும்.

 

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர். (576)

௬, மண்ணே மரத்தை வளர்க்கவும் அழிக்கவும் செய்கிறது, மரத்தின் தன்மைக்கு ஏற்ப மண் செயல்படுவதைப் போன்றே கண்ணும் கண்ணோடு 

பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாதவர்.

 

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல். (577)

௭, பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லாதவர் கண் இல்லாதவர். கண் இருந்தும் பார்த்தறிதல் (பக்குவமடைதல்) இல்லை என்றால் கண் இல்லாதவரே.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு. (578)

௮, காரியங்களை சிதைக்காமல் பார்த்தறிய (பக்குவமடைய) வல்லமை உள்ளவர்களுக்கு உரிமையானது இந்த உலகம்.

 

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை. (579)

௯, எதிர்த்து செயல்படும் பண்புள்ளவர்களின் கண்களும் பார்த்தறிந்து (பக்குவமடைந்து) பொறுத்து செயல்படும், இப்பண்பே தலை சிறந்தது.

 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர். (580)

௧௦, நன்கு அறிந்தும் நஞ்சு உண்ண முற்படுவர் விரும்பத்தக்க மாற்றத்தை வேண்டுபவர்.

 

அதிகார விளக்கம்!

 

     பார்த்து அறியும் திறத்தால் உண்மை நிலைக்கிறது. அவர்களால் உலகம் வளம் அடைகிறது. அத்திறன் இல்லாதவர்கள் உலகின் பாரமானவர்கள், பாடலுக்கு இசை போன்றது கண்ணுக்கு பார்த்தறிதல், காரியங்கள் சிதையாமல் உள்ளபடி பாரப்பவர் வல்லமையானவர்கள் அவர்கள் நஞ்சையும் நன்மை பொருட்டு அருந்த தயங்கமாட்டர்கள்.

 

காணொளி:-

https://youtu.be/lCPNOWcgGE0

பொருட்பால் | அரசியல் | ௫௯, ஒற்றாடல் (59)

 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். (581)

௧, நடப்புகளை அறிவதும், விளக்கம் தரும் நூல்களும் என இரண்டும் சிறந்த ஆட்சியாளருக்கு கண் போன்றது.

 

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில். (582)

௨, எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படியெல்லாம் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை எல்லா வகையிலும் சரியாக அறித்திருப்பது ஆட்சியாளர்களின் தொழில்.

 

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்தது இல். (583)

௩, ஆய்ந்து அறிபவரை அறிந்து நடப்புகளை தெரிந்துக் கொள்ளா ஆட்சியாளரின் வெற்றி நிலைத்த வெற்றியாய் இருக்காது.

 

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று. (584)

௪, செயல்படுபவர், தனக்கு உறவு முறைக் கொண்டவர், வேண்டத்தகாதவர் என்று பாகுபாடு அற்று அனைவரையும் ஆராய்வதே ஒற்று.

 

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று. (585)

௫, கண்டுக்கொள்ள முடியாத உருவமுடன், எதைக்கண்டும் அஞ்சாமல், எந்நிலையிலும் உள்ளதை சொல்லாமல், வல்லமையுடன் செயல்படுவதே ஒற்று.

 

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று. (586)

௬, எதன்மீதும் பற்று இல்லாத துறந்தவர்கள் போல் மாறி தன்னலம் மறந்து ஆராய்ந்து எத்துன்பம் செய்தாலும் சோர்வு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.

 

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று. (587)

௭, அறியமுடியாமல் மறைந்தவற்றை கேட்டு அறிந்து, அப்படி அறிந்ததில் ஐயப்பாடு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.

 

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588)

௮, கண்காணித்து தந்த தகவல்களை மேலும் ஒரு கண்காணிப்பினால் கண்காணித்து அறிந்துக் கொள்ளவேண்டும்.

 

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும். (589)

௯, கண்காணித்து தந்த தகவல்களை சரியாக உணரவேண்டும் என்றால் மேலும் மூன்று நபர்களின் தகவலுடன் ஒப்பிட்டு அறிந்துக் கொள்ளவேண்டும்.

 

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை. (590)

௧௦, சிறப்பானது என்று கண்காணித்தலை பாராட்டுவது செய்யக்கூடாது. செய்தால் மறைப்பொருளை வெளிப்படுத்தியது போல் ஆகும்.

 

அதிகார விளக்கம்!

 

     நடப்புகளை அறிந்து நூல்களில் தெளிவு பெற்று இருப்பதற்கே கண் உள்ளது. கண்காணிப்பதற்கும் இதுவே அவசியம். செயல்களில் மாற்றம் இல்லாதபடியும், அதே சமயத்தில் செயல்கள் தந்த மாற்றத்தை காண்காணிப்பதும் ஆட்சியாளர்களின் பணி. காண்காணிப்பை பலர் மூலம் உறுதி செய்வது நல்லது.

 

காணொளி:-

https://youtu.be/8Yvy8GfVmPk

பொருட்பால் | அரசியல் | ௬௦, ஊக்கமுடைமை (60)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று. (591)

௧, à®‰à®²à®• நன்மைகளை பெற்றவர் எனப்படுவது உற்சாகமுடன் ஆர்வமாய் செயல்படுவது, அப்படி இல்லை என்றால் உள்ளதும் உள்ளபடி இல்லாமல் மாறும்.

 

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும். (592)

௨, à®‰à®³à¯à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ உரிமையாக அடைந்ததே உரிமையானது. பொருளை அடைந்தது நிலை இல்லாமல் விலகிவிடும்.

 

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார். (593)

௩, à®ªà®¯à®©à¯ அற்றுப் போனதே என்று தன்நிலை இழக்க மாட்டார், ஊக்கத்தை ஒருவர் தனது கைத்துணையாய் வைத்துக்கொண்டால்.

 

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை. (594)

௪, à®ªà®¯à®©à¯à®³à¯à®³ செயல்கள் வீணாகாமல் நடக்கும், தளராத ஊக்கத்தை உரிமையாக அடைந்த ஒருவர் இடத்தில்.

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு. (595)

௫, நீரின் அளவு தண்டு நீண்டு, மலரை வெளிக்காட்டும் அதுபோலவே உள்ளத்தின் அளவிற்கு ஏற்ப மனிதர்களின் உயர்வும் இருக்கும்.

 

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (596)

௬, உள்ளத்தின் எண்ணங்கள் அனைத்தும் உயர்வானதாகவே இருக்கவேண்டும். உயர்வற்றவை, விலக்கினாலும் விலகாவிட்டாலும் வீரியம் அற்றுப்போகும்.

 

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு. (597)

௭, à®…ழியும் தருணத்திலும் தளரமாட்டார்கள் உள்ளத்தில் வலிமை உடையவர்கள், அம்புகளால் மறைத்தாலும் அடங்காது செயல்படும் ஆண்யானை போன்று. 

 

 

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு. (598)

௮, ஊக்கம் கொண்ட உள்ளம் இல்லாதவர் உலகத்தை வென்றோம் என்ற பெருமை அடையமுடியாது.

 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின். (599)

௯, கூரிய தந்தம் இல்லை என்றாலும் யானையை மடக்கும் ஆர்வம் கொண்ட புலியே ஊக்கத்திற்கு அடையாளம்.

 

உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்

மரம்மக்க ளாதலே வேறு. (600)

௧௦, ஒருவருக்கு உரமாக இருப்பது உள்ளம் எண்ணமற்று வெறுமை அடையும் செல்வம். அப்படி அடையாதவர்கள் செய்யப்பட்ட மனிதர்களே அன்றி வேறு இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     உரிமையாக அடையவேண்டிய உடைமைப் பொருள் ஊக்கம், அது இல்லை என்றால் அடைந்த எல்லாம் மாறும். ஊக்கம் உள்ளவர்கள் தோல்வி கடந்து வெற்றி அடைவார். ஊக்கமே வாழ்வின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும். தந்தம் உள்ள யானையை எதிர்க்கும் புலி ஊக்கத்திற்கு நல்ல உவமை. ஊக்கம் இல்லாதவர் இயந்திர மனிதனே.

 

காணொளி:-

https://youtu.be/kASgF5a1Cks 

பொருட்பால் | அரசியல் | ௬௧, மடியின்மை (61)

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்

மாசூர மாய்ந்து கெடும். (601)

௧, à®‰à®³à¯à®³à®¤à¯ சிறத்தல் என்ற வாழ்வுக்கான குறைவற்ற விளக்கம், சோர்வு என்ற அதிபயங்கரத்தால் அழிந்துவிடும். 

 

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர். (602)

௨, ஊக்கமின்மையை ஊக்கப்படுத்தாமல் கடைபிடிக்க வேண்டும் சிறந்த வாழ்வை சிறப்பான வாழ்வாக வாழ வேண்டுபவர்.

 

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து. (603)

௩, சோம்பிச் சோம்பலை உரிமையாகக் கொண்ட அறிவற்றவர் தான் பிறந்த குடும்பம் தனக்கு முன்னமே அழிவதைக் காண்பார்.

 

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு. (604)

௪, à®‰à®³à¯à®³à®¤à¯ சிறத்தல் என்ற வாழ்வு அழிந்து குற்றங்கள் பெருகும், சோம்பலால் கவரப்பட்டு உலகில் இருப்பவர்களுக்கு.

 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன். (605)

௫, நீண்ட அழுகை, மறந்துவிடுவது, சோம்பல், அதிகபட்ச உறக்கம் இவை நான்கும் அழிவை விரும்புபவர்களின் ஆயதங்கள். 

 

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது. (606)

௬, ஆற்றலுடையவர் உறவு இருந்தாலும், சோம்பலுடையவர் நற்பயன் அடைவது கடினம்.

 

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 

மாண்ட உஞற்றி லவர். (607)

௭, சறுக்கி விழுந்து à®à®³à®©à®šà¯  சொல் à®•à¯‡à®Ÿà¯à®ªà®¾à®°à¯ à®šà¯‹à®®à¯à®ªà®²à®¾à®¯à¯ இருந்து  மாண்டவர் போல் உலகில் இருப்பவர்.

 

 

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்தி விடும். (608)

௮, சோம்பல் உள்ளது சிறக்கும் வாழ்வில் தங்கி தனது பகைவருக்கு அடிமையாக மாற்றிவிடும்.

 

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 

மடியாண்மை மாற்றக் கெடும். (609)

௯, உள்ளது சிறக்கும் வாழ்வில் ஏற்பட்ட தவறுகள் ஒருவர் à®¤à®©à®¤à¯ சோம்பலை மாற்றுவதால் தீர்க்கப் படும்.

 

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் 

தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

௧௦, சோம்பல் அற்ற மன்னவன் அடையும் நற்பயன்கள் போலவே ஒப்ப முயற்சியுடைவருக்கும் à®•à®¿à®Ÿà¯ˆà®•à¯à®•à¯à®®à¯.

 

அதிகார விளக்கம்!

 

     வளர்ச்சிக்கான வாழ்தல் சோர்வால் தடைபடும். சோர்வை சோர்வின்றி நீக்க வேண்டும் அப்படி செய்யாதவர் அறிவற்றவரே. அழுகை, மறதி, சோம்பல், தூக்கம் இதை விரும்புபவர் வளர்ச்சியை காண முடியாது. சோம்பல் அற்றவர் வாழ்வு மன்னன் வாழ்வு போல் இருக்கும்.

 

காணொளி:-

https://youtu.be/j3XpSKxQE2I 

பொருட்பால் | அரசியல் | ௬௨, ஆள்வினையுடைமை (62)

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும். (611)

௧, à®…ரியது என்று செயல்பட அச்சம் அடைவது கூடாது. முயற்சி செய்வதே பெருமையானது.

 

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (612)

௨, செயல்படும் நேரம் செயல் சிதைய செய்வதும் முழுமை பெறாமல் விட்டுவிடுவதுமாய் இருப்பவரை உலகம் ஏற்பது இல்லை.

 

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு. (613)

௩, ஊக்கம் என்ற உயர்பண்பின் வெளிப்பாடே அடுத்தவருக்கு உதவிடும் மகிழ்வை தருகிறது.

 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும். (614)

௪, à®Šà®•à¯à®•à®®à¯ இல்லாதவர் உதவுதல், வீரம் இல்லாதவர் கையில் இருக்கும் கத்தி போல் பயனற்றுப் போகும்.

 

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண். (615)

௫, இன்பத்தை இலக்காக எண்ணாமல் செயலைச் செய்ய முற்படுபவர், தனது உறவுகளுக்கு துன்பம் துடைத்துக் காக்கும் தூண் போன்றவர்.

 

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும். (616)

௬, முயற்சி (ஆர்வமுடன் செயல்பட துணிவது) நற்செயல்களை உருவாக்கும். முயற்சி அற்று இருப்பது வறுமையை ஏற்றுக்கொள்ளும்.

 

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளான் தாமரையி னாள். (617)

௭, முயற்சி அற்றவர் இடத்தில் மூதேவி இருக்கிறாள். முயற்சி உள்ளவரிடம் கலைமகள் தங்குகிறாள்.

(ஆர்வமற்றவருக்கு மூளை செல்கள் பலமற்று திறமைகள் குறைகிறது. ஆகவே அதை மூதேவி (முடக்கப்பட்ட மூளை) என்றும், ஆர்வமுடன் செயல்பட மூளை செல்கள் மேலும் விரிகிறது, எனவே ஆயிரம் தாமரை மலரில் ஆற்றல் வளர்கிறது)

 

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி. (618)

௮, புலன் இல்லாமல் இருப்பது எந்த மனிதருக்கும் பழிக்கும் ஒன்றாக இருக்காது. செய்யவேண்டியதை செய்யாமல் இருந்தால் பழிக்கப்படும்.

 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். (619)

௯, வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீக நிலை அடைந்தவரால் முடியாத செயல்களையும் தனது உடல் வருத்தி செய்யும் முயற்சியால் சாதிக்க முடியும்.

 

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். (620)

௧௦, à®¤à®²à¯ˆà®µà®¿à®¤à®¿à®¯à¯ˆà®¯à¯à®®à¯ தனக்கு சாதகமாக பார்ப்பார் சோர்வின்றி தளராது பெருமுயற்சி செய்பவர்.

 

அதிகார விளக்கம்!

 

     செயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிய வேண்டும். ஐம்பொறியில் சில இல்லாது போனாலும் பழியாகாது ஆள்வினை இல்லாது இருப்பதே பழி. வாழ்வாங்கு வாழ்பவரை கடந்து வாழ உடல் வருத்த உழைத்தால் முடியும். தலைவிதியையும் மாற்றும் வல்லமை உழைப்பிற்கு உண்டு.

 

காணொளி:-

https://youtu.be/qFfzVeynp5I 

பொருட்பால் | அரசியல் | ௬௩, இடுக்கண் அழியாமை (63)

 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். (621)

௧, à®‡à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà®¾à®© நேரங்களை மகிழ்வுடன் எதிர்கொள். அதற்கு அடுத்து வருவது அதைப்போல் இருக்காது.

 

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)

௨, வெள்ளத்தில் முழ்கும் அளவு வரும் தொல்லைகள், அறிவு உடையவர்களின் மனதின் எண்ணத்தினாலேயே அழிந்துவிடும்.

 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர். (623)

௩, துன்பத்திற்கு துன்பம் தருவர் துன்பத்திற்கு துன்பப்படாதவர்.

 

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (624)

௪, à®•à®°à®Ÿà¯à®®à¯à®°à®Ÿà®¾à®© பாதையை கடக்கும் களிறு போல், தனக்கு வந்த துன்பத்தினால் இடர்படாமல் கடக்க வேண்டும்.

 

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும். (625)

௫, அடுத்தடுத்து தொடர்ந்து வந்தாலும் அழிவற்றவர் பெற்ற துன்பம் துன்பப்பட்டு போகும்.

 

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர். (626)

௬, விலகிவிட்டது என்று வேதனைபடலாமா? பெற்றதைக் கொண்டு சரியாக வாழாதவர். 

 

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)

௭, இயல்பு, உடல் துன்பமடைதல் என்பதால் கலக்கமடைவதை கைகொள்ளாது மேன்மையான அறிவு.

 

 

 

 

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன். (628)

௮, இன்ப நாட்டம் இல்லாமல் இடர்பாடுகள் இயல்பு என்று உணர்ந்தவர் துன்பப்படுவது இல்லை.

 

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன். (629)

௯, இன்பமான சுழலில் இன்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர் துன்பமான சுழலில் துன்பம் அடைவது இல்லை.

 

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு. (630)

௧௦, இடர்பாடுகள் இன்பமானது என்று செயல்படுபவர் எதிரிகளும் பாராட்டும் சிறப்பை பெறுவார்.

 

அதிகார விளக்கம்!

 

     இடர் கண்டு அழியாமல் இருக்க நகைப்புடன் அதைப்பார்த்து உள்ளத்தின் திறத்தை வளர்த்து இடர்பாட்டிற்கே இடர்பாடு தரவேண்டும். இடர்பாடுகள் நம்மை வளர்க்கும் அற்புத சுழல் என உணர்ந்தவர் இன்பத்தில் நிலைக்கிறார். இன்பம் கருதி செயல்படாமல் இடர்பாடுகளும் இன்பத்திற்கே என்பதே சிறப்பு.

 

காணொளி:-

https://youtu.be/MkkCtAX-rCs

பொருட்பால் | அமைச்சியல் | ௬௪, அமைச்சு (64)

 

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு. (631)

௧, à®¤à®•à¯à®¨à¯à®¤ கருவியும், உகந்த நேரமும், செய்ய வேண்டிய செயலும், செயல்பட வேண்டிய முறையும் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.

 

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு. (632)

௨, அச்சமற்ற பார்வை, யாரும் சிறப்பாக இருக்க நினைத்து குடிகளை (குடும்ப நலம்) காத்தல், புதிய நிகழ்வுகளை கற்று அறிதல், நிர்வாகத்திறன், செயல்படுதல் என ஐந்துடன் ஆள்வதே நிர்வாகம் என்ற அமைச்சு.

 

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு. (633)

௩, தேவையற்றதை விலக்குவதும், தேவையானதை ஏற்பதும், பிரிந்துப் போனவர்களை பொருத்தலும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.

  

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு. (634)

௪, à®…றிந்துக் கொள்வதில் அக்கரையும், தேவையானதை தேர்ந்து செயல்படுத்துவதும், தீர்க்கமாக ஒன்றை சொல்லுவதும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.

 

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை. (635)

௫, நீதி மாறாது வாழும் நிலை அறிந்து, மேன்மையானவற்றை எடுத்துரைப்பவர் எப்பொழுதும், திறமைகளை அறிந்தவருக்கு மேலும் தேர்ச்சிப் பெற துணையாவார்.  

 

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாஉள முன்நிற் பவை. (636)

௬, நுட்பமான அறிவுடன், நூலின் அறிவும் உள்ளவருக்கு மேலான அறிவு என்று எதுவும் முன் நிற்க முடியாது.

 

 

 

 

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல். (637)

௭, செயல்படும் தன்மையை முழுமையாக வரைமுறை செய்து அறிந்திருந்தாலும் இயற்கையை அறிந்து செயல்பட வேண்டும். 

 

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன். (638)

௮, அறிய வேண்டியதை அறிய முடியாதவனுக்கும் உறுதியுடன் எடுத்துரைப்பது உடன் இருப்பவரின் கடமை.  

 

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும். (639)

௯, மடத்தனமான ஆலோசகர் அருகில் இருப்பது எதிரிகள் எழுபது கோடி இருப்பதுபோல் ஆகிவிடும்.

 

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர். (640)

௧௦, முறையான சுழ்நிலை அமைந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கமாட்டார் திறமை இல்லாதவர்.

 

அதிகார விளக்கம்!

 

     கருவி காலம் செய்யவேண்டியது செய்யவேண்டிய விதம் என தீர்மானிப்பதே அமைச்சு என்ற நிர்வாகம். நற்பண்புகளுடன் தேவையை அறிந்து அதை ஊக்குவித்து தீமை அழித்து யாவரையும் காக்கும்படி இருக்க வேண்டும். முட்டாள்களின் ஆலோசனை அழிவைத்தரும் என உணர்ந்து முறையான முடிவை எடுக்கவேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/_g4m19zrB58

பொருட்பால் | அமைச்சியல் | ௬௫, சொல்வன்மை (65)

 à®¨à®¾à®¨à®²à®®à¯ என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று. (641)

௧, à®¨à®©à¯à®®à¯ˆ பயக்கும் வார்த்தையே நாநலம் என்ற நலனுடைமை (ஆரோக்கியம்) அத்தகைய நலம் போல் அடைந்த நலத்தில் சிறந்தது இல்லை.

 

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. (642)

௨, வளர்ச்சியும் அழிவும் வார்த்தையால் வருவதால் நிதானித்தும் சோர்வு ஏற்படாமலும் பேச வேண்டும்.

 

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல். (643)

௩, கேட்பவரின் மனநோய் தீர்க்க உகந்ததாகவும், கேட்காதவர் கேட்க விரும்பும் வகையிலும், வார்த்தைகள் அமைத்துப் பேசவேண்டும். 

 

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல். (644)

௪, கேட்பவரின் திறனை அறிந்து வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அத்தகைய சொற்களைப் போல் அறமும் பொருளும் வேறு இல்லை.

 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645)

௫, சொல்லப்படும் சொல்லுக்கு மேலான சொல் இல்லாதபடியும், வெல்ல முடியாதபடியும் ஆராய்ந்து சொல்லவேண்டும்.

 

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள். (646)

௬, வேண்டியதை சொல்வதும், அடுத்தவர் சொல்லின் பயனை கேட்டு அறிவதும், உன்னதத்தின் குறையற்றவர்களின் குறிக்கோள்.

 

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (647)

௭, சொல்வதில் வல்லவனை, சோர்வில்லாதவனை, எதற்கும் அஞ்சாதவனை, இழிவு செய்து வெல்வது எந்த ஒருவருக்கும் அரிதானதே.

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648)

௮, கேட்டவுடன் விரைந்து செயல்படும்படி தூண்டும் விநோதம் வரிசைப்பட இனிமையாக சொல்ல வல்லவரிடத்தில் இருந்து சொல்களைப் பெற்றால்.

 

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர். (649)

௯, அளவிற்கு அதிகமான பல சொற்களை சொல்ல ஆசைப்படுவார்கள் இடத்திற்கு தேவையான குறைவற்ற சில சொற்களில் தேர்ச்சி பெறாதவர்கள். 

 

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார். (650)

௧௦, நற்கொடியில் மலர்ந்தும் வாசம் வீசாத மலருக்கு ஒப்பானவர், தான் கற்றதை அடுத்தவர் உணரும்படி விளக்கிச் சொல்ல முடியாதவர்.

 

அதிகார விளக்கம்!

 

     நலம் அடைந்தவர் என்றால் சொல் வளம் பெற்றவர். சொல் வெல்லவும் வீழ்த்தவும் செய்யும் என்பதால் திறனறிந்து சொல்ல வேண்டும். பல சொல்ல விரும்பாமல் மறுக்க முடியாதபடி சொல்லை சொல்ல வேண்டும். நல்வாசம் வீசும் செடியில் பூத்தும் வாசம் தராத மலர் போன்றவர் தான் அறிந்ததை அடுத்தவர் உணரச் செய்யாதவர்.

 

காணொளி:-

https://youtu.be/5eetE-YTRDc

பொருட்பால் | அமைச்சியல் | ௬௬, வினைத்தூய்மை (66)

 à®¤à¯à®£à¯ˆà®¨à®²à®®à¯ ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும். (651)

௧, à®¨à®²à¯à®² துணை சிறந்த வெற்றியை தரும், நல்ல செயல் தேவையான அனைத்தும் தரும்.

 

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை. (652)

௨, எப்போதும் வேண்டாம் என்று ஒதுக்க வேண்டும் பெருமையும், அடுத்தவருக்கு உதவி செய்து நன்றி பெரும் தன்மையும், இல்லாத செயல்களை.

 

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர். (653)

௩, ஒழிக்க வேண்டும் உண்மை ஒளி மறைக்கும் செயல்களை மேன்மையை வேண்டுபவர்.

 

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர். (654)

௪, à®‡à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà®¾à®© சுழல் ஏற்பட்டாலும் பழிக்கப்படும் செயலை செய்யமாட்டார் தெளிவான ஒன்றை பார்த்தவர்.

 

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று. (655)

௫, ஏற்க முடியாததையும், இழிவானதையும் செய்யக்கூடாது. தவறி செய்தாலும் மீண்டும் அதை செய்யாது தவிர்த்துவிடுவது நன்று.

 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை. (656)

௬, பெற்றதாயின் பசியை தணிப்பது என்றாலும், உதாரணமாக வாழ்பவர்கள் பழிக்கும் செயலை செய்யக்கூடாது.

 

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை. (657)

௭, அதிகபட்ச பழியுடன் அடையும் உயர்வைவிட, முன்மாதிரியாய் இருந்து, கழிந்துவிடும் வறுமையை அடைவது முதன்மையானது.

 

 

 

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும். (658)

௮, வெறுக்கப்பட்டதை வெறுக்காமல் ஏற்று செய்தவருக்கு, அச்செயல் முடிவு பெற்றாலும் பெருந்துன்பமே விளையும்.

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை. (659)

௯, பிறர் வறுந்தப் பெற்றதெல்லாம் தான் வறுந்தப் போகும், நல்வழியில் பெற்றதோ இழப்பினும் பிறகு நன்மை தரும்.

 

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (660)

௧௦, சூழ்ச்சியால் பொருள் ஈட்டி வைத்தால், சுடாத மண்பாத்திரத்தில் நீர் நிரப்ப கரைவது போல் உரிய பலன் அற்றுப்போகும். 

 

அதிகார விளக்கம்!

 

     துணையால் வரும் நன்மை ஆக்கம் தரும் என்றால் செயல்படுவதால் தேவையான எல்லாம் தரும். எனவே செயல்படுதல் பெருமைக்காக இல்லாமல், இழிவானதாகவும் இல்லாமல் திடமாக இருக்க வேண்டும். சூழ்ச்சியால் சேர்க்கும் பொருள் சுடாத மண்பாத்திரத்தில் வைத்தது போல் கரையும்.

 

காணொளி:-

https://youtu.be/E7QM8GZq5Xw

பொருட்பால் | அமைச்சியல் | ௬௭ வினைத்திட்பம் (67)

 à®µà®¿à®©à¯ˆà®¤à¯à®¤à®¿à®Ÿà¯à®ªà®®à¯ என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற. (661)

௧, à®šà¯†à®¯à®²à®¿à®²à¯ உறுதி என்பது ஒருவரது மனதின் உறுதியே, மற்றவை எல்லாம் அதற்கு அடுத்ததே.

 

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (662)

௨, கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு.

 

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும். (663)

௩, கடைசிவரை தளராது செயல்படுவதே ஆண்மை. இடையில் தளர்ந்தால் ஏற்கமுடியா துன்பம் தரும்.

 

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். (664)

௪, செயல்விளக்கம் பேசுதல் எல்லாருக்கும் எளிமையானது. அரியது விளக்கியபடி செயல்படுதல்.

 

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும். (665)

௫,வீரமுடன் போராடி இறந்தவரின் செயல்திறன் ஆட்சியாளரிடத்தில் ஊரார் சொல்லி சிறப்பாக எண்ணப்படும். 

(குறிப்பு - செயலை திறமையுடன் செய்பவர் புகழ் இறந்தப்பின்னும் போற்றப்படும்)

 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். (666)

௬, மனதில் எண்ணங்களால் எப்படி எண்ணமிடுகிறாரோ அப்படியே அதை அடைவார். எண்ணியவர் மனதிடம் உள்ளவராக இருந்தால்.

 

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து. (667)

௭, உருவம் பார்த்து ஏளனமாக எண்ணக்கூடாது. உருளும் பெரிய தேருக்கு அச்சாணி போல் அவர்கள் இருக்கக் கூடும்.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கங் கடிந்து செயல். (668)

௮, குழப்பம் இல்லாமல் எடுத்த செயல்களை துவண்டுவிடாமல் தூக்கத்தையும் வெறுத்து செய்து முடிக்கவேண்டும்.

 

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை. (669)

௯, துன்பம் நெருக்கமாக இருந்தாலும் துணிவுடன் செய்யவேண்டும் இன்பம் தரும் செயல் என்றால்.

 

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு. (670)

௧௦, எவ்வளவு உறுதியை அடைந்திருந்தாலும் செயல் துணிவு இல்லாதவரை உலகம் ஏற்காது.

 

அதிகார விளக்கம்!

 

     செயல்பட உறுதியாக இருக்க மனம் உறுதியாக இருக்க வேண்டும். சொன்னபடி செய்யவும், எண்ணியதை அடையவும் மன உறுதியே முதன்மையானது. உருவம் ஒரு பொருட்டல்ல அச்சாணியைப் போல் அவர்கள் இருக்கக்கூடும். செயல் துன்பம் தந்தாலும் பலன் இன்பம் என்றால் செயல்பட தயங்காது இருப்பவரையே உலகம் போற்றும்.

 

காணொளி:-

https://youtu.be/CLeHt7wu91A

பொருட்பால் | அமைச்சியல் | ௬௮, வினைசெயல்வகை (68)

 

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (671)

௧, à®šà¯‚ழ்நிலைகளை ஆராய்ந்து முடிவுகளை முன் நிறுத்தி செயல்பட துணியவேண்டும். அப்படி துணிந்தப்பின் செயல்படாமல் இருப்பது தீங்காகும்.

 

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை. (672)

௨, இயல்பாய் விடு இயல்பாகவே பல செயல்கள் நடக்கும். இயல்பாக விடாதே துணையாக இருக்கவேண்டிய செயல்களை.

 

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல். (673)

௩, செய்யமுடிந்ததை எல்லாம் நன்மைக்காக செய்யுங்கள். முடியாததை முடிப்பதற்கான வழி அறிந்து செய்யுங்கள்.

 

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். (674)

௪, à®šà¯†à®¯à®²à¯, எதிர்ப்பு என்ற இரண்டின் முடிவற்றதன்மையை ஆராய்ந்தால் தீயின் முடிவு போல் தொடரும். (எனவே முழுமையாக முடிக்க வேண்டும்)

 

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல். (675)

௫, எதை, எத்தகைய கருவியுடன், எப்பொழுது, எவ்விடத்தில், செய்யவேண்டும் என்ற ஐந்தையும் ஐயமற சிந்தித்து செயல்பட வேண்டும்.

 

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல். (676)

௬, செயல் முடிவும், இடையில் உண்டாகும் தடைகளும், செயல் முடிவில் உண்டாகும் பயனையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.

 

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)

௭, செய்யவேண்டிய செயல்களை செய்பவரின் செயல்பாடுகள் முறையாக இருப்பின், அச்செயல்களை உணர்பவரின் உள்ளம் கவரப்படும்.

 

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று. (678)

௮, செயல்படுபவர் செயல்படுவதிலிருந்து பிற செயல்களையும் செய்துகொள்வதை எண்ணிப் பார்க்கையில் யானையை பயன்படுத்தி யானையைப் பிடிப்பது தோன்றுகிறது.

 

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல். (679)

௯, நாடியவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். அதைவிட விரைந்து இணக்கமற்றவரை இணங்கச் செய்ய வேண்டும்.

 

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து. (680)

௧௦, உடன் இருப்போர் அஞ்சி நடுங்கும் குறையை அறிந்து, பெரியார் என்றும் பணிந்துக் கொள்வர்.

 

அதிகார விளக்கம்!

 

     சூழ்நிலை அறிந்து துணிந்தால் தீமைகளை தடுக்கலாம். இயல்பாக சில செயல் நடக்கும் எனவே இயல்பாகவும் இருக்கவேண்டும், தேவை என்றால் தகந்த கருவியுடன் செயல்பட வேண்டும். உடன் வருபவர் அஞ்சினால் அச்சத்தை போக்குவது பெரியவர்களின் பண்பு.

 

காணொளி:-

https://youtu.be/RVl3ePS7Pio

பொருட்பால் | அமைச்சியல் | ௬௯, தூது (69)

 à®…ன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. (681)

௧, à®…ன்பை உடமையாகவும், சிறந்த குடும்பத்தை சேர்ந்தவராகவும், ஆட்சியாளரை மதிக்கும் பண்புள்ளவராகவும் இருப்பது தூது உரைப்பவர்களின் பண்பு.

 

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று. (682)

௨, அன்பு, அறிவு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை உரைக்கும் திறன், இவைகள் தூது உரைப்பார்க்கு முக்கியமான மூன்று.

 

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு. (683)

௩, நூல் படைப்பவர்களில் வல்லமையான நூல் படைக்க அவைகளை கற்று அறிய வேண்டும். அதுபோலவே, வேல் பாய்ச்சுபவர்களை கடந்து வெற்றிக்கான செயல்களை உரைப்பது பண்பு.

 

அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு. (684)

௪,  அறிவு, உருவம், தேர்ந்த கல்வி, இம் மூன்றையும் செழுமையான அடைந்தவர் செல்லலாம் செயல்முடிக்க.

 

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாம் தூது. (685)

௫, தொகுத்துச் சொல்லித் தேவையற்றதை நீக்கி இன்புறும்படி எடுத்துரைத்து நன்றி பாரட்டும்படி நன்மை தரவல்லதாக அமைவதே தூது.

 

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது. (686)

௬, கற்று அறிந்து காண்பதற்கு அஞ்சாமல் சொல்லவேண்டியதை சொல்லி தகுந்த நேரத்தில் சரியானதை அறிவதே தூது.

