• +91 97102 30097
  • reach@yogakudil.org


 à®µà®¿à®Ÿà®¿à®¯à®Ÿà¯à®Ÿà¯à®®à¯ இரவு

 

ஆண்டவன் இல்லாத உலகம், ஆசைகள் இல்லாத இதயம் இல்லை என்றால் அது மிகையில்லை.


இரவு சுகம் என்றால் பகலும் சுகம், மனிதனின் அந்தரங்கம் இனிமையாக இல்லை என்றால் அவனது வெளிப்படையான செயல்கள் இனிமையாக இருக்காது.


தேர்வின் பொழுது விடைத்தாளை திருத்தும் ஆசிரியர் தனது வீட்டில் நிறைவாக இல்லை என்றால் மதிப்பெண்கள் குறைவாகவே போடுவார் என்பது மாணவர்களின் மனநிலை.


மனிதனின் சுயதேவைகள் நிறைவடையாவிடின் அவனின் செயல்கள் நேர்த்தியாக இருக்காது. எனவே அவனது அந்தரங்கமும் இன்பமாக இருக்க வேண்டும்.


இயற்கை அன்னையின் அளப்பறிய அன்பே காமம். காம உணர்வு இல்லை என்றே அதை கடந்துவிட்டேன் என்று ஒருவர் தன்னை பிறருக்கு அறிமுகம் செய்து கொள்ள தேவையில்லை.


ஓரறிவு உயிர் முதல் அறிவு முற்றிய அனைத்து உயிர்களுக்கும் பாலுணர்வு என்னும் தன் இனத்தினை பெருகச் செய்யும் காமம் பொதுவானதாகவே இருக்கிறது.


கற்சிலைகள், காகித ஓவியங்கள், கவிதைகள் என்று பலதரப்பட்ட கலை படைப்புகளில் காதல் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.


கற்பனை கதைகள் மட்டும் இல்லாமல் அனைத்து வரலாறுகளும் காதலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது.


மனம் உச்சகட்ட இன்பத்தினை காமத்தின் துணையுடன் அனுபவிக்கிறது. அதை கடந்து உடல் சார்ந்த தேவைகளை கடந்து இன்பத்தில் நிலைக்கும் என்றால் அதனை யோகம் என்கிறோம்.


அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாகவே அறம் பொருள் இன்பம் என்ற வரிசையில் உலக பொதுமறை திருக்குறள் இருக்கிறது. இன்பம் கடந்தால் வீடுபேறு அடையலாம் என்பதே உண்மை.


காமம் சார்ந்த சிந்தனையே மனிதனுக்கு மேலோங்கி இருப்பதற்கு காரணம் இயற்கையின் பரிசு ஆண்மையுடனோ, பெண்மையுடனோ இருப்பது.


ஆண், பெண் உணர்வுகளே மையப் பொருளாக இருப்பதால் எல்லா கதை படைப்புகளும் அதை சார்ந்தே இருக்கிறது.


வியாபாரத்திற்கும், விளம்பரத்திற்கும் காமம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. மேலும் தங்களை புனிதர்கள் என்பதற்கு ஆதரவாக காமத்தினை விட்டொழித்ததாக கூறும் மடச்சாமியார்கள், போலி குருமார்கள், துறவிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உருவாகி இருக்கிறார்கள்.


உண்மையில் காமம் கடந்தவர் தன்னை காமம் கடந்தவராக காட்டிக் கொள்ளவும் மாட்டார். மேலும் அதன் பொருட்டு எந்த சிறப்பும் இல்லை.


யார் எப்படி இருந்தாலும் அது அவர் விருப்பம் நமக்கு காமம் அவசியமானதா என்றால் தனி மனித தேவை பொருத்தே அது அமைகிறது.


நாம் இருவரின் உறவால் மலர்ந்தவர்கள் இதை மறப்பதற்கோ, மறுப்பதற்கோ நமக்கு உரிமை இல்லை. நாம் பிறருடன் உறவாட மறுப்பதற்கும், மறப்பதற்கும் நமக்கு உரிமை இருக்கிறது. இது குறித்த செய்திகளுடன் இப்பதிவில் பலநிகழ்வுகளுடன் தொடரும்.....


