• +91 97102 30097
  • reach@yogakudil.org

அபி

Awesome Image

குருவிற்கு வணக்கம்   (அன்புடன் அபி )  2007 இல் 23 ஆம் வயதில் புத்தகங்கள் வாயிலாக தியான பயிற்சியில் ஈர்ப்பு ஏற்பட்டு தேடுதல் ஆரம்பித்தது... தமிழ் நாட்டில் என்னென்ன தியான பயிற்சி உள்ளதோ அனைத்தையும் கற்று பயிற்சி செய்துள்ளேன்... குண்டலினி எழும்பினாலும் எங்கோ நான் சிக்கி கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்... நிறைவு இல்லாமல் ஒவ்வரு குரு வழி பயிற்சியை தேடி சென்றேன்... இறுதியில் ஓர் எண்ணம் எழுந்தது இனி எங்கும் செல்ல கூடாது, எந்த சிஷ்யன் என்று கூற கூடிய ஆன்மிக வாரிசுகளிடம்  தன்னையரிதல் தேடுதல் இருக்க கூடாது என்று அனைத்தையும் மூட்டி கட்டி விட்டேன்... நடப்பில் அசல் ஞானிகள் இக்காலத்தில் இருக்க மாட்டார்கள் போல.. ஞானிகள் எல்லாம் வரலாற்றில் தான் இருப்பார்கள் போல என்று எண்ணம் வேறு... 10 வருடங்கள் கடும் தேடுதல்களுக்கு பிறகு 2016 கடைசியில் தற்செயலாக குரு சிவயோகி அய்யாவை  கண்டேன்.. ஒரு வருடத்திற்கு மேலாக உரைகளை கவனித்து காதலாகி கசிந்து உருகி  பிறகே 2018 ஜனவரியில் உபதேசம் பெற்றேன்... முதல் நாள் பயிற்சியிலேயே ஆழ்ந்த அனுபவம்... பயிற்சி தொடர தொடர விவரிக்க வார்த்தை இல்லை.... எது இல்லை என்றாலும் குரு அன்பும் மனதில் கொண்டாட்டமும் கூடவே வருகிறது...  சிலிர்ப்பான அனுபவங்கள் நெறைய... இடையில் சிறிய விபத்தால் சில வாரங்கள் முழுமையாய் பயிற்சி செய்ய இயலாத சூழல் இருந்தாலும் தற்போது இருந்து பயிற்சியை தொடர ஆரம்பித்துள்ளேன்.... என் தன்மை எதுவோ அனைத்தும் நம் குரு சிவயோகி அய்யாவின் பாதத்தில் சமர்ப்பணம் நன்றி குருவே..  அன்புடன்

- அபி