 

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை. (687)

௭, ஆற்றவேண்டிய கடமை அறிந்து, தகுந்த காலத்தை கருத்தில் கொண்டு, இடத்தை அறிந்து, சிந்தித்து எடுத்துரைப்பதே தூதின் தலைமையானது.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு. (688)

௮, தேவையற்றதை நாடாத தூய்மை, நன்மைக்கு துணையாதல், அச்சமற்ற துணிவு இம்மூன்றின் உண்மைத் தன்மையுடன் இருப்பதே தூதுரைப்பவர் பண்பு.

 

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சேரா வன்கணவன். (689)

௯, தவிர்க்க வேண்டியதை அரசுக்கு எடுத்துரைப்பான் வலிக்காமல் சோர்வற்ற வார்த்தை பயன்படுத்தும் திடமானவன்.

 

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

உறுதி பயப்பதாம் தூது. (690)

௧௦, இயற்கையின் இறுதிப் பயன் உடனே கிடைப்பினும் எந்தக்குறையும் இல்லாமல் தன் மன்னனின் நிலையை உறுதிப்பட உரைப்பதே தூது.

 

அதிகார விளக்கம்!

 

     அன்பு நற்குடி மன்னரை மதித்தல் என உள்ளவரே தூதிற்கு சரியானவர். தொகுத்து தேவையானதை மட்டும் தெளிவாக நூல் எழுத வல்லவர் போலும் சிறந்த வேல் வீச்சு போலும் தூது இருக்க வேண்டும். மரணம் வரும் என்றாலும் அஞ்சாமல் மன்னவனுக்கு உண்மை உரைக்கவேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/bCQAAozyGxs

பொருட்பால் | அமைச்சியல் | ௭௦, மன்னரைச் சேர்ந்தொழுகல் (70)

 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். (691)

௧, à®¤à¯€ மூட்டி குளிர்காயும் பொழுது எப்படி விலகாமல் சேராமல் பக்குவமாய் இருப்பார்களோ அப்படி மன்னனிடம் பழக வேண்டும்.

 

மன்னர் விழைப விழையாமை மன்னரால்

மன்னிய ஆக்கந் தரும். (692)

௨, ஆட்சியாளர் அடைய விரும்புவதை குறுக்கிட்டு அடையாமல் விலகினால் ஆட்சியாளரால் நிலைத்த உயர்வு கிடைக்கும்.

 

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)

௩, பாராட்டப் படுவதென்றால் அரிதானதை பாராட்ட வேண்டும். தவறிவிட்டால் அத்தகைய சூழல் கிடைப்பது யாருக்கும் அரிது.

 

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து. (694)

௪, சத்தமாக பேசுவதையும், சரிசமமாக சிரிப்பதையும் சிறந்த பெரியவர்களிடம் தவிர்க்க வேண்டும்.

 

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை. (695)

௫, உயர்ந்தோர் எதைச் சொன்னாலும் தவிர்காமல், அதை தொடரச் சொல்லாமல், மற்ற ஒன்றை சொன்னாலும் விலகாமல் மறை போல் கேட்க வேண்டும்.

 

குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல். (696)

௬, ஆட்சியாளரின் அகச்சூழலை குறிப்பறிந்து, தகுந்த நேரம் அறிந்து, வெறுக்காதபடி வேண்டியதை விரும்பும்படி சொல்லவேண்டும்.

 

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல். (697)

௭, வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

 

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும். (698)

௮, ஆட்சியாளரை என்னைவிட இளையவர் என்றோ, உறவுக்காரர் என்றோ இகழ்வாக பார்க்காமல் அவர் இருப்பின் நிலைக்கு எற்ப மதிக்கப்படும்.

 

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர். (699)

௯, ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டர் என்பதற்காக ஏற்க முடியாததை செய்யமட்டார் தெளிந்த பார்வை உள்ளவர்.

 

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். (700)

௧௦, நெடுங்கால நெருக்கம் என்று பண்பற்றதை செய்யும் உரிமை கொண்டாடுவது கேடு உண்டாக்கும்.

 

அதிகார விளக்கம்!

 

     நெருப்பிடம் உள்ள நெருக்கமே ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் விரும்புவதை நமக்கு உரிமையாக்க வேண்டாம். அவரின் உறவை எண்ணி நெருக்கம் காட்ட வேண்டாம், இளையவர் என்று சொந்தம் பாராட்ட வேண்டாம்.

 

காணொளி:-

https://youtu.be/pKNeBVZ4Fh0

பொருட்பால் | அமைச்சியல் | ௭௧, குறிப்பறிதல் (71)

 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக் கணி. (701)

௧, à®ªà¯‡à®šà®¾à®¤à¯ பொழுதும் பார்த்தே குறிப்பறிந்துக் கொள்பவர் எந்நிலையிலும் மாறாது நீரால் நிறைந்த உலகிற்கு அணியாவார்.

 

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல். (702)

௨, ஐயம் இல்லாமல் அடுத்தவர் மனதை உணர்பவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். (703)

௩, குறிப்புகளை கேட்டு அதன் உள்நோக்கத்தையும் உணர்பவரை, குழுவுக்குள் எப்பதவியாவது கொடுத்து உறுப்பினராக ஏற்க வேண்டும்.

 

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை 

உறுப்போ ரனையரால் வேறு. (704)

௪, à®’ன்றை குறித்து கூறாமலேயே புரிந்துக் கொள்பவரை ஏனைய உறுப்பினர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். 

 

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் 

என்ன பயத்தவோ கண். (705)

௫, குறிப்புகளை கேட்டும் அதன் உள்நோக்கத்தை உணரவில்லை என்றால் கண்கள் இருந்தும் பயன் இல்லை.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 

கடுத்தது காட்டும் முகம். (706)

௬, அருகில் உள்ளதை பளிங்கு எப்படி காட்டுமோ அப்படி நெஞ்சத்தில் உள்ளதை முகம் காட்டும்.

 

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் 

காயினும் தான்முந் துறும். (707)

௭, மகிழ்வையும், துன்பத்தையும் முகம் போல் எளிதில் வெளிப்படுத்துவது வேறோன்று இல்லை.   

 

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி 

உற்ற துணர்வார்ப் பெறின். (708)

௮, அகம் அறிந்து ஆற்ற வல்லவரை துணையாக பெற்றால் அவர் முகம் பார்க்க நிற்பதே போதுமானது.

 

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் 

வகைமை உணர்வார்ப் பெறின். (709)

௯, பகையையும் நட்பையும் கண்கள் வெளிப்படுத்தும், கண்களின் தன்மையை உணரும் ஆற்றல் பெற்றால்.

 

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் 

கண்ணல்லது இல்லை பிற. (710)

௧௦, நுட்பமானதை உணர்பவர்கள் அளக்கும் கருவி எது என பார்த்தால் கண்ணே அன்றி வேறு இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     பேசாத ஒருவரின் மன ஓட்டத்தை உணர்பவர் உலகின் அணியாவர், அவரை தெய்வமாக ஏற்க வேண்டும், அவரை நம் கூட்டத்தில் இணைக்க வேண்டும், அவருக்கு தனி இடம் தரவேண்டும், உள்ளத்தை முகம் பிரதிபளிக்கிறது. அது கண்களில் தெளிவாக அறியமுடிகிறது எனவே நுட்பமாக அளக்கும் அளவு கோலாக கண்கள் இருக்கிறது.

 

காணொளி:-

https://youtu.be/p-61zjDZru8

பொருட்பால் | அமைச்சியல் | ௭௨, அவை அறிதல் (72)

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 

தொகையறிந்த தூய்மை யவர். (711)

௧, à®¤à¯‡à®µà¯ˆ மற்றும் இடம் அறிந்து ஆராய்ந்து சொல்லவேண்டும், சொல்லின் ஒட்டுமொத்த பயனை அறிந்த தூய்மையானவராக இருப்பவர்.

 

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர். (712)

௨, குறுக்கிடும் இடத்தை தேர்வுச் செய்து நன்றாக உணர்ந்து சொல்லவேண்டும், சொல்லின் ஓட்டத்தை அறிந்து நன்மை அடைபவர்.

 

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் 

வகையறியார் வல்லதூஉம் இல். (713)

௩, கூடி இருப்பவர்கள் நோக்கம் அறியமுடியாதவர் சொல்ல முற்படுவர் என்றால் அந்த சொல்லில் வகையும், வல்லமையும் இருக்காது. 

 

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் 

வான்சுதை வண்ணம் கொளல். (714)

௪, அறிவுடையார் முன்பு அறிவுடையாராக இருப்பதற்குக் காரணம், அறிவற்றோர் சுட்டசுண்ணாம்பைப் போல் மாசற்றுப் போவதே.

 

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் 

முந்து கிளவாச் செறிவு. (715)

௫, நல்லது என்பனவற்றுள் நல்லது, மூத்த அறிஞர் முன் அவசரப்பட்டு பேசாது அடங்கி இருப்பது. 

 

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் 

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. (716)

௬, ஆற்றின் நிலையை மாற்றும் விரிந்த பூமி, என்பதை ஏற்று உணர்ந்து அறிவுடையோர் முன்னர் ஏற்படும் இழக்கை புரிந்துக் கொள்ளவேண்டும்.

 

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் 

சொல்தெரிதல் வல்லார் அகத்து. (717)

௭, கற்று அறிந்தவர் இடத்தில் கல்வி வெளிப்படுவதைப் போலவே, அழுக்கற்ற வார்த்தைகள் அறிந்தால் பேசும் வல்லமை உள்ளே தோன்றும்.

 

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் 

பாத்தியுள் நீர்சொரிந் தற்று. (718)

௮, உணரும் ஆற்றல் உள்ளவர் முன் பேசுதல், வளரும் தன்மையுள்ள பயிருக்கு நீர் பாய்ச்சுவது போல் நற்பயன் கிடைக்கும்.

 

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் 

நன்குசலச் சொல்லு வார். (719)

௯, புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது, நல்லார் கூட்டத்தில் நன்மைபட பேசுபவர்.

 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 

அல்லார்முன் கோட்டி கொளல். (720)

௧௦, சாக்கடையில் உற்றிய அமிழ்து போன்றது, தகுதியற்றவர் முன் பேசுவது.

 

அதிகார விளக்கம்!

     அளவை அறிந்து பேச வேண்டும், ஆர்வம் குறையாமல் அறிபவர் தரம் புரிந்து பேச, ஒத்த உணர்வு பெற்று பயிர் வளர்க்க உதவும் நீராய் மாறும். ஆனால், தகுதியற்றவர் முன் பேசினால் சாக்கடையில் கொட்டிய அமிழ்தாகும்.

 

காணொளி:-

https://youtu.be/q5DHv4zSbFM

பொருட்பால் | அமைச்சியல் | ௭௩, அவை அஞ்சாமை (73)

 

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 

தொகையறிந்த தூய்மை யவர். (721)

௧,  பேச்சின் வகைகளை அறிந்த வல்லவர், பேச தயங்கமாட்டார். கூட்டத்தின் தேவை தெளிவாய் தெரிவதால், 

 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 

கற்ற செலச்சொல்லு வார். (722)

௨, கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன் மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.

 

பகையகத்துச் சாவார் எளியர் அரியர் 

அவையகத்து அஞ்சா தவர். (723)

௩, பகைக்கொண்டு சாகத் துணிபவர்கள் ஏராளம். அரிய சிலரே அவையில் பேச அஞ்சாதவர்கள்.

 

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 

மிக்காருள் மிக்க கொளல். (724)

௪, à®•à®±à¯à®±à®µà®°à¯à®•à®³à¯ முன்பு தான் கற்றதை எடுத்துச் சொல்லி தன்னைவிட அதிகம் கற்றவரிடத்தில் மேலும் கற்க வேண்டும்.

 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 

மாற்றம் கொடுத்தற் பொருட்டு. (725)

௫, எடுத்துக் கொண்ட பொருளின் அளவை அறிந்து கற்க வேண்டும். அதன்பொருட்டே அவைக்கு அஞ்சாமலும், மாற்றுக் கருத்துக்கு ஈடுகொடுத்தும் பேச முடியும்.

 

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் 

நுண்ணவை அஞ்சு பவர்க்கு. (726)

௬, வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு, நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.

 

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து 

அஞ்சு மவன்கற்ற நூல். (727)

௭, போர்களத்தில் கோழையின் கூர்மையான வாள் எப்படி பயனற்றதோ, அப்படியே அவைக்கு அஞ்சுபவர் கற்ற நூல் பயனற்றுப் போகும்.

 

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் 

நன்கு செலச்சொல்லா தார். (728)

௮, பல துறை நூல்களை கற்றும் பயன் இல்லாதவர் நல்லனவற்றை நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லாதவர்.

 

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் 

நல்லா ரவையஞ்சு வார். (729)

௯, கல்லாதவர்களைக் காட்டிலும் கடைசியாக எண்ணவேண்டியவர்கள், கற்று அறிந்தும் நல்லவர்கள் கூடியுள்ள அவையில் பேச அஞ்சுபவர்கள்.

 

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் 

கற்ற செலச்சொல்லா தார். (730)

௧௦, அறிவு இருந்தாலும் இல்லாதவர்களுக்கு சமமாகவே கருதப்படுவார்கள், அவைக்கு பயந்து கற்றதை தெளிவாய் எடுத்துச் சொல்லாதவர்கள்.

 

அதிகார விளக்கம்!

 

     கூட்டத்தின் தேவை அறிந்து கற்றவர் முன்னும் அஞ்சாமல் பேச வேண்டும். போருக்கு போகும் துணிவை விட அவையில் பேசுவது கடினம். அறிவு பெற்றும் தக்க இடத்தில் பேசதாவர் அறிவற்றவரே.

 

காணொளி:-

https://youtu.be/mVqWxRqva88

பொருட்பால் | அமைச்சியல் | ௭௪, நாடு (74)

 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 

செல்வரும் சேர்வது நாடு. (731)

௧, à®µà¯†à®±à¯à®•à¯à®• முடியாதன விளைவதும், தகுதியான மக்களும், குறையாத செல்வம் பெற்றவரும் கூடி இருப்பது நாடு.

 

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 

ஆற்ற விளைவது நாடு. (732)

௨, நிறைந்த பொருள்களை பெற வாய்பளித்து, அருமையான உழைப்பால் தேவைகளை பூர்த்தி செய்வது நாடு.

 

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 

இறையொருங்கு நேர்வது நாடு. (733)

௩, சுமை பெருகி அதிகரிக்கும் தருணம் உதவி செய்வதால் ஆட்சியாளர்களுக்கு ஏற்றம் ஏற்படுவதே நாடு.

 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 

சேரா தியல்வது நாடு. (734)

௪, à®¤à¯€à®°à¯à®•à¯à®• முடியா பசியும், அழிக்க முடியா நோயும், தணிக்க முடியா பகையும் சேர்த்துக் கொள்ளாது இருப்பது நாடு.

 

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 

கொல்குறும்பும் இல்லது நாடு. (735)

௫, பலதரப்பட்ட கூட்டங்களாகவும், வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் உட்பகையும், அரசுக்கு எதிரான கொலைக்கு அஞ்சாத தீவிரவாதிகளும் இல்லாமல் இருப்பது நாடு.

 

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா 

நாடென்ப நாட்டின் தலை. (736)

௬, கெடுதலே அறியாமல் மீறி கேடு வரும் நேரத்தில் தனது வளத்தை இழக்காமல் இருக்கும் நாடே நாடுகளுக்கெல்லாம் தலைசிறந்தது.

 

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. (737)

௭, ஆற்று நீரும், ஊற்று நீரும். அதை வாய்க்க செய்யும் மலையும், பருவத்தே வரும் மழை நீரும், வல்லமையான அரணும் நாட்டின் அவசியமான உறுப்புகள்.

 

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 

அணியென்ப நாட்டிவ் வைந்து. (738)

௮, நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள்.

 

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல 

நாட வளந்தரு நாடு. (739)

௯, நாடு என்பது முயற்சி இல்லாமலேயே வளம்பல பெற்றிருக்க வேண்டும். முயற்சியால் வளம் தருவது நாடாகாது.

 

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே 

வேந்தமை வில்லாத நாடு. (740)

௧௦, இயற்கை வளம் நிறைந்திருந்தாலும் பயனற்றுப் போகும் நல்லாட்சி இல்லாத நாடு.

 

அதிகார விளக்கம்!

 

     தேவையற்றது விளையாமல் தகுதியானவர்கள் கூடி இருப்பதும், பசி, பிணி, பகை, இல்லாமல் இருப்பதும் நாடு. ஊற்று நீரும், மழை நீரும், மலை அருவியும், அரனும் நாட்டிற்கு உறுப்புகள். எல்லாம் இருந்தும் நல்ல ஆட்சியாளர் இல்லை என்றால் பயன் இருக்காது.

 

காணொளி:-

https://youtu.be/yuRqqSa0LIA

பொருட்பால் | நட்பியல் | ௮௨, தீ நட்பு (82)

 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது. (811)

௧, உறவு பாராட்டுவார் என்றாலும் பண்பிலார் நட்பை வளர்காமல் விலகிவிடுதலே இனிமையானது.

 

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என். (812)

௨, தேவை பொருட்டு உறவு பாராட்டும் ஏற்கமுடியாதவர் நட்பை பெறுவதால் அல்லது இழப்பதால் எந்த பயனும் இல்லை. 

 

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர். (813)

௩, என்ன பயன் என்று சீர்தூக்கிப் பார்க்கும் நண்பரும், இலாப நோக்கில் செயல்படுபவரும், திருடரும் சமமானவர்களே.

 

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 

தமரின் தனிமை தலை. (814)

௪, à®ªà¯‹à®°à¯à®•à®³à®¤à¯à®¤à®¿à®²à¯ ஓட மறுக்கும் குதிரைப் போன்ற நட்பைவிட தனிமை தலைச் சிறந்தது .

 

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 

எய்தலின் எய்தாமை நன்று. (815)

௫, நன்மை செய்து உறவு பாராட்டாத அற்பமானவர்களின் வறுந்தக் கூடிய நட்பை, அடைவதைவிட விலகி இருப்பதே நன்று.

 

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 

ஏதின்மை கோடி உறும். (816)

௬, சிந்தை தெளிவில்லாதவரிடம் நெருக்கமான நட்புக் கொள்வதை விட, ஆய்ந்து அறிபவரிடம் பகைமை பாராட்டுவது நிறைந்த நன்மை தரும்.

 

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் 

பத்தடுத்த கோடி உறும். (817)

௭, போலிச் சிரிப்புடன் பழகும் நட்பைவிட பகைவரால் பல வகையில் நன்மை உண்டாகும்.

 

 

 

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை 

சொல்லாடார் சோர விடல். (818)

௮, நடக்கும் செயலை கெடுப்பவர் நட்பை சொல்லிக் கொண்டு இருக்காமல் விட்டோழிக்க வேண்டும்.

 

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 

சொல்வேறு பட்டார் தொடர்பு. (819)

௯, கனவிலும் துன்பம் தராமல் இருக்குமோ? செயலுக்கும், சொல்லுக்கும் தொடர்பு இல்லாதவர் தொடர்பு.

 

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ 

மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)

௧௦, எல்லா வகையிலும் பழகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் நன்கு பழகி சபையில் பழிப்பவர் தொடர்பை.

 

அதிகார விளக்கம்!

 

     பண்பில்லாதவர் உறவை, தனிமையில் பாராட்டி கூட்டத்தில் பழிப்பவர் உறவை குறைத்துக்கொள்ள வேண்டும். தேவை கருதி பழகி விலகுபவர் திருடனுக்கு சமமானவர். போலியான நட்பைவிட உண்மையான பகைவர் சிறந்தவர்.

 

காணொளி:-

https://youtu.be/nL4g-NQT0b0

பொருட்பால் | நட்பியல் | ௮௩, கூடா நட்பு (83)

 

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 

நேரா நிரந்தவர் நட்பு. (821)

௧, à®¤à®•à¯à®• சமயம் கண்டு பட்டடைக்குள் எறியப்படும் பொருள் போல் எறிய வேண்டும் நேர்மையற்று உறவாடும் நட்பை. 

 

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 

மனம்போல வேறு படும். (822)

௨, மனிதன் போன்று இருக்கும் மானிடப் பதர்களின் நட்பு பெண்மையற்றவள் மனம் போல் வேறுபடும்.

 

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க்கு அரிது. (823)

௩, பல வகையில் நல்லவற்றை கற்க நேரிட்டாலும், மனம் செம்மையடைதல் பகையுணர்வு கொண்டவருக்கு அரிது.

 

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா 

வஞ்சரை அஞ்சப் படும். (824)

௪, சிரித்த முகத்துடன் பழகி நெஞ்சத்தில் வஞ்சம் கொண்டோர்க்கு அஞ்சி விலக வேண்டும்.

 

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் 

சொல்லினால் தேறற்பாற்று அன்று. (825)

௫, மனம் நன்கு அமையாதவரை எதன் பொருட்டும் அவர் சொற்களைக் கொண்டு தேர்ந்த முடிவுக்கு வரக்கூடாது.

 

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 

ஒல்லை உணரப் படும். (826)

௬, நன்மைச் செய்பவர்ப்போல் நல்லதை சொன்னாலும் மனதிற்கு இசையாதவர் சொல்லின் உண்மைத் தன்மை உடனே உணரப் படும்.

 

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 

தீங்கு குறித்தமை யான். (827)

௭, பகைவரின் வார்த்தை வணக்கத்தை உண்மை என்று ஏற்க வேண்டாம், அது வில்லின் வளைதல் போன்று தீங்கு ஏற்படுத்தும்.

 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 

அழுதகண் ணீரும் அனைத்து. (828)

௮, தொழுகின்ற கையால் படையே அடங்கிவிடும் அதுபோல பகைவர் அழுகின்ற கண்ணீரில் வஞ்சகமும் இருக்கும்.

 

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 

நட்பினுள் சாப்புல்லற் பாற்று. (829)

௯, அதிகபட்ச நட்பாக நடந்து தனக்குள் பகை எண்ணுபவரை, சிரித்த முகத்துடனே நட்பினை விலக்கிட வழி செய்ய வேண்டும்.

 

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 

அகநட்பு ஒரீஇ விடல். (830)

௧௦, பகைவரும் நட்பாகவும் காலத்தில் சிரித்த முகத்துடனே நட்பினை மனதளவில் விலக்கிட வேண்டும்.

 

அதிகார விளக்கம்!

 

     நேர்மையற்ற மானிடப் பதர்களின் நட்பு நல்லதல்ல. பகை உணர்வு வந்தால் பல நூல்களாலும் பக்குவம் பெறமுடியாது. போலியாக சிரிப்பதும் அழுவதும் மானிட பதர்களின் பண்பு, இவர்களிடம் கவனமாக விலக வேண்டும். பகைவரின் நட்பு கட்டாயம் ஏற்கவேண்டிய சுழலில் மனதளவில் விலகி ஒதுக்க வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/ZroasvTcyjo

பொருட்பால் | நட்பியல் |௮௪, பேதைமை (84)

 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 

ஊதியம் போக விடல். (831)

௧, à®®à®Ÿà®®à¯ˆ என்பது என்ன என்றால், சிறு துன்பத்துக்கு அஞ்சி நற்பயனை நழுவ விடுவது.

 

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 

கையல்ல தன்கட் செயல். (832)

௨, மடமையானவற்றில் முதன்மையானது தனக்கு பொருந்தாத செயல்களை செய்ய விரும்புவது.

 

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 

பேணாமை பேதை தொழில். (833)

௩, வெட்கப்படாமை, வேட்கையோடு தேடாமை, இனிமையாக இல்லாமை, எந்த ஒன்றையும் பாதுகாக்காமை, போன்றவைகள் பேதையின் தொழிலாகும். 

 

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 

பேதையின் பேதையார் இல். (834)

௪, à®ªà¯à®°à®¿à®¨à¯à®¤à¯à®•à¯ கொள்ளும் அளவிற்கு படித்து நன்கு உணர்ந்து பிறருக்கு எடுத்துரைத்து அதன்படி நடக்காத பேதையைப் போல் வேறோரு பேதை இல்லை.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் 

தான்புக் கழுந்தும் அளறு. (835)

௫, பேதையின் தன்னிச்சையான ஒரு செயல் அடுத்தடுத்து துன்ப நரகத்தில் அழுத்தும். 

 

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 

பேதை வினைமேற் கொளின். (836)

௬, அர்த்தமற்ற ஒன்றோ சரியாக அமையும்? நுட்பம் அறியாத பேதை செயல்பட மேற்கொண்டால்.

(பேதை தேவையற்றதையும் செய்ய முடியாது)

 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை

பெருஞ்செல்வம் உற்றக் கடை. (837)

௭, தொடர்பற்றவர்கள் பயனடைவார்கள் உறவினர்கள் பசித்திருப்பார்கள் பேதைக்கு பெருஞ் செல்வம் வாய்ப்பதால்.

 

 

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் 

கையொன்று உடைமை பெறின். (838)

௮, பித்து பிடித்த ஒருவன் கள் உண்டதைப் போல், பேதை தனக்கு உடமையாக ஒன்றை பெற்றால் மாறிடுவான்.

 

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் 

பீழை தருவதொன்று இல். (839)

௯, பெரியது இனிமையானது பேதைகளின் நட்பு, காரணம் அவர்களின் பிரிவு துன்பம் ஒன்றும் தராது.

 

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் 

குழாஅத்துப் பேதை புகல். (840)

௧௦, கழுவாத கால்களுடன் படுக்கைக்குச் செல்வதைப் போன்றது, சான்றோர் கூட்டத்திற்குப் பேதைச் செல்வது.

 

அதிகார விளக்கம்!

 

அடைய வேண்டியதை அலட்சியத்தால் தவறவிடுவது பேதைமை. தனக்கு பொருந்தாததை செய்வதே பேதைமையில் முதன்மை. வெட்கப்படுதல், வேட்கையுடன் தேடல், இனிமையாக இருத்தல், பாதுகாத்தல் என இப்பண்புகள் இல்லாததே பேதைமை. பேதைகளின் பிரிவு துன்பம் தராது. கழுவாத கால்களுடன் படுக்க போவதைப் போன்றது அறிஞர் கூட்டத்திற்கு பேதை போவது.

 

காணொளி:-

https://youtu.be/zwwG94nUeOk

பொருட்பால் | நட்பியல் | ௮௫, புல்லறிவாண்மை (85)

 

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை 

இன்மையா வையா துலகு. (841)

௧, à®…றிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது.

 

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் 

இல்லை பெறுவான் தவம். (842)

௨, அறிவு இல்லாதவர் மனம் விரும்பி கொடுப்பதற்கு காரணம் பெறுபவரின் தவத்தன்மையே அன்றி வேறு ஒரு காரணம் இல்லை.

 

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை 

செறுவார்க்கும் செய்தல் அரிது. (843)

௩, அறிவு இல்லாதவர் தங்களுக்கு தாங்களே பெரிதாக ஏற்படுத்திக் கொள்ளும் துன்பம் போல் அவர்களது பகைவருக்கும் செய்வது அரிது.

 

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை 

உடையம்யாம் என்னும் செருக்கு. (844)

௪, à®•à¯‚ர்ந்த மதியின்மை எனப்படுவது என்ன என்றால் நுட்ப அறிவு உடையவன் நான் என்ற மதி மயக்கமே.

 

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற 

வல்லதூஉம் ஐயம் தரும். (845)

௫, கல்லாமலேயே ஒன்றை நடைமுறை செய்வதால், குற்றம் இல்லாமல் கற்றதையும் ஐயப்படச் செய்துவிடும்.

 

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் 

குற்றம் மறையா வழி. (846)

௬, அழிவை மறைப்பதே அற்பத்தனம், தனது குற்றம் மறையாமல் இருப்பதற்கும் இதுவே வழி.

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 

பெருமிறை தானே தனக்கு. (847)

௭, அரிய கருத்துக்களை விட்டோழித்த அறிவற்றவன் செயல், தனக்குத் தானே பெரிய துன்பத்தை ஏற்படுத்தும்.

 

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 

போஒம் அளவுமோர் நோய். (848)

௮, கீழ்படிதலும் இல்லாமல், சுய சிந்தையும் இல்லாமல் இருப்பவருக்கு உயிர் என்பது வாழ்நாள் வரை கிடைத்த நோய்.

 

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் 

கண்டானாம் தான்கண்ட வாறு. (849)

௯, கண்டு உணராமலேயே இப்படி என்று விளக்கிக் காட்டுவான் ஆனால் தான் கண்டு உணர முற்படமாட்டான். கண்டு உணரமுடியாதவன் உணர்வது தன்னால் கண்டு உணரும் அளவிற்கே.

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து 

அலகையா வைக்கப் படும். (850)

௧௦, உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லை என்பான் இம் மாநிலத்தில் பேயாக ஒதுக்கப்படுவான்.

 

அதிகார விளக்கம்!

 

     அறிவற்ற தன்மையே இல்லாமை எனப்படும். அறிவற்றவரும் கொடுக்கும் தன்மை பெறுபவரின் தவத்தன்மையே. அறிவற்றவரே தன்னை நுட்ப அறிவு உள்ளவராக எண்ணுவார். தவறால் ஆன குறையை மறைப்பதே பெரிய குறை. கீழ்படிதல் மற்றும் சுய சிந்தனை இல்லாதவர் உயிர் அவருக்கான நோய். உணராதவன் உளரல் அவனது அறியாமையை காட்டும். உள்ளதை இல்லை என்பவன் பேய்க்கு ஒப்பானவன்.

 

காணொளி:-

https://youtu.be/AHC_BnEBNgg

பொருட்பால் | நட்பியல் | ௮௬ இகல் (86)

 

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்

பண்பின்மை பாரிக்கும் நோய். (851)

௧, à®‡à®•à®´à¯à®šà¯à®šà®¿ என்பது எல்லா உயிர்க்கும் அதனதன் இயல்பான பகலை ஏற்காமல் மாற்ற முற்படும் நோய்.

 

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 

இன்னாசெய் யாமை தலை. (852)

௨, நடுநிலைமை கருதி விலகிவிடுதல் செய்தாலும், இகழ்வை கருத்தில்கொண்டு துன்பம்செய்யாமல் இருப்பதே முதன்மையானது.

 

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 

தாவில் விளக்கம் தரும். (853)

௩, உள்ளபடியே ஏற்க முடியாத இகல் என்ற வரையறுக்க முடியாத நோய் நீங்கினால், வருத்தம் இல்லாது வரும் மாற்றத்தால் தெளிவான விளக்கம் கிடைக்கும்.

 

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் 

துன்பத்துள் துன்பங் கெடின். (854)

௪, இன்பமும் மேலும் இன்பமும் உண்டாகும், துன்பமும் மேலும் துன்பமும் உண்டாக்கும் பகையுணர்வு என்ற இகல் அழிந்தால்.

 

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே 

மிகலூக்கும் தன்மை யவர். (855)

௫, பகையுணர்வுக்கு எதிராக வாழும் ஒழுக்கத்தில் வல்லவரை, யார் வெல்லும் தன்மை கொண்டவர்?

 

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை 

தவலும் கெடலும் நணிந்து. (856)

௬, பகையுணர்வே மிக இனிமையானது என்பவன் வாழ்க்கை எளிதில் கெட்டு அழியும். 

 

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் 

இன்னா அறிவி னவர். (857)

௭, பெருமைக் கொள்பவர் மெய்ப்பொருளை காணாதவர், பகைக் கொள்பவர் தீய அறிவுக்கொண்டவர்.

 

 

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை 

மிகலூக்கின் ஊக்குமாம் கேடு. (858)

௮, பகையுணர்வுக்கு எதிராக செயல்பட்டால் ஆக்கம் விளையும்.

பகையுணர்வை மிகைப்படுத்தினால் கேடு உண்டாக்க ஊக்கம் விளையும்.

 

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை 

மிகல்காணும் கேடு தரற்கு. (859)

௯, பகையுணர்வு அடையமாட்டார் முன்னேற்றம் வரும்பொழுது, பகையுணர்வை அதிகம் அடைவார் கேடு உண்டாவதற்கு.

 

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் 

நன்னயம் என்னும் செருக்கு. (860)

௧௦, பகையுணர்வால் துன்பமெல்லாம் வரும் என்பதால் அதை விலக்கிடும் நன்மை என்ற செருக்கு..

 

அதிகார விளக்கம்!

 

     இகழ்ச்சி என்பது இயல்பை மறுப்பது. நடுநிலைமையுடன் விலகிடினும் இகழ்வை கருத்தில் கொண்டு துன்பம் செய்தல் கூடாது. இகல் என்ற பகை பாராட்டும் நோய் அழித்தால் சிறப்பான மாற்றம் வரும் இன்பம் வளர்ந்து துன்பம் அழியும். பகை உணர்வு அற்றவரை யாரும் வெல்ல முடியாது, எதிரிகள் வாழ்வின் ஏற்றத்திற்கு வேண்டும் என்பவர் எளிதில் அழிவார். உண்மை அறியாதவன் பெருமை கொள்வதைப் போன்றே தீய குணம் உள்ளவர் பகையுணர்வு அடைவார். நன்மை அடைபவர் இகல் என்ற பகை உணர்வு இல்லாதவர்.

 

காணொளி:-

https://youtu.be/fGaTzwSj2J0

பொருட்பால் | நட்பியல் | ௮௭, பகைமாட்சி (87)

 

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா 

மெலியார்மேல் மேக பகை. (861)

௧, வலிமையானவர்கள் மேல் நெஞ்சை நிமிர்த்த விரும்பு. விரும்பாதே மென்மையானவர்கள் மேல் வரும் பகையை.