ஆண் பெண் என்று படைத்த இயற்கைக்கு நன்றியுள்ளவனாய் இப்பகுதியில் உங்களுக்கு உரையெழுதுகிறேன்.


கற்புநிலை என்று சொன்னால் அது பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் ஒன்று என்று நினைப்பது ஒரு குறிப்பிட்ட சமூக மனநிலை மட்டுமே.


கற்பு என்று சொன்னால் காமத்தினை முழுமையாக அனுபவிப்பது என்ற பொருளில் அனுகவேண்டும். கன்னித்தன்மையுடன் இருப்பது என்பது இருபாலருக்கும் உண்டு. கன்னித்திரை கிழிவது ஆணுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும்.


கன்னித்திரை கிழியாமலேயே சில பெண்கள் கருவுறுவதும், விளையாட்டுத்தனமான செயல்களால் கன்னித்திரை கிழிவதும் பெண்ணுக்கு இயல்பானது.


ஆணுக்கு கன்னித்திரை அவ்வளவு சுலபமாக கிழிவது இல்லை. ஆணின் கன்னித்தன்மையை எளிதில் கண்டுபிடிக்கலாம். ஆண் கற்புடையவனாய் இருக்கிறானா? என்பதை அறிவது மிகவும் எளிது.


இன்றைய மனிதன் எதையும் சோதித்து அறிந்து புரிந்து கொள்ளும் தன்மையுடன் இருக்கிறான். அவ்வகையில் அடியேனின் கூற்றினை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும்.


ஆண், பெண் உறவுக்கு முக்கியத்துவம் அதிகம். காம ஒழுக்கம் மனித சமூகத்திற்கு பலதரப்பட்ட வகையில் உயர்வை நல்கும். 


திருமணத்திற்கு முன் உறவு அவ்வளவு நல்லதல்ல. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட உறவும் சிறந்ததல்ல. ஆணுக்கும் கன்னித் தன்மையுண்டு என்பதை அறிந்து ஆணும் ஒழுக்கத்துடன் இருப்பது சாலச்சிறந்தது.


ஆண்மனம் இச்சைக்கு உட்பட்டாலொழிய அவனால் உறவு கொள்ளுதல் சாத்தியம் இல்லை. பெண்மனம் இச்சைக்கு உட்படாமலேயே அவளது உடல் காமப் புணர்ச்சிக்கு இசையும். அதனால்கூட பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதித்திருக்கலாம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.


கற்புநிலை என்று சொல்லவந்தார் இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்ற பாரதியாரின் பாடல் வரிகளுக்கு இணங்க ஆணும், பெண்ணும் இணைந்த கற்பு நிலை காப்போம். காமக்கலை பயில்வோம். கடவுள் தன்மை அடைவோம். உடல் சார்ந்த சுகத்திற்கும் ஒத்திசைவு கொள்வோம். அடுத்த பதிவில் தொடர்வோம்.....


இன்பம் வைத்து, இனத்தை காக்கும் பண்பை வைத்து உணர்ச்சியுடன் திகழும் உள்ளம் வைத்த உண்மைக்கு நன்றியுடன் இப்பகுதியை எழுதுகிறேன்.


கன்னித்தன்மை இருபாலருக்கும் உண்டு என்பதை முன்பு பார்த்தோம். இன்பவற்றினை இறைவன் ஏன் நமக்கு வைத்தான் என்று இங்கு பார்ப்போம்.


உடலின் தேவையின் மூலம் ஓர் இனத்தின் வளர்ச்சி இருக்கிறது. இனப்பெருக்கம் தடைபடாமல் இருப்பதற்காகவே உடல் இன்பத்திற்கு ஏங்குகிறது.


அன்பு உள்ளமே காமம் குற்றமில்லை. காமத்தின்பால் உன் உள்ளம் ஏக்கம் பெறுவதும் குற்றமில்லை. ஆனால் முறையற்ற, தரமற்ற உடலுறவு நல்லதல்ல.


ஆண், பெண் என்ற இருபாலருக்கும் கன்னித்தன்மை உண்டு என்பதை முன்பு பார்த்தோம். கன்னித்தன்மை உண்டு என்பது அறிந்து கொள்வதால் அதை எப்படி இழப்பது. யாரிடம் இழப்பது என்ற முன்யோசனை பெற வேண்டியது உங்களின் கடமை.


