• +91 97102 30097
  • reach@yogakudil.org

நந்தகுமார்

Awesome Image

குருவே சரணம்

 

அனைவருக்கும் வணக்கம்

 

எனது பெயர் நந்தகுமார். இவ்வளவு காலமாக எனக்குள்ளே ஆன்மீக தேடல் இருந்ததை உணராமலே இருந்தேன். சித்தர்கள், மந்திரம், வாசியோகம் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பார்த்துக் கொண்டிருந்தபோது என் குருநாதர் திருஞானதேசிகன் சிவயோகி ஐயாவின் *மந்திரம்* தலைப்பிலான வீடியோவை பார்க்க நேர்ந்தது. புரிந்தும் புரியாததும் போல இருந்ததால் திரும்பத் திரும்ப அந்த வீடியோவை பார்க்கும்போது ஏதோ  உண்மை அவரிடம் உள்ளதாக எனக்கு தோன்றியது. என்னுடைய  கார் மெக்கானிக்கல் பணியில் அதிக பளு தூக்கும் வேலையின்போது பயன்படுத்தும் வார்த்தைகளே மந்திரங்களாக செயல்படுவதாக ஐயன் கூறியதைக் கேட்டு இவரே எம் குருவென என்னுள்ளே கூறியது. ஆன்மீக தேடலில் சரியான ஒரு பாதையை பெற்றுள்ளோம் என்ற தெளிவை பெற்றேன். 

 

மந்திரம் காணொளியை தொடர்ந்து அவரின் பிற காணொளிகளையும் கண்டு உபதேசம் வாங்க முடிவு செய்தேன். பணியின் காரணமாக குவைத் நாட்டில் இருந்ததால் ஆன்லைனிலேயே  உபதேசம் பெற்றேன். என்னைப்போன்று வெளிநாட்டில் உள்ளோருக்கு உதவும் வகையில் இணையம் வழி உபதேசம் பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்கள். 

 

உபதேசம் வாங்கிய பிறகு உபதேச பயிற்சிகளை தொடர்ந்து செய்து 20 நாட்களிலேயே மூன்றாம்கண் விழிப்புற்றதை உணர்ந்தேன். உடல்நலம் மேம்பட்டு இன்னும் சில இறை அனுபவங்களையும் என்னுடம்பில் பெற்றேன். உபதேசம் வாங்கியவர்களுக்கு சத்சங்கத்தில் சிவயோகி ஐயா பேசுவது எளிதாக புரியும். 

 

இறைதேடல் உள்ள அனைவரும் சிவயோகி ஐயாவிடம் உபதேசம் பெற்று இறையை உணரவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இறைதேடல் உள்ளவர்கள் தங்களின் தேடலை முடிவுக்கு கொண்டு வந்து இறையை உணரும் இடமாக சென்னையிலுள்ள *யோகக்குடில்* உள்ளது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருத்திற்கிணங்க  எல்லோரும் இறையுணர்ந்து இன்புற எல்லாம்வல்ல இறையருளும் குருவருளும் கிடைக்க வாழ்த்துக்களோடு உங்கள் அன்பன்

 

 *நந்தகுமார்* 

 *குவைத்* 

*0096599694949*

- நந்தகுமார்