 

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் 

என்பரியும் ஏதிலான் துப்பு. (862)

௨, அன்பில்லாதவன், நெருங்கிய துணையில்லாதவன், சுயமாக சாதிக்க முடியாதவன் என ஏதும் இல்லாதவன் பகை என்ன இலக்கு அடைய முடியும்?

 

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் 

தஞ்சம் எளியன் பகைக்கு. (863)

௩, அச்சம் என்பதை அறியாமல், அடக்கமுடன் இல்லாமல், கொடுக்கும் பண்பும் அற்று இருப்பவன் பகைக்கு எளிமையாக தஞ்சமடைவான்.

 

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் 

யாங்கணும் யார்க்கும் எளிது. (864)

௪, à®¨à¯€à®™à¯à®•à®¾à®¤ வெறுப்பும், நிறைவற்ற மனமும் உள்ளவனை, எக்காலத்திலும் எவ்விடத்திலும் யார் வேண்டுமானலும் வெற்றிகொள்வது எளிது. 

 

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்

பண்பிலன் பற்றார்க்கு இனிது. (865)

௫, தனக்கான பாதை அறியாமல், தனக்கு உண்டாகும் வாய்ப்பை பயன்படுத்தாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பில்லாமல் இருப்பவனை, தனக்கே எல்லாம் என்றிருப்பவன் வெற்றிகொள்வது எளிது.

 

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் 

பேணாமை பேணப் படும். (866)

௬, கண்டு அறியாமல் வெறுப்படைபவன், அழிவன மேல் அளவற்ற ஆசைகொள்பவன் எதிர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படும்.

 

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து 

மாணாத செய்வான் பகை. (867)

௭, எதையாவது கொடுத்து பெற வேண்டும் கூடி இருந்தே கூடாதன செய்வான் பகையை.

 

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு 

இனனிலனாம் ஏமாப்பு உடைத்து. (868)

௮, குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல செய்பவன்  à®ªà®•à¯ˆà®µà®°à¯à®•à¯à®•à¯ கடினமில்லா வெற்றியை தருவான்.

 

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா 

அஞ்சும் பகைவர்ப் பெறின். (869)

௯, பகையுணர்வு உள்ளவருக்கு பிரிக்கமுடியாத இன்பம், அறிவில்லாத அஞ்சும் பகைவர் பெற்றுவிட்டால்.

 

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் 

ஒல்லானை ஒல்லாது ஒளி. (870)

௧௦, கற்று அறியாதவன் வெறுக்கும் சிறுபொருள் எக்காலத்திலும் உடன்பாடதவனை கூட்டத்துடன் உடன்படுத்தாது.

 

அதிகார விளக்கம்!

 

     வலிமையை எதிர்த்து மென்மையை தவிர்ப்பது பகைக்கு சிறப்பு. அன்பும், நல்ல துணையும், சுய சிந்தனையும் இல்லாதவன் பகை வீண். அச்சமும், அமைதியும், கொடுக்கும் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு எளிமையானவன். அறியாமலேயே வெறுப்பும், பேராசையும் உள்ளவனை பகையாக கொள்ள வேண்டும். கூடி இருந்தே அழிக்க நினைப்பவனை பகைமை பாராட்ட வேண்டும். பகை உணர்வு உள்ளவனுக்கு இன்பம் அறிவற்று அஞ்சும் ஒருவரே. கல்லாதவன் யாருடனும் கூடி இருக்கும் தகுதியற்றவன்.

 

காணொளி:-

https://youtu.be/Vyu_Qsq4wDo

பொருட்பால் | நட்பியல் | ௮௮, பகைத்திறம் தெரிதல் (88)

 à®ªà®•à¯ˆà®Žà®©à¯à®©à¯à®®à¯ பண்பி லதனை ஒருவன் 

நகையேயும் வேண்டற்பாற்று அன்று. (871)

௧, à®ªà®•à¯ˆ  à®Žà®©à¯à®± பண்பில்லாததை ஒருவர் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.

 

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 

சொல்லேர் உழவர் பகை. (872)

௨, கொலைக் கருவி கொண்டு வாழ்பவரை பகைத்துக் கொண்டாலும், சொல் கொண்டு வாழ்பவரை பகைக்க வேண்டாம்.

 

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் 

பல்லார் பகைகொள் பவன். (873)

௩, தனி மனிதனாய் பலரைப் பகைத்துக் கொள்பவர் இகழ்வானவர்களை விட ஏழை.

 

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் 

தகைமைக்கண் தங்கிற்று உலகு. (874)

௪, à®ªà®•à¯ˆà®µà®°à¯ˆà®¯à¯à®®à¯ நட்பாக கொண்டு பழகும் பண்புடையாளரின் மதிப்பு மிகுந்த செயலால் உலகம் நிலைக்கிறது.

 

தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் 

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. (875)

௫, தனக்கு துணை இல்லாமல் பகை கொண்டவர்கள் இரண்டாக இருந்தால் அதில் ஒன்றை இனிய துணையாக ஏற்கவேண்டும்..

 

தேறினும் தேறா விடினும் அழிவின்கண் 

தேறான் பகாஅன் விடல். (876)

௬, தெளிந்த அறிவு பெற்றாலும், தெளிந்த அறிவு பெறாவிட்டாலும் அழிவு ஏற்படும் காலத்தில் தெளியாதவனை நெருங்காமல் விட வேண்டும்.

 

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க 

மென்மை பகைவர் அகத்து. (877)

௭, வருந்த வேண்டாம் வருந்தம் என்ன என்று அறியாதவர்களை நினைத்து. விரும்ப வேண்டாம் பகைவர்களின் மென்மையான இடத்தை.

 

 

 

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் 

பகைவர்கண் பட்ட செருக்கு. (878)

௮, எப்படி என்ற வகை அறிந்து, தகுதிகளை அறிந்து, தன்னை காக்க அறிந்தால், அழியும் பகைவருக்கு ஏற்பட்ட கர்வம்.

 

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் 

கைகொல்லும் காழ்த்த இடத்து. (879)

௯, இளசாக இருக்கும் முள் மரத்தை அழிக்க வேண்டும், தவறினால் தேவையற்றதை விலக்கும் பொழுது இயலாது போகும். (பகையை வளரவிடக்கூடாது)

 

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் 

செம்மல் சிதைக்கலா தார். (880)

௧௦, உயிரோடு இருப்பவர் எல்லாம் உண்மையாக வாழ்பவர் இல்லை, வெளிப்படையாக குற்றம் செய்பவரின் பெருமையை அழிக்கவில்லை என்றால்.

 

அதிகார விளக்கம்!

 

பண்பற்ற பகை விரும்ப வேண்டாம். கொலைக் கருவி கொண்டவனின் பகையைவிட சொல் கொண்டவன் பகை வலிமையானது. எல்லாரையும் பகைத்துக் கொள்பவனே ஏழை. பகைவரை நட்பாக கருதும் பண்பே முதன்மையானது. தெளிவற்றவன் நட்பு நல்லதல்ல. தன்னை காத்துக் கொள்ளவதும் பகையுணர்வை வளரவிடாமல் அழிப்பதும் அவசியமானது. குற்றம் செய்பவரின் செறுக்கை அழிக்காதவர் உண்மையாக வாழ்பவர் இல்லை.

 

காணொளி:-

https://youtu.be/DQ9hBIIlapU

பொருட்பால் | நட்பியல் | ௮௯, உட்பகை (89)

 à®¨à®¿à®´à®²à¯à®¨à¯€à®°à¯à®®à¯ இன்னாத இன்னா தமர்நீரும் 

இன்னாவாம் இன்னா செயின். (881)

௧, இருப்பிடத்தின் தன்மையும் துன்பத்தை போக்காமல் துன்பம் தரும். அதுபோல் உயர்ந்த சுற்றத்தாரின் தன்மையும் துன்பமானதே, துன்பமானதை செய்தால்.

 

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக 

கேள்போல் பகைவர் தொடர்பு. (882)

௨, வாள்போல் நேரடியாய் வெட்டி வீழ்த்தும் பகைவருக்கு அஞ்ச வேண்டாம். அஞ்ச வேண்டும் நட்புடன் உறவாடும் பகைவருக்கு.

 

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து 

மட்பகையின் மாணத் தெறும். (883)

௩, உட்பகைக்கு அஞ்சி தன்னை காத்தால் வேண்டும். அது சுடாத மண் பானையில் உலை வைத்தல் போன்றது.

 

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா 

ஏதம் பலவும் தரும். (884)

௪, à®®à®©à®¤à®¿à®±à¯à®•à¯ தேவையற்ற உட்பகை தோன்றினால், இனத்திற்கு தேவையற்ற துன்பங்கள் பல வரும்.

 

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் 

ஏதம் பலவும் தரும். (885)

௫, உறவுமுறைக்குள் உட்பகை தேன்றினால் உறவுமுறை அற்றவர்களுக்கும் தேவையற்ற துன்பங்கள் பல வரும்.

 

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் 

பொன்றாமை ஒன்றல் அரிது. (886)

௬, தனி வேறு சிந்தை உள்ளவர்கள் கூடி இருக்க அடுத்தவரின் சதியால் பிரிந்தால் எக்காலத்திலும் சிறப்புற கூடி இருப்பது அரிது.

 

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே 

உட்பகை உற்ற குடி. (887)

௭, இரு வேறு உலோகத்தையும் இணைக்கும் செம்பு போல் கூடி உறவாடினாலும் கூட முடியாது குடும்பத்திற்குள் உட்பகை ஏற்பட்டால்.

 

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொழுது

உட்பகை உற்ற குடி. (888)

௮, அரத்தால் தேய்க்க எதிர்க்க  இயலாது தேயும் தங்கம் போல், உட்பகையின் வலிமையால் குடும்ப உறவும் தேயும்.

 

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் 

உட்பகை உள்ளதாம் கேடு. (889)

௯, உட்பகை எள்ளளவே சிறுமையானதானலும், உள்ளதற்கு எல்லாம் கேடு உண்டாக்கும்.

 

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 

பாம்போடு உடனுறைந் தற்று. (890)

௧௦, முழு சம்மதம் இல்லாதவர் வாழ்க்கை, இருண்ட குகைக்குள் கொடிய பாம்புடன் இருப்பதைப் போன்றது.

 

அதிகார விளக்கம்!

 

     இன்பம் தராத உறவுகளும் உண்டு அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள். உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத பானையில் உலை வைத்தல் போன்றது. உள்ளத்தின் இயல்பை அழிக்கும் உட்பகை குடுப்பத்திற்கு கேடு. உட்பகை கொண்டவருடன் வாழ்வதும் கொடிய பாம்புடன் இருட்டில் இருப்பதும் ஒன்றே.

 

காணொளி:-

https://youtu.be/bkmSJIHrRrA

பொருட்பால் | நட்பியல் | ௯௦, பெரியாரைப் பிழையாமை (90)

 à®†à®±à¯à®±à¯à®µà®¾à®°à¯ ஆற்றல் இகழாமை போற்றுவார் 

போற்றலுள் எல்லாம் தலை. (891)

௧, à®µà®´à®¿à®¨à®Ÿà®¤à¯à®¤à¯à®ªà®µà®°à®¿à®©à¯ ஆற்றலை இகழாது இருப்பதே, நன்மைகளை போற்றபவர் போற்றலுக்கு எல்லாம் முதன்மையானது.

 

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் 

பேரா இடும்பை தரும். (892)

௨, பெரியவர்களை மதிக்காமல் நடந்தால் அந்த பெரியவர்களாலும் மாற்றமுடிய துன்பம் வரும்.

 

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் 

ஆற்று பவர்கண் இழுக்கு. (893)

௩, வறுமை வேண்டும் என்றால் கேட்க வேண்டாம். அழிய வேண்டும் என்றால் வழிகாட்டுபவர் இடத்தில் குற்றம் பார்.

 

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு 

ஆற்றாதார் இன்னா செயல். (894)

௪, à®Žà®®à®©à¯ˆ கையசைத்து அழைப்பது போன்றது, வழிகாட்டுபவருக்கு வழிகாட்டாதவர் தீங்கு செய்வது.

 

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் 

வேந்து செறப்பட் டவர். (895)

௫, எங்குச் சென்றும் எப்படியும் வாழ முற்பட மாட்டார் மனம் கசந்து மன்னரால் விலக்கப்பட்டவர்.

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் 

பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896)

௬, எரியும் நெருப்பில் சுட்ட பின்னும் வாழ்ந்து விடலாம், வாழவே முடியாது பெரியார்ப் பிழைக்காணும்படி நடப்பவர்.

 

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 

தகைமாண்ட தக்கார் செறின். (897)

௭, சிறப்பு வாய்ந்த வாழ்க்கையும், உயர்வான பொருளும், தகுதி படைத்த தக்காரின் செழுமைக்கு ஈடாகாது.

 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு 

நின்றன்னார் மாய்வர் நிலத்து. (898)

௮, குன்று போல் சிறப்பு வாய்ந்தவரை குறைத்து மதிப்பவர் நிலத்தில் நிலைக்காமல் குடியோடு அழிவார்.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து 

வேந்தனும் வேந்து கெடும். (899)

௯, நற்பண்புகளைத் தனக்கெனக் கொள்கையாக ஏந்தியவர் சீறினால் அரசனும் முழுமை அடையாமல் அழிந்து கெடுவான்.

 

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் 

சிறந்தமைந்த சீரார் செறின். (900)

௧௦, செத்தாரைப் போல் (துறந்தவர்) சிறப்புகள் பெற்று வாழ்பவர் என்றாலும் நற்கதி அடைய முடியாது வாழும் உயர்ந்தவர் சினம் அடைந்தால்.

 

அதிகார விளக்கம்!

 

     வாழ்ந்து காட்டும் வழிகாட்டிகளை இகழாமல் இருப்பதே போற்றுவதிலும் முதன்மையானது. கேடு வேண்டும் என்றால் அவர்கள் சொல் கீழ்படியாமலும், அழிய வேண்டும் என்றால் அவர்களை பழிப்பதும் போதுமானது. தீயில் கருகி பிழைக்கலாம் வழிகாட்டுபவர் பழிக்கு தப்ப முடியாது. வாழும் உயர்ந்தவர் சினத்தால் அரசனும், நல்லகுடி பிறந்தவரும், துறவியும் நற்கதி அடையமாட்டார்.

 

காணொளி:-

https://youtu.be/4151izZJ3g8

பொருட்பால் | நட்பியல் | ௯௧, பெண்வழிச் சேறல் (91)

 

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 

வேண்டாப் பொருளும் அது. (901)

௧, தன் இல்லச் சிறப்பை மட்டும் கவனிப்பவர் நற்பயன் அடைய முடியாது. செயல்கள் அற்று சும்மா இருக்க நினைப்பவருக்கு வேண்டாத பொருள் அது.

 

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் 

நாணாக நாணுத் தரும். (902)

௨, ஆக்கபூர்வமான செயல்களை கவனிக்காமல் பெண்ணை மட்டுமே விரும்புபவன் வெட்கப்படக்கூடிய பெரிய வேட்கக் கேட்டை அடைவான்.

 

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 

நல்லாருள் நாணுத் தரும். (903)

௩, இல்லத்தரசியிடம் பணிவு இயல்பாக இல்லை என்றால் எக்காலத்திலும் நல்லவர்கள் முன் நாண வேண்டும்.

 

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் 

வினையாண்மை வீறெய்தல் இன்று. (904)

௪, à®•à¯à®Ÿà¯à®®à¯à®ª தலைவிக்கு அஞ்சும் அடுத்தது அறியும் அறிவில்லாதவன் செயல்திறன் சிறப்பாக இருக்காது.

 

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 

நல்லார்க்கு நல்ல செயல். (905)

௫, மனைவிக்கு அஞ்சுபவர் எல்லா வகையிலும் அஞ்சி நல்லார்கும் நல்லதைச் செய்ய மாட்டார்.

 

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் 

அமையார்தோள் அஞ்சு பவர். (906)

௬, இமைக்காது இருக்கும் மனதிடம் உள்ளவராக வாழ்ந்தாலும் நற்கதியை அடையமுடியாது, நல்லபடியாக அமையாத மனைவிக்கு அஞ்சுபவர்.

 

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் 

பெண்ணே பெருமை உடைத்து. (907)

௭, ஆண் என்ற தாகத்தால் பெண் ஏவிடும் வேலையைச் செய்பவரை காட்டிலும், நாணமுள்ள பெண் பெருமைக்கு உரியவள்.

 

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் 

பெட்டாங்கு ஒழுகு பவர். (908)

௮, நண்பர்களுக்கு முழுமையாக இருக்கமாட்டார், நன்மையானதை செய்யமாட்டார் அழகான நெற்றி உடையவளின் பொட்டு போல் ஒட்டிக் கொண்டவர்.

 

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 

பெண்ஏவல் செய்வார்கண் இல். (909)

௯, தர்ம செயலும், நிறைந்த பொருளும், பிற நற்செயலும் பெண்மைக்கு மயங்கி அடிமைச் செயல் செய்பவருக்கு இல்லை.

 

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் 

பெண்சேர்ந்தாம் பேதைமை இல். (910)

௧௦, நல்லெண்ணமும் மனஉறுதியும் கொண்டவர்கள் இடத்தில் எக்காலத்திலும் பெண்மைக்கு அடி பணிந்தோம் என்ற அறியாமை இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மான்பு மிகுந்தவராக முடியாது. மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம், மாறாக அவள் ஏவல் செய்யும்படி நடந்தால் நற்பேறு அடையமுடியாது. பெண்ணின் அழகிய நெற்றிக்கு திலகம் போல் ஒட்டிக்கொண்டு இருப்பவர் நண்பர்கள் மத்தியில் சிறப்பு அடையமாட்டார். பெண்ணுக்கு ஏவல் வேலை செய்பவரை பெண்ணே மதிப்பதில்லை.

 

காணொளி:-

https://youtu.be/5q0RCy3tmy8

பொருட்பால் | நட்பியல் | ௯௨, வரைவின் மகளிர் (92)

 

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் 

இன்சொல் இழுக்குத் தரும். (911)

௧, à®…ன்பினால் விரும்பி நாடமல் பொருளுக்காய் நாட்டம் கொள்ளும் ஆய்தொடியாரின் (விலைமாதரின்) இனிய சொற்கள் இழிவைத்தரும்.

 

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் 

நயன்தூக்கி நள்ளா விடல். (912)

௨, பயனை அறிந்து அதற்கேற்றார் போல் பழகும் பண்புடைய பண்பில்லா பெண்களை, மேன்மை அறிந்து உறவாடமல் தவிர்க்க வேண்டும்.

 

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று. (913)

௩, பணத்தையே குறிக்கோளாக கொண்ட பெண்களிடம் பொய்யாக உறவுக் கொள்வது, எந்த உணர்வும் இல்லாத பிணத்தை தழுவுதல் போன்றது. 

 

பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர். (914)

௪, à®ªà¯Šà®°à¯à®³à¯ˆ மட்டுமே பொருளாக கொள்பவரின் புலன்களை விரும்பமட்டார்கள் அருளாள் வரும் பொருளை தேர்ந்தெடுக்கும் அறிவுள்ளவர்கள்.

 

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர். (915)

௫, பொதுநலத்தாரின் புலன் இன்பத்தை விரும்பமாட்டார்கள், மனதின் நலத்தால் நல்லறிவு பெற்றவர்கள்.

 

தந்நலம் பார்ப்பார் தோயார் தகைசெருக்கிப் 

புன்னலம் பாரிப்பார் தோள். (916)

௬, தனது நலத்தை கவனித்து வாழ்பவர் நாடமாட்டார்கள், இடம் பார்த்து புலன் நலத்தை பறிப்பவர் தோள்.

 

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் 

பேணிப் புணர்பவர் தோள். (917)

௭, நிறைவான மனம் இல்லாதவரே  à®¨à®¾à®Ÿà¯à®µà®¾à®°à¯, அடுத்தவர் மனதை கவனித்து புணர்பவர் தோள்.

 

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப 

மாய மகளிர் முயக்கு. (918)

௮, சீர்தூக்கி ஆராயும் அறிவற்றவர்களே தெய்வீகம் என்பார்கள் போலியான மகளிரின் உடல் உறவை.

 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் 

பூரியர்கள் ஆழும் அளறு. (919)

௯, வரைமுறை இல்லாத பட்டுப் போன்ற மகளிரின் மென்தோள் குற்றம் எது? என்று அறியாத புரிதல் அற்றவர்கள் மூழ்கும் நரகம்.

 

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் 

திருநீக்கப் பட்டார் தொடர்பு. (920)

௧௦, இருமனம் என்ற அலைபாயும் மனம் கொண்ட பெண்கள், கள், சூதாட்டம் என அடிமைபட்ட திரு நீக்கப்பட்டவர்கள் தொடர்புக் கொள்வர்.

 

அதிகார விளக்கம்!

 

     அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும். பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது. நல்லறிவு பெற்றவர்கள் பொதுமகளிரை நாடுவது இல்லை. வரைமுறை அற்ற பெண்கள் அறிவற்றவர்கள் மூழ்கும் நரகம்.

 

காணொளி:-

https://youtu.be/ebthOCIjOJ4

பொருட்பால் | நட்பியல் | ௯௩, கள்ளுண்ணாமை (93)

 à®‰à®Ÿà¯à®•à®ªà¯ படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 

கட்காதல் கொண்டொழுகு வார். (921)

௧, à®ªà®¿à®±à®°à®¾à®²à¯ நேசிக்கப் படமாட்டர், தனது சுய ஆற்றலையும் இழப்பார் எப்பொழுதும் கள் மீது ஆர்வம் கொண்டு வாழ்பவர்.

 

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 

எண்ணப் படவேண்டா தார். (922)

௨, கள்ளை அருந்த வேண்டாம். அருந்த வேண்டுமானால் அருந்து எடுத்துக் காட்டாக இருப்பவன் என்று நினைக்க வேண்டாம் என்றால்.

 

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 

சான்றோர் முகத்துக் களி. (923)

௩, ஈன்றவளே முகம் சுளிக்கும் துன்பம் தரும் கள்போதையை எப்படி சான்றோர்கள் சகித்து முகம் மலர்வார்கள்.

 

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924)

௪, à®¨à®¾à®£à®®à¯ என்ற நல்லவள் வெளியேறுவாள் கள்ளென்னும் நன்மை தராத பெருங்குற்றம் செய்தால்.

 

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல். (925)

௫, கை தவறி உடைத்தது போன்றே  பொருள் கொடுத்து தன்னை மறக்கப் போதைப் பொருள் உட்கொள்வது.

 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (926)

௬, தூங்கியவர் மரணத்தவரில் இருந்து மாறுபட்டவர் இல்லை என்பதைப் போலவே நஞ்சுண்பவர் கள்ளுண்பவரே.

 

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர்நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர். (927)

௭, அழிவைத் தருவதை தனக்கென எடுத்துக் கொள்பவரை, உடன் இருக்கும் உள்ளூர் நபர்கள் எள்ளி நகைப்பர், என்பதைப் போன்றே கள்ளுண்டு கண் மயங்குபவருக்கும் ஏற்படும்.

 

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (928)

௮, மது போதையை அறிந்தது இல்லை என்று சொல்வதை கைவிடுக, நெஞ்சத்தில் மறைத்த மற்றதும் போதையால் வெளிப்படும்.

 

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று. (929)

௯, மது போதையில் களிப்பவரை காரணம் காட்டி மாற்ற முயல்வது  நீருக்கு அடியில் குளிப்பவருக்கு தீப்பந்தம் கொடுப்பதைப் போன்றது.

 

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. (930)

௧௦, மது போதையில் இல்லாத பொழுது போதையில் களிப்பவரின் கேவல செயலால் அடையும் சோர்வை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

அதிகார விளக்கம்!

 

     கள் மீது காதல் கொண்டவர் உறவை இழந்து சுய ஆற்றலையும் இழந்து முன் உதாரணமாக வாழும் சான்றோன் என்ற தகுதியையும் இழப்பார். நாணம் என்ற நற்பண்பை கெடுக்கும் கள் தன்னை மறக்கச் செய்யும். மதுக்கு அடிமையாக உள்ளவருக்கு போதிப்பது நீருக்குள் தீபந்தம் ஏற்றுவது போன்றது. போதை இல்லாதபொழுது போதையுள்ளவர்களின் செயலைப் பார்த்து திருந்த வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/Ehwl9CN8D-A

பொருட்பால் | நட்பியல் | ௯௪, சூது (94)

 à®µà¯‡à®£à¯à®Ÿà®±à¯à®• வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. (931)

௧, à®µà®¿à®°à¯à®®à¯à®ªà®¾à®¤à¯‡ வெற்றி பெற்றாலும் சூதினை, வெற்றிதான் பொன் தூண்டிலின் முள்ளை விழுங்கிய மீன் போல் சிக்கச் செய்யும்.

 

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. (932)

௨, ஒரு முறை வென்று நூறு முறை தோற்கும் சூதாடிகளுக்கு உண்டாகுமா? நன்மைகள் பெற்று சிறப்புடன் வாழும் வழி.

 

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும். (933)

௩, பெற்ற ஆதாயத்தை கூறி இடைவிடாது தாயம்உருட்டி (ஒருவகை சூது) கொண்டு இருந்தாள் உள்ள பொருளும் நிலைக்காது போகும்.

 

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல். (934)

௪, கேடு பல செய்து ஒழுங்குப்பட்ட வாழ்வை, வறுமை தந்து அழிக்கும் சூதினைப் போல் வேறோன்று இல்லை.

 

கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார். (935)

௫, கவர்ந்து இழுக்கும் சூதாட்டக் கழகமும், சூதாட்டக் கருவிகளைக் கொண்ட கையும் அறிந்தவர் ஒன்றுமற்றவராக மாறுவார்.

 

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

முகடியான் மூடப்பட் டார். (936)

௬, அகநிறைவு அடையாமல் துன்பத்தில் நிலைப்பார்கள் சூது என்ற முட்டாள் தனத்தில் மூழ்கியவர்கள்.

 

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின். (937)

௭, அனுபவித்துப் பழகிய செல்வமும், காலகாலமாய் கடைபிடித்த நற்பண்பும் பாழாகிவிடும், சூதாட்ட கழகத்திற்கு காலையில் போனால்.

 

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது. (938)

௮, பொருளாதார நிலையை சீரழித்து, பொய்யான வாழ்வை மேற்கொள்ளச் செய்து, அருள் அற்றவராக மாற்றி துன்பத்தில் திண்டாடச் செய்யும் சூது.

 

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயம் கொளின். (939)

௯, உடை, செல்வம், உணவு, சுயஅறிவு, கற்ற கல்வி, என ஐந்தும் சேர்ந்து விலகிவிடும் சூதாட்டத்தை ஏற்றுக்கொண்டால்.

 

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர். (940)

௧௦, இழந்தாலும் காதலிக்கும் சூதினைப் போல் துன்பம் சூழ்ந்தால் காதலிக்காது உயிர். (சூது தற்கொலைக்கு வழி வகுக்கும்)

 

அதிகார விளக்கம்!

 

     தூண்டில் தங்கம் என்றாலும் மீனுக்கு அது ஆபத்தானது அப்படியே சூது. அது ஒருமுறை வெற்றிகாட்டி பலமுறை தோல்வி தந்து வறுமைக்கு உரிமையாக்கி உள்ளத்தை நிறைவற்றதாக்கி விடும். பண்புடன் உடை, செல்வம், உணவு, சுய அறிவு, கற்ற கல்வி ஐந்தையும் நம்மைவிட்டு விலகச் செய்யும். இத்தனை இழப்புக்கும் பின்னும் காதலிக்கப்படும் சூது போல் உயிரானது துன்பத்தை காதலிக்காது.

 

காணொளி:-

https://youtu.be/qWN6srgz-LM

பொருட்பால் | நட்பியல் | ௯௫, மருந்து (95)

 à®®à®¿à®•à®¿à®©à¯à®®à¯ குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. (941)

௧, அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். அது மருத்துவ நூலில் குறிப்பிடப்பட்ட வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று.

 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். (942)

௨, மருந்து என்பது தேவைப்படாதாம் உடம்பிற்கு, உண்பதையும் செரிப்பதையும் ஆராய்ந்து போற்றி உண்டால்.

 

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)

௩, செரிக்கும் அளவை அறிந்து உண்ண வேண்டும். அதுவே உடம்பு பெற்ற துயரத்தை அழிக்கும் வழி.

 

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. (944)

௪, à®šà¯†à®°à®¿à®•à¯à®•à¯à®®à¯ அளவை அறிந்து கடைப்பிடித்து ஒவ்வாமை தராத உணவை உண்க நன்கு பசித்ததும்.

 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945)

௫, மனதிற்கும் உடலுக்கும் மாறுபாடு இல்லாமல் விருப்பமான உணவாக இருப்பினும் அளவிற்கு அதிகமாகாமல் மறுத்து அளவுடன் உண்டால் எவ்வித தொல்லையும் இல்லை உயிர்க்கு.

 

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய். (946)

௬, தேவைக்கு அதிகமாக எடுப்பது இழிவானது என்பதை அறிந்து உண்பவர் இடத்தில் நிலைத்து நிற்கும் இன்பம் போல், கட்டுப்பாடற்று உண்பவர் இடத்தில் நிலைக்கும் நோய்.

 

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும். (947)

௭, தீயை எப்படி அளவுடன் பயன்படுத்துவது என்று அறியாதவர் போல் அளவற்று உண்பதால் நோயும் அளவற்று ஏற்படும்.

 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)

௮, நோய் அறிந்து, நோய்க்கான மூலக்காரணம் அறிந்து, அதை தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்பட வேண்டும்.

 

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல். (949)

௯, நோயுற்றவர் உடலின் அளவும், பிணியின் அளவும், பருவ காலத்தின் தட்பவெப்பமும், கற்றவர் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

 

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து. (950)

௧௦, நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என்று நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.

 

அதிகார விளக்கம்!

 

     வாத பித்த சிலேத்துமம் என மூன்றில் அளவு கூடுவதும் குறைவதுமே நோய். உண்ட உணவு செரித்தபின் போற்றி உண்பவருக்கு மருந்து தேவையில்லை. உணவை சரியாக தீர்மானித்தால் அளவை அறிந்து உண்டால் நோய் வராது. நோய் என்ன? ஏன் வந்தது? எப்படி தீர்ப்பது? எந்த மாதரியான காலத்தில் வந்துள்ளது? என்பதை ஆராய்ந்து மருந்து எடுக்க வேண்டும். நோயுற்றவர், அதை தீர்ப்பவர், மருந்துகள், பயன்படுத்தும் அளவு சொல்பவர் என நான்கு கூறுகளை உடையது மருத்துவம்.

 

காணொளி:-

https://youtu.be/8ZwKEa4RRCU

பொருட்பால் | குடியியல் | ௯௬, குடிமை (96)

 à®‡à®±à¯à®ªà®¿à®±à®¨à¯à®¤à®¾à®°à¯ கண்அல்லது இல்லை இயல்பாகச் 

செப்பமும் நாணும் ஒருங்கு. (951)

௧, à®¨à®±à¯à®•à¯à®Ÿà®¿à®¯à®¿à®²à¯ பிறந்தவரைத் தவிர மற்றவருக்கு இல்லை இயல்பாகவே திடமாக இருப்பதும் நாணுவதும் சேர்ந்து.

 

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் 

இழுக்கார் குடிப்பிறந் தார். (952)

௨, சுயக்கட்டுபாடு, உண்மை, நாணம் என இம்மூன்றையும் இழக்கமாட்டார்கள் நற்குடி பிறந்தவர்கள்.

 

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் 

வகையென்ப வாய்மைக் குடிக்கு. (953)

௩, கொண்டாட்டம், கொடுக்கும் குணம், இனிமையாக பேசுதல், இகழாது இருத்தல் என இவை நன்கும் வசப்பட்டிருக்கும் உண்மையான குடிக்கு.

 

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் 

குன்றுவ செய்தல் இலர். (954)

௪, à®ªà®²à®•à¯‹à®Ÿà®¿ பெற முடியும் என்றாலும் நற்குடி பிறந்தவர் குற்றமானதை செய்ய இயலாதவர்.

 

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 

பண்பில் தலைப்பிரிதல் இன்று. (955)

௫, கொடுத்து உதவுவதில் வறுமையில் வீழ்ந்தாலும், பழைமை வாய்ந்த குடியின் கொடுக்கும் பண்பில் இருந்து பிரிவது இல்லை.

 

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற 

குலம்பற்றி வாழ்தும்என் பார். (956)

௬, வஞ்சனை செய்து வழியற்றதை செய்யமாட்டார் குறையற்ற மனித குலம் நான் என பற்றி வாழ்பவர்.

 

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் 

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (957)

௭, நற்குடியில் பிறந்தவர் இடத்தில் வெளிப்படும் குற்றம், வானத்து முழுநிலவு போல் பெரிதாக தெரியும்.

 

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் 

குலத்தின்கண் ஐயப் படும். (958)

௮, குண நலனில் அக்கரையற்ற தன்மை தோன்றினால் அவன் மனிதகுலமா? என ஐயம் தோன்றும்.

 

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் 

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். (959)

௯, என்ன மாதரியான நிலத்தில் இருந்தார் என்பதை கால் காட்டிவிடும், அதுபோல் குலத்தின் தன்மையை வாய்ச்சொல் காட்டும்.

 

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் 

வேண்டுக யார்க்கும் பணிவு. (960)

௧௦, நலமுடன் இருக்க வேண்டும் என்றால் நாணத்தை உடைமையாக்க வேண்டும். நற்குடி நான் என வேண்டும் என்றால் யாருக்கும் வேண்டும் பணிவு.