திருமணம் என்பதே கன்னி கழிக்கும் ஓர் உன்னத முறையாக இருக்க வேண்டும். இதில் பால் பேதம் அவசியமில்லை. எனவேதான் ஆண், பெண் இருவரின் அந்தரங்க ஆசையின் தாகத்தை தவிர்க்க சாந்தி முகூர்த்தம் என்று முறை வைத்துள்ளார்கள்.


காமத்தின் உந்துதலால் வருவது காதல். காதல் என்பது தீராத ஆசையில்லை. தோன்றி மறைவது. காமத்தின் பொருட்டு துணையை தேடிக் கொள்வது இயற்கை. அதற்கான முழு அறிவினை நாம் பெற்று இருக்கின்றோமா? என்றும் முன்னறிதல் வேண்டும்.


சுயமாக தேடிக் கொள்வதோ அல்லது தாய், தந்தையின் துணையுடன் பெறுவதோ எப்படி இருப்பினும் நமது துணையுடன் இன்புறுவது நமக்கு சுகமானதாக அமைய வேண்டும்.


அதற்கு அதைப் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அடுத்த பதிவில் சிந்திப்போம்.....


பெண்ணாகவும், ஆணாகவும் பிறக்க வைத்த இயற்கைக்கு நன்றியுடன் எழுதுகிறேன்.


இயற்கையின் சீதனம் அல்லது பரிசு பெண்ணாகவோ, ஆணாகவோ இருப்பது. அப்படி இருப்பதால் இனக்கவர்ச்சி ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று உறவு கொண்டு இன்புற்று இருக்க முடிகிறது.


இன்பம் ஆண், பெண் உறவால் ஏற்படுகின்றது. அத்தகைய இன்பத்திற்கு அளவீடு இல்லை. எனவேதான் பெண் ஆண் மீதும், ஆண் பெண் மீதும் தீராத காதலுடன் வாழ முடிகிறது.


ஆண் பெண் இருபாலருக்கும் கன்னித்திரை இருக்கின்றது. கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது. கன்னித்தன்மை எங்கே?  எப்படி? யாரிடம்? இழக்க வேண்டும் என்ற தெளிவு அவசியம் என்பதை முன்பு பார்த்தோம்.


இன்பம் துய்க்க எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.


ஆணாகவோ, பெண்ணாகவோ நீங்கள் இருக்கலாம். யாராக இருந்தாலும் முதலில் உங்களுக்கு போதுமான வயது இருக்க வேண்டும்.  இன்றைய சூழலில் வயது வரும் முன்பே காமம் பற்றிய அநேக தகவல்களை பெருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.


சோப்பு விளம்பரத்திலிருந்து மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் துணிவரை காமம் சார்ந்த தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

கலைச்சேவை என்ற போர்வையில் காமம் பற்றிய காட்சிகள் அதிகம் இடம் பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது.


காம உணர்வை மையமாக வைத்தே அனைத்து படைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. எனவே நமது வயது நமக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டும்.


இளம் சிறார்கள் கருவுறும் தன்மை அதிகமாக நடைபெறுகிறது. தனக்குள் என்ன நடக்கிறது என்று அறியாத வயதிலேயே குழந்தைகளை பெற்றெடுக்கும் குழந்தைகள் உருவாகும் அபாயம் இருக்கின்றது.


உடலின் கிளர்ச்சியால் உந்தப்பட்டு காமத்திற்கு ஆட்படுவதால் பின் நாளில் வருத்தப்பட செய்துவிடும். எனவே கட்டாயம் பதினெட்டு வயதுவரை காத்திருப்பது நல்லது. ஆணாக இருந்தால் 21 வயதுவரை காத்திருப்பது அவசியம்.


நீண்ட தூரம் பயணத்திற்கு போதுமான உடைமைகள் எடுத்துக் கொள்வதுபோல் இனிமையான காமம் சார்ந்த வாழ்க்கைக்கு போதுமான வயதுவரை காத்திருப்பது அவசியம்.