 

அதிகார விளக்கம்!

 

     திடத்தன்மையும் நாணுதலும் நற்குடிக்கு அழகு. சுய கட்டுப்பாடும், உண்மையும், உற்சாகமும், கொடுக்கும் பண்பும் நற்குடியின் இயல்பு. எதன் பொருட்டும் குற்றம் செய்யாத நற்குடி பிறந்தவரின் சிறிய தவறும் வானத்து மதியாய் வெளிப்படும். காலில் ஒட்டிய மண் நிலத்தின் தன்மை உணர்த்துவது போல் நற்குடி பிறந்தவர் வாய்ச்சொல் உணர்த்தும். பணிவே நற்குடியாக மாற்றும். 

 

காணொளி:-

https://youtu.be/zc4L7G26Dyc

பொருட்பால் | குடியியல் | ௯௭, மானம் (97)

 à®‡à®©à¯à®±à®¿ அமையாச் சிறப்பின ஆயினும் 

குன்ற வருப விடல். (961)

௧, à®…த்தியாவசியமான சிறப்புகள் உடையது என்றாலும் அதை அற்பமான செயல் செய்து அடையக் கூடாது.

 

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு 

பேராண்மை வேண்டு பவர். (962)

௨, சிறப்பு அடையலாம் என்றாலும் சிறப்பற்றதை செய்யமாட்டார், சிறப்புடன் திடமான மனிதனாய் வாழ வேண்டுபவர்.

 

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய 

சுருக்கத்து வேண்டும் உயர்வு. (963)

௩, பெருமைக்குறிய இடம் அடைந்தால் பணிவுடன் இருக்க வேண்டும். சிறுமையான சுருக்கத்தில் தன் உயர்வை காக்க வேண்டும்.

 

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 

நிலையின் இழிந்தக் கடை. (964)

௪, à®¤à®²à¯ˆà®¯à®¿à®²à¯ இருந்து திடமற்று உதிர்ந்தாலும் மக்காத மயிர் போன்றவர், மனித கூட்டத்தில் இருந்து தன் நிலை இழிவான இறுதியை அடைந்தவர்.

 

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 

குன்றி அனைய செயின். (965)

௫, மலை போன்றவர்  à®Žà®©à¯à®±à®¾à®²à¯à®®à¯ குறைந்து தாழ்ச்சி அடைவார் குற்றமானதை குறைந்தளவு செய்தால்.

 

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று 

இகழ்வார்பின் சென்று நிலை. (966)

௬, புகழ் இல்லாமல் புதுமை நாடி உயர்வு பெறாமல் என்ன பயன்? இகழ்வானவர்களின் பின் சென்றால் வரும் இழிநிலை.

 

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே 

கெட்டான் எனப்படுதல் நன்று. (967)

௭, ஒத்திசைவு இல்லாமல் புரியாத ஒருவர் பின் சென்று வாழும் அந்த நிலையைவிட கெட்டவன் எனப்படுதல் நன்று.

 

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை 

பீடழிய வந்த இடத்து. (968)

௮, மருந்தால் சாதிக்க முடியாது ஊனில் உயிர் நிலைக்கும் வாழ்க்கை. எனவே பெருந்தகைமை என்பது பீடை வந்த இடத்திலும் உயிரை மாய்க்காது இருத்தலே.

 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 

உயிர்நீப்பர் மானம் வரின். (969)

௯, மயிர் நீங்கினால் கவரிமான் வாழாது என்றால் அதுபோலவே உயிர் நீப்பர் மானம் வரின்.

 

இளிவரின் வாழாத மானம் உடையார் 

ஒளிதொழுது ஏத்தும் உலகு. (970)

௧௦, அசிங்கம் ஏற்பட்டதால் வாழ்வதை தவிர்த்த மானம் உள்ளவர்களை வழிகாட்டும் ஒளியாக மதித்து வணங்கும் உலகம்.

 

அதிகார விளக்கம்!

 

     அதிகபட்ச தேவை தீர்க்கும் என்றாலும் அதை குறுக்கு வழியில் அடைய நினைப்பதே மானம் என்பதால் சிறப்பற்ற ஒன்றை செய்யமாட்டர் சிறப்புடன் வாழ நினைப்பவர். தகுதி வளர்ந்தவர் உயர்ந்த நிலையில் பணிவாகவும் தாழ்ச்சி ஏற்படும் பொழுது தன்னை உயர்வாகவும் தற்காத்துக் கொள்வார். உதிர்ந்த மயிர் சிதையாது என உணர்ந்து மனித கூட்டத்திற்கு அற்பாற்பட்டு சிந்தித்து நிலையாக நிறுத்த முடியாத உயிருக்கு மதிப்பளித்து மனித குலத்திற்கே வழிகாட்டியாக வாழ்வதே மானம்.

 

காணொளி:-

https://youtu.be/MfbyMUYr9iQ

பொருட்பால் | குடியியல் | ௯௮, பெருமை (98)

 

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு 

அஃதிறந்து வாழ்தும் எனல். (971)

௧, à®’ருவருக்கு ஒளியாகும் சுய வெளிச்சம் என்பது, உள்ளத்தை வெறுமையாக வைத்துக்கொள்வது. ஒருவருக்கு இழிவானது வெறுமை இழந்து உள்ளத்து குமுறலுடன் வாழ்வது எனலாம்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான். (972)

௨, ஒத்தபடி பிறப்பெடுக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு என்பது அதனதன் செயல்பாடுகளில் மாற்றம் இருப்பதே.

 

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் 

கீழல்லார் கீழல் லவர். (973)

௩, செய் தொழிலில் மேன்மையான இடத்தை அடைந்தாலும் நற்சிந்தை அற்றவர் மேலானவராக இருக்கமாட்டார். தொழில் வேற்றுமையால் கீழான தொழில் செய்தாலும் நற்சிந்தையால் கீழானவராக இருக்கமாட்டார்.

 

ஒருமை மகளிரே போலப் பெருமையும் 

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. (974)

௪, à®’ருவனையே ஏற்று வாழும் மகளிர் போலவே பெருமை தன்னை தானே அறிந்து தனக்கு நேர்மையாய் வாழ்வதால் உண்டாகும்.

 

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் 

அருமை உடைய செயல். (975)

௫, பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.

 

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் 

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. (976)

௬, சிறுமைப்பட்ட மனிதர்களின் உணர்ச்சியில் இருக்காது பெருமைக்கு உரிய பெரியவர்களை போற்றி ஏற்கும் நோக்கம்.

 

 

 

 

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் 

சீரல் லவர்கண் படின். (977)

௭, அழிவை நோக்கியே செயல்படுவார்கள் சீரல்லாதவர்களுக்கு சிறப்புகள் மட்டுமே கிடைத்தாலும்.

 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 

அணியுமாம் தன்னை வியந்து. (978)

௮, என்றும் பணிவுடன் இருப்பதே பெருமை. சிறுமையே தன்னை தானே வியந்து தேவையற்றதை அணிந்துக் கொள்ளும்.

 

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 

பெருமிதம் ஊர்ந்து விடல். (979)

௯,பெருமை ஆணவம் இல்லாமல் இருக்கும். சிறுமை ஆணவத்துடனே அடுத்ததை செய்யும்.

 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் 

குற்றமே கூறி விடும். (980)

௧௦, தேவையற்றதை மறைப்பதே பெருமை, சிறுமையோ குற்றங்களை மட்டுமே எடுத்துரைக்கும்.

 

அதிகார விளக்கம்!

 

     எண்ணமற்ற வெறுமையுடன் இருப்பதே மனிதனுக்கு பெருமை. உயிர்களிடத்தில் இருக்கும் வேறுபட்ட செயல்பாடுகளே பெருமை. மேலாக செயல்பட வாய்ப்பு இருந்தும் அப்படி இல்லாதவர் கீழானவரே. தன்னை தானே கேட்டு நடப்பவரே கற்புடை பெண் போன்றவர், தேவையற்றதை மறைத்து ஆற்றக்கூடியதை ஆற்றி பெருமிதம் இல்லாமல் பணிவுடன் இருப்பதே பெருமை.

 

காணொளி:-

https://youtu.be/t55Z_a3ztC0

பொருட்பால் | குடியியல் | ௯௯, சான்றாண்மை (99)

 

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து 

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (981)

௧, கட்டாயம் செய்யவேண்டிய கடன் என்பது நல்லவைகள். அத்தகைய கடனை அறிந்து செயல்படுவதே சான்றாண்மை.

 

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் 

எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (982)

௨, குணம் நலமாக இருப்பதே சான்றோர்க்கு நலன். மற்றைய நலன்கள் எப்படி இருப்பினும் குணநலம் போன்றது இல்லை.

 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு 

ஐந்துசால்பு ஊன்றிய தூண். (983)

௩, அன்புசெய்தல், தீங்கு செய்ய நாணுதல், மற்றவர்களோடு இணக்கமாய் இருத்தல், யாவற்றையும் ஆய்ந்து அறிதல், வாய்மையாக இருத்தல் என்ற ஐந்தும் சான்றாண்மை என்ற பாத்திரத்தை தாங்கும் தூண்களாகும்.

 

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 

சொல்லா நலத்தது சால்பு. (984)

௪, à®…ழிக்காமல் நலமுடன் வாழவைப்பதே நோன்பு. அடுத்தவரின் தீயச் செயல்களை சொல்லாமல் நல்லனவற்றை எடுத்துக் கொள்வதே சால்பு.

 

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 

மாற்றாரை மாற்றும் படை. (985)

௫, செயல்படுபவர்களின் செயல்திறன் பணிவுடன் இருப்பது. அதுவே சான்றோருக்கு மாற்றாரை மாற்றும் ஆயுதமாக இருக்கிறது.

 

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி 

துலையல்லார் கண்ணும் கொளல். (986)

௬, சான்றாண்மைக்கு வரையறை யாதெனில் தோல்வியை ஏற்க தகுதியற்றவர் இடத்திலும் ஏற்றுக் கொளல்.

 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் 

என்ன பயத்ததோ சால்பு. (987)

௭, துன்பம் தந்தவருக்கும் இனிமையானதை செய்யவில்லை என்றால் சான்றாண்மையால் என்ன பயன்?

 

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் 

திண்மைஉண் டாகப் பெறின். (988)

௮, இன்னல்கள் ஒருவருக்கு இழிவானது இல்லை பெருந்தன்மை என்ற சால்பு திடமாக உண்டானால்.

 

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு 

ஆழி எனப்படு வார். (989)

௯, கால மற்றம் எனப்படும் ஊழியால் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தன்னை நிலைத்த தன்மையில் தக்க வைத்திருப்பவர் சான்றாண்மைக்கே பெருங்கடல் எனப்படுவார்.

 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் 

தாங்காது மன்னோ பொறை. (990)

௧௦, சான்றாக வாழ்பவர் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என்ற இருவேறுபட்ட நிலைகளும் பொறுத்து ஏற்குமா?

 

அதிகார விளக்கம்!

 

     அவசியம் செய்ய வேண்டியதை கட்டாயம் செய்வதே சான்றாண்மை. குண நலமுடன் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என ஐந்துடன் இருப்பதும், நல்லனவற்றை அழிக்காமல் அதை வளர்ப்பதும், தகுதி அற்றவர் இடத்திலும் தோல்வியை ஏற்பதும், துன்பம் தந்தவற்கும் இனியவை செய்வதும், சான்றாண்மையாகும். இப்படியானவர் ஊழி கடந்து போற்றப்படுவர். இவர்கள் சான்றாண்மை குறைந்தால் அகம் புறம் என இரு நிலையும் ஏற்காது.

 

காணொளி:-

https://youtu.be/cG_LvYqsXho

பொருட்பால் | குடியியல் | ௧௦௦, பண்புடைமை (100)

 

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 

பண்புடைமை என்னும் வழக்கு. (991)

௧, à®Žà®£à¯à®•à®³à¯ˆà®ªà¯ போல் யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளுடன், யாரிடமும் எளிமையாக பழுகுதலே பண்புடைமை என்பது வழக்கு.

 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 

பண்புடைமை என்னும் வழக்கு. (992)

௨, அன்பை உடமையாக கொள்ளல், சிந்திக்கத் தகுந்த பிறப்பாக வாழ்தல் என இவ்விரண்டும் பண்புடைமை என்பது வழக்கு.

 

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க 

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. (993)

௩, உடல் உறுப்புகள் ஒத்தபடி இருப்பதால் மக்களாக ஒப்புக்கொள்ளக்கூடாது. வெறுக்கத் தகுந்த பண்புகளை வெறுக்க ஒத்திருத்தலே ஒப்பு.

 

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் 

பண்புபா ராட்டும் உலகு. (994)

௪, à®‡à®©à¯à®ªà®®à¯ தரும் ஒழுக்கமுடன் நன்றி செய்த பயனுடையார் பண்பை உலகம் பாராட்டும்.

 

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் 

பண்புள பாடறிவார் மாட்டு. (995)

௫, நகைச் சுவைக்காகக்கூட துன்பம் தரும் அளவிற்கு இகழாமலும், பகைத்துக் கொண்டாலும் பண்புடனும் நடந்துக்கொள்வது பண்பாளர்களின் உடமை.

 

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் 

மண்புக்கு மாய்வது மன். (996)

௬, பண்பாளர்களின் செயல்களால் பின்னியே உலகம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் மன்றாடுதலும் அர்த்தமற்று போகும்.

 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் 

மக்கட்பண்பு இல்லா தவர். (997)

௭, கூர்மையான வெட்டும் கருவியைப் போன்ற ஆற்றல் உள்ளவர் என்றாலும் மனிதாபிமானம் இல்லாதவர் மரம் போன்றவரே.

 

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் 

பண்பாற்றார் ஆதல் கடை. (998)

௮, நட்பு பாராட்டாமல் நன்மையற்றதை செய்கிறார் என்பதற்காக பண்பற்றுப் போவது இழிவானது.

 

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 

பகலும்பாற் பட்டன்று இருள். (999)

௯, அடுத்தவருடன் ஒத்திசைவு அடைய வல்லவருக்கு அல்லாமல் மற்றவருக்கு இரண்டு கூறாக இருக்கும் இந்த உலகம் பகல் பொழுதாக இருப்பினும் இருளாகவே இருக்கும்.

 

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 

கலந்தீமை யாற்றிரிந் தற்று. (1000)

௧௦, பண்பில்லாதவர் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பாலும் அதனுடன் கலக்கும் தீமையால் திரிந்துவிடுதல் போன்று வீணாகிவிடும்.

 

அதிகார விளக்கம்!

 

     எளிமையாக எண்களைப் போன்ற வார்த்தைகளால் உறவாடுபவரே பண்பாளர். அவர் ஆன்ற குடியில் பிறந்து அன்போடு இருப்பார். உறுப்புகள் மட்டும் மனிதனாக மாற்றுவது இல்லை வெறுக்க தகுந்ததை செய்யாதவரே மனிதர். கத்தி போல் கூரிய அறிவு இருந்தும் மனித பண்பு இல்லாதவர் மரம் போன்றவர். பண்பாளர்கள் செயல்களே உலக இயக்கத்திற்கு காரணம். பண்பற்றவர் சேர்த்த பெருஞ்செல்வம் பாழே.

 

காணொளி:-

https://youtu.be/vtQKwlRycIc

பொருட்பால் | குடியியல் | ௧௦௧, நன்றிஇல் செல்வம் (101)

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் 

செத்தான் செயக்கிடந்தது இல். (1001)

௧, சொல்லமுடியா பெரும்பொருளை சேர்த்து வைத்தவர் அதை அனுபவிக்காமல் இறந்துவிட்டார் என்றால் அப்பொருளால் பயன் இல்லை.

 

பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் 

மருளானா மாணாப் பிறப்பு. (1002)

௨, பொருளாள் எல்லாம் ஆகும் என்று யாருக்கும் கொடுக்காமல் இருக்கும் யாரும் அருளற்ற மீளா பிறப்பு அடைவர்.

 

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் 

தோற்றம் நிலக்குப் பொறை. (1003)

௩, பொருள் ஈட்டுவதைக் கடந்தவற்றில் இசைவுக் கொள்ளாத ஆடவர் தோற்றம் நிலத்திற்குப் பாரமானது.

 

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன். (1004)

௪, à®®à®¿à®šà¯à®šà®®à®¾à®• இருக்கப் போவது ஏது என அறிவனோ? ஒருவராலும் விரும்பப்படாதவன்.      

 

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 

கோடிஉண் டாயினும் இல். (1005)

௫, கொடுத்து மகிழ்வதும் அனுபவித்து மகிழ்வதும் இல்லாதவருக்கு தொடர்ந்து செல்வம் கோடி உண்டாயினும் வீண்.

 

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று 

ஈதல் இயல்பிலா தான். (1006)

௬, தனக்குத் தானே கேடு செய்கிறான், பெருஞ்செல்வத்தை தானும் அனுபவிக்காமல் தகுதியானவற்கும் கொடுக்காமல் ஈதல் இயல்பில்லாதவன்.

 

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் 

பெற்றாள் தமியள்மூத் தற்று. (1007)

௭, இல்லாதவற்கு கொடுத்து உதவாதவர் செல்வம், நல்லழகு பெற்றவள் தனித்தே வாழ்ந்து முதுமை அடைந்தது போன்றது

 

 

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் 

நச்சு மரம்பழுத் தற்று. (1008)

௮, விரும்பி நாட வாய்ப்பளிக்காதவன் செல்வம் ஊர் நடுவே நச்சு மரம் பழுத்ததைப் போன்றது. (எட்டி பழுத்தால் என்ன, ஈயாதான் வாழ்ந்தால் என்ன)

 

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய 

ஒண்பொருள் கொள்வார் பிறர். (1009)

௯, அன்பில்லாமல் தன்னை வருத்தி அறம் பார்க்காமல் சேர்த்த அனைத்து பொருளையும் அடுத்தவரே அனுபவிப்பார். 

 

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 

வறங்கூர்ந் தனையது உடைத்து. (1010)

௧௦, சீர் பொருந்திய செல்வம் படைத்தவர் சிறு துன்பம், மழைக்காக ஏற்படும் இருள் போன்று தோன்றி, நன்மையாக மாறும் தன்மையுடையது. 

 

அதிகார விளக்கம்!

 

     சொல்லமுடியா பொருள் சேர்த்து அனுபவிக்காமல் இறந்தால் என்ன பயன், அதை தகுதியானவற்கு கொடுக்காதவர் பிறவித்துன்பம் அடைவார். பொருள் சேர்க்கும் பண்பை கடந்து பிறவற்றின் மீது ஆர்வம் இல்லாதவர் பூமிக்கு பாரமானவரே. கொடுப்பது தூய்ப்பது என செய்யாத பொருள் வீணே. பயனற்ற செல்வம் பாழான மரம் ஊர் நடுவே இருப்பதை போன்றது. அறமற்று சேர்த்த செல்வம் அடுத்தவரே அனுபவிக்க ஏதுவானது. சீரான செல்வருக்கு வரும் துன்பம் மழைக்கான கார் இருள் போல் வந்து நன்மை பயக்கும்.

 

காணொளி:-

https://youtu.be/g4og4Yebo34

பொருட்பால் | குடியியல் | ௧௦௨, நாணுடைமை (102)

 à®•à®°à¯à®®à®¤à¯à®¤à®¾à®²à¯ நாணுதல் நாணுந் திருநுதல் 

நல்லவர் நாணுப் பிற. (1011)

௧, à®šà¯†à®¯à®²à¯à®•à®³à¯à®•à¯à®•à®¾à®• வெட்கப்படுதல் என்ற நாணுதல் அவசியமானது. அழகிய நெற்றி பெற்ற பெண்கள் நாணுவதும் நல்லவர்கள் நாணுவதும் வெவ்வேறு தன்மையுடையது.

 

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 

நாணுடைமை மாந்தர் சிறப்பு. (1012)

௨, உடல் தேவையும் தேவையற்றதை வெளியேற்றுவதும், உயிர் உள்ள அனைத்திற்கும் வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் நாணுடைமை மனிதர்களின் தனிச்சிறப்பு.  

 

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் 

நன்மை குறித்தது சால்பு. (1013)

௩, உடல் பெற்ற உயிர்களின் நாணுடைமை என்ற நன்மை தரும் பண்பை பொருத்தே மேன்மை இருக்கும். 

 

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் 

பிணிஅன்றோ பீடு நடை. (1014)

௪, à®šà®¾à®©à¯à®±à¯‹à®°à¯à®•à®³à¯ விருப்பமுடன் அணிவது நாணுடைமை அப்படி இல்லை என்றால் அவர்களின் கம்பீர நடைக்கு நோயாகிவிடும்.

 

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு 

உறைபதி என்னும் உலகு. (1015)

௫, அடுத்தவற்கு ஏற்படும் பழி, தனக்கு ஏற்படும் பழி என இரண்டிற்கும் நாணும் ஒருவரை ஒத்திசையும் தலைவன் என உலகம் போற்றும்.

 

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் 

பேணலர் மேலா யவர். (1016)

௬, நாணுடைமை என்ற தற்காப்பு வேலியை அமைத்துக் கொள்ளாமல் மேன்மை அடைய முடியுமா? விரிந்த உலகில் மேலானவர்களைப் பின்பற்றுவதால். 

 

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் 

நாண்துறவார் நாணாள் பவர். (1017)

௭, தவறு செய்ய அஞ்சும் நாணுடைமை கொண்டமையால் உயிரை துறப்பார்கள். உயிர் வாழ வேண்டி நாணுடைமையை துறக்காதவரே நாணுடைமை ஆள்பவர். 

 

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் 

அறம்நாணத் தக்கது உடைத்து. (1018)

௮, அடுத்தவர் நாணக்கூடிய செயல்களுக்காக தான் நாணாவில்லை என்றால் அறம் நாணி விலகி நிற்கும். 

 

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் 

நாணின்மை நின்றக் கடை. (1019)

௯, குலப் பெருமை அழியும் கொள்கை தவறாக இருந்தால். நலம் கெட்டுப் போகும் நாணுடைமை இல்லாமல் நிற்கும் யாருக்கும்.

 

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை 

நாணால் உயிர்மருட்டி அற்று. (1020)

௧௦, நாணுடைமையை தன்னுடைமையாக இல்லாமல் செயல்படுவது மரப்பொம்மையை நூல் கட்டி உயிர் உள்ளதைப் போல் ஆட்டுவது அன்றி வேறல்ல. 

 

அதிகார விளக்கம்!

 

     செய்யப்படும் செயல்களைக் கொண்டு நாணுவதும் பெண் நாணுவதும் வெவ்வேறு தன்மை உடையது. உயிர் மீது பற்றும் உடல் அழுக்கை அகற்றுவதும் எல்லா உயிர்களுக்கும் சமம் மனிதனுக்கு மட்டுமே நாணுதல் எனும் சிறப்புள்ளது. நாணமே முன்னோடிக்கு அணி, தற்காப்பு கவசம். நாணம் உள்ளவர்கள் உயிரை துறக்க தயங்குவது இல்லை. நாணம் அற்றவர்களை அறம் காப்பதில்லை. நாணம் இல்லாதவர் மரப் பொம்மை போன்றவர்.

 

காணொளி:-

https://youtu.be/t8zJh2vetR8

பொருட்பால் | குடியியல் | ௧௦௩, குடிசெயல் வகை (103)

 

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் 

பெருமையின் பீடுடையது இல். (1021)

௧, à®šà¯†à®¯à®²à¯à®•à®³à¯ˆà®šà¯ செய்ய என் கைகள் தயங்காது என்ற பெருமையைவிட மேலான ஒன்று இல்லை.

 

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் 

நீள்வினையால் நீளும் குடி. (1022)

௨, ஆழமான செயல்திறனும், ஆழ்ந்த அறிவும் என இரண்டின் தெடர்ச் செயலால் வளரும் வாழ்வு.

 

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 

மடிதற்றுத் தான்முந் துறும். (1023)

௩, குடும்பம் ஒவ்வொன்றும் சிறப்பாக செயல்பட வேண்டும் என முயலும் ஒருவற்கு தெய்வமும் தேவையானதை முன் வந்து உதவும்.

 

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் 

தாழாது உஞற்று பவர்க்கு. (1024)

௪, à®ªà®¿à®± காரணங்கள் இன்றி தானாகவே நல்முடிவு உண்டாகும் தம் குடிப் பெருமை அழியாதபடி செயல்படுபவற்கு.

 

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் 

சுற்றமாச் சுற்றும் உலகு. (1025)

௫, குற்றம் இல்லாதபடி குடும்பத்தை வழிநடத்தி வாழ்பவரை உறவாக ஏற்று கொள்ளும் உறவு பாரட்டும் உலகு.

 

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 

இல்லாண்மை ஆக்கிக் கொளல். (1026)

௬, நல்லாண்மை என்ற நிறைந்த மனித ஆற்றல் என்பது, ஒருவற்குத் தான் பிறந்த குடியை இல்லாண்மை ஆக்கிக் கொள்வதே.

 

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் 

ஆற்றுவார் மேற்றே பொறை. (1027)

௭, போர்களத்தின் வன்மையாக செயல்படும் வீரரைப் போல், தன் இருப்பிடம் சிறக்க செயல்படுபவருக்கே துன்பம் அழிக்கும் பொறுப்பு முழுமை பெறும்.

 

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து 

மானம் கருதக் கெடும். (1028)

௮, குடும்பத்தை காத்து போற்றுபவற்கு ஏற்ற பருவம் என்று ஒன்று இல்லை. எல்லா பருவமும் சாதகமானதே. மாறாக சோம்பலுடன் செயல்பட மறுத்தால் சீர் குலையும்.

 

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் 

குற்ற மறைப்பான் உடம்பு. (1029)

௯, துன்பத்திற்கே அழிவைத் தரும் கொள்கலன் ஆகும் குடும்பத்தை குற்றமற்றதாக இருக்க உழைப்பவர் உடம்பு.

 

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் 

நல்லாள் இலாத குடி. (1030)

௧௦, துன்பத் தாக்கத்தால் அழிந்து வீழும், துன்பத்தைக் கடந்துச் செயல்பட்டுக் காக்கும் நல்ல ஒருவர் இல்லாத குடும்பம்.

 

அதிகார விளக்கம்!

 

     செயல்பட துணியும் கைகளைப் போல் சிறந்தது இல்லை. செயல்திறனும் சிந்தனை திறனும் இணைந்தே வாழ்வை வளமாக்கும். குடி சிறக்க நினைப்பவற்கே தெய்வமும் முன்வந்து உதவும், தானாக நல்முடிவு வரும், உறவுகளும் சூழும். நல்லாண்மை என்ற சிறந்த மனித ஆற்றல் என்பது வாழ்வை வறுமை அற்றதாக மாற்றுவது. போர்களத்தில் போராடும் வீரரைப் போல் கவனமுடன் வாழ்வு சிறக்க செயல்பட வேண்டும். வாழ்வு சிறக்க ஏற்ற பருவம் என்று இல்லை தொடர் முயற்சியே வாழ்வை வளமாக்கும். துன்பத்திற்கு துன்பம் தரும் கொள்கலன் உழைக்கும் ஒருவரின் உடம்பு ஆகும். இக்கட்டான சுழலில் சிக்குண்டு அழியும் அதைக் காக்கும் நல்லாள் இல்லாத குடி.

 

காணொளி:-

https://youtu.be/ih88anixL_8

பொருட்பால் | குடியியல் | ௧௦௪, உழவு (104)

 

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 

உழந்தும் உழவே தலை. (1031)

௧, à®ªà®² மாற்றங்களுடன் சுழலும் உலகம் உழவுத் தொழிலை பின்பற்றியே இருக்கும் ஆகையால் பல தொழில் பழகியும் உழவே தலைமையானது.

 

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது 

எழுவாரை எல்லாம் பொறுத்து. (1032)

௨, உழவுத் தொழில் செய்பவர்கள் உலக மக்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர்கள், உழவு செய்யாத மற்ற எல்லாரையும் காக்கும் பணி செய்வதால்.

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 

தொழுதுண்டு பின்செல் பவர். (1033)

௩, உழவு செய்து வாழ்பவர்கள் மட்டுமே வாழ்பவர்கள் மற்றவர்கள் உழவர்களை தொழுது உண்டு பின் செல்பவர்கள்.

 

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் 

அலகுடை நீழ லவர். (1034)

௪, à®ªà®² அரசுகளின் ஆட்சிச் சிறப்புகளையும் தனது ஆட்சிச் சிறப்புக்கு உட்பட்டு இருப்பதைக் காண்பர் உழவுத் தொழில் செய்து வாழ்பவர்கள்.

 

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது 

கைசெய்தூண் மாலை யவர். (1035)

௫, பசி என்று இரவாமல், இரப்பார்க்கு கொடுப்பவர், சலிப்பின்றி உழைத்து உண்ணும் குளிர்ச்சியானவர்.

 

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 

விட்டேம்என் பார்க்கும் நிலை. (1036)

௬, உழவுத் தொழில் செய்யும் உன்னதமானவர்கள் கொடுக்க மறுத்தால், விருப்பத்தை விட்டொழித்தோம் என்கின்ற துறவு மேற்கொள்பவர்களின் நிலை குலைந்து போகும்.

 

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் 

வேண்டாது சாலப் படும். (1037)

௭, ஒரு பலம் புழுதி கசக்கி ஒன்றும் இல்லாதபடி உலர்த்த ஒரு பிடி எருவும் தேவையின்றி மண் பதப்பட்டு சிறப்புறும்.

 

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் 

நீரினும் நன்றதன் காப்பு. (1038)

௮, ஏர் செய்து அடுத்து அதைவிட நன்மை பயக்கும் எருவிட்டு விதைத்த பின் நீர்பய்ச்சி அடுத்து மேலும் நன்மையே தரும் பாதுகாத்தல் செய்ய வேண்டும்.

 

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து 

இல்லாளின் ஊடி விடும். (1039)

௯, நிலக்கிழார் நிலத்தை சென்று கவனிக்கவில்லை என்றால் அவர் மனைவியைப் போலவே முரண்பட்டுப் போகும்.

 

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் 

நிலமென்னும் நல்லாள் நகும். (1040)

௧௦, வழி ஏதும் இல்லை என்று அசைவின்றி சோம்பி இருப்பவரைக் கண்டு நிலம் என்ற நல்லாள் ஏளனம் செய்வாள்.

 

அதிகார விளக்கம்!

 

     பலவகை மாற்றங்களுடன் உலகம் சுற்றினாலும் உழவே தலைமையானது அதுவே உலக இயக்கத்திற்கு மூலமானது. உழவே உலகின் ஆணி எனவே அவரை தொழுது உண்பதே மற்றவர் பணி. பலகுடையும் பணியும் உழவு இல்லை என்றால் துறவியும் வீணே. ஏர் விடுதலை விட சிறந்தது எரு இடுதல், நீர் பாய்ச்சுவதை விட சிறந்தது பாதுகாப்பது. கவனியாத மனைவியின் ஊடல் போல் நிலமகளும் செய்வாள். சோம்பேறியை நிலமகள் கண்டு வெட்கப்படுவாள்.

 

காணொளி:-

https://youtu.be/4uof7IuykZA

பொருட்பால் | குடியியல் | ௧௦௫, நல்குரவு (105)

 

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் 

இன்மையே இன்னா தது. (1041)

௧, à®‡à®²à¯à®²à®¾à®®à¯ˆà®¯à¯ˆà®µà®¿à®Ÿ துன்பமானது என்ன என்றால், இல்லாமையில் இல்லாமையே துன்பமானது. (வறுமையை விட கொடியது வறுமையே).

 

இன்மை எனவொரு பாவி மறுமையும் 

இம்மையும் இன்றி வரும். (1042)

௨, இல்லாமை என்ற ஒரு பாவி வருங்காலம் நிகழ்காலம் என்ற பேதமின்றி வரும்.

 

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக 

நல்குரவு என்னும் நசை. (1043)

௩, சேர்த்து வைத்தப் பொருளும் திடமான ஆற்றலும் அழியும், இல்லாமை ஏற்படுத்தும் நல்குரவு என்ற நசை மொத்தமாக வந்தால்.

 

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 

சொற்பிறக்கும் சோர்வு தரும். (1044)

௪,  à®¨à®¿à®•à®°à®±à¯à®± குடும்பத்தில் பிறந்தவரிடத்திலும் இல்லாமை வந்தால் வேதனையான வார்த்தையும் சோர்வும் உண்டாகும்.

 

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 

துன்பங்கள் சென்று படும். (1045)

௫, இல்லாமை என்ற வேதனையுள் பல வகைக் குறைபாடுகள் கொண்ட துன்பங்கள் கூடி விடும்.

 

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் 

சொற்பொருள் சோர்வு படும். (1046)

௬, நல்லனவற்றை தெளிவாக பொருள்படும்படி நன்றாக உணர்ந்து சொன்னாலும், இல்லாமையில் இருப்பவர் சொல்லும் பொழுது அப்பொருள் முழுமை பெறாது.

 

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 

பிறன்போல நோக்கப் படும். (1047)

௭, அறமற்ற இல்லாமை அடைந்து விட்டால், ஈன்ற தாய் கூட அந்நியனாக பார்ப்பாள்.

 

 

 

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் 

கொன்றது போலும் நிரப்பு. (1048)

௮, இன்றும் வருமோ அந்தக் கொடுமை? நேற்றுவரை கொலை செய்வதுப் போல் இருந்த வறுமை. (வறுமை வராதபடி வாழ்)

 

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 

யாதொன்றும் கண்பாடு அரிது. (1049)

௯, நெருப்பில் தூங்குவது சாத்தியப்படலாம், நிறைவற்ற நிலையில் எவ்வகையிலும் கண்ணுறக்கம் கொள்வது கடினம்.

 

துப்புர வில்லார் துவரத் துறவாமை 

உப்பிற்கும் காடிக்கும் கூற்று. (1050)

௧௦, தூய்மையை உரிமையாக பற்றாதவர்கள் முழுமையாக துறக்காமல் இருப்பதால் உப்புக்கும் காடிக்கும் எமனாகிவிடுகிறார்கள்.

 

அதிகார விளக்கம்!

 

     வறுமையை விட கொடியது வறுமையே இது இன்று நாளை என எப்பொழுதும் வரும் வந்தால் சேர்த்த பொருளும் திட சிந்தனையும் கெடும். நற்குடியில் பிறந்தவரும் தன்நிலை இழக்கச் செய்யும் நல்குரவு வந்தால் தாயும் அந்நியமாக போவாள். நெருப்பிலும் தூங்கலாம் வறுமையில் சாத்தியம் இல்லை எனவே நல்குரவு வராதபடி காக்கவேண்டும். தூய்மையற்ற துறவி உப்புக்கும் காடிக்கும் வழியின்றியே துறவை மேற்கொள்கிறான்.

 

காணொளி:-

https://youtu.be/5ezm5OajKaE

பொருட்பால் | குடியியல் | ௧௦௬, இரவு (106)

 

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் 

அவர்பழி தம்பழி அன்று. (1051)

௧, à®•à¯‡à®Ÿà¯à®Ÿà¯à®ªà¯ பெற வேண்டும் கொடுக்கத் தகுதியானவரிடத்தில், மறுப்பார் என்றால் அது அவர் பழியாகும் நம் பழியாகாது.

 

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை 

துன்பம் உறாஅ வரின். (1052)

௨, இன்பமாகும் ஒருவற்கு கேட்டுப் பெறுதல் கொடுத்தவற்கு துன்பம் தராதபடி.

 

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று 

இரப்புமோ ரேஎர் உடைத்து. (1053)

௩, வெறுப்பு இல்லாத நெஞ்சத்தின் கடன் எது என்று அறிந்தவர் முன் சென்று இரப்பதும் ஓர் அழகானதே.

 

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் 

கனவிலும் தேற்றாதார் மாட்டு. (1054)

௪, à®•à¯‡à®Ÿà¯à®ªà®¤à¯à®®à¯ கொடுப்பதைப் போன்றதே வெறுப்பை கனவிலும் காட்டதவர் இடத்தில்.

 

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று 

இரப்பவர் மேற்கொள் வது. (1055)

௫, வெறுப்பற்றவர் உண்மையுடன் இவ் வையகத்தில் இருப்பதால் கேட்பவர் அவர் கண் முன் நிற்பதைச் செய்கிறார்.

 

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை 

எல்லாம் ஒருங்கு கெடும். (1056)

௬, கொடுப்பதற்கு வெறுப்பற்றவரைக் காண்பதால் துன்பத்தில் நிரப்பும் எல்லாம் ஒட்டு மொத்தமாய் அழியும்.

 

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் 

உள்ளுள் உவப்பது உடைத்து. (1057)

௭, இழிவுப்படுத்தி ஏளனம் செய்யாமல் ஈவாரைக் கண்டால் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் ஆனந்தம் பெருகும்.

 

 

 

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் 

மரப்பாவை சென்றுவந் தற்று. (1058)

௮, கேட்பவற்கு கொடுப்பவர் இல்லை என்று மாறினால், கொடுப்பதையே தொழிலாக கொண்ட உலகில் மனிதச் செயல்கள் மரப்பொம்மையின் இயக்கம் போல் இருக்கும்.

 

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் 

மேவார் இலாஅக் கடை. (1059)

௯, கொடுப்பவற்கு என்ன மதிப்பு உண்டாகும், கேட்டுப் பெறுபவர் ஒருவரும் இல்லாது போனால்.

 

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை 

தானேயும் சாலும் கரி. (1060)

௧௦,கேட்டுப் பெறுபவற்கு கோபம் வரக்கூடாது நம் துன்பம் போக்கவில்லையே என்று. கொடுக்க மறுப்பவர் நிலைக்கு நமக்கு ஏற்பட்ட வறுமையே சான்று.

 

அதிகார விளக்கம்!

 

     கொடுப்பவர் இடத்தில் கேட்டு பெற வேண்டும் தர மறுத்தால் அது அவரது பழிச்செயல் அல்லாமல் நம் குற்றம் ஆகாது. இன்பமும் அழகும் உடையது இல்லை என்பவர் இடம் கேட்டு பெறுவது. கேட்பதும் கொடுப்பதை போன்றது வெறுப்பை கனவிலும் காட்டாதவர். அவரால் பிறர் துன்பம் தொலையும். இழிவு செய்யாது கொடுப்பவரால் உள்ளம் மகிழும். கேட்பவற்கு கொடுக்க ஆள் இல்லை என்றால் மனிதன் மரப்பாவையாக மாறினான் என ஆகும். கொடுப்பவர் மதிப்பு கேட்பவரால் தீர்மானிக்கப்படுகிறது. கொடுக்கவில்லை என கோபமடைதல் குற்றம், மாறாக அதற்கு நம் வறுமையே காரணம் என உணர வேண்டும்.

 

காணொளி:-

https://youtu.be/RxSmm5GJ0FA

பொருட்பால் | குடியியல் | ௧௦௭, இரவச்சம் (107)

 

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் 

இரவாமை கோடி உறும். (1061)

௧, à®µà¯†à®±à¯à®ªà¯à®ªà®Ÿà¯ˆà®¯à®¾à®®à®²à¯ விருப்பமுடன் கொடுக்கும் கண் போன்றவர் இடத்திலும் கேட்காமல் இருப்பது கோடி நன்மையாகும்.

 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 

கெடுக உலகியற்றி யான். (1062)

௨, கேட்டுப்பெற்றே உயிர் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்றால் சிதைந்து அழியட்டும் உலகை இயற்றியவன்.

 

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் 

வன்மையின் வன்பாட்டது இல். (1063)

௩, இல்லாமையையும் துன்பத்தையும் இரவல் பெற்றுத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கொடுமையைவிட கொடுமையானது இல்லை. 

 

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் 

காலும் இரவொல்லாச் சால்பு. (1064)

௪, à®‡à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ இடம் முழுவதும் போதுமானது இல்லை, தனக்கு இடம் இல்லை என்று இரந்து கேட்காதவரின் முன்மாதிரியான பண்புக்கு. 

 

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது 

உண்ணலின் ஊங்கினியது இல். (1065)

௫, வெறும் தண்ணிர் போல் காய்ச்சிய கூழாக இருப்பினும் உழைத்து உண்ணும் பொழுது அதனிலும் மிகுதியானது இல்லை. 

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 

இரவின் இளிவந்தது இல். (1066)

௬, பசுவிற்கு தண்ணிர் வேண்டும் என்று இரந்து கேட்பது நாவிற்கு இரப்பதின் இழுவானது இல்லை.

 

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் 

கரப்பார் இரவன்மின் என்று. (1067)

௭, இரந்து கேட்கிறேன் இரந்து கேட்பவர்கள் எல்லாரையும், இரந்து கேட்க அவமதிப்பவர் இடத்தில் இரந்து கேட்க வேண்டாம் என்று. 

 

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் 

பார்தாக்கப் பக்கு விடும். (1068)

௮, இரந்து கேட்டல் என்ற பாதுகாப்பாற்ற தோணி, மறைத்தல் என்ற கடின பாறையால் சிதைந்து விடும்.

 

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள 

உள்ளதூஉம் இன்றிக் கெடும். (1069)

௯, கொடுக்கும் பண்புள்ள உள்ளம் உருகும், மறைத்தலை செய்யும் உள்ளம் இருப்பதையும் இல்லாமல் செய்து கெடும். 

 

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் 

சொல்லாடப் போஒம் உயிர். (1070)

௧௦, கொடுக்க மறைப்பவர் அழியாமல் எப்படி காப்பார்? கேட்பவர் இல்லை என்ற சொல் கேட்டு போய்விடும் உயிரை.

 

அதிகார விளக்கம்!

 

     சலிப்பற்ற கண் போல் கொடுக்கும் ஒருவர் இருப்பினும் கேட்காமல் இருப்பதே கோடி நன்மை. கேட்டுப் பெற்றே வாழ வேண்டும் என்றால் கெட்டு ஒழியட்டும் உலகை படைத்தவன். வறுமையை துன்பத்தை அடுத்தவர் உதவியால் அழிக்க வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. கேட்டுப் பெறாமல் உழைத்து உண்ணும் அரிசி குறைந்த கஞ்சி சிறப்பானது. கேட்பவரை அவமதிப்பவர் இடத்தில் கேட்க வேண்டாம். கொடுப்பவர் உள்ளம் மென்மையாகவும் மேன்மையாகவும் இருக்கும். கொடுக்க மறுப்பவர் தன் உயிரை எப்படி காக்கமுடியும்.

 

காணொளி:-

https://youtu.be/9hame36JNYY

பொருட்பால் | குடியியல் | ௧௦௮, கயமை (108)

 

மக்களே போல்வர் கயவர் அவரன்ன 

ஒப்பாரி யாங்கண்டது இல். 1071)

௧,  மனிதர்கள் போலவே இருப்பார்கள் கயவர்கள். அவர்களைப் போன்று ஒன்றுப் பட்ட ஒன்றை நான் கண்டதில்லை. 

 

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் 

நெஞ்சத்து அவலம் இலர். (1072)

௨, நல்லன அறிந்தவர்களை விட கயவர்கள் உயர்வு உள்ளவர்கள் காரணம் நெஞ்சத்தில் அவலம் இல்லாமல் இருப்பதால். 

 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் 

மேவன செய்தொழுக லான். (1073)

௩, வாழ்வாங்கு வாழும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே கயவர்கள் காரணம் விரும்பிய செயல்களை செய்து வாழ்வதால். 

 

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் 

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (1074)

௪, à®µà¯†à®³à®¿à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿ கயவரைக் கண்டு அவரைவிட நான் மிகைப்பட்டவன் என்று இருமாப்புக் கொள்ளும் கீழ்.

 

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் 

அவாஉண்டேல் உண்டாம் சிறிது. (1075)

௫, அச்சமுடன் இருப்பதே கீழ் மக்களின் விடாது கடைபிடிக்கும் ஆசாரம். ஆசைப்பட்டால் எஞ்சிய சிறிது ஒழுக்கம் காணப்படும்.

 

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட 

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். (1076)

௬, அறைந்து ஓசை எழுப்பும் பறை போன்றவர் கயவர் காரணம் கேட்ட மறைப்பொருளை தான் உணராது பிறர்க்கு உரைப்பதால். 

 

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் 

கூன்கையர் அல்லா தவர்க்கு. (1077)

௭, ஈரக் கைகளைக் கூட உதராத கயவர்கள், மூக்கை உடைக்கும் வளைந்த கை உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு கொடுத்து உதவமாட்டார்கள். 

 

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் 

கொல்லப் பயன்படும் கீழ். (1078)

௮, உதாரணமாக சொல்வதற்கு பயன்படுபவர்கள் சான்றோர். கரும்பு போல் கொல்லப் பயன்படுபவர்கள் கீழானவர்கள். 

 

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் 

வடுக்காண வற்றாகும் கீழ். (1079)

௯, உடைகள் அணிவதையும் உணவுகள் உண்ணுவதையும் கண்டு அவர்களிடம் குற்றம் காண முயல்வார்கள் கீழானவர்கள். 

 

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் 

விற்றற்கு உரியர் விரைந்து. (1080)

௧௦, எதற்கு உரியவர் கயவர் என்று உற்று நோக்க, விலைக்கு தன்னை அடிமையாக்கி கொள்ளவதில் விரைவாக செயல்படுகிறார்கள். 

 

அதிகார விளக்கம்!

 

     நல்மனிதர் போன்ற கயவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள், நல்லவை அறிந்தவர்களைவிட கயவர் உள்ளம் அவலம் இன்றி இருப்பதாலும், நினைத்ததை செய்வதாலும் உயர்வானவர்களாக தெரிகின்றார்கள். கயவரை சிறந்தவன் என்பவன் கீழானவன். சான்றாக இருப்பார்கள் நல்வர்கள், கரும்பாக நசுக்கப்படும் கீழானவர்கள் அச்சத்தை ஆசாரமாக கொள்வர். நல்லாடை அணிவதையும் நற்சோறு உண்ணுவதையும் கண்டு குற்றம் காண நினைப்பவர் கீழானவர்கள். கயவர்கள் தங்களை விலைக்கு அடிமையாக இருப்பதை விரைந்து செய்வார்கள். 

 

காணொளி:-

https://youtu.be/I_IvK25eyLY

பொருட்பால் அதிகார விளக்கம்

 

பொருட்பால், பொதுவாக பால் என்றால் பற்றியிருப்பது என்பதாகும். சமூகத்தோடு இணைந்த எல்லா விசயங்களையும் பொருப்புணர்வோடு எடுத்துரைப்பதனால் பொருட்பால் என்றாகியது. எது எப்படி அமையவேண்டும் என்றும் அதற்கான பொருளை எப்படி ஈட்டுவது என்றும் அதை எப்படி காப்பது என்றும் மேலும் அதன் செயல்களை ஒழுங்குபட வகுப்பது பற்றியும் சிறப்பான விசயங்களை வள்ளுவனார் பொருட்பாலிற்குரிய தரத்தோடு எடுத்தியம்புகிறார்.

          அறத்தோடு இந்த உலகை அணுகும் ஒரு மனிதனுக்கு பொருள் சார்ந்த வாழ்க்கையும் வாழ்க்கையின் பொருளும் புரிய வேண்டும் என்பதற்காக வேண்டி இரண்டின் பார்வையோடும் வள்ளுவனார் திருக்குறளில் பாக்களாய் இயற்றியுள்ளார். வாழ்க்கையில் எதுவெல்லாம் பொருள் தருமோ மற்றும் எவையெல்லாம்  அர்த்தமாகிறதோ அதற்காக வேண்டி அதை அதிகாரங்களால் அழகு செய்திருக்கிறார் வள்ளுவனார்.

          காலச்சூழலுக்கு ஏற்ற மாதிரி சிறிது  மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட எல்லா காலத்திற்கும் பொருந்தும் விதமாக இருப்பதனால் பொருட்பால் பொருள் நிறைந்ததாகவும் காலம் கடந்தும் போற்றும் படியாகவும்  அமைந்துள்ளது.

          "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க தமிழின் பெருமையை உலகறியச் செய்ததில் வள்ளுவமும் முக்கிய இடம் வகிக்கிறது. வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலை பாடியிருப்பதில் கூட பலவிதமான சிறப்புகள் உண்டு.

          வள்ளுவப் பெருந்தகைக்கு ஏழின் மீது ஏதோ ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ ஏழு சீர்களில் குறளை  எழுதியிருக்கிறார். மேலும் 133 அதிகாரங்களின் கூட்டுத்தொகையும் ஏழாகவே இருப்பதனால் ஏழின் மூலம் எதையோ சொல்கிறார் என்று உணர முடிகிறது. 

          வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்தின் ஏழாவது குறளையும் சிறப்பாகவே செய்திருப்பதை இங்கு  கவனிக்க வேண்டியுள்ளது. பொருளதிகாரம் கூட எழுபது அதிகாரங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஏழு ஏழாய் பிரிப்பதும் தமிழ் மரபாகவே இருந்திருக்கிறது. பெண்ணிண் பருவங்கள் ஏழு, சப்தஸ்வரங்கள் ஏழு,  யோகத்தின் ஆதாரங்கள் ஏழு,  நாட்கள் ஏழு, இப்படியாக ஏழினை விரித்துரைக்கலாம்.

 

          ஒரு மனிதன் தன்  வாழ்க்கையை பொருள் நிறைந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் அவன்  என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பொருட்பாலின்  எழுபது அதிகாரங்களில் சொல்லியுள்ளார். காலப்போக்கில் ஆட்சி அமைப்பு, அதிகார மாற்றம் மாறும் பொழுது வள்ளுவமும் அதற்கேற்றார் போன்று மாறிப் பொருள் தருகிறது. 

          ஆனாலும் எப்போது எந்த மனநிலையிலிருந்து ஒருவர் அதைப் படித்தாலும் அதற்கேற்றார் போல வள்ளுவம் பக்குவமாய் நம்மோடு பேசுவதை நாம் மறுக்க முடியாததென்பதே  வள்ளுவத்தின் தலையாய சிறப்பு.

          நாம் வாழும் வாழ்க்கைக்கு பொருள்  இருக்க வேண்டும்.  அதுவும் பொருள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த பொருளை எப்படியெல்லாம் அடைந்தால் நம் வாழ்வு சிறப்பாக மலரும் என்பதையும்  அர்த்தம் நிறைந்ததாக மாறும் என்பதையும் வள்ளுவனார் குறளில் பேசுகிறார்.

          மன்னனின் ஆட்சிப் பெருமையை இறைமாட்சியோடு விளங்கச் சொல்லி, எவரும் திருட முடியாத செல்மாகிய கல்வியை கசடற கற்கும் படி வலியுறத்தியும், கல்லாமையால் நம் சொற்பேச்சு எடுபடாது என்று சொல்லி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியும், கேள்வியின் மூலம் உயர் ஞானத்தை அடையும் நாதத்தின் சிறப்புரைத்து, அறிவுடைமையோடு திறம்பட  செயல்பட்டு, அதனால் உண்டாகும் குற்றங்களை கடிந்து, மானக்கேடான செயல்களை தவிர்த்து, அறமறிந்த பெரியாரைத் துணையாகக் கொள்ள வேண்டும் என்று, வள்ளுவனார் திறம்பட குறளில் தெளிவுபட உரைக்கின்றார்.

          தீமை காரியங்களில் ஈடுபடம் சிற்றினத்தாரோடு சேராமையை வலியுறுத்தி, நமக்கு உதவியாய் உள்ளவரோடு, தெரிந்து செயல்படும் வகையை வழியாய் காட்டி, செய்யும் செயலில் எதிராளியின் வலிமையை அறிதல் வேண்டுமெனவும், கொக்கைப் போல் தக்க காலமறிந்து, தடைகளை நன்கு ஆராய்ந்து, இடம் அறிந்து வெற்றி பெற வேண்டுமாயும், எடுத்த வேலையை, நன்கு தெரிந்து தெளிந்தும், பிறகு தெரிந்தே வினையாடலும் செய்தால், சுற்றங்களோடு கூடி இன்பமுற முடியுமெனவும், மேலும் வெகுளித்தனமான  பொச்சாவாமையால் ஏற்படும் மறதியால், இழப்பு ஏற்படுமெனவும் வள்ளுவனார் எச்சரிக்கிறார்.

           இயற்கையோடு இயைந்த நல்ல ஆட்சியினால், செங்கோன்மை உயர்ந்து புகழப்பெறும் எனவும்,  ஆனால் மக்கள் வளம்பெற முடியாதவாறு, ஆணைகளால் மட்டுமே ஆளும் கொடுங்கோன்மை யாலும், வெருவந்த செய்யாமையாலும் வெறுப்பு வளர்ந்து, கண்ணோட்டம் என்கிற பக்குவமடைதல் இல்லாமல் போகும். எனவே நல்ல ஆட்சியாளர் ஒற்றாடல் மூலம் நாட்டினையும் மக்களையும் ஊக்கமுடைமை யோடு வழிநடத்தி, மடியின்மை என்கின்ற சோர்வினை களைந்து, ஆள்வினையை உடைமையாக கொண்டு, ஆர்வமாய் செயல்பட்டு இடுக்கண் அழியாமையை  உணர்ந்து, இடர்பாடுகளை அழித்து இன்பம் காண வேண்டுமாய் வள்ளுவனார் வழிமொழிகிறார்.

          அமைச்சு என்ற நிர்வாகம் சிறப்புற அமைய, முட்டாள்களின் ஆலோசனைகளை தவிர்த்து, சிறந்த சொல்வன்மையால் எவரையும் வெல்லக்கூடிய திறனறிந்து,  அதனால் உண்டாகும் வினைத்தூய்மையாலும் அச்செயலை தூய்மையாக செய்பவரின் வினைத்திட்பத்தாலும்  தக்க சூழ்நிலையை உணர்ந்து, அதற்கேற்ற கருவிகளோடு வினைசெயல்வகையை மேற்கொண்டு சிறந்த  தூதின் மூலம், நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு, தக்க நேரத்தையுணர்ந்து தன் கடமையை முடித்திட, அதிகாரத்தில் உள்ளவர்களின் உதவியோடு, நெருப்பினை பயன்படுத்தும் அளவினைப்போல் மன்னரைச் சேர்ந்தொழுகினால் சிறப்பான வாழ்வு மலரும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

          மற்றவர்களின் முகத்தை கவனித்தே குறிப்பறிதல் மூலமும் மேலும் ஆர்வத்தோடு ஒத்த உணர்வுடையவர்கள் அவையறிந்தும், அதன் அளவை மீறாமலும் அவையஞ்சாமையோடு தனது  பேச்சாற்றலால் தான்   கற்றுணர்ந்ததை சிறப்பாக எடுத்துக்கூறி, நல்ல ஆட்சியினையும் வளங்களை பெருக்குதலையும்   நிலை நிறுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக வேண்டும் என வள்ளுவனார் வரையறுக்கிறார்.

          பகைவர்களை வெற்றி கொள்ளும் அரணுடையதாக நாட்டினை நிர்வகித்து, அடைய வேண்டிய பொருளை, பொருள் செயல் வகையை கருத்திற் கொண்டும் வழிநடத்தும் நல்ல ஆட்சிக்குரிய படைமாட்சியோடும், தோல்வியடையாத படைச்செருக்கோடும் தவறை எடுத்துக்கூறவல்ல  நிறைவான நல்ல நட்போடு  நாட்டை ஆளவேண்டும் என வள்ளுவனார் கூறுகிறார்.

          மேலும் கேடு நினைக்கும் உறவு பாராட்டாத நட்பை ஆராய்ந்தும், பழைமை மறவாத நட்பினை வளர்த்தும் பண்பில்லாதவரின் தீநட்பையும் போலியான சிரிப்புடையவர்களின் கூடா நட்பையும், அலட்சியத்தால் தவறவிடும் பேதைமையை கலைந்தும், அறிவில்லாதவரைப் போல் புல்லறிவாண்மையோடு இல்லாமல், நடுநிலை தவறாமல் எவரையும் இகழக் கூடாதென வள்ளுவனார் கூறுகிறார்.

          வலிமையானவர்கள்  பகைமாட்சியோடு நடந்து, எதிரியின் பகைத்திறம் தெரிந்தும் மேலும் தங்குள்ளாகவே  உட்பகை வளர்க்காமல் இருக்கவும் சொல்லி,  வழிகாட்டும் பெரியாரைப் பிழையாதும் மதித்தும் நடந்தால், நற்கதி அடையலாம் என்றும் வள்ளுவனார் சொல்கிறார்.

          பெண் ஏவும் வேலையை செய்து கொண்டு, பெண்வழிச் சேர்ந்தவன் சிறப்படைய முடியாததைப் போலவே, பொருளுக்காய் உடலின்பம் தரும் வரைவின் மகளிரை நாடுபவன் சிறப்புற முடியாது. கள்ளுண்ணாமையோடும் சூதாடாமலும் ஒருவர் வாழ்ந்தால், அவர் எக்காலத்திலும் எவ்வித  உடல் உபாதையின்றியும் உணவே மருந்தென்றும் இன்புற்று வாழலாம்.

         சுயக்கட்டுப்பாடு கொண்ட குடிமையில் பிறந்தவர், மானம் என்பதை தன் உயிராய் மதிப்பர். பெருமிதம் இல்லாமல் பணிவுடன் நடந்து பெருமை அடையும் அவர்கள், சான்றாண்மையோடும் பண்புடைமையோடும் வாழ்ந்து சிறப்படைவர். தன்னிடம் உள்ள பொருளை நன்றியில் செல்வமாய், பிறர்க்கு கொடுத்து உதவியும், தன்மீது பழி ஏற்படுமானால் அதற்காக நாணுடைமையும் கொள்வர்.

         à®…வர்கள் குடியின் செயல்வகை அறிந்ததனால்,  குடும்பத்தை முன்னேற்றப் பாதையில் உயர்த்துவர். மேலும்  வாழும் முறையறிந்தவர்களின் தொழிலான, விவசாயத்தினை உழவால் சிறப்பு செய்து, உலகிற்கே உணவிடும் உன்னதம் செய்வதனால், மக்கள் உழுவோரின் பின் செல்வர். நல்குரவாகிய வறுமையை அடைந்தவரும், பிறரிடம் சென்று கேட்கும்  இரவு நிலையை அடைந்தால், அந்த  இரவச்சத்தினால் கெடுதலே உண்டாகும். மேலும்  மக்களைப் போன்ற கயமை குணத்தாரால் உலகம் சீர்கெடும் என்றும் வள்ளுவனார் எச்சரிக்கிறார்.

          இப்படி பொருட்பாலில் வள்ளுவனார் பல குறள் மூலம் நல்ல விசயங்களை பதிவு செய்துள்ளார். எனவே அனைவரும் நல்ல அறத்தோடு கூடிய பொருளினை அடைந்து நாட்டின் வளர்ச்சியினை பேணிக்காத்து வாழ்வின் பயனை அடைய வள்ளுவத்தை சிந்தித்து செயல்படுவோம். நலம் வாழ்வோம்.

 

பொருட்பால்

அதிகாரம் முற்றும்.

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௦௯, தகையணங்குறுத்தல் (109)

 à®…ணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. (1081)

௧, தேவதைகள் விரும்பும் அழகிய மயிலோ பொன்னால் ஆன வடிவோ பெண்களின்பால் ஈடுபாடு அடையும் என் நெஞ்சே. 

 

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 

தானைக்கொண் டன்னது உடைத்து. (1082)

௨, பார்த்தாள் நேருக்கு நேர் பார்க்க, தாக்க வந்த தேவதை படை கொண்டு ஒன்றும் இல்லாதபடி செய்தது.

 

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 

பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)

௩, முன்னர் அறியாமல் இருந்தேன் எமன் என்பதை இனி அறிந்தேன் பெண் என்ற மீட்டெடுக்கும் திறன் கொண்டவளின் போர் தொடுக்கும் பார்வையால். 

 

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 

பேதைக்கு அமர்த்தன கண். (1084)

௪, பார்ப்பவரின் உயிரை உண்ணும் தோற்றமுடன் பெண்ணாகிய பேதைக்கு அமர்ந்திருக்கின்றது கண். 

 

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 

நோக்கஇம் மூன்றும் உடைத்து. (1085)

௫, அழிக்கும் எமனோ? வசியம் செய்யும் கண்ணோ? அடிமைப்படுத்தும் பிணையோ? கன்னியின் நோக்கம் இம் மூன்றும் இணைந்தே இருக்கிறது.

 

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் 

செய்யல மன்இவள் கண். (1086)

௬, ஆசையைக் கொடுக்கும் புருவம் வளையாமல் நிமிர்ந்து கோடாக மறைத்தால் நடுக்கம் இல்லாமல் செய்யும் இவள் கண். 

 

 

 

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 

படாஅ முலைமேல் துகில். (1087)

௭, கட்டுக்கு அடங்காத ஆண் யானை மேல் அணியப்பட்ட கட்படாம் போல் மாதர்க்கு நிலைத்து நிற்காது முலைமேல் துகில். 

 

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 

நண்ணாரும் உட்கும்என் பீடு. (1088)

௮, பொருந்துவதற்காய் உடைந்ததே, போர்களத்தில் எவரையும் அஞ்சமடையச் செய்யும் என் வலிமை. 

 

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு 

அணிஎவனோ ஏதில தந்து. (1089)

௯, உடன் இசைந்தவரிடத்தில் குனிந்த பார்வையும் நாணமும் உடையவளுக்கு அணிவதற்கு வேறு எதை தருவது. 

 

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று. (1090)

௧௦, உண்டவர் இடத்தில் அல்லது மயக்கம் தராது போதைப் பொருள்கள் காமம் போல் கண்டாலே மகிழச் செய்வது இல்லை.

 

அதிகார விளக்கம்!

 

     பெண்மையை கண்டு நெஞ்சம் அடையும் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ள இந்த அதிகாரம் மறைமுகமாக இறைமையை அடைந்தவனின் தன்மையை விளக்குகிறது. தேவதைகளால் விரும்பப்படும் மயிலாக என் நெஞ்சம் பெண்களால் கவரப்படுகிறதே. பார்வை ஒன்றே படை கொண்டு அழித்து ஒன்றுமற்றவனாய் என்னை தன்வசம் செய்ததே. உயிர் எடுக்கும் ஒருவன் இருப்பதை முன் அறியவில்லை அதை இவள் உணர்த்தினாள். உயிர் உணர்த்தும் கண் உயிர் எடுக்கவும் செய்யும், பேதையாக இருந்தால். எனவே அழிக்கும் எமனாக, அடிமைப் படுத்தும் பிணையாக, வசப்படுத்தும் பொருளாக பெண்ணின் கண்கள் உள்ளன. வளைந்த புருவம் வில்லாக என்னை தாக்காமல் இருக்குமோ?. அடங்கா யானைமேல் கல்பதங்கம் நிற்காததைப் போல் மார்பை மறைக்கும் துணி தடுமாறுகிறது. அவளோடு பொருத்துவதற்கு என்றே என் வலிமை குன்றியதோ?. போதை ஏற்றும் பார்வையும், நாணமும் தவிர இவளுக்கு வேறு சிறந்த அணிகலன் தேவையில்லை.  à®‡à®±à¯ˆà®¤à®¾à®•à®®à¯ அல்லது காமம் மட்டும் கண்டாலே போதை தரும். 

 

காணொளி:-

https://youtu.be/A_Py-IugCSg

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௧௦, குறிப்பறிதல் (110)

 

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. (1091)

௧, இருவகை நோக்கு இவளின் கண்கள் பெற்றுள்ளது, ஒரு நோக்கு நோய் உண்டாக்குகிறது மற்றோன்று அந்த நோய்க்கு மருந்து.

 

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 

செம்பாகம் அன்று பெரிது. (1092)

௨, சிறிய அளவுள்ள கள்ள விழிப் பார்வை காமத்தில் சரிபாதி அல்ல அதனைவிட பெரிது.

 

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 

யாப்பினுள் அட்டிய நீர். (1093)

௩, பார்த்தாள் பார்த்து வணக்கமுடன் குனிந்தால் (இறைஞ்சினாள்) அச்செயல் காதல் பயிர் வளர பாய்ச்சிய நீர்.

 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 

தான்நோக்கி மெல்ல நகும். (1094)

௪, நான் பார்க்கும் நேரம் நிலத்தை பார்த்தவள் பார்க்காத நேரத்தில் என்னை பார்த்து மெல்ல சிரிக்கிறாள்.

 

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 

சிறக்கணித்தாள் போல நகும். (1095)

௫, காதல் குறிக்கொண்டு நோக்காமல் மாறாக ஒருகண் சிறக்கணித்தாள் (கண்ணடித்தல்) போல மெல்ல சிரிக்கிறாள்.

 

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 

ஒல்லை உணரப் படும். (1096)

௬, உறவற்றவர் போல் பேசினாலும் விட்டு விலகாத சொல் விரைவில் உணரப்படும்.

 

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. (1097)

௭, விலகாத சிறிய சொல்லும் விலக்கச் செய்யும் பார்வையும் உறவற்றவர் போன்ற உறவு பாரட்டுவதற்கான குறிப்பு.

 

 

 

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் 

பசையினள் பைய நகும். (1098)

௮, இணக்கம் உண்டா என்று மாணவனாகிய நான் நோக்கப் இசைவினால் உடனே சிரித்தாள்.

 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 

காதலார் கண்ணே உள. (1099)

௯, à®Žà®¨à¯à®¤à®µà®¿à®¤ உறவும் இல்லாதவர்கள் போல் பொதுவான பார்வை பார்ப்பது காதலர்கள் இடத்தில் உண்டு.

 

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 

என்ன பயனும் இல. (1100)

௧௦, கண்ணோடு கண் இணையாக பார்த்து உறவாடினால் வாய்ச்சொற்கள் பயன் அற்றுப் போகின்றன.

 

அதிகார விளக்கம்!

 

     நோய் உண்டாக்கவும் அதை தீர்க்கும் மருந்தாகவும் உள்ள இவளின் கண் மறைமுக நோக்கத்திற்கு சரிபாதியல்ல அதைவிட அதிகமானது. காதல் பயிர் வளர்க்கும் அவள் பார்வை நான் வானம் பார்க்கையில் என்மேலும் அவளை பார்க்கையில் மண் மேலும் இருக்கும். ஒரு கண் இமைத்து அவள் காதலை உணர்த்தினாள். அவளது சொல் உறவற்றதாக இருந்தாலும் என்னை விலகாமல் இருந்தது. விலகாத சொல்லும் விலகும் பார்வையும் புதிய குறிப்பாக இருந்தது. ஏதுமற்ற பொதுப்பார்வை காதலர் கண்ணுக்கு உண்டு. கண்ணும் கண்ணும் கலந்தால் வார்த்தைகள் பயன் அற்றுப் போகின்றது.

 

காணொளி:-

https://youtu.be/W2U0dQ_emN0

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௧௧, புணர்ச்சி மகிழ்தல் (111)

 à®•à®£à¯à®Ÿà¯à®•à¯‡à®Ÿà¯à®Ÿà¯ உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 

ஒண்தொடி கண்ணே உள. (1101)

௧, பார்த்து கேட்டு சுவைத்து நுகர்ந்து தொட்டு அறியும் ஐந்து பொறிகளும் ஒன்றாய் கூடி அனுபவித்தல் உன்னிடத்தில் உள்ளது.