வயது கடந்த பிறகு ஏற்ற துணையை தேடுவது குற்றமில்லை. ஏற்ற துணை தாய், தந்தை தான் ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்களாகவே உங்களுக்கு ஏற்ற துணையை தேடிக் கொள்ளலாம். அது குற்றமில்லை. *காதல் என்பது மனிதனின் அடிப்படையான உணர்வு அதில் உங்கள் விருப்பம் மிகவும், மிக மிக மிகவும் அவசியம்.*  ஆனால் உங்களால் சரியாக தேர்ந்தெடுக்க முடியுமா! என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும். தொடர்வோம்...


இரண்டாய் படைத்து ஒருவருக்கு ஒருவர் தேவை என்ற உன்னதத்தை தந்த இறைவனுக்கு நன்றியுடன்.


அன்பு உள்ளமே உடல் தேவையை மதித்து அதனை நிறைவடைய செய்வதால் மனம் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவது உண்மை.


மாறாக, உடல் தேவையை மறுக்கும் பொழுது எரிச்சல், எதன் மீதும் தேவையற்ற வெறுப்பு மற்றும் ஆர்வமற்ற போக்கு தோன்றுகிறது.


பருவகாலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஈர்ப்புடன் செயல்படுவது இயல்பு. ஆனால் இன்றைய சூழலில் பருவத்திற்கு முன்பே அதன்மீது நாட்டம் கொள்ளும் அளவிற்கு காமம் சார்ந்த படைப்புகள் நிறைய உலா வருகின்றன.


உடல் தேவையும், மனத்தேவையும் வெவ்வேறு. இரண்டும் ஒன்றல்ல. உடல்தேவை என்பது கட்டாயம். மனத்தேவை அப்படி அவசியமில்லை.


உடல் காமத்திற்கு உரிய தகுதி அடைந்தால் உடல் வளர்ச்சி பெற்று காமநீர் சுரந்து வெளியேறுகிறது.மனம் அவற்றை பற்றிய அறிவை நாடுவதும் உடல் வளர்ச்சியின் பொருட்டு நிகழ்கின்றது. இருப்பினும் மனம் போதித்தபடி நடக்கும். எனவே தேவையற்ற ஆசைகளுக்கு அடிப்படையான எண்ணத்தை தொடர்ந்து எழுப்பும். 


காமம் குறித்த தகவல்களை நாம் அறியும் பொழுது அவை பற்றிய கருத்துக் கோட்பாடுகளையும், கற்பனையான செயல்முறைகளையும் மனதில் தோன்ற செய்கிறோம்.


எனவேதான் காமம் சார்ந்த செயல்பாடுகளே மனத்தின் குழப்பத்திற்கு காரணமாக அமைகிறது. மேலும் மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது.


முதலில் காமம் குற்றமில்லை என்று அறிய வேண்டும்.  அதை நடைமுறைப்படுத்தும் பொழுது எப்படி செயல்பட வேண்டும் என்ற தெளிவான சிந்தனையை நமக்குள் வளர்க்க வேண்டும்.


காம ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் மனிதன் நாகரீகம் அடைந்தவனாக இருக்கிறான். நேர்த்தியான ஆண் பெண் உறவின் மூலம் பெறப்படும் குழந்தைகள் தங்களுக்கான அடையாளத்தைப் பெற்று சமூக ஒழுக்கத்திற்கு ஆதாரமான மனிதர்களாக மாறுகிறார்கள்.


காதல் மலர்ந்து கணவன், மனைவி என்று வரையறுத்துக் கொண்டு அன்னை தந்தையாக மாறும் போது தனிமனிதன் தனக்கான கடமையை சரியாக செய்தவனாக கருதப்படுகிறான்.


ஆண், பெண் உறவுகளை அப்படியே வெளிப்படையாக பேசுவதோ, நடைமுறைப் படுத்துவதோ மனிதனுக்கு இயல்பானதாக இல்லை, ஏன்? விலங்குகளிலேயே சிலதான் புணர்வதை மறைமுகமாக நடைமுறைப் படுத்துகிறது.


ஆண், பெண் உறவினைப் பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை என்ற போர்வையில் காமக்கலை பற்றிய குறிப்புகளை நேரடியாக தருவது வளர் இளம் பருவத்து குழந்தைகளை பாதிக்கும். எனவே இப்பகுதியில் மறைமுகமாகவே பேசப்படும் அதே சமயத்தில் புரியாத புதிராகவும் இருக்கிறது.