 

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 

தன்நோய்க்குத் தானே மருந்து. (1102)

௨, à®ªà®¿à®£à®¿à®•à¯à®•à¯ மருந்துகள் மாறுபட்டே இருக்கும் மெல்லியளாள் உண்டாக்கும் பிணிக்கு அவளே மருந்து.

 

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 

தாமரைக் கண்ணான் உலகு. (1103)

௩, முழு ஓய்வுக்காய் மென்மையான தோள் உடையாளுடன் உறங்குவதைப் போன்ற இனிமையானது உண்டோ மாறுபட்டதைக் காண்பவர் உலகில்.

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 

தீயாண்டுப் பெற்றாள் இவள். (1104)

௪, à®µà®¿à®²à®•à®¿à®©à®¾à®²à¯ அழிவும் நெருங்கினால் இதமான குளிர்ச்சியும் தரும் தீ ஒன்றை பெற்றுள்ளாள் இவள்.

 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட் டார் கதுப்பினாள் தோள். (1105)

௫, வேண்டிய பொழுது இன்பம் தந்து உதவிடும் ஒன்றைப் போலவே மலர்க் கூந்தல் விளையாடும் தோள்.

 

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு 

அமிழ்தின் இயன்றன தோள். (1106)

௬, ஒவ்வொரு பொழுதும் உயிர் வளர்க்கத் தீண்டுவதால் பேதைக்கு அமிழ்தைப் போன்ற இயல்புடைய தோள்.

 

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் 

அம்மா அரிவை முயக்கு. (1107)

௭, à®¤à®©à¯à®©à¯à®Ÿà®©à¯ இருந்து தன் உழைப்பால் உண்டானதை பகிர்ந்து உண்ணும் மாபெரும் மகிழ்ச்சி பருவ பெண்ணின் முயக்கத்தில் இருக்கிறது.

 

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை 

போழப் படாஅ முயக்கு. (1108)

௮, காதலில் வீழும் இருவர்க்கு இனிமையானது காற்றும் இடை புகாத முயக்கம்.

 

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் 

கூடியார் பெற்ற பயன். (1109)

௯, சிறிய பிணக்கு, தேவை உணர்தல், புணர்ந்து மகிழ்தல் இவைகள் காமத்துடன் கூடி இணைந்தவர் பெற்ற பயன்.

 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 

செறிதோறும் சேயிழை மாட்டு. (1110)

௧௦, அறியும் தருணமெல்லாம் தன்னிடம் உள்ள அறியாமை கண்டறிவதைப் போல் காமத்துடன் உயர்ந்தவளை அணுகும் தருணமெல்லாம்  à®‰à®£à®°à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

அதிகார விளக்கம்!

 

     கண்டு கேட்டு சுவைத்து முகர்ந்து தொட்டு கூடி மகிழ்தல் பெண் இடத்தில் மொத்தமாக உள்ளது. நோய் உண்டாக்கிய ஒன்றுக்கு வேறு ஒன்றே மருந்து பெண் இவளோ நோய் செய்து மருந்தாகவும் இருக்கிறாள். பெண்ணுடன் உறங்குதை போல் இனிமையான ஒன்று மாறும் இவ்வுலகில் இல்லை. விலகிச் சென்றால் சுட்டெரிக்கும் புதிய நெருப்பு பெண். அவள் தோள் வேண்டிய பொழுது இன்பம் தரும் என்பதால் அமுதுக்கு ஒப்பானது. இளம் பெண்ணுடன் இணைதல் தன் உழைப்பால் உண்ணும் உணவு போன்றது. காற்றும் இடை புகாத முயக்கம், சிறு பிணக்கு இவை காமத்தின் பயன்கள். அறியாமை அறிந்து அழித்துக் கொள்ளும் பிள்ளை போல் காமத் தொடர்பு செம்மையாக்கும்.  

 

காணொளி:-

https://youtu.be/bnS-TtmFhz4

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௧௨, நலம் புனைந்து உரைத்தல் (112)

 à®¨à®©à¯à®©à¯€à®°à¯ˆ வாழி அனிச்சமே நின்னினும் 

மென்னீரள் யாம்வீழ் பவள். (1111)

௧, à®¨à®²à¯à®² நிலையில் வாழும் அணிச்ச மலரே உன்னைக் காட்டிலும் மென்மையானவள் என்னை வீழ்த்துபவள்.

 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் 

பலர்காணும் பூவொக்கும் என்று. (1112)

௨, மலர் கண்டு நிலைத்து பார்க்கும் நெஞ்சே இவள் கண் பலரைப் பார்க்கும் பூப்போல் எண்ணி மயங்குகிறாயோ.

 

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. (1113)

௩, முறிந்துவிடும் அளவிற்கு இளகுவான உடல், மென்மையான முத்தம், சிறு சப்தமுடன் சிலுங்கல், என்மிது கொள்ளும் ஆர்வம், அவளது வாசனை, வேல் போன்ற கண், மூங்கில் போன்ற தோள் என பல சிறப்பு அவளுக்கு.

 

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 

மாணிழை கண்ணொவ்வேம் என்று. (1114)

௪, à®•à®¾à®£à®®à¯à®Ÿà®¿à®¯à¯à®®à¯ என்றால் குவளையும் கவிழ்ந்து நிலத்தை நோக்கும் உன்னத இழை கொண்ட கண்களுக்கு ஒப்பமாக மாட்டோம் என்று.

 

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 

நல்ல படாஅ பறை. (1115)

௫, அனிச்சப்பூவை காம்பு களையாமல் பறித்தது போன்ற மென்மையான கழுத்துடையாளுக்கு நல்லதல்ல பறை. ( இசைக்கு ஒடிந்து விடும் மென்மையான கழுத்து இவளுக்கு).

 

மதியும் மடந்தை முகனும் அறியா 

பதியின் கலங்கிய மீன். (1116)

௬, முழு நிலவையும் பருவ பெண்ணின் முகத்தையும் வேறுபடுத்தி அறியாமல் நிலை கலங்கியது மீன்.

 

 

 

 

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல 

மறுவுண்டோ மாதர் முகத்து. (1117)

௭, குறைந்து நிறையும் நிலையற்ற நிலாவினைப் போல் மாறுபாடு உண்டோ மங்கை முகத்திற்கு.

 

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் 

காதலை வாழி மதி. (1118)

௮, பெண்கள் முகம் போல் ஒளிவிட திறன் உண்டாக வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலாவே.

 

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 

பலர்காணத் தோன்றல் மதி. (1119)

௯, மலர் போன்ற கண்களைக் கொண்டவள் போல் முகம் ஒத்து இருக்கும் பொழுது பலர்காணத் தோன்று நிலவே.

 

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் 

அடிக்கு நெருஞ்சிப் பழம். (1120)

௧௦, அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் பெண்களின் பாதத்திற்கு நெருஞ்சிப் பழத்தின் முள்போல் வலி உண்டாக்கும்.

 

அதிகார விளக்கம்!

 

     காதலின் நலத்தை கூட்டி சொல்வதாக அமைந்த இந்த அதிகாரத்தில் அனிச்ச மலரின் மென்மையிலும் மென்மையான பெண் தன்னை வீழ்த்துகிறாள் என்றும், அவளது கண் மலர் பலர் கண்டு வியக்கும்படி உள்ளது என்றும், உடல் முறிந்துவிடும் முத்தமும் வெறி கூட்டும் வாசணையும் வேல் போன்ற கண்ணும் மூங்கில் போன்ற தோளும் அவளுக்கு என்றும், அவளின் கண் அழகால் குவளையும் தலை கவிழும் என்றும், ஓசை கேட்டு முறியும் கழுத்து என்றும், அவளின் முகமும் நிலவும் பார்த்த மீன் கலக்கம் அடைந்தது என்றும், நிலைவை போல் குறை பெண்ணுக்கு இல்லை என்றும், நிலவும் ஒளிவிட வேண்டும் என்றால் காதலை வாழ்த்து நிலவே என்றும், மலர்ந்த கண் போல் முழுமையாக தோன்று நிலவே என்றும், அனிச்சமும் அன்னத்தின் இறகும் பெண்ணின் பாதத்திற்கு வலி உண்டாக்கும் என்றும் உரைக்கிறார்.

 

காணொளி:-

https://youtu.be/dR_8-Jq9htg

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௧௨, நலம் புனைந்து உரைத்தல் (112)

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 

வாலெயிறு ஊறிய நீர். (1121)

௧, பால் உடன் தேன் கலந்ததைப் போன்றது பண்புடன் பேசும் பற்களில் ஊறிய நீர். 

 

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 

மடந்தையொடு எம்மிடை நட்பு. (1122)

௨, உடம்பும் உயிரும் எப்படியோ அப்படியே பருவப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள நட்பு. 

 

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் 

திருநுதற்கு இல்லை இடம். (1123)

௩, கருமணியில் இருக்கும் பாவையே நீ போய்விடு கண்ணில் படும் அழகிய நெற்றியுடைவள் இருக்க இல்லை இடம்.

 

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் 

அதற்கன்னள் நீங்கும் இடத்து. (1124)

௪, வாழ்தலுக்கு உயிர் போன்று வளம் தருபவள் சாதல் அதற்கு காரணமாக நீங்கும் இடத்து இருக்கிறாள். 

 

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் 

ஒள்ளமர்க் கண்ணாள் குணம். (1125)

௫, நினைப்பதில்லை நான் காரணம் மறப்பதை மறந்தும் அறியவில்லை ஒளி பொருந்திய கண்ணாள் குணத்தை. 

 

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா 

நுண்ணியர்எம் காத லவர். (1126)

௬, கண்களை மூடினாலும் மறைந்து போகமாட்டார் ஆகையால் இமைப்பதால் விலகமாட்டார் அவ்வளவு நுட்பமானவர் என் காதலவர். 

 

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் 

எழுதேம் கரப்பாக்கு அறிந்து. (1127)

௭, கண்களின் உள்ளே காதலர் இருப்பதால் கண்களுக்கு மை எழுதுவதில்லை மறைத்துவிடும் என்பதை அறிந்து. 

 

 

 

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. (1128)

௮, நெஞ்சில் நிறைந்து என் காதலர் இருக்க சூடாக உண்ண அஞ்சுகிறேன் வெப்பம் தாக்கும் என்பதை அறிந்து. 

 

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே 

ஏதிலர் என்னும்இவ் வூர். (1129)

௯, இமைத்தால் மறைந்து விடுவார் என்று அறிந்து இமைக்காமல் இருப்பதால் ஒட்டுமொத்தமாக அவரை அன்பற்றவர் என்னும் இவ்வூர். 

 

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் 

ஏதிலர் என்னும்இவ் வூர். (1130)

௧௦, விருப்பமுடன் எனது உள்ளத்தில் என்றும் இருக்கிறார் பிரிந்து இகழ்ந்து இருக்கிறார் என்று பழிக்கும் இவ்வூர். 

 

அதிகார விளக்கம்!

 

     பாலில் தேன் கலந்தது போல் முத்தம் தித்திக்கும். உடலும் உயிரும் கலந்தது போல் கலந்த அவள் கண்மணியின் கருவிழியை கடந்து நெற்றியிலும் நிறைகிறாள். வாழ்தலுக்கான உயிராக இருந்து காக்கிறாள். அவளை மறக்கவே இல்லை எனவே நினைப்பதும் இல்லை. அவரோ கண்ணை விட்டு விலகுவது இல்லை, மை கொண்டு மறைக்கவும் இயலவில்லை, நெஞ்சில் நிலைப்பதால் வெப்பமான உணவு உட்கொள்ளவில்லை. கண்ணையும் இமைக்காமல் அவரை காப்பதால் அன்பற்றவராக இந்த மனிதர்கள் அவரை நினைக்கிறார்கள். அவரோ என் உள்ளத்தில் நீங்காமல் இருக்கிறார்.  

 

காணொளி:-

https://youtu.be/U0pxLHl9sww

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௧௪, நாணுத் துறவு உரைத்தல் (114)

 

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி. (1131)

௧, காமம் பழகி பின் ஒரு காரணத்தால் வருந்தும் ஒருவருக்கு பாதுகாப்பு பணிமுறை முடங்கல் இன்றி வலி தீராது.

 

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து. (1132)

௨, தாங்கமுடியா காமத்தால் உடம்பும் உயிரும் அச்சப்பட வேண்டிய மடலேறும் எனவே நாணத்தை விலக்கி வை.

 

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல். (1133)

௩, நாணத்துடன் நல்ல ஆண்மையோடு முன்னர் இருந்தேன் இன்றோ காமத்தால் காமுற்றவர் ஏறும் மடல் அடைந்தேன்.

 

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு

நல்லாண்மை என்னும் புணை. (1134)

௪, காமம் என்ற கடுமையான நீர் பெருக்கு அழித்துவிடும் வாழ வைக்கும் நாணத்துடன் நல்ல ஆண்மை என்னும் தோணியை.

 

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர். (1135)

௫, வளையல் அணிந்த விளையாட்டுப் பெண் தந்தாள் மடலொடு மாலை நேரத்துத் துயரத்தையும்.

 

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண். (1136)

௬, மடலூர்தலை நள்ளிரவிலும் நினைக்கிறேன் காரணம் மாற்ற முடியாத வேதனையை அடைந்தது இளம்பெண்ணாள் என் கண்.

 

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்கது இல். (1137)

௭, கடல் அளவு காமத்தில் ஆட்பட்டாலும் மடலேறாப் பெண்ணின் பெருமை போன்று ஒன்று இல்லை.

 

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும். (1138)

௮, நிறைவை அறியாதவர் மதிக்கத் தாகாதவர் என அறியாது காமம் மறைக்க முடியாமல் வெளிப்படும்.

 

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு. (1139)

௯, எல்லாரும் அறியமுடியாது என்றே என் காமம் மறைக்க முடியாமல் மறைந்திருப்பதாக சபலமடைகின்றது.

 

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு. (1140)

௧௦, நாம் கண்ணில் பார்க்கும் படியே நகைப்பர் அறிவல்லாதவர் நாம் பட்டதை அவர்கள் படாதபடி மாற்று வழியில் நடப்பதால்.

 

அதிகார விளக்கம்!

 

காமத்தின் வலி போக மடல் ஏறுதல் ஒருவகை தீர்வு தரும். இதை தவிர்க்க வெட்கத்தை விலக்கிடச் செய்யவேண்டும். நாணமும் நல்ல ஆண்மையும் காமத்தால் மடல் ஏறும். காமம் என்ற கொடிய வெள்ளம் நாணம் என்ற படகை கவிழ்த்துவிடும். மாலை நேரத்து துன்பத்தை வளையல் அணிந்தவள் தந்தாள். எந்த வேலையும் செய்யமுடியாத மடல் அடைந்தேன் பேதை அவளை என் கண் கண்டதால். கடல் அளவு காமம் இருந்தாலும் மடல் அடைய பெண் பெருமைக்குரியவள். நிறைவு அடையாதவர் மதிக்கத் தகுந்தவர் இல்லை என்பதை அறியாமல் மறையாமல் காமம் வெளிப்படுகிறது. நம் ஏக்கம் அறியாதவர் நம் கண்ணில் படும்படியே நகைப்பர்.

 

காணொளி:-

https://youtu.be/srDSjJ9nLpM

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | களவியல் | ௧௧௫, அலர் அறிவுறுத்தல் (115)

 

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால். (1141)

௧, வதந்தி பரவுவதால் காதல் வெற்றி பெறும் என்று பலர் அறியாத காரணத்தால் ஆருயிர் நிற்கிறது.

 

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர். (1142)

௨, மலர் போன்ற கண்களை உடையவளின் பெருமை அறியாமலேயே வதந்தி பேசி உதவியது இவ்வூர்.

 

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (1143)

௩, உடனே நடக்காதோ ஊர் அறிந்த பழிச்சொல் அதனை பெற்றிடாதோ பெற்றால் பழிச் சொல்லும் நீர்த்து விடும்.

 

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து. (1144)

௪, பழிச்சொல்லால் பழிக்கபடுவது காமம் அப்படி இல்லை என்றால் வளர்ப்புத் தாய் இன்றி அதன் தன்மை இழந்துவிடும்.

 

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது. (1145)

௫, களிக்கும் இன்பம் தேவைப்படும் பொழுது கள் உண்ண வேண்டும் என்பதைப் போல் காமம் வெளிப்படும் பொழுதெல்லாம் இனிமையாகிறது.

 

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று. (1146)

௬, கண்டது என்பதோ ஒருநாள் தான் அலர் என்பதோ சந்திர கிரணம் போல் வெளிப்பட்டு விட்டது.

 

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய். (1147)

௭, ஊரார் பழிச் சொல் உரமாக அன்னையின் சொல் நீராக நீண்டு வளர்கிறது காமம் என்ற இந்நோய்.

 

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல். (1148)

௮, நெய்யால் எரியும் நெருப்பை அடக்குவது எப்படியோ அப்படியே பழிச் சொல்லால் காமம் அடக்க முயல்வது.

 

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை. (1149)

௯, வதந்திக்கு விலகுவதோ அஞ்சதே என்றவர் பலரும் பழிக்கும்படி பிரியாமல் கூடி பிரிவதை இறுதியாக்கினார்.

 

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர். (1150)

௧௦, தானாகவே விருப்பமுடன் வருவார் என் காதலர் நான் விரும்பிய வதந்தியை இவ்வூர் பரப்புவதால்.

 

அதிகார விளக்கம்!

 

பலர் பேசுவதால் காதல் வாழும் என ஆருயிர் அறிவது ஒரு பாக்கியம். இறை உணர்ந்தவன் என்பவனும் காதல் வசப்பட்டவன் என்பதால் உயிருக்கு இது இன்பம். மலர் போன்ற கண்ணின் அருமை அறியாமல் வதந்தி பேசும் இந்த ஊர். ஊரார் சொல்படி காதல் ஈடாகட்டும் அவர்களே காதலாகிய இறை பற்றை வளர்க்கும் தாய் போன்றவர்கள். மகிழ்ந்து இருக்க மதுவை தேடுவது போல் காமம் தோன்ற இன்பம் உண்டாகிறது. சும்மா ஒரு நாள் பார்த்ததற்கு கிராணம் போல் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஊரார் பேச்சி எருவாக அம்மாவின் பேச்சி நீராக காதல் பயிர் வளர்ந்தது. நெய் கொண்டு நெருப்பை அணைப்பது போன்றது காதலை பழித்து அழிக்க நினைப்பது. வதந்திக்கு முற்றாய் பிரிவதை தவிர்த்தார். இவ்வூர் மக்கள் வதந்தியால் என் காதலர் என்னை வந்தடைந்தார்.

 

காணொளி:-

https://youtu.be/uh1pJBeHvKU

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௧௬, பிரிவு ஆற்றாமை (116)

 à®šà¯†à®²à¯à®²à®¾à®®à¯ˆ உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை. (1151)

௧, பிரியமாட்டாய் என்றால் எனக்குச் சொல் மற்றபடி நீ திரும்ப வரும்வரை வாழ்வார்க்குச் சொல்.

 

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு. (1152)

௨, இன்பம் அளிக்கும் அவரது பார்வை பிரிவை நினைக்க துன்பம் உடைய கூடுதலாக இருக்கிறது.

 

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான். (1153)

௩, அறிவுள்ளோர்க்கும் தேற்றிக் கொள்ளவது அரிதாக இருக்கிறது பிரிவு ஓரிடத்தில் உண்மையாகி விடுவதால்.

 

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

தேறியார்க்கு உண்டோ தவறு. (1154)

௪, இன்பம் அளித்து அஞ்சதே என்று சொன்னவர் பிரிந்தார் என்றால் அவரது தெளிவான சொல்லை கேட்டு தேறியவர்க்கு உண்டோ தவறு.

 

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்

நீங்கின் அரிதால் புணர்வு. (1155)

௫, உறவு பாராட்டுபவர் பிரிவு ஏற்படாதபடி உறவு பாராட்டவேண்டும் மற்றபடி விலகிவிட்டால் அரிதாகிவிடும் கூடுதல்.

 

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை. (1156)

௬, பிரிவை சொல்லும் அளவிற்கு கடுமையானவராக இருப்பவர் என்றால் அரியதுதான் அவர் நல்லன செய்வார் என்ற நப்பாசை.

 

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை. (1157)

௭, இன்பதுன்ப போக்குவரத்திற்கு காரணமான துறைவன் என்னை விட்டு விலகியதை நான் தூற்றாமல் இருந்தாலும் இடம் விட்டு நகராத முன்கை வளை இருக்காது.

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு. (1158)

௮, துன்பமானது இசைவு இல்லாத ஊரில் வாழ்வது அதனினும் துன்பாமனது இனிமையானவரின் பிரிவு.

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ. (1159)

௯, தொட்டால் சுடும் மற்றபடி காம நோய் போல் விலகி இருக்க சுடும் ஆற்றல் கொண்டதா தீ.

 

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர். (1160)

௧௦, அரிய செயல்கள் செய்து கடினமான வேதனையை விலக்கி பிரிவை ஏற்று அதன் பின் வாழ்ந்துக் கொண்டு இருப்பவர் பலர்.

 

அதிகார விளக்கம்!

 

பிரிந்து போகமாட்டாய் என்றால் என்னிடம் சொல் பிரிவதாக இருந்தால் அதை தாங்குபவர் இடத்தில் சொல். இன்பம் தந்த அதே கண் பிரிவை நினைத்து துன்பத்தை தருகிறது. அறிவு நிறைந்தவருக்கும் அரிது பிரிவு என்ற உண்மையை கண்டு தன்னை தேற்றிக்கொள்ள. அஞ்சாதே என்று ஆறுதல் சொல்லி பிரிந்தால் துன்பப்படுதல் தவறாகுமா?. பிரிவு உறவை முறிக்கும். பிரிய முடியும் என்றால் நன்மை செய்வது சாத்தியம் இல்லை. நடக்கும் செயல்களுக்கு அஞ்சி துறந்தவர் கைகளும் இறையை இறஞ்சும் என்றால் அது எப்படி உண்மையாகும். மாறுபட்ட மனிதர்களுடன் வாழ்வதை விட துன்பமானது இனிமையான துணையை பிரிந்து வாழ்வது. விலகி இருப்பதால் சுட்டெரிக்கும் காமத்தீயே தீயை விட கொடியது. அரிதான பிரிவை கடந்து அதன்பின் இனிதாக வாழ்பவரும் உண்டு.  

 

காணொளி:-

https://youtu.be/W-CPciy9JNQ

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௧௭, படர் மெலிந்து இரங்கள் (117)

 à®®à®±à¯ˆà®ªà¯à®ªà¯‡à®©à¯à®®à®©à¯ யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும். (1161)

௧, மறைத்து விடலாம் என முயல்வேன் என் நோயை ஆனால் இறைக்க சுரக்கும் ஊற்று நீர் போல் மிகுந்து விடுகிறது.

 

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும். (1162)

௨, மறைத்து விடவழி இல்லை இந் நோயை நோய் உண்டாக்கியவர்க்கு உரைப்பதும் வெட்கம் தரும்.

 

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து. (1163)

௩, காமமும் நாணமும் என் மனதில் உயிர் என்ற காவரத் தண்டால் நிலைபெறுகிறது வலி அற்ற உடம்பில் வலி உண்டாக்க.

 

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல். (1164)

௪, காமம் என்ற கடல் சூழும் நிலை உண்டாகும் அதை நீந்திக் கடக்கும் கப்பல்தான் இல்லை.

 

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர். (1165)

௫, வெறுத்தால் என்ன செய்வாரோ? நட்பாய் இருக்கும் பொழுதே வராமல் துன்பம் தருபவர்.

 

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது. (1166)

௬, இன்பத்தை கடல் அளவு மாற்றும் காமத்திற்கு தடை உண்டானால் கடலை விட துன்பம் பெரிதாகி விடும்.

 

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன். (1167)

௭, உடல் வேட்கையான காமம் என்ற பெரும் வெள்ளத்தினை நீந்திக் கரை காண முடியவில்லை நள்ளிரவும் நான் தனித்திருக்கிறேன்.

 

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை. (1168)

௮, வாழும் உயிர்களை எல்லாம் உறங்கச் செய்து இசைவு தந்த இரவே உனக்கு என்னை அல்லாது வேறு துணை இல்லை.

 

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா. (1169)

௯, கேடு செய்யும் கொடியவர்களை விட கொடுமையானது இந்நாள் (துணையின்றி) நீண்ட நேரம் கடந்து கழியும் இரவு.

 

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண். (1170)

௧௦, உள்ளம் போலவே நினைக்கும் இடம் செல்ல முடியும் என்றால் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்குமோ என் கண்.

 

அதிகார விளக்கம்!

 

மறைக்க முடியாதபடி ஊற்று நீராய் வெளிப்படுகிறது என் நோய். இதை உண்டாக்கிய அவரிடம் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. காமமும் வெட்கமும் காவடித் தண்டுபோல் இருந்து என்னை வேதனை அடையச் செய்கிறது. காமக்கடல் நீந்திட ஏதுவான கப்பல் இல்லை. நட்பாய் இருக்கும் பொழுதே வராத அவர் வெறுத்தால் என்ன செய்வாரோ. கடல் அளவு இன்பம் தரும் காமமே தடை உண்டானால் கடலைவிட துன்பம் தருகிறது. காமக் கடல் நீந்த முடியாமல் நள்ளிரவிலும் நான் தவிக்கிறேன். எல்லாவற்றிற்கும் ஓய்வு தந்த இரவு என்னை துணையாக விழுத்திருக்கச் செய்தது. கொடியவர்கள் செய்யும் கொடுமைவிட துணை இல்லா இந்த இரவு கொடுமையானது. உள்ளம் போல் நினைக்கும் இடம் எல்லாம் செல்ல முடியும் என்றால் வேதனையான கண்ணீரில் மிதக்காது என் கண்.  

 

காணொளி:-

https://youtu.be/vObfb7gnGTY

ன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௧௮, கண் விதுப்பு அழிதல் (118)

 

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்

தாம்காட்ட யாம்கண் டது. (1171)

௧, கண்ணே நீ வருந்துவது எப்படி ? மாறாத நோயை தானாகவே கண்டு தனக்குள்ளே வருந்துகிறாய்.

 

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்பது எவன். (1172)

௨, தெரிந்து உணராமல் பார்வையால் விழுங்கிய கண் கருணையின்றி அவசரமாய் அல்லல்படுவது ஏன்.

 

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து. (1173)

௩, வேண்டும் என்று தானாகவே விரும்பிப் பார்த்து விலகவும் செய்கிறது இது நகைப்புக்கு உரியது.

 

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து. (1174)

௪, சொல்லமுடியா நீர் வற்றிய கண் விடைபெறமுடியா பிறவி நோயை என்கண் நிலை நிறுத்திக் கொண்டது.

 

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண். (1175)

௫, உறக்கம் கொள்ள உடன்படாது இருக்கிறது கடலைவிட பெரிய காம நோயை உண்டாக்கிய என் கண்.

 

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது. (1176)

௬, இனிது இனிது எனக்கு இந்த நோய் செய்த கண் தானும் அதில் சிக்கிக் கொண்டது.

 

உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி யவர்க்கண்ட கண். (1177)

௭, அழுது அழுது கண்ணீர் வற்றியது மகிழ்ந்து மகிழ்ந்து விரும்பி அவரைக் கண்ட கண்.

 

 

 

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண். (1178)

௮, உறவு பேணாமல் விலகி ஒருவர் இருக்கின்றார் என்றால் மற்றவர்கள் காணாதபடி அமைதியாக இருக்கவில்லையே கண்.

 

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண். (1179)

௯, வரவில்லை என்றாலும் தூங்குவது இல்லை வந்தாலும் தூங்குவது இல்லை அன்பால் இணைந்தவர் கண்.

 

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து. (1180)

௧௦, மறைத்து வைத்தல் ஊரார்க்கு அரியதாக இருக்கிறது என்றால் என்னைப் போன்ற வெளிப்படையாய் பறைசாற்றும் கண் பெற்றதே காரணம்.

 

அதிகார விளக்கம்!

 

கண் தானாகவே தனக்கு காம நோய் உண்டாக்குகிறது. தெளிவாய் உணராமலேயே கண்டு அல்லல் படுகிறது. வேண்டும் என்று விரும்பி பார்த்து விலகி தவிக்கும் கண்ணின் செயல் நகைப்புக்குரியது. நீர் வடிந்து உலர்ந்த கண் நித்தியத்தை அடையும் காமநோய் கடவுள் மேல் வந்தால், பால் பற்றி வந்தால் பிறவித் தொடர் வரும். பிறவிக் கடல் கடக்கும் வேட்கையால் என் கண் இரவிலும் உறங்க மறுக்கிறது. இனிமையிலும் இனிமை இந் நோய் செய்த கண் இதனுடன் உட்படுவதால். அழுது அழுது கண்ணீர் வற்றினாலும் அவரை கண்டதால் மகிழ்வாய் இருக்கிறது. உறவு பாராட்டாமல் இருக்கவும் செய்யும் இம்மனிதர் இடத்தில் என் கண் அவரை காட்டிவிட்டது. விலகி நின்றாலும் கூடி மகிழ்ந்தாலும் உறக்கம் இல்லை இந்த கண்களுக்கு. மறைத்து வைப்பது ஊரார்க்கு அரிதாக இருக்க காரணம் என்னை போல் வெளிப்படுத்தும் கண் இருப்பதே. 

 

காணொளி:-

https://youtu.be/6f-pzQ7K0Mw

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௧௯, பசப்பு உறு பரவல் (119)

 

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்

பண்பியார்க்கு உரைக்கோ பிற. (1181)

௧, நயம்பட பேசியவர்க்கு ஒப்புக் கொள்ளாமல் உடன்பட்டுப் போனேன் எனவே பசலை படர்ந்ததை பிறர்க்கு எப்படி உரைப்பேன்.

 

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு. (1182)

௨, அவர் தந்தார் என்பதால் இவரைப் போல் என் மேனிமேல் ஊர்ந்து பரவுகிறது பசப்பு.

 

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து. (1183)

௩, அழகையும் வடிவையும் அவர் கொண்டார் கைம்மாறாக நோயும் பசலையும் தந்து.

 

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு. (1184)

௪, நினைத்துக் கொண்டே இருக்கிறேன் மற்றபடி அவரது திறத்தை உரைத்துக் கொண்டு இருக்கிறேன் இருப்பினும் கள்ளத்தனமாகவோ பிற வழியிலோ பசலையும் வந்தது.

 

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்

மேனி பசப்பூர் வது. (1185)

௫, அப்பக்கம் காதலர் பிரிந்து செல்வார் இப்பக்கம் எனது மேனியில் பசலையும் வந்தது.

 

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)

௬, விளக்கை அகற்றியதும் பரவ பார்க்கும் இருளைப் போல் கணவன் முயக்கம் அகற்றியதும் பரவ பார்க்கும் பசப்பு.

 

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (1187)

௭, கூடிக்கிடந்தேன் கொஞ்சம் விலகினேன் அதற்குள்ளாகவே அள்ளிக் கொண்டது பசப்பு.

 

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்

துறந்தார் அவர்என்பார் இல். (1188)

௮, பசலை இவளுக்கு படர்ந்தது என்பதைத் தவிர இவளை காதலன் துறந்தார் என்று சொல்பவர் இல்லை.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின். (1189)

௯, உடலில் பசலை படர்ந்து எப்பாடு பட்டால் என்ன நயமாக பேசி பிரிந்தவர் நல்ல நிலை உடையவர் என்றால்.

 

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின். (1190)

௧௦, பசலை படர்ந்தவள் என்று பெயர் பெறுதல் நன்றே நயமாக பேசி பிரிந்தவர் வாக்கு மாறியவன் என தூற்றார் என்றால்.

 

அதிகார விளக்கம்!

 

நயம்பட பேசி உடன்படாத என்னை ஒப்புக்கொள்ள செய்தார் என்பதால் என் பசலையை யாரிடமும் சொல்ல முடியவில்லை. பசலையோ அவரைப் போல் என்னில் பரவுகிறது. என் அழகையும் நாணத்தையும் அவர் பெற்றுக்கொண்டு நோயும் பசலையும் எனக்கு தந்தார். அவரது திறத்தை எண்ணியபடி இருப்பினும் பசப்பு வருகிறதே. அவர் என்னை பிரியும் பொழுதே பசப்பு தொற்றுகிறதே. விளக்கை அகற்ற இருல் பரவுவது போல் அவர் முயக்கம் முடிந்ததும் பசலை பரவுகிறது. பசலை படர்ந்தது என்றே கூறுகின்றார் காதலன் பிரிந்தான் என கூறுவது இல்லை. எப்படியோ அவர் நன்றாக இருந்தால் போதும். (பசலை என்பது பிரிவு தாங்காமல் தோலில் ஏற்படும் மாற்றம்)

 

காணொளி:-

https://youtu.be/RETt01otJrU

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௦, தனிப் படர் மிகுதி (120)

 

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி. (1191)

௧, தன்னால் ஒருவரை வீழ்த்தி தானும் வீழ்ந்த நிலைப் பெற்றவரே பெற்றவர் காமத்தால் முழுவதும் சுவைக்கத் தகுந்தக் கனி.

 

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி. (1192)

௨, வாழ்வதற்கு வானம் நன்மை பயப்பது போல் காதலில் வீழ்பவற்கு வீழ்பவரே நன்மை அளிக்கின்றார்கள்.

 

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு. (1193)

௩, காதலில் வீழ்பவர் வீழ்த்தியவர் என இவர்களுக்கு அமையுமே நாம் வாழ்கிறோம் என்ற செருக்கு.

 

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின். (1194)

௪, காதலில் வீழ்பவர் நட்புக்கு உகந்தவராக ஏற்கமாட்டார்கள் தன்னால் ஒருவர் காதலில் விழுந்தும் தான் வீழப்படவில்லை என்றால்.

 

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை. (1195)

௫, நாம் காதல் கொண்ட அவர் நமக்கு என்ன செய்ய முடியும் தான் காதல் கொள்ளவில்லை என்றால்.

 

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல

இருதலை யானும் இனிது. (1196)

௬, ஒருதலையாய் இல்லாமல் காமம் என்பது காவடி போல் இருதலையாய் இருப்பது என்றும் இனியது.

 

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான். (1197)

௭, பருவம் பூப்பதையும் தேவை ஏற்படுவதையும் அறியமுடியாத காமத்திற்கான தேவன் ஒருவர் மீது மட்டும் நின்று செயல்படுகிறான்.

 

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல். (1198)

௮, காதலில் வீழ்ந்தவர் இடத்தில் இருந்து இனிமையான சொல் பெறாமல் உலகத்தில் வாழ்பவரை விட வன்மையானவர் இல்லை.

 

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு. (1199)

௯, நாடி வரவில்லை கொடுக்கவில்லை என்றாலும் அவரிடத்தில் வரும் வார்த்தைகள் இசைபோல் இனிமையானது செவிக்கு.

 

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு. (1200)

௧௦, உறவை நாடாதவர்க்கு தான் உற்ற நோயை உரைப்பாய் கடலைத் தூர்பதற்கு முயல்வதைப்போல் என் நெஞ்சே நீ வாழ்க.

 

அதிகார விளக்கம்!

 

தானும் வீழ்ந்து தலைபட்டவரையும் விழச் செய்பவரே காமத்தின் கனி உண்டவர். வானம் போல் கொடுத்து வாழ்த்துவது காதலில் விழுந்தவருக்கு தானும் வீழ்ந்து உதவுவது போன்றது. வீழ்ந்தவர் வீழ்த்தப்பட்டவர் வாழ்கிறோம் என்ற செருக்கு அடைகின்றார்கள். வீழாதவர் காதலுக்கு உகந்தவர் இல்லை. காதலருக்கு காதல் செய்வதே உதவி மாற்று இல்லை. காவடி போல் இருபக்கமும் இருப்பதே காதல். இயற்கை மாற்றம் தரும் காமன் ஒருவர் மேல் செயல்படுகிறான். அருகே நாடி வரவில்லை என்றாலும் அவரது வார்த்தைகள் இசை போன்றது. காதலின் இசை கேட்காதவர் வறுமையான வாழ்வு வாழ்ந்தவர். நெஞ்சே உன்னை வாழ்த்துகிறேன் உறவை நாடாத அவருக்கு சொல் கடலை தூர்க்க முயலும் செயல் என்று.

 

காணொளி:-

https://youtu.be/iIMoAZm54Ik

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௧, நினைத்தவர் புலம்பல் (121)

 

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது. (1201)

௧, நினைத்தாலே அளவற்ற பெருமகிழ்வை உண்டாக்குவதால் மதுவை காட்டிலும் காமம் இனிது.

 

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று இல். (1202)

௨, எப்படி என்றாலும் இனிமையானதே காமத்தில் வீழ்பவர் நினைக்க ஒட்டிக் கொள்ள வரும் ஒன்று இல்லை.

 

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும். (1203)

௩, நினைப்பவர் போன்று நினைக்காமல் என்னைக் கொல்வது தும்மல் சினைப்பது போன்று கெடும்.

 

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர். (1204)

௪, நானும் உள்ளேனா ? அவரது நெஞ்சத்தில். என் நெஞ்சத்தில் அவர் உள்ளதைப் போல்.

 

தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எந்நெஞ்சத்து ஓவா வரல். (1205)

௫, தன் நெஞ்சத்தில் இருக்கும் என்னை கடிந்து கொள்பவர் வெட்கப்படுவது இல்லை என் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருக்க.

 

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்

உற்றநாள் உள்ள உளேன். (1206)

௬, மற்றபடி நான் தன் நெஞ்சத்தில் நினைத்து வாழ வேறு உண்டோ அவரோடு உறவுக் கொண்ட நாட்களைத் தவிர.

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும். (1207)

௭, மறந்தால் என்ன ஆவேனோ? என்பதால் மறப்பதை அறியவில்லை. மற்றபடி நினைப்பும் என் நெஞ்சத்தை சுடுகிறது.

 

 

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு. (1208)

௮, எவ்வளவு நினைத்தாலும் வெறுக்க மாட்டார் அதுவே காதலர் செய்யும் சிறப்பு.

 

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து. (1209)

௯, கேட்டுப் பார் என் உயிர் நீயின்றி வேறில்லை என்றவர் அதன்படி நடக்காததால் வழியின்றி தவிக்கிறேன் நினைத்து.

 

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி. (1210)

௧௦, நெஞ்சத்தை விடாது சென்றவரை கண்ணினால் காண மறையாது இருந்திடு நிலவே.

 

அதிகார விளக்கம்!

 

நினைத்தாலே இனிக்கும் தீராத இன்பம் தரும் காமம் மதுவிலும் மதிப்பானது. எப்படி பார்த்தாலும் நினைத்தாலே இன்பம் தருவது காமம். நினைப்பது போல் நினைக்க மறுப்பது தும்பல் தோன்றி நிற்பது போல் இருக்கும். என் நெஞ்சில் அவர் இருப்பது போல் நானும் அவர் நெஞ்சில் இருப்பேன். அவர் என்னை கடிந்து கொண்டாலும் என் நெஞ்சில் நிலைக்கிறார். உறவோடு இருக்கும் தருணம் தவிர மற்றபடி அவரது நினைப்பிலே இருக்கிறேன். மறந்தால் வாழ்வேனோ தெரியாது என்பதால் மறப்பதில்லை இருப்பினும் நினைப்பும் என் நெஞ்சை சுடுகிறது. நினைத்துக் கொண்டே இருப்பதை வெறுக்காமல் இருப்பதே காதலர் சிறப்பு. உயிரே நீதான் என்றவர் அதன்படி இல்லை என்பதால் நினைப்பால் தவிக்கிறேன். நிலவே மறையாதே நெஞ்சில் இருக்கும் அவரை காண கண்கள் ஏங்குது.

 

காணொளி:-

https://youtu.be/TQ8-xeLntNQ

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் |௧௨௨, கனவு நிலை உரைத்தல் (122)

 à®•à®¾à®¤à®²à®°à¯ தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து. (1211)

௧, காதலரை இணைக்கும் தூதொடு வந்த கனவிற்கு என்ன செய்வேனோ எவ்வகையில் செய்வேனோ விருந்து.

 

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன். (1212)

௨, மீன் போன்ற கண்கள் உறங்கும் நிலையில் காதலரை கலந்தால் உற்ற உண்மையை எப்படிச் சொல்லுவேன்.

 

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர். (1213)

௩, நிகழும் காலத்தில் நெருங்காதவரை கனவில் கண்டு உறவாடுவதால் இருக்கிறது என் உயிர்.

 

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு. (1214)

௪, கனவில் கண்டு உறவாடி மகிழும் காமத்தால் நேரில் நாடாத அவரை நாட காரணமாய் இருக்கிறது.

 

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது. (1215)

௫, நேரில் கண்டு இருந்தது எப்படியோ கனவில் கண்ட பொழுதும் இருந்தது அதே இனிமை.

 

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன். (1216)

௬, நேரில் நிகழ்வது என்று ஒன்றில்லை என்றால் கனவில் காதலர் நீங்காமல் இருப்பார் அன்றோ.

 

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்

என்எம்மைப் பீழிப் பது (1217)

௭, நேரில் நாடி வராத கொடியவர் கனவில் வந்து ஏன் என்னை வருந்தச் செய்வது.

 

 

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. (1218)

௮, உறங்கையில் உறவாடுபவராக இருப்பவர் விழித்தவுடன் நெஞ்சத்திலே நிறைந்து விடுகிறார் விரைந்து.

 

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர். (1219)

௯, நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்வார்கள் யார் எனப் பார்த்தால் அவர்கள் கனவிலும் காதலரை காணாதவர்கள்.

 

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்

காணார்கொல் இவ்வூ ரவர். (1220)

௧௦, நனவினால் நம்மை பிரிந்து இருப்பவர்கள் என்று சொல்கிறார்கள் கனவினால் உறவாடுவதை காணாத இவ்வூர் மக்கள்.

 

அதிகார விளக்கம்!

 

காதலரை இணைக்க வந்த கனவை எப்படி கொண்டாடி மகிழ்வேன். மீன் போன்ற கண்கள் உறங்கும் தருணம் காதலரை கலந்தால் எப்படி உரைப்பேன். நேரில் நெருங்காத என் காதலர் கனவில் கலப்பதால் நிலைக்கிறது என் உயிர். கனவில் என் காமம் நிறைவாகிறது. நேரில் கண்ட சுகம் கனவு தருகிறது. நேரில் நடக்கவே நடக்காது என்றால் கனவில் நீங்காமல் இருக்கலாம். நேரில் வராத கொடிய காதலர் கனவில் வந்து பிழைக்கச் செய்கிறார். உறக்கத்தில் உறவாடி விழிப்பில் நெஞ்சம் நிறைகிறார். நேரில் நெருங்காதவரை நொந்துக் கொள்பவர்கள் கனவிலும் காணதவர்கள். நாங்கள் கூடவில்லை என நினைக்கும் இவ்வூர் மக்கள் கனவில் இணைவதை அறியாதவர்கள்.

 

காணொளி:-

https://youtu.be/SEBAB6rS3C8

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௩, பொழுது கண்டு இரங்கல் (123)

 à®®à®¾à®²à¯ˆà®¯à¯‹ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது. (1221)

௧, மாலைப் பொழுதோ இல்லை மணமானவர்களின் உயிரை உண்ணும் வேலையோ உன்னை வாழ்த்துகிறேன் பொழுதே.

 

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை. (1222)

௨, மாயமாக தாக்கி மயங்கும் மாலைப் பொழுதே வாழ்க எனது உறவுக்குரியவர் போல் கடினமானதோ உன் துணை.

 

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும். (1223)

௩, பனி போல் மெல்ல அரும்பி வேகமாய் வரும் மாலை சிறு துளி அரும்பித் துன்பம் வளர வரும்.

 

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும். (1224)

௪, காதலர் உடன் இல்லாத மாலைப் பொழுது கொலைக் களத்தில் இருக்கும் இரக்கமில்லாதவரைப் போல் வரும்.

 

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்

மாலைக்குச் செய்த பகை. (1225)

௫, காலைப் பொழுதுக்கு என்ன நன்றி செய்தேனோ எப்படி அறிய முடியுமோ மாலைப் பொழுதுக்கு செய்த பகை.

 

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன். (1226)

௬, மாலைப் பொழுது தரும் நோய் எப்படிப்பட்டது என்று மணந்தவர் என்னை விட்டு விலகாத காலத்தில் அறியாமல் இருந்தேன்.

 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய். (1227)

௭, காலையில் அரும்பாகி பகல் பொழுதில் வளர்ச்சி பெற்ற போது என மாறி மாலையில் முழுமையாக மலரும் இந்நோய்.

 

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. (1228)

௮, கருகச் செய்யும் மாலைக்கு தூதாகி தாக்குகிறது தேடுபவன் குழல் போன்ற கொல்லும் படை.

 

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. (1229)

௯, தலைவனின் மருட்சியால் உறவோர்கள் மயங்குவதைப் போல் நிலவு மருண்டு மாலை படர்தரும் போழ்து.

 

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர். (1230)

௧௦, பொருள் தேடி சென்றத் தலைவனை எண்ணி அச்சம் தரும் மாலைப் பொழுதுக்கு அழியும் என் அழியா உயிர்.

 

அதிகார விளக்கம்!

 

மாலையோ இல்லை மணமானவர்கள் உயிர் வாங்கும் வேலையோ எப்படி இருப்பினும் உன்னை வாழ்த்துகிறேன். உன் துணையும் என் துணை போன்று பிரிந்து கூடும் ஒன்றோ பனி போல் துளிர்த்து அரும்புகிறதே. காதலர் இல்லாத பொழுது வரும் மாலை ஒரு கொலைகளத்து ஏதிலர் போல் இருக்கிறது. காலை பொழுதிற்கு நன்றியும் மாலை பொழுதிற்கு பகையும் ஆனாது ஏனோ?. மாலை தரும் துன்பம் அவருடன் இருந்த காலத்தில் அறியவில்லை. காலை அரும்பி பகலில் போதாகி மாலையில் மலரும் இந்த காமநோய். போர்களத்து ஓசையாக இருக்கிறது இந்த மாலை. நிலவும் மயங்கி நிலை குலைகிறது மாலை பொழுதில். ஓயாத உயிரும் மாய்கிறது பொருள் தேடி சென்ற தலைவன் நினைவால்.

 

காணொளி:-

https://youtu.be/NB2o2lpmVLg

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௪, உறுப்பு நலன் அழிதல் (124)

 à®šà®¿à®±à¯à®®à¯ˆ நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண். (1231)

௧, சிறுமை நமக்கு ஒழிய வேண்டும் என்று தூரம் சென்றவரை எண்ணி நறுமலரைக் கண்டு நாணின கண்.

 

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண். (1232)

௨, விரும்பியவர் நெருக்காததை சொல்லுவது போல் உள்ளது பசந்து பனிவாரும் கண்.

 

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள். (1233)

௩, பிரிந்திருப்பதை அழுத்தமாய் அறிவிப்பது போல் உள்ளது மணம் முடித்த நாட்களில் வீங்கி இருந்த தோள்.

 

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள். (1234)

௪, பருமன் குறைந்து வளையல் போல் மெலிந்துவிடும் துணை நீங்கிப் பழைய நினைப்பில் வாடிய தோள்.

 

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள். (1235)

௫, என்னை பிரிந்த கொடியவரின் கொடுமையை எடுத்துரைக்கும் வளையலுடன் பழைய நினைப்பில் வாடிய தோள்.

 

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

கொடியர் எனக்கூறல் நொந்து. (1236)

௬, வளையலுடன் தோள்களும் வேதனையில் நெகிழ்வதால் அவரை கொடியவர் எனக் கூறுகிறேன் நொந்து.

 

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோள் பூசல் உரைத்து. (1237)

௭, பெருமைக் கொள்ள மாட்டாய என் நெஞ்சே கொடியவரின் கொடிமையால் வாடும் தோள் கண்டு எழுந்த பூசலை உரைத்து.

 

 

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல். (1238)

௮, உறவுக் கொண்ட கைகளால் தடவ பசந்தது பழைய வளையல்கள் அணிந்த இளம்பெண் நெற்றி.

 

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண். (1239)

௯, உறவுக்கு இடைப்பட்ட குளிர்காற்றால் பசப்புற்ற இளம்பெண் பெருமழையைக் கண்டது கண்.

 

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு. (1240)

௧௦, கண்ணில் பசப்பு கலக்கமடைந்தது அன்று இணங்கி இருந்ததைக் கண்டு.

 

அதிகார விளக்கம்!

 

வறுமை போக்க வெளியூர் சென்றவரை எண்ணியபடி நறுமலரை கண்டு நாணுகிறது கண். நாடுபவர் நாடிவாராததை கண்டு கண்களில் பனி வருகிறது. மணமான நாட்களில் பருந்திருந்த தோள் அவர் பிரிவை உணர்த்தும்படி இளைத்திருக்கிறது. பிரிந்த கொடியவரின் கொடுமை உரைக்கிறது என் வளையல்கள். வளையலும் அதை அணிந்த தோள்களும் அவர் கொடியவர் என உரைக்க செய்தது. வாடிய தோள் கண்டு எழும் பூசலால் நெஞ்சே பெருமைகொள். கூடி மகிழ்ந்த கைகள் தடவிய நெற்றியில் பசலை படர்ந்தது. காற்றும் புகாதபடி அணைத்து மகிழ்ந்த பெண்ணின் கண் இன்று பெரும் மழை உண்டாக்கியது. கண்ணில் பசப்பு கலைந்தது முன்பு கூடி மகிழ்ந்ததை நினைத்து.

 

காணொளி:-

https://youtu.be/nvyeunK0rFA

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௫, நெஞ்சொடு கிளத்தல் (125)

 

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (1241)

௧, நினைத்துச் சரியான ஒன்றைச் சொல்வாயா என் நெஞ்சே எதன் பொருட்டும் தீராத நோய் தீர்க்கும் மருந்து.

 

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழிஎன் நெஞ்சு. (1242)

௨, அவருக்கு காதல் இல்லாமல் இருந்தும் நீ நோவது பேதமையாகும் இருப்பினும் வாழியே என் நெஞ்சே.

 

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

பைதல்நோய் செய்தார்கண் இல். (1243)

௩, இங்கிருந்தபடியே எண்ணி கலங்கும் நெஞ்சே பரிவற்று சிறுமை நோய் செய்தவருக்கு இது இல்லையே .

 

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்

தின்னும் அவர்க்காணல் உற்று. (1244)

௪, கண்ணையும் உடன் கொண்டு சேர் என் நெஞ்சே இவைகள் என்னை தின்றுவிடும் அவரை காணமுடியா நிலைக் கண்டு.

 

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர். (1245)

௫, பிரிந்து சென்றாலும் என்னை கைவிடல் உண்டோ நெஞ்சே உறவுகொண்டு இன்று உறவு இல்லாதவர்.

 

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. (1246)

௬, கலந்து இன்பம் உணர்ந்தும் காதலரைக் கண்டால் கூடி உணராமல் பொய்யாக தாகம் கொண்டு தாகம் அடைகிறாய் என் நெஞ்சே.

 

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு. (1247)

௭, காமம் விடப்படும் ஒன்றா ? நாணத்தை விடு நல்ல என் நெஞ்சே ஏன் பெற்றேன் இந்த இரண்டும்.

 

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. (1248)

௮, பரிவுடன் இணைந்து இருக்காதவர் என்றாலும் ஏங்கிப் பிரிந்தவர் பின் செல்கின்றாயே பேதை என் நெஞ்சே.

 

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

யாருழைச் சேறிஎன் நெஞ்சு. (1249)

௯, உள்ளத்தில் உள்ளவர் காதலர் அவரை எண்ணி யாருக்காய் பேய் போல் அலைகிறாய் நெஞ்சே.

 

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின். (1250)

௧௦, வறுத்தும்படி பிரிந்தவரை நெஞ்சத்தில் வைத்திருக்கலாமோ இன்னும் இழக்கச் செய்யும் அழகை.

 

அதிகார விளக்கம்!

 

யோசனை செய்து சொல் என் நெஞ்சே காம நோய் தீர்க்கும் மருந்து எது. காதலிக்காத அவரை மறக்காமல் இருக்கும் என் நெஞ்சே நீ வாழ்க. அவரை நினைத்தபடி இருக்கும் உனக்கு அவர் மறந்தபடி இருப்பது தெரிந்தும் சிறுமைபட்டு இருக்கிறாயே. இறையாகிய காதலரை காண இயலவில்லை என்றால் என் கண்களை கொன்றுவிடு என் நெஞ்சே. உறவுகொண்டவர் உறவு இல்லாது போனாலும் கைவிடாமல் உறவு கொள்கிறாய் என் நெஞ்சே. தாகத்தை மறைத்து இன்பத்தை தவிர்க்கிறாய் என் நெஞ்சே. காமத்தை விட முடியுமா நாணத்தை விடு என் நெஞ்சே. பரிவற்று பிரிந்தவர் பின் செல்கிறாயே என் நெஞ்சே. உள்ளே இருக்கும் அவரை பேய் போல் பிடிக்க பார்க்கிறாயே நெஞ்சே. பிரிந்தவரை பிடித்து வைத்துக்கொண்டு அழிவது ஏனோ என் நெஞ்சே.

 

காணொளி:-

https://youtu.be/BT18eMpn7UI

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௬, நிறை அழிதல் (126)

 à®•à®¾à®®à®•à¯ கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (1251)

௧, காமம் சார்ந்த கணக்கிடுதல் உடைத்துவிடும் நிறை என்ற நாணத்தால் தாழ் போட்ட கதவும் வீழ்த்தும்படி.

 

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில். (1252)

௨, காமம் என்ற ஒன்று மட்டுமே கண்ணில் நின்று என் நெஞ்சத்தை இரவிலும் ஆளும் தொழில் செய்கிறது.

 

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும். (1253)

௩, மறைக்க முடியுமா என் காமத்தை. அது முன் அறிவிப்புக் குறிப்பின்றி தும்மல் போல் தோன்றிவிடுமே.

 

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்

மறையிறந்து மன்று படும். (1254)

௪, நிறைவானவன் என்றே இருந்தேன் ஏனோ என் மறைக்க முடியா காமம் மறைவாக இருந்து பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது.

 

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று. (1255)

௫, விரும்பாது சென்றவர் பின் செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை, காமநோய் அடைந்தவர் அறியக்கூடிய ஒன்று இல்லை.

 

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர். (1256)

௬, விரும்பாது சென்றவர் பின் சென்று சேரும் சூழலை அளித்ததே என்னை ஏற்ற நானடைந்த துயரம்.

 

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின். (1257)

௭, நாணம் என்ற ஒன்றை அறியாமல் போகலாம் காமத்துடன் நமக்கு வேண்டியதை பேணுபவர் பெறச் செய்தால்.

 

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை. (1258)

௮, பலவிதமான மாயத்தை செய்யும் கள்வன் பணிவாக பேசியே வார்த்தை அன்றோ நம் பெண்மை உடைக்கும் படை.

 

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு. (1259)

௯, புணரக் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு.

 

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல். (1260)

௧௦, கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சினார்க்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.

 

அதிகார விளக்கம்!

 

நிறையான நாணம் என்ற கதவு உடைபடும் காமம் கணிந்தால், காமம் கண்ணில் நிறைந்து இரவும் பகலுமாய் நெஞ்சை ஆள்கிறது. காமம் தும்மல் போல் தோன்றுவதால் மறைக்க இயலவில்லை. நிறையானவன் என்றே இருந்தேன் இறையான அவன் மேல் கொண்ட காமம் மறைக்க முடியாமல் பலர் முன்னிலையில் வெளிப்படுகிறது. அவன் (இறை) என்னை மறந்து விலகினாலும் அவன் மேல் உள்ள காமத்தால் பெருந்தகைமை இல்லாமல் போயிற்று. நம்மை காக்கும் இறை மேல் காமம் நாணம் என்ற ஒன்றை இல்லாமல் செய்திடும். பலவிதமான மாயத்தை செய்யும் கள்வனான இறைவன் பணிவாக பேசியே வார்த்தையாகிய நாதம் அன்றோ நம் பெண்மை என்ற அச்சம் உடைக்கும் படை.  யோகம் என்ற புணர்தல் கூடாது என சென்றேன் ஆனால் மேய்ந்து கூடினேன் நெஞ்சம் கலக்க ஏங்கியதைக் கண்டு. கொழுப்பை தீயில் இட்டது போல் உருகும் நெஞ்சி உடைய பக்தனுக்கு உண்டோ புணராமல் ஊடி நிற்போம் எனல்.

 

காணொளி:-

https://youtu.be/syBZHYqgptg

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௭, அவர்வயின் விதும்பல் (127)

 

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல். (1261)

௧, வழி பார்த்து செயல் இழந்த கண்ணும் அவர் சென்ற நாட்களை எண்ணியதால் தேய்ந்த விரலும் என வேதனையானது.

 

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்

கலங்கழியும் காரிகை நீத்து. (1262)

௨, சிறுபிள்ளை போல் இன்று மறந்திருந்தாலும் என் தோள் மேல் உள்ள அழகு நீர்த்து அழிகின்றது.

 

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன். (1263)

௩, உறுதியான நெஞ்சை துணையாகச் சென்றார் என்றாலும் வருவார் என விருப்பமுடன் இன்னும் உளேன்.

 

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறும்என் நெஞ்சு. (1264)

௪, காமத்துடன் கூடியவர் பிரிந்தார் அவரது வரவை எண்ணி கொம்பை பற்றும் கொடி அதன் அளவை மீறியதுப் போல் அளவைக் கடக்கிறது என் நெஞ்சு.

 

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு. (1265)

௫, காணும் பொழுதே காமத்துடன் கனை தொடுப்பவரை கண்ணாரக் கண்டபின் நீங்கிவிடும் எனது மெல்லிய தோளில் தோன்றிய பசப்பு.

 

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட. (1266)

௬, அவசியம் வருவார் அவதியுறச் செய்தவர் ஒருநாள். அன்று பருகுவேன் பிரிதலால் உண்டான நோய் எல்லாம் கெட.

 

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் விரன். (1267)

௭, தழுவிக் கொள்வேன் ஊடுதலும் செய்வேன் கூடி மகிழ்வேன் கண் போல் உறவு கொண்ட வீரனை.

 

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து. (1268)

௮, செயலில் ஈடுபட்டு வெற்றி பெறட்டும் நம் வேந்தன் ஆதலால் மாலை வீட்டில் உண்டாகும் விருந்து.

 

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. (1269)

௯, ஒரு நாள் எழு நாட்கள் போல் செல்லும், தூரம் சென்றவர் வருகின்ற நாளை கணக்கு வைத்து ஏங்குபவர்க்கு.

 

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால். (1270)

௧௦, பெற வேண்டியதை எல்லாம் பெறப்படுவதால் என்ன பயன் இப்பொழுது இன்றி உள்ளம் உடைந்துவிட்டது என்றால்.

 

அதிகார விளக்கம்!

 

மங்கிய வாள் போல் ஒளி இழந்தன கண்கள் மெலிந்து போயின கைகள் நாம் பிரிந்த நாட்களை எண்ணி. தோள்களும் இளைத்து இளம்பிள்ளை தோள் போல் ஆனது. உள்ளத்து உறுதியை துணையாக கொண்டவர் என்பதால் வரவுக்காக காத்திருக்கிறேன். படர்ந்த கொடி கொம்பை மீறுவது போல் காமம் எல்லை கடக்கிறது அவரது வருகையை எண்ணி. வருகையை கண்டபின் தோளில் படந்த பசலையும் மனதின் நோயும் மறைந்துவிடும். தழுவிக் கொண்டு ஊடுதல் செய்து கூடி மகிழ்வேன் கண் போன்ற என் காதலனை. வேலை முடிந்து வருவார் என மாலை விருந்துடன் காத்திருக்கிறேன். ஒருநாள் ஏழு நாட்கள் போல் கடக்கும் பிரிந்தவர் வரவுக்கு காத்திருப்பவற்கு. எல்லாம் இருந்தும் பயன் இல்லை இப்பொழுது உள்ளம் விரும்பும் ஒன்று கிடைக்கவில்லை என்றால்.

 

காணொளி:-

https://youtu.be/zFLfm7S-I0I

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௮, குறிப்பு அறிவுறுத்தல் (128)

 

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்க லுறுவதொன்று உண்டு. (1271)

௧, மறைத்தாலும் கை நழுவி வெளிப்படுமாறு உன் கண்கள் சொல்லும் செய்தி ஒன்று உண்டு.

 

கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது. (1272)

௨, என் கண்களை நிறைவாக்கும் மழைமுகிலாள் மூங்கில் போன்ற தோள் உடைய பேதைக்கு பெண்மைக்கு உரிய இளகிய குணம் பெரியதாக இருக்கிறது.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு. (1273)

௩, கோர்க்கப்பட்ட மணி நேர்த்தியாக இருக்கச் செய்யும் நூல் போல் இளம் பெண் அணிந்துள்ளவைகளுக்கு ஆதாரமாக ஒன்று உண்டு.

 

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. (1274)

௪, மலரத் துடிக்கும் மொட்டில் உள்ள வாசனைப் போல் சிறு பெண்ணின் சிரிப்புக்குள் ஒன்று உண்டு.

 

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. (1275)

௫, செழுமையான வளையல்கள் அணிந்தவள் செய்த திறமையான கள்ளத்தனம் நான் உற்ற துன்பத்தை தீர்க்கும் மருத்தை வைத்திருக்கிறது.

 

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வது உடைத்து. (1276)

௬, பெரிதாக செயலாற்றி இனிமையாக கலத்தல் அரிதாக நடக்கும் அன்பின்மையால் சூழ்ந்ததை துடைத்து விடுகிறது.

 

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை. (1277)

௭, குளிர்ச்சிக்கு வழிகாட்டுபவன் பிரிந்ததை நம்மைவிட முன்னமே உணர்ந்தன வளையல்கள்.

 

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து. (1278)

௮, நேற்றுதான் சென்றார் எம் காதலர் ஏனோ ஏழு நாள் போல் மேனி பசந்தது.

 

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண்டு அவள்செய் தது. (1279)

௯, வளையல்களை பார்த்து தனது மெல்லிய தோளையும் பார்த்து கீழ் நோக்கி பாதங்களையும் பார்த்து என்னை ஆள்பவள் குறிப்பு செய்து உணர்த்தினாள்.

 

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்

காமநோய் சொல்லி இரவு. (1280)

௧௦, பெண்னால் பெண்மை பெருமை அடைகிறது என்பேன் கண்ணினால் காம நோய் இரவில் உண்டாக்கியதால்.

 

அதிகார விளக்கம்!

 

மறைத்தாலும் கைவிலகி காட்டியது போல் கண் காட்டும் பொருள் ஒன்று உண்டு. கண் நிறைந்த நீர்மை நிறைவடைதல் என்பதை உணர்த்தும் அது பெண்மையின் இளமைத் தன்மையை போன்றது. கோர்க்கப்பட்ட மணிக்கு ஆதாரமான நூல் போல் பெண்ணின் அணிகலன்களுக்கு ஆதாரமான ஒன்று உண்டு. மலர துடிக்கும் மொட்டுக்குள் உள்ளதைப் போல் இளம் பெண்ணின் சிரிப்புள்ளும் ஒன்று உண்டு. நான் உற்ற துயரத்தை அழிக்கும் மருந்து அவளது அழகான வளையல்களில் உள்ளது. அரிதாக ஏற்படும் அன்பற்ற சூழல் பெரிதாக செயல்பட்டு இனிமையாக கூடினால் கலைந்துவிடும். குளிர்ச்சிக்கு வழிகாட்டிய அவரின் பிரிவை முன்பே அறிகின்றன வளையல்கள். ஒரு நாள் பிரிவு ஏழு நாள் போல் மேனி பசக்கிறது. அவளது ஆற்றாமையை வளையல் மற்றும் தோளுடன் பாதம் பார்த்து உணர்த்தினாள். பெண்ணின் பெண்மை பெருமைக்கு உரியது என்பேன் கண்ணில் காமநோய் இரவில் உண்டாக்குவதால்.

 

காணொளி:-

https://youtu.be/piRElBykY34

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௨௯, புணர்ச்சி விதும்பல் (129)

 

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. (1281)

௧, நினைப்பதால் களிப்பூட்டுவதும் பார்ப்பதால் மகிழ்ச்சி தருவதும் மதுவிற்கு இல்லை காமத்திற்கு உண்டு.

 

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின். (1282)

௨, திணை அளவும் ஊடுதல் கூடாது பனை அளவு காமம் நிறைந்து வரும்பொழுது.

 

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண். (1283)

௩, என்மீது அக்கறையின்றி தன் செயல் செய்தாலும் கொண்டவனை காணாமல் அமைதி அடைவதில்லை கண்.

 

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. (1284)

௪, பிணக்குடன் பிரிந்து சென்றேன் தோழி ஆனால் அதை மறந்து கூடிட சென்றது என் நெஞ்சு.

 

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து. (1285)

௫, மை தீட்டும் பொழுது அந்த கோலை காணாத கண் போல் கொண்டவரின் குற்றத்தை காணது போகிறது அவரை பார்த்த உடன்.

 

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை. (1286)

௬, பார்க்கும் பொழுதில் அவரது குற்றங்களை பார்க்க மறுக்கிறேன் பார்க்காத பொழுதோ குற்றமற்றதை பார்க்க மறுக்கிறேன்.

 

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து. (1287)

௭, அடித்துச் செல்லும் என்று அறிந்தும் ஆற்றில் பாய்ப்பவர் போல் பொய்யாக போகும் என்று அறிந்தே ஊடல் கொள்கிறேன்.

 

 

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு. (1288)

௮, ஏளனமாய் துன்பம் செய்தாலும் மயங்கியவர் மீண்டும் மதுவை நாடுவது போல் கள்வனே உன் மார்பை நாடுகிறேன்.

 

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார். (1289)

௯, மலரை விட மென்மையானது காமம் சிலர் மட்டுமே அதை செம்மையுடன் அறிந்து ஈடுபடுவார்.

 

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்

என்னினும் தான்விதுப் புற்று. (1290)

௧௦, கண்ணில் ஆறுபோல் கலக்கமாகி இருந்தாலும் வெட்டிக் கொள்ளாமல் என்னைவிட விரைந்து பற்றிக்கொண்டாள்.

 

அதிகார விளக்கம்!

 

எண்ணத்தால் போதையும் பார்வையில் மகிழ்ச்சியும் தருவது காமம் ஆனால் அது குடிபோதைக்கு இல்லை. தினை அளவும் வெறுப்பு இன்றி இருந்து பனையளவு காமத்தை அனுபவிக்க வேண்டும். என்னைப் பற்றிய அக்கறை இல்லை என்றாலும் காதலனான இறைவனை காணாமல் அமைதியடையாது என் கண். வெறுப்படைந்து விலகினாலும் அவனை கூட நினைக்கும் நெஞ்சு. மை எழுதும் கோல் கண்ணுக்கு மை இடும்பொழுது மறைவது போல் அவன் குற்றம் அவனை கண்டால் தெரிவதில்லை. நெருங்கும் பொழுது குற்றத்தை மறந்து விலகிய நேரம் அவனது நற்பண்பையும் மறுக்கிறேன். நீந்த முடியாத ஆற்றில் குதிப்பது போல் ஊடல் கொண்டு தோல்வியடைகிறேன். துன்பம் தந்தாலும் மது உண்டவர் மீண்டும் மதுவை நாடுவது போல் உன் மார்பை நாடுகிறேன். மலரைவிட மென்மையான காமத்தை சிலரே செம்மையாக அனுபவிக்கின்றனர். கண் கலங்கி ஆறுபோல் ஆனாலும் பற்றிக் கொள்வதில் அவளுக்கே முதலிடம்.

 

காணொளி:-

https://youtu.be/MeALMWerS40

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௩௦, நெஞ்சொடு புலத்தல் (130)

 

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது. (1291)

௧, அவரின் எண்ணமும் அவரின் காதலும் நன்கு அறிந்து எதனால் என் மனமே நீ எனக்கு எதிராக இருக்கிறாய்.

 

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. (1292)

௨, உறவு பாராட்டாதவர் என்று கண்டு அறிந்த பின்பும் அவர் வெறுக்கமாட்டார் என்று விரும்புகிறாயே என் நெஞ்செ.

 

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல். (1293)

௩, கெட்டுப் போனவர்களுக்கு நாடக்கூடியவர்கள் இல்லை என்பது போல் நெஞ்சே நீ என்னை விட்டு அவர் பின் செல்கின்றாய்.

 

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (1294)

௪, இனிமேல் நின்னொடு உறவு பாராட்டுபவர் யார் என்நெஞ்சே துன்பம் தந்து இன்பம் தூய்க்க மறுக்கிறாயே.

 

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. (1295)

௫, உறவு பெறாமல் இருந்தாலும் அஞ்சும், பெற்றாலும் அஞ்சும் தீராத துன்பம் தருவது ஏன் என் நெஞ்சே.

 

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததுஎன் நெஞ்சு. (1296)

௬, தனியை இருந்து நினைத்திருந்த பொழுது என்னை தின்பது போல் இருந்தாயே என் நெஞ்சே.

 

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு. (1297)

௭, வெட்கத்தையும் மறந்தேன் அவரை மறக்காத என் மாறாத மடத்தனமான நெஞ்சத்துடன் சேர்ந்து.

 

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. (1298)

௮, நகைப்பது இகழ்வானது என்று எண்ணி அவரது திறத்தை உள்ளத்தில் அசைபோடுகிறது உயிர்க்காதல் கொண்ட என் நெஞ்சு.

 

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சம் துணையல் வழி. (1299)

௯, துன்பம் வரும் பொழுது யார்தான் துணையாக இருப்பாரோ தன்னுடைய நெஞ்சு துணையாக இல்லாமல் போனால்.

 

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி. (1300)

௧௦, அடைக்கலம் தர உறவுகள் ஏதுமில்லை தன்னுடைய நெஞ்சே தனக்கு உறவு இல்லை என்றால்.

 

அதிகார விளக்கம்!

 

நெஞ்சே அவர் காதல் எண்ணம் புரிந்த பின்னும் ஏன் கவலை கொள்கிறாய். உறவு பாராட்டாதவர் என்றாலும் அவரையே நாடுவது ஏனோ என் நெஞ்சே. கெட்டுப் போனவர்களை நாடக்கூடியவர்கள் இல்லை என்றா என்னை விட்டு அவர் பின் செல்கிறாய் என் நெஞ்சே உன்னை இனி யார் ஏற்பார் துன்பம் ஏற்று இன்பம் மறுக்கிறாயே. உறவாடவில்லை என்றாலும் அஞ்சுகிறாய் உறவாடும் பொழுது பிரிவை எண்ணி அஞ்சி தீராத துன்பத்தை தருகிறாய். தனிமையிலும் வாட்டுகிறாய். நாணமும் மறந்தேன் நெஞ்சே உன் செயலால். அவர் திறமையை கூட எண்ணி சிரிக்காமல் என்னுள் அசைபோடுகிறேன். துன்பத்திற்கு யார் துணை வருவார் என் நெஞ்சே நீயே எனக்கு துணை இல்லை என்றால் அடைக்கலம் யார் தருவார்.

 

காணொளி:-

https://youtu.be/WkTUxCfk8D0

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௩௧, புலவி (131)

 

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது. (1301)

௧, தழுவாமல் இரு அவர் உடலை அவர் அடையும் துன்ப நோய் காணலாம் சிறிது.

 

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல். (1302)

௨, உப்பைப் போல் பயன்படுத்த வேண்டும் பிணகுதலை அது சிறிதளவும் நீள விடக்கூடாது.

 

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல். (1303)

௩, பிரிந்து இருந்தவரை வேதனை நோய் பற்றச் செய்வது தம்மை கூடியவரை கூடவிடாமல் செய்வது.

 

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று. (1304)

௪, சிறுபிணக்கு கொண்டவரை உணராமல் இருப்பது வாடிய கொடியை வேருடன் அறுப்பது போன்றது.

 

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து. (1305)

௫, நலமானதை அணிகலன்களாக கொண்ட நல்லவர்க்கு மதிப்பானது பூ போன்ற கண்களை உடையவளின் அகத்தே ஊடல் கொள்வது.

 

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று. (1306)

௬, துன்பமும் சிறு பிணக்கும் இல்லாதகாமம் பழமும் காயும் இல்லாமல் வளமற்றதாகி விடும்.

 

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொல் என்று. (1307)

௭, சிறு பிணக்கால் துன்பம் உண்டு என்றால் அது கூடி மகழும் காலத்தை குறைத்து விடுமோ என்பதே.

 

 

 

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி. (1308)

௮, வருத்தம் யாரால் உண்டானது என்று வருந்திட அறியா காதலரை மாற்றிட இல்லை வழி.

 

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது. (1309)

௯, நீரும் நிழல் படும் இடத்தில் இனிதாக இருக்கும். சிறு பிணக்கும் விருப்பமானவர் என்றால் இனிதாக இருக்கும்.

 

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா. (1310)

௧௦, ஊடலை மாற்றி கூட முயலாதவருடன் என்நெஞ்சம் கூடிடுவோம் என்பது அதன் அளவற்ற ஆசையே.

 

அதிகார விளக்கம்!

 

புணராது இருந்து அதன் வேதனை அறியலாம் சிறிது. உப்பு போல் அளவாக அனுமதிக்கலாம் பிணக்கை. பிணக்கு அளவுக்கு அதிகமானால் புணர்தல் நிகழாது. ஊடலை உணராமல் இருந்தால் வேறுடன் பிடுங்கிய செடி போல் ஆகிவிடும். அடுத்தவர் நலத்தை விரும்பும் மலர்ந்த கண் உடையவர் ஊடலை அகத்தே மட்டுமே வெளிப்பட்டு மறையும். பிரிவும் ஊடலும் இல்லாத காமம் காயும் கனியும் இல்லாததைப் போன்றது. ஊடலுக்கு தடுப்பாக அமைவது கூடுவது குறையும் என்ற நினைப்பு. வருத்தமடைய யார் காரணம் என்று அறியாமல் காதலரை மாற்றும் வழி இல்லை. நிழலில் இருக்கும் நீர் போல் விருப்பமானவர்களின் பிணக்கும் இருக்கும். ஊடலை மாற்ற அறியாதவரை கூடி மகிழ்வோம் என்பது அளவற்ற என் ஆசை.

 

காணொளி:-

https://youtu.be/-osOmlxW5uw

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௩௨, புலவி நுணுக்கம் (132)

 

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு. (1311)

௧, பெண்தன்மைக் கொண்ட எல்லோரும் கண்களால் பொதுப் பொருள் போல் கண்டதால் நாட மாட்டேன் பரந்த உனது மார்பை.

 

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. (1312)

௨, ஊடலாக இருந்த பொழுது தும்மினார் நான் அவரை நீடுவாழ் என்பேன் என்பதை அறிந்து.

 

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று. (1313)

௩, புதுவித மலர் சூடி அழகு செய்து கொண்டால் நினைவில் சுமக்கும் ஒருத்திக்கே குறிப்பு காட்டு சூடினீர் என்கிறாள்.

 

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று. (1314)

௪, உன்னைவிட காதலிக்க யார் இருக்கிறார்கள் என்றதும் ஊடினால் அப்படி யார் யார் அது என்று.

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள். (1315)

௫, இப்பிறவியில் பிரியாமல் இருக்கலாம் என்ற உடன் கண்கள் முழுவதும் நீர் நிரம்ப நின்றாள். (எப்பிறவியிலும் பிரியக்கூடாது என்ற நினைப்பில்)

 

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள். (1316)

௬, நினைத்தேன் என்றேன் அப்படி என்றால் மற்றபடி மறந்திருந்தீர்கள் என்று என்னை விலகினாள் நெருங்கி இருந்தவள்.

 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று. (1317)

௭, வழக்கப்படி தும்மினேன் வாழ்த்தினாள் உடனே மாறி அழுதாள் யார் உம்மை நினைக்க தும்மினீர் என்று.

 

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று. (1318)

௮, தும்மலை தடுத்து  நிறுத்த அழுதாள் உங்கள் எண்ணத்தை எனக்கு மறைக்கின்றீர் என்று.

 

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று. (1319)

௯, பாராட்டி தான்படும் இன்னலை உணர்த்தினாலும் வறுந்தும், பிறரையும் இப்படித்தான் சமாதானம் செய்கிறீர் என்று.

 

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று. (1320)

௧௦, அவளை நினைத்தபடியே பார்த்தாலும் வருந்துவாள் யாரை நினைத்து என்னை பார்க்கிறாய் என்று.

 

அதிகார விளக்கம்!

 

பெண்ணும் பெண்தன்மை கொண்டவரும் உன் பரந்த மார்பு மேல் பார்வை செலுத்துவதால் அதை நாட மறுக்கிறேன். நீடு வாழ்க என வாழ்த்துவேன் என்று ஊடலாக இருக்கும் பொழுது தும்மினார். புது மலர் சூடி இருந்தால் யாரை எண்ணிச் சூடினீர் என்கிறாள். உன்னிலும் அழகி யாரும் இல்லை என்றாலும் யாருடன் ஒப்புமை செய்கிறீர் என்று கேட்கிறாள். இப் பிறவியில் உன்னை பிரியேன் என்றாலும் கண்ணீர் வழிய வாடினாள் அடுத்த பிறவிக்கு ஆள் கிடைத்ததோ என்பதைப் போல். நினைத்தேன் என்றதும் மறத்தீரோ என்று விலகினாள். தும்பினேன் வாழ்த்தினாள் மறுகணமே யாரை எண்ணி தும்மினீர் என்கிறாள் சரி அடக்கினேன் அதற்கும் அறியாதபடி மறைக்க முயல்கிறாய் என்கிறாள். அவளது நற்செயலை பாராட்டினாலும் வறுந்துகிறாள் இப்படித்தான் அடுத்தவளையும் தேற்றுகிறாயா என்று. அவளையே நினைத்தபடி பார்ப்பினும் வருந்துகிறாள் யாரை நினைத்து என்னை பார்க்கிறாய் என்று. 

 

காணொளி:-

https://youtu.be/Yy0Bh63yxvs

இன்பத்துப்பால் (காமத்துப்பால்) | கற்பியல் | ௧௩௩, ஊடலுவகை (133)

 

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளரளிக்கு மாறு. (1321)

௧, குற்றம் ஏதும் இல்லையென்றாலும் சிறு பிணக்கு இன்பம் அளிக்க வல்லதாய் அமைகிறது.

 

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும். (1322)

௨, சிணுங்கலில் தோன்றும் சின்ன அச்சம் நன்மைக்கு எதிராக அமைந்தாலும் பின்பு நல்ல பயனைத் தரும்.

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து. (1323)

௩, இணைந்து மகிழ்வதில் புதிய நாடு உண்டோ? நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்றவர்களின் அகத்தை அறிந்தால்.

 

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை. (1324)

௪, இணைவதால் இணைவதையே விருப்புச் செய்கிறது உள்ளம், இணைவதே என் உள்ளத்தை உடைக்கும் படையாக இருக்கிறது.

 

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து. (1325)

௫, குற்றம் ஏதும் செய்யாத பொழுதும் தானாகவே பணிந்து மென்மையான தோள்களைத் தழுவுவார் அது தரும் சுகம் குறித்து.

 

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது. (1326)

௬, உண்பதிலும் உண்டது செரித்தல் இனிமையானது காமம் புணர்வதிலும் ஊடல் இனிமையானது.

 

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும். (1327)

௭, ஊடலில் தோற்றுப் போனவரே வெற்றிபெற்றவர் அதை புரியச் செய்வது கூடி மகிழ்வதே ஆகும்.

 

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு. (1328)

௮, ஊடலினால் பெரும் சிறப்பு நெற்றி வெயர்க்க கூடி மகிழ்வதால் வரும் உப்பு.

 

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப

நீடுக மன்னோ இரா. (1329)

௯, ஊடுதல் செய்யவேண்டும் ஒளியைப் போன்றவள் அதுவே இரவை நீளச் செய்யும்.

 

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின். (1330)

௧௦, சிறு பிணக்கு காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது.

 

அதிகார விளக்கம்!

 

தவறே செய்யாத பொழுதும் பிணங்குவது இன்பம்தர வல்லமை உள்ளதாக இருக்கிறது. பிணங்குவது சிறிய துன்பம் தந்தாலும் நல்ல பயனை தரும். புணர்ந்து மகிழ்ந்தவர் புதிய ஒன்றை நாடமுடியாது காரணம் அவர்கள் நிலத்தின் தன்மை அடைந்த நீர் போல் இணைந்த அகத்தை பெறுகிறார்கள். கூடி மகிழ்வதே அதிகபடியான கூடி மகிழ ஊக்குவிக்கும் இதுவே உள்ளத்து நாணத்தினை அழிக்கும். தவறு செய்யாமலேயே ஆறுதலாக தோள் தழுவுதலில் சுகம் இருக்கிறது. செரித்தபின் உண்ணுவது இனிமையானது அது போல் ஊடலுக்கு பின் காமம் இனிமையானது. ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் அதை கூடி மகிழ்வதில் அறியலாம். ஊடலின் சிறப்பு கூடி மகிழ்ந்து நெற்றி வியர்வையின் வந்த உப்பால் அறியலாம். ஊடலே இரவின் நீளத்தை அதிகமாக்கும். ஊடுவதே காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்வது.

 

காணொளி:-

https://youtu.be/oNMDVWwcL4c

காமத்துப்பால் அதிகார விளக்கம்

 

பொதுவாக பால் என்றால் பற்றியிருப்பது என்பதாகும். காமத்துப்பால் கடவுளைப் பற்றியதாகும்.

          கடவுளோடு இணைந்தவர் அல்லது கூடியவராகிய வள்ளுவனார் தன்னை காதல் தலைவியாகவும்  இறைவனைக் காதல் தலைவனாகவும் கொண்டு பாடிய பாடல்களே காமத்துப்பால் அதிகாரமாகும்.

          உலகத்தின் பார்வையில் காமத்துப்பால் என்றாலே அது உடல் சார்ந்தே சிந்திக்கவும் அதைச் சார்ந்த படைப்புகளாகவே  இருக்கிறதெனவும் பார்க்கப்படுகிறது.

          வள்ளுவப்பெருந்தகையும் அதைச் சார்ந்தே நிறைய எழுதியிருந்தாலும் அதற்குள் ஓர் சூட்சுமத்தை வைத்திருப்பதை நாம் அறியாதவர்களாகவே இருக்கிறோம்.

          வள்ளுவர் கடவுளோடு கூடி சுகித்து மகிழ்ந்ததை தலைவன் தலைவியாய் நாமும் படித்துணர்வோம்!..

          இன்பம் என்றால் அது என் காதலி தந்த பேரின்பம் ஆகும். அந்த இன்பத்தை வர்ணித்தல் சாத்தியமா?.. அவளின் காதல்  நினைவோடு  நினைந்து உருகியபடியே  அந்த தேவியின் திருவடியை புகழத் தெரியாமல் நான் தடுமாறுகிறேன்!.. என் எழுத்தின்  ஆழத்தை நீங்கள் அறிவீர்கள் என்றால் என் காதல் தேவியை தரிசிக்கும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கும்.

          பெண்மைக்கே தலைமை தாங்கும் அளவிற்கு இவள் தேவதையாய்  இருப்பது கண்டு நான் வியக்கிறேன். அந்த அணங்கை தகையணங்குறுத்தலால் போற்றியும் நான் நிறைவடையவில்லை. அந்த காதல் மயிலை நான் நோக்க அவளும் தன் வேல்விழிப் பார்வையில் எனை சாய்க்க அங்கே அவளோடு அரங்கேறிய வார்த்தைகளை நீங்கள் உணர முடியாது. நீங்களும் காதலில் திளைத்திருந்தால் நான் சொல்லும் குறிப்பறிதலை உணர முடியும்.

          அந்தப் பருவப் பெண்ணின் பேரழகு எந்தன் உயிருக்கும் ஐம்புலனுக்கும் இன்பம் தந்ததின்   புணர்ச்சி மகிழ்தலை எப்படி நான் வார்த்தையால் உயிரூட்டி உங்களுக்கு தெரிவிப்பேன்?  அந்தப் பெண்ணின் அழகை நான் எப்படி புகழ்வேன்?  மலர் போன்ற அவள் மேனியின் எழில் நலத்தை எப்படி நான்  புனைந்துரைப்பேன்?... என் காதலி நலம் வாழ்க!..

 

           என் தலைவன் மீது நான் காதல் கொண்டதை யாரறிவார்? ஒரு வேளை என் கண்களை  உற்று நோக்கினால் அவரின் பிம்பம் என்னில் சிரிப்பதை நீங்கள் காணலாம். அவருடன்  உண்டான என் காதலின் சிறப்பை உரைத்தல் எங்கனம் ஆகும்?

          அவரைக் காணாமல் ஒரு நொடியும் இனியென்னால்  இருக்க முடியாது. அந்த கள்வர் என்னை கண்களால் கலவு செய்து விட்டார். அவரைச் சேராமல் என் ஆவி பிரியாது. அந்த தேவனின் பாதத்தை  சேரவே நான் என் நாணத்தையும் துறவாய் உரைத்து விட்டேன்!.. அவரின் திருவடி தரிசனத்திற்காகவே நான் ஏங்குகிறேன்.

          என்னவனே உன்மீது நான் கொண்ட  காதல் நோய் கண்டு எனக்கு பித்துப் பிடித்ததென பிறர் கூறும் வதந்திகளை நீ அறியாமலா இருப்பாய்!.  அத்தகைய அலர் அறிவுத்தல் உன் மனதைக்  காயப்படுத்த வில்லையா? ஐயகோ நான் என்ன செய்வேன்?.. 

          உன்னை அடையும் நாள் என்றோ?.. உனக்கே நான் அடிமையாய் ஆன பின்பும் என்னை நீ வாட்டலாமோ?..  உந்தன் பிரிவின் ஆற்றாமையை நான் எப்படி தாங்குவேன்?.. என் உயிரும் உடலை விட்டு பிரியாமல்  இருப்பதைக் கண்டு நான் வெட்கப்படுகிறேன்.

          உன் பிரிவின் தவிப்பால் நான் படர் மெலிந்து இரங்கியதை நீயறியாதவனா என்ன?.. மறைக்க நினைக்கும் என் காதல் கண்ணீராய் வெளிப்பட்டு உன் திருவடியை சேரவில்லையா?..

          தன் கண்களாலேயே எனக்கு காம நோய் தந்தவர் தனியே என்னை தவிக்க வைத்துவிட்டு இப்போது அந்த  கண்களையே கொலை செய்ய நினைக்கிறார். அவரைக் கண்டு மகிழ்ந்த கண் இன்று அழுது அழுது ஏங்குகிறது. எனக்குள் உண்டான இந்த கண் விதுப்பு அழிதலால் என் காமநோயை நானே என் கண்களால் ஊரார்க்கு பறை சாற்றிவிட்டேன்.

          அந்த ஏக்கம் கண்ட பிறர் என்னைதான் குறை கூறுகின்றார்கள். பிரிந்து போன அவரை எவரும் குற்றம் சொல்வதாய் தெரியவில்லை.  அவரின் மீதான காதல் நோயால் என் மேனியின் நிறமும் பசப்பு உறு பரவல்தனை நீட்டித்தே எனை கொல்கிறது. இந்த பசலையை கண்டவர்கள் என்னை என் தலைவன் துறந்து விட்டார் என கேலி பேசுகிறார்கள்.

          இந்த பசலை நோய் தீரவோ வழியில்லை. அதனால் உண்டான தனிப்படர் மிகுதியால்  நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன். அந்த காமதேவன் தனித்திருக்கும் என்னிடமே தன் கனைகளை தொடுத்து செயல்படுகிறான். என் நெஞ்சத்தில் அவர் உள்ளதைப் போல் நானும் அவரது நெஞ்சத்தில் இருப்பேனோ!?.. நினைத்தவர் புலம்பல் இப்படித்தான் யோசிக்குமோ?.

 

           என் காதலர் கனவில் வருவதால் அந்த கனவாகிய தூதுவனுக்கு விருந்து வைக்க நினைக்கிறேன். நேரில் வராத கொடியவர் கனவில் ஏன் வந்து என்னை கொல்ல வேண்டும். என் கனவு நிலையை யாரிடம் உரைப்பேன்?.. என் தலைவன் அருகில் இல்லாத இந்த மாலை ஏன் வர வேண்டும்?.. என்னை வருந்தச் செய்யும் இந்த பொழுது கண்டு இரங்குகிறேன்!..  பொருள் தேடச் சென்றவர் விரைந்து வர வேண்டும்.

          அவரைக் காணாமல் என் தோளும் வெளுக்கிறது. வளையல்களும் தானாகவே கீழே விழுகின்றன. என் உறுப்பு நலன் அழிதல் அவருக்கு தெரியாமலா இருக்கும்!..  என் நெஞ்சோடு கிளத்தல் செய்தவர் என்னை வந்தடைய நெஞ்சே நீயே ஓர் வழியைச் சொல்.

          நிறைவானவள் என்றே இருந்தேன். ஆனால் என் மறைக்க முடியா காமம் நிறை அழிதல் ஏற்பட்டு பலர்முன்னிலையில் தும்மல் போல் முன் அறிவிப்புக் குறிப்பின்றி தோன்றுகிறது. காமத்துடன் முன்பு கனை தொடுத்தவர் என்னை வந்து சேராததால் அவர்வயின் விதும்பல் கொள்கிறேன்!. அவசியம் ஒருநாள் அவர் வருவார். அன்று என் எல்லா நோயும் தீரும்.

          அவர் என்னைப் பிரிந்து ஒருநாள்தான் ஆகிறது. அதற்குள் ஏழுநாள் ஆனதைப் போல் என் மேனி பசந்து குறிப்பு அறிவுறுத்தல் செய்கிறது. என் தோழி! அவர் வந்தால் நான் நிச்சயம் ஊடல் கொள்வேன். ஆனால் பசந்திருக்கும் இந்த மேனி அவரைக் கண்டவுடன்  தழுவிக் கொள்ளுமே! என் புணர்ச்சி விதும்பல் அவரின் தவறுகளை காணவில்லையே!..

          à®Žà®©à¯ வெட்கத்தையும் மறந்து மடத்தனமாய் என் நெஞ்சோடு புலத்தல் செய்கிறேன். தனியே இருந்த பொழுது அவரை நினைத்தேன். என் நெஞ்சே நீ அவருக்காய் என்னை தின்று விட்டாய். ஏ மனமே கொஞ்சம் பொறு. அவரைத் தழுவாதே. என்னைப் புலம்ப வைத்தவர் கொஞ்சம் தவிப்பதை ரசிப்போம்.

           à®Žà®©à¯ ஊடலை மாற்றாமல் புலவியை விரும்புபவரை நாடாதே என் நெஞ்சே. தன் ஊடலால் என்னை வருந்தச் செய்தவர் அதை மாற்றாமல் தும்முகிறார்!..  நான் அவரை நீடூழி வாழ்க என்று  வாழ்த்த வேண்டுமாம்!.. என்னே அவரது புலவி நுணுக்கம்!..   இந்த ஊடலே இரவை நீளச்செய்யும்!.. ஊடல் உவகையே காமத்திற்கு இன்பம். அதற்கு கூடிக் கலத்தலே பேரின்பம்!..

           கடவுள் மேல் காமம் என்ற ஒன்றே வள்ளுவனார் காமத்துப்பாலின் மூலம் வெளிப்படுத்தும் ரகசியமாகும்.

          மனிதனுடைய உச்சகட்ட இன்பத்திலொன்று காமத்தினால் உடல் தேவையை துய்ப்பது. இதைவிட மேலானது எது எம்மை படைத்ததோ அதனுடன் சேர்வது. 

          இணைதல் என்று சொன்னாலே அது பெண்ணோடு புணர்தல்   மற்றொன்று கடவுளோடு கூடுதல். 

          பெண்ணோடு இணைதல் என்பது இங்கு இப்போது இந்த சமூகத்தில் நடப்பதாகும்.

          ஆனால் இறைவனுடன் இணைதல் என்பது குருவினால் தன்னுணர்வு பெற்று கண்ணொளி திறந்து   நாதவொலி கேட்டு அமிர்தமதை சுவைத்து லிங்கமதில் உயிர்வளியை நுகர்ந்து  என்றும் மார்கண்டேயனாய் கடவுளை அணைத்து மகிழ்ந்து கூடி கலந்து  வெட்டவெளியான சுத்த சூன்யமதில் நிலைத்து திளைப்பதாகும்.

          திருக்குறளின் முதல் அதிகாரமாய்                                           à®•à®Ÿà®µà¯à®³à¯ வாழ்த்தை பாடியவர் அதில் முதல் குறளாய் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்றும் இறுதி குறளாய் ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்றும் முடித்துள்ளார்.

          திருவள்ளுவர் குறளை à®… வில் ஆரம்பித்து ன் னில் முடித்திருப்பது எல்லாம் இரண்டாவது விசயம்தான். கடவுளே அனைத்திற்கும் முதலென்று  ஆரம்பித்து  கடவுளோடு தான் இதுநாள்வரை ஊடியிருந்ததாகவும் அந்த ஊடலின் பயனாக இறைவனோடு கூடிமகிழ்ந்து இன்புற்றேன் என்றும்  முடித்துள்ளார். அதாவது கடவுளில் ஆரம்பித்து கடவுளிலேயே முடித்துள்ளார்.

          பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார் என்று அறத்துப்பால் கடவுள் வாழ்த்து  அதிகாரத்தில் சொன்னதற்கு ஓர் வழியை தந்திரமாய் இந்த காமத்துப்பால் அதிகாரத்தில் வைத்துள்ளார். இறைவனை காதலித்து அவனையே சேர்ந்திருந்தால் பிறவிப் பெருங்கடலை நீந்தலாம் என்பதையே இங்கு தானும் அந்த பிறவா நிலையை அனுபவித்தவராய் பாடியுள்ளார்.

          ஒரு பெண்ணோடு சேர்வதற்கு எப்படி பல  தந்திரங்களை கையாண்டு அவர்களை கவர நினைக்கிறோமோ அப்படியே இறைவனை அடைவதற்கும் நிறைய தந்திரங்களை கையாள வேண்டியுள்ளது.

          இறைவனைக் காதலிப்பதைத் தவிர ஒரு மனிதனுக்கு அதிகப்பட்ச காதல் வேறு இருக்க முடியாது. 

          ஏனெனில் ஒரு பெண்ணை காதலித்தால் இருவருக்கும் இடையில் புரிதலற்ற தனத்தால் தோல்வி ஏற்படுவதை பொதுவாக காணலாம். ஆனால் ஏக இறைவனைக் காதல் செய்கையில் அங்கு ஊடலும் பின் கூடலுமென இன்பமே நிலைத்திருக்கும்.

          இதையே காமத்துப்பால் அதிகாரத்தில் வள்ளுவனார் பதிவு செய்திருக்கிறார்.

         அறம், பொருள், இன்பம் மற்றும் நான்காவதாக வீடுபேறு என்ற ஒன்றை சொல்வார்கள்.

          ஒரு மனிதன் இன்பமாக வாழ்ந்தானாகில் அவன் வீடுபேறு அடைந்திடுவான் என்பதே வள்ளுவரின் சிந்தனைத் தெளிவும் உயர்ந்த நோக்கமும் ஆகும்.

          ஆகையால்தான் வீடுபேறு குறித்து அவர் வேறு நூல்களை இயற்றவில்லை.

         வீடுபேறு என்பதை ஒருவர் அடைய வேண்டும் என்றால் முதலில் அவர் காமத்துடன் இருக்க வேண்டும். காமத்துடன் இருப்பவரே வீடுபேறு அடைய முடியும்.

          கடவுள் மேல் நான் ஆழ்ந்த பக்தியாய் (காமமாய்) இருக்கிறேன். அதனால் இந்த திருமண பந்தத்தில் எல்லாம் என்னால் இணையவோ அல்லது வாழவோ முடியாது என்று வெறுத்து ஒதுங்கும் ஆணோ அல்லது பெண்ணோ அவர்கள் நிச்சயம் வீடுபேறு அடைய முடியாது. அவர்கள் தங்களைத் தாங்களை ஏமாற்றிக் கொள்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

          அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனிலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது என அவ்வைப் பிராட்டியார் மிக அழகாக யோகத்தில் திளைத்திருக்க மேற்கண்டவைகளை தகுதிகளாக கூறியுள்ளார்.

          பேடுத்தன்மை உள்ள யாராகிலும் அவர்களால் கடவுளை அடையவே முடியாது.

          அவர்கள் இன்று வருமோ நாளை வருமோ மற்றென்று வருமோ என்று ஏங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

          ஆனால் அவர்கள் கடவுளைத் தேடும்  முயற்சியில் ஈடுபட்டுருக்கிறார்கள். நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். பக்திச் சுவை நிறைந்த  சிறந்த படைப்புகளை படைத்திருக்கிறார்கள். அது வேறு விசயம்.  அவர்களின்  படைப்புகளை படித்துவிட்டு அவர்களும் கடவுளை அடைந்தவர்கள் என்று கூறுவதால் எந்த பயனும் இல்லை. என்னைப் பொருத்தவரையில் அவர்கள் கடவுளை அடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி  அவர்களிடமிருந்து எந்தவொரு  அனுபவமிக்க பாடலையும் நான்  பெறவே இல்லை.

          கடவுளை அடைந்தவர்கள் அல்லது அடைய நினைப்பவர்களைப்  பார்த்தால் அவர்கள் சாதாரணமான இல்லற வாழ்க்கையை வாழ்ந்தால் ஒழிய அதற்கான எந்த சாத்தியமும் இல்லை.

          புத்தர் கூட இல்லறத்தை ஏற்று வாழ்ந்தவர்தான். தான் கண்ட காட்சிகளால் மனம் கலங்கியவர் கடவுளைத்தேடி  இல்லறத்தை விட்டு  பிரிந்து போனாலும் மீண்டும் தன் மனைவி மக்களுக்காக திரும்பியவர். வரலாறு ஆளாளுக்கு திரித்தும் கூட்டியும் பெருக்கியும்  எழுதியுள்ளார்கள்.

          எதார்த்த உண்மை இதுதான். கடவுளை அடைவதற்கு ஓர் மனிதனுக்குள் ஆண்மையோ அல்லது பெண்மையோ இருக்க வேண்டும். அதாவது  காமம் சார்ந்த உணர்வு கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் ஒரு கட்டத்தில் இது போதுமானதாக இல்லையே இதற்கு மேல் ஏதேனும் ஒன்று  உண்டா என தேடுவார்கள். இல்லையென்றால் நடுவில் வேறு ஒன்றைத் தேடுவான். ஆனால் அவன்  சிந்திப்பவனாக இருந்தால் வாழ்வில்  இவ்வளவு பெரிய சுகத்தை தந்தது யார் என தேடுவான். அப்படி அதை தேடுபவன்தான் அதை கண்டடைவான்.

          அதனால்தான் ஒரு மனிதன் காமத்தோடு இருந்தானாகில் அவன் நிச்சயம் கடவுளை அடைவான் என  காமத்துப்பாலில் வள்ளுவர்  சொல்லியுள்ளார். பெண்ணோடு வாழ்பவர்கும் காமத்துப்பால் சுவை தரும். கடவுளோடு கலந்தவர்க்கும்  காமத்துப்பால் வழிகாட்டும்.

          காமத்துப்பால் ஓர் விசேசமான சூட்சுமத்தை தனக்குள் வைத்திருக்கிறது. அதனை அனைவரும் படித்துணர்ந்து எல்லாம் வல்ல பெருங்கருணையாளன் திருவடி பற்றி வாழ்வில் நலம்பெற  இறையருளால் வாழ்த்தி வணங்கியும் என்னைக் கொண்டு தன்னை அழகு செய்ய வைத்த தமிழைப் போற்றி வள்ளுவத்தை   நன்றியுணர்வோடு நினைந்து வணங்கி விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்

சிவயோகி

 

காமத்துப்பால்

அதிகாரம் முற்றும்.