களங்கமற்ற உறவுக்கு அடிப்படையான தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். இரவு சுகமானால் பகலும் சுகமாகும்.


இயற்கையின் சீதனம் ஆண், பெண் என்ற பேதம் அதற்கு நன்றியுடன் இப்பகுதியை எழுதுகிறேன். பெண் முதலில் தோன்றினாள் ஒரு செல் உயிரி அமீபா ஒரு பெண். உயிர்கள் பரிமாண வளர்ச்சி பெற்றது என்பது உண்மையானால் முதலில் தோன்றியது பெண்ணே.


பெண்ணை மையப்படுத்தியே வாழ்க்கை இருக்கிறது. தாய்வழி உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவது மனித சமூகத்தின் இருப்புநிலை. எந்த உயிரின் தோற்றமும் பெண்ணின் வெளிப்பாடு என்றால் பொய்யன்று.


காமமும் பெண்மையை மையப்படுத்தியே இருக்கிறது. திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் பொழுதுகூட பெண் ஜாதகத்திற்கு பொருத்தமான ஆண் ஜாதகத்தைத்தான் பார்ப்பார்கள். வரன் தேடுபவர்களே தவிர பெண் தேடுவது இல்லை, அதற்கு இதுவே அடிப்படை.


காமம் பெண்மையை மையப்படுத்துகிறது என்பதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லலாம் அது பெண் விபச்சாரிகள் உண்டு. ஆண் விபச்சாரிகள் இல்லை.


விபச்சாரத்தில் பெண் வெற்றியடைவதை போல் ஆணால் வெற்றியடைய முடியாது. ஆணின் உடலமைப்பு அப்படி இருக்கிறது. மனதின் மூலம் இச்சையால் தூண்டப்பட்டால் மட்டுமே ஆணால் உறவு கொள்ள முடியும்.


பெண்ணுக்கு இப்படி இல்லை. அவளது மனதின் விருப்பம் இன்றியே உடலோடு உறவாட முடியும். இந்த நுட்பம் புரிந்ததால்தான் பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஆணுக்கு சுதந்திரத்தினை அதாவது காமம் சார்ந்த சுதந்திரத்தினை சமூக அமைப்புகள் தருகின்றன.


மனதின் விருப்பம் இன்றி உடல் காமத்தினை அனுபவிக்கும் திறன் பெண்ணின் பலவீனம் அல்ல. அது இயற்கையன்னை அவளுக்கு தந்த வரம். ஆனால் அதை பெண் எப்படி பயன்படுத்திக் கொள்கிறாள் என்பதை பொறுத்து சாபமாக அமைகிறது.


பெண்ணுக்கு இருக்கும் இந்த ஆற்றலை பிறர் தவறாக பயன்படுத்தக் கூடும் என்பதாலேயே பெண்ணுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கலாம்.


இதன் பொருட்டுதான் பெண்மையை முன்னிருத்தி பெண்ணுக்கு ஏற்ற கணவனை தேடினார்கள். பெண் தன்னளவில் திருப்தியுறுவதற்கு ஆணாக மட்டும் இருப்பது போதாது அவளின் மனம் எதிர்பார்க்கும் படியாகவும் இருக்க வேண்டும்.


ஆணுக்கு மனம் விரும்பும்பொழுது மட்டுமே உடலின்பத்திற்கு ஈடுகொடுக்க முடியும். எனவே ஆணின் விருப்பத்திற்கு ஏற்றபடி நடக்காத பெண்ணுடன் உறவு கொள்வது சாத்தியமில்லை.


ஒழுக்கம் நிறைந்த பெண்ணை விரும்பாத ஆண் இருக்க முடியாது. கற்பு என்ற காமம் சார்ந்த நிறைவான வாழ்க்கையை பெண் அனுபவிக்க ஆணுக்கு ஏற்றபடி நடக்க வேண்டும். ஆதலால் பெண்ணிற்குதான் கற்புநிலை என்று உணர்த்தப்பட்டு இருக்கிறது.


தன் விருப்பத்திற்கு செவி சாய்க்காத பெண்ணுடன் உறவு செய்வது ஆணுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை.


பெண்ணிற்கு அடுத்தபடியாக தோன்றியவன் ஆண் என்பதால் பெண்மையை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆணுக்கு இருந்தது. இந்த காரணத்தால்தான் பெண்ணுக்கு ஆணை புரிந்து கொள்ள முடியவில்லை.


பால் பேதம் செய்த இயற்கைக்கு நன்றியுடன் பெண்ணை படைத்து என்னை படைத்த அதிசயத்தை எழுத முற்படுகிறேன்.


ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது. அந்த ஒன்று பெண்ணாக மதிக்கப்படுகிறது. ஒரு செல் உயிரி பெண். அது தன்னிலிருந்து தன்னை பிரித்து புதிய உயிராக மாறுகிறது. அதுதான் அடிப்படை. எனவே தான் ஒன்றாக தோன்றியது பெண்.


பெண் என்பது எல்லா உயிர்களுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. பெண் இனத்திலிருந்துதான் பெரும்பகுதி பூமியில் தோற்றம் அடைகிறது.


என்னதான் பெண்ணை கருவுறுவதற்கு ஆண் துணை அவசியம் என்றாலும் இனத்தை காக்கும் உயர்ந்த இடம் பெண்ணுக்குத்தான்.


புதிய உயிரை பாதுகாப்புடன் இந்த பூமியில் வாழச் செய்வது பெண் இனம் என்பதை மறுப்பதற்கில்லை.


கரு பிடித்து கருவுக்குள் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு ஏதுவாக செயல்பட்டு, குழந்தை ஈன்று அதற்கு தேவையான உணவை தந்து வளர்ப்பாள் தாய் என்ற பெண்.

அன்புக்கு அடையாளம் பெண். பெண்ணின் உடல் ஆணுக்கு அங்கீகாரம். தன்னை வெளிப்படுத்தியது மட்டுமின்றி தன்னைப் போல் பிற உயிரை வெளிப்படுத்தும் தன்மை பெண்மையின் சிறப்பு.


உறவுக்கு பெண்ணை கட்டாயப்படுத்தாமல், இசையவைப்பதில்தான் ஆணுக்கு பெருமை இருக்கிறது.  அப்பொழுதுதான் இன்பம் உச்சமாக இருக்கும் சந்தர்ப்பம் அடைகிறது.


பெண்களை பலவகையில் பாராட்டி பாடல்கள் அமைத்து எழுதியவர்கள் ஆணாக இருந்ததால் மட்டும் இல்லை. அத்தனை உயர்வுக்கும் பொருத்தமானவள் பெண் என்பதால்.


பொதுவாக பெண்கள் மலட்டுத்தன்மை அடைவது அரிது. ஆண்களில் நிறைய பேர் மலட்டுத்தன்மையுடன் இருக்கின்றார்கள். இயற்கையின் முதல் படைப்பு பெண் என்பதால் அதிகபட்ச நுட்ப அமைப்பு பெண்ணிடத்தில் உள்ளது. 


பெண்மைக்கு அப்பால் உண்டான உயிர் ஆண் என்பதால் ஆண் முழுமையுடன் இருப்பதில் சிக்கல்கள் அமைகின்றன. மேலும் ஆண் தவறாக பல பழக்கத்திற்கு

தன்னை உட்படுத்துகிறான்.


போதைப் பொருள்கள், அர்த்தமற்ற கேளிக்கை விஷயங்கள் ஆண்களை அடிமைப்படுத்திக் கொள்கின்றது. பெண்கள் பெரும்பகுதி இதில் சிக்குவது இல்லை.


வேலை பளு, குடும்பபாரம் போன்றவைகள் ஆண்களை ஆணாக இருக்க உதவுவது இல்லை. மனஉளைச்சல் அதிகம் ஆண்களுக்கு உண்டாவதால் ஆண்மை குறையும் அபாயம் இருக்கிறது.


மனதை இலேசாகவும், சுகமாகவும் வைத்திருக்க ஆண்கள் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்மையைவிட மென்மையானது ஆண்மை. 


ஆண்மை சிறப்புற இருக்க அமைதி, ஆழ்ந்த உறக்கம், போதிய உணவு அவசியம்.

பெண் தனது பெண்மையை பாதுகாக்க வேண்டியது இல்லை. இயல்பாகவே அது பாதுகாக்கப்படுகிறது. ஆண் தனது ஆண்மையை பாதுகாக்க வேண்டும்.


-முற்